*ஆன்மீகத்தின் அழகுகளில் ஒன்று மகா நந்தி. ஆம்,ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அற்புதமான அழகான ஆலயம் ஆந்திராவில் நந்தியால் மாவட்டத்தில் அருள்மிகு ஶ்ரீ மகாநந்தீஸ்வரர் ஆலயம் ஆகும்*.
👇👇🌹🌹👇👇
*கோவில் வீடியோவை காண*
*Subscribe & like & share, Siddhar jeevan YouTube channel*
*நந்தியாலின் மன்னர்களில் ஒருவரான நந்தா என்பவர் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய விரும்பினார்.இதற்காக பால் சப்ளை செய்ய உத்தரவிட்டார்*.
*இந்த பணியை கோபவரம் கிராமத்தை சார்ந்த மாடு மேய்க்கும் ஒருவர் ஏற்று கொண்டார்*.
*பசுமாடு ஒன்று தினமும் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு பால் கறக்கும் போது பால் வரவில்லை*.*தினமும் இது போல் தான் நடந்தது*.*இதை கவனித்த மாடுமேய்ப்பவன் பசுவை கண்காணிக்க துவங்கினார்*.*அப்போது தான் தெரிந்தது பசு மாடு எறும்பு புற்றில் பாலை தானாகவே சுரந்து விட்டு பின்னர் வீட்டிற்கு* *வருகிறது*.*இதை கேள்வி பட்ட மன்னர் இதை பார்க்க விரும்பி பசுமாட்டை பின் தொடர்ந்து கண்காணித்து எறும்பு புற்றில் பசு பால்சுரப்பதையும் அதை சிறுவனாக இருந்த சிவபெருமான் தான் பால் குடித்தார் என எண்ணினார்*.
*( இந்நிகழ்சியை கோயில் வளாகத்தில் சிற்ப வடிவில் காணலாம் )*
*மன்னர் பார்த்ததை கண்ட பசு மாடு புற்றை கலைத்து விட்டது.சிறுவனாக இருந்த சிவன் மறைந்தார்.*பின்பு மன்னர் நந்தா கனவில் தோன்றி தனக்கு இங்கு ஒரு ஆலயத்தை எழுப்பி வழிபாடு செய்து வர சொன்னார்*.*அதன்படியே இன்று வரை மன்னர் நந்தா கட்டிய* *இந்த அருள்மிகு ஶ்ரீ மகாநந்தியீஸ்வரர் கோயிலை மக்கள்* *அனைவரும் வழிபட்டு*
*வருகின்றனர்*.
*நந்நாவுக்கு பல ஆன்மீக பெரியோர்கள் கோயில் திருப்பணியை செய்தனர்*.🙏
*கோவில் வளாகத்தில் என்றும் வற்றாத தூய்மையான குளம் உள்ளது*.
*பக்தர்களுக்காக இரண்டு தொட்டிகளில் தண்ணீரை சேமித்து வைத்து உள்ளனர் அதில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தணியாகவும் நீராடுகின்றனர்*.
*கோயில் வளாகத்தில் பசு மடம் உள்ளது அங்கு விற்க்கும் புல்லை வாங்கி பசுக்களுக்கு கொடுத்தால் நம் கர்மவினையின் வீரியம் குறையும் என்பது நம்பிக்கை* 🙏
*கோயில் வளாகத்தில் இசை கருவிகளை வாசிக்கும் கணபதிகளை தரிசனம் செய்யும் போது மனம் ஆத்ம மகிழ்ச்சி அடைகிறது.மூலவரான சுயம்பு லிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்யலாம்*.
*நமச்சிவாய வாழ்க* *நாதன் தாள் வாழ்க* 🙏
👇👇🌹🌹👇👇
*திருக்கோயில் முகவரி*
--------------👇👇---------
*அருள்மிகு ஶ்ரீ மகாநந்தியீஸ்வரர் திருக்கோயில்*
*மகா நந்தி*
*நந்தியால் மாவட்டம்*
*ஆந்திரா -- 518502*
👇👇🌹🌹👇👇
*அன்புடன்*
. *சித்தர் ஜீவன்*
*வெங்கடேசன்*
*அயனாவரம்*
*சென்னை*
👇👇🌹🌹👇👇
#🙏நமது கலாச்சாரம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #😁தமிழின் சிறப்பு