Follow
jepin
@4484599124
24
Posts
34
Followers
jepin
607 views
1 days ago
#✝️இயேசுவே ஜீவன் *சதா சகாய மாதா நவநாள் ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை* 🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺 சதா சகாய மாதாவே, உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத்தண்டையிலிருக்கும் நீசப் பாவியான என்னை உற்று நோக்கியருளும். இரக்கத்தின் மாதாவே! என் பேரில் இரக்கமாயிரும். பாவிகளின் அடைக்கலமும் நம்பிக்கையுமென எல்லோராலும் அழைக் கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாயிரும். சேசுவின் நேசத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும். சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீசப் பாவியாகிய என்னிடம் உமது கரங் களை நீட்டியருளும். உம்மிலே நம்பிக்கை வைப் பதுதான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் எண்ணுகிறேன். நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத் தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த் தித் துதிக்கிறேன். உம்மிடம் என்னை கையளிக் காததால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை களில் நீசத்தனமாய்ப் பாவச் சோதனைகளில் விழுந்திருக்கிறேன். ஆனால் உமது உதவியால் நான் வெற்றியடைவேனென்று எனக்குத் தெரியும். என்னை உமக்கு நான் கையளித்தால், நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் பாவத்தில் விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன். ஆகையால் இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்குப் பெற்றுத்தரும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். பசாசு என்னுடன் போர் புரியும் போது நான் உம்மிடம் சரணடையவும், “ஓ மரியாயே, எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே, எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விடாதேயும்” என்று உம்மை நோக்கி வேண்டிக்கொள்ள கிருபை புரிந்தருளும். ஆமென். (அருள் நிறை மந்திரம் 9 முறை) பரிசுத்த மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும். மனத்திடம் இல்லாத வர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை மகிழச் செய்தருளும். மனுக்குலத்துக்காக மன்றாடி யருளும். குருக்கள், ஆயர்களுக்காகப் பரிந்து பேசி யருளும். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சந்நியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசியருளும். உமது சதா சகாயத்தை வேண்டு வோர் உமது உதவியை உணரச் செய்தருளும். ஓ மாதாவே! நீர் எங்களுக்கு அடைக்கல மாயிருக்கிறீர். குறைகளிலும், துன்பங்களிலும் உதவி யாகவும் இருக்கிறீர். *🌺பிரார்த்திக்கக்கடவோம்🌺* ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே! உமது மாதாவாகிய கன்னிமரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராயிருக்கும் தாயாக எங்க ளுக்குத் தந்தருளச் சித்தமானீரே. அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டிநிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனை சதாகாலமும் அனுபவிக்க தகுதியுள்ளவர்களா யிருக்கக் கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியரு மாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வேசுரா. 🙏🏻ஆமென்.🙏🏻 பரிசுத்த பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வோம். ஒரு பர. அருள். திரி. 🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻 *இடைவிடா சகாய அன்னையை நோக்கி மன்றாட்டு* 🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻 நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே, உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல், புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் , விரோதிகளின்பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும். மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! *- 🙏🏻ஆமென்.🙏🏻* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 *✝️சதா சகாயமாதா✝️* *🙏🏻பிரார்த்தனை🙏🏻* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 🌹சுவாமி கிருபையாயிரும் 🌹கிறீஸ்துவே கிருபையாயிரும் 🌹சுவாமி கிருபையாயிரும் 🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். 🌻கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும். 🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர் திருநாமம் உடைத்தான சதா சகாய மாதாவே... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் ஆபத்தான வேளையில் அதனை ஜெயங் கொள்ளும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக் கியத்துக்கு உள்ளாவேனாகில் அதிலிருந்து உடனே எழுந்திருக்கும்படி, 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான தகாத வளையில் நான் சிக்கிக் கொள்ளுவேனாகில் அத்தளையைத் தகர்த்தெறியும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் விரைவில் ஞான உஷ்ணம் கொள்ளும்படி.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங் களைப் பெறுவதிலும், கிறீஸ்தவ பக்திக்குரிய கடமைகளை பக்தியாய் செய்யும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என் சீவியத்தில் வரும் துன்ப சோதனை வேளைகளில்.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என்னுடைய சுபாவ துர்ச்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், புண்ணிய வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும் படி நான் செய்யும் முயற்சிகளிலும்.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய் கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என் பலம் குறைந்து போகும்போது.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என் மரண வேளையில் என் ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரிய போராடும்போது..... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ஓ! என் தேவ தாயாரே, என் கடைசிநாள் பரியந்தம், என் கடைசி மூச்சு பரியந்தம்... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே... 🌻 எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, 🌻எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, 🌻எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி. *🌻ஜெபிப்போமாக:🌻* 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 சர்வ வல்லவரும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்கு துணை புரிய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாயை உமது ஏக குமாரனுக்குத் தாயாராக்கத் திருவுளமானீரே! பரிசுத்த கன்னிமரியாயின் வேண்டுதலால் அடியோர்களின் பாவநோய் தீர்ந்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சிநேகித்து சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக எங்களுக்குக் கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். *🙏🏻ஆமென்.🙏🏻* *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
jepin
614 views
1 days ago
#✝️இயேசுவே ஜீவன் புனிதர் அருளானந்தர் நவநாள் செபம் மற்றும் மன்றாட்டுமாலை ✞🍄🌿* செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். *–🙏🏻 ஆமென்.🙏🏻* *(தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)* புனித அருளானந்தருக்குச் செபம் கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக! இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். *🙏🏻– ஆமென்.🙏🏻* *🌿🍄✞புனித அருளானந்தரின் மன்றாட்டுமாலை✞🍄🌿* சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும் சுவாமி பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.. மறைச்சாட்சியரின் மாண்புமிகு அரசியாகிய மரியாவே... மறைசாட்சியான புனித அருளானந்தரே.... போர்த்துக்கல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே 1647 இல் உதித்தவரான புனித அருளானந்தரே.... அரசவையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையிலாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும் “வானத்தூதர்” என்றும், “மறைச்சாட்சி” என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே.... இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே.... புதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே.... உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே.... பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும், அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோப் பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே.... 1673-ல் பாய்மரக் கப்பலில் பயணமாகி பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும் புன்முறுவல் மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே... கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே... 14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து நாடுகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே.... தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே... வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே... பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே... கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும், துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றிய புனித அருளானந்தரே... குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே.... துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே... தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணியாற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே.... பகைவர் உம்மைக் கொல்லப் பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே... மறைச்சாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே... சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில் பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே... உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே.... உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே... உயர் பொறுப்பிற்காக 1686 ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே.... எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயணமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690 இல் வந்தவரான புனித அருளானந்தரே.... சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே.... புகழ் பெற்ற் தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே... மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே. இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே.... கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே... மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே.... ஓரியூரிலே, 1693 பெப்ருவரி 4-ம் தேதி. புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே.... எங்களை விசுவாசத்தில் வளர்க்க உமது இரத்தத்தையே சிந்தியவரான புனித அருளானந்தரே... மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே.... அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே.... தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே.... தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான் டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே.... விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே.... உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே.... ஆன்மப் பிணிகளையும், உடல் நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே.... மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே.... உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி. உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும் சுவாமி. உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.. மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி. து. – புனித அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். *🌿🍄செபிப்போமாக:🍄🌿* ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறiவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடு அறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். *– 🙏🏻ஆமென்.🙏🏻* *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
jepin
547 views
1 days ago
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை நாதர்* பகுதி-12 *நற்கருணையின் கருவூலம் மரியன்னை!* இயேசுவை வயிற்றில் கருவாய் சுமந்தால் மரியன்னை நற்கருணையின் கருவூலம் என்றழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மனிதனும் உருவாகும்போது தாய் வயிற்றில் அவளின் உதிரத்தில் கலந்து தோய்ந்து மனித வளர்ச்சி பெற்று இவ்வுலகில் பிறக்கிறான். வார்த்தையால் பேசப்பட்டு வந்த இயேசு, மரியன்னையின் வயிற்றில் மாமிசமாகி, அன்னையின் உதிரத்தில் உருபெற்று இரத்ததை தாய் பாலாக்கி அருந்தி வளர்ந்தார். அப்படியானால் தாயின் கருவிலே அன்னை மரியன்னையின் சத்தை இயேசுவும், அவரின் சத்தை மரியன்னையும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆகவே தான் எவ்வாறு மரியன்னை இயேசுவை சுமக்கும் பேழை ஆனாரோ, அதே போல் இயேசுவும், அனைவரையும் சுமக்கும் பேழையாக மாறினார். "உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவையே" என்று (லூக்.11:27) இயேசுவை தாங்கிய மரியன்னையை இறைவன் தனது கருவூலமாக தயார் செய்தார். "உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்." அவள் உன் தலையை நசுக்குவாள். "நீயோ அவளுடைய குதிங்காலை தீண்ட முயலுவாய்" (ஆதி.3:15) "இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக்.1:28) என்ற வாக்குறுதிகள் நிறைவேறும் பொருட்டு மரியன்னை, இறைவன் கையில் செயலாற்றும் கருவியாகி, மீட்பின் கருவாக மாறி, தன் கருவூலத்தில் கர்த்தரைத் தாங்கினார். ஆக மரியன்னை, இயேசுவை மட்டுமல்லாமல் திருச்சபையையும் சேர்த்து சுமந்த ஓரு நற்கருணையின் கருவூலம். தனது பணிவாழ்வை துவங்கும் போது இயேசு "ஆண்டவரின் ஆவி என்மேலே.." (லூக்.4:18-21) என தனது மதிப்பீடுகளை, கொள்கைகளை பிரகடனப்படுத்தும் போது அன்னையின் கருவூலத்திலிருந்து கற்றதை பரீட்சைபடுத்தி காண்பிக்கிறார். மரியன்னையின் பாடலின் வரிகள் கூட அந்த விடுதலைத் தாகத்தை எடுத்து சொல்கிறது. தாயும் மகனும் ஒருசேர சிந்தித்து, செயல்படுவதைப் பார்க்கிறோம். தாயின் கருவில் இயேசு அனைத்தையும் தன் நாடி, நரம்புகளில், இரத்த நாளங்களில் தாங்கி இருக்க வேண்டும். எனவே மரியன்னையின் வாழ்வு, இயேசு கருவிலே உருவாகுமுன்பே நற்கருணை வாழ்வின் பரிமாணங்களை வாழ்ந்து காட்டியவள். ஆகையால் தான் கடவுள் நற்கருணை இயேசுவை தாங்க அருள் நிறைந்த, பெண்களுள் பேறுபெற்றவள் இவள்தான் என்பதை முன்னுணர்ந்து செயலாற்றியிருக்க வேண்டும். இயேசுவை கருவிலே சுமந்திருக்கையிலும் ஒய்ந்திருக்காமல் எலிசபெத் என்ற முதிர்ந்த வயது பெண்ணின் துயர்துடைக்க ஓடியது கூட கருவில் காத்திருந்த கர்த்தரை பாதித்திருக்க வேண்டும். எனவேதான், துயருற்றோரின் துயர்துடைக்க இயேசுவும் தனது நிலைபாட்டை நிலையாக எடுத்து வைத்தார். இயேசுவின் வாழ்வில் காண்கிற பண்புகள் பாடுகள் மரியன்னையின் வாழ்விலும் காணப்பட்டன. ஆகவே மரியன்னை நற்கருணையாகவும் நற்கருணையின் கருவூலமாகவும், கடவுளால் முன்குறித்து வைத்து தயார் செய்யப்பட்டார். மரியன்னையும் அத்தகைய மேலான வாழ்வால் தான் அந்த நற்கருணை அன்னையாக வாழ்ந்து காண்பித்தாள். 'கருவூலம்" இயேசுவை தாங்கியது. நமது இதயம் என்னும் கருவூலத்தில் கர்த்தரை தாங்கும் போது நமது வாழ்வும் நற்கருணை வாழ்வாகட்டும்.
jepin
543 views
1 days ago
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்* ஏப்ரல்-18 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா. அளவில்லாத மகிமையுடைத்தான கடவுளாகிய இயேசுவே! உம்முடைய பிரதாப மகத்துவத்துக்கு, சரியான ஆராதனை நமஸ்காரத்தைத் தேவரீருக்குச் செலுத்த மனுமக்களாற் கூடாதாயினும், என்னாலியன்ற மட்டும், மிகுந்த பயபக்தியோடே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருடைய திருநாமத்தைக் கொண்டு இடப்பட்ட பொய்யாணை, பொய்ச் சத்தியங்களுக்குப் பரிகாரமாக, அடியேன் வேதபாரகரும் மற்றச் சத்திய சாஸ்திரிகளும், உமக்குச் தோத்திரமாகச் செய்த அமிர்த பிரசங்கங்களையும், எழுதிய பக்தி நிறைந்த துதிகளையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி. பரிசுத்த ஆவியானவரில் நம்மைப் புதுப்பிக்கும் தியானம்: உன்னத பரிசுத்த ஆவியானவரே, உமது வருகையால் திருச்சபையில் திரு நிலைப்படுத்தப்பட்ட உம் பணியாளர்களாகிய எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரையும் உமது அருள் வரங்களால் நிரப்பும். உண்மையின் ஆவியே, உலக மக்கள் அனைவரும் மூவொரு கடவுள் விசுவாசத்தில் நிலைத்து நின்று உன்னதக் கடவுளின் சாட்சிகளாகத் திகழுமாறு உமது அருள் ஒளியை அனைவர் மீதும் வீசியருளும். திருச்சபையின் ஆன்மாவும், வழிகாட்டியும், ஆளுநருமான பரிசுத்த ஆவியே, விண்ணுலக அறிவிலும், தளராத விசுவாசத்திலும், தூய்மையான வழிகளிலும் எங்கள் ஆன்மாக்களை அன்றாடம் வழிநடத்துவீராக. நம் ஆன்ம வாழ்வின் அனைத்து நலன்களுக்காகவும் பரிசுத்த ஆவியாரிடம் செபிப்போமாக, பரிசுத்த ஆவியே! அருள் ஒளியே! அனைத்தையும் இயக்கும் இயக்க ஆற்றலே! வாழ்வோரின் நம்பிக்கையே! உமது அருள் ஒளியால் எங்கள் இதயங்களை நிரப்பும். எங்கள் ஆன்மாக்களின் பாவ அழுக்குகளை உமது அன்புத் தீயால் சுத்திகரித்தருளும். பழைய உயிரற்ற வாழ்க்கை நிலையிலிருந்து எங்களுக்கு புதுப் பிறப்பு அளித்தருளும். வெறும் மனிதகுல புகழ்ச்சிக்கும், இவ்வுலக பெருமைகளுக்கும் ஆசை கொள்ளாமல் தாழ்ச்சியுடனும், தன்னடக்கத்துடனும் நடந்து, மூவொரு இறைவனின் உன்னத சாட்சிகளாய் நாங்கள் வாழ உமது தெய்வீக ஆற்றலை எமக்கருளி அனுதினமும் எம்மை வழிநடத்தும். இவ்வுலக செல்வங்களின்மீது நாங்கள் மயக்கம் கொள்ளாமல், விண்ணக வாழ்வின் மேன்மையை அடைய இம்மண்ணக வாழ்வில் அருள் செல்வம் சேர்க்கும் ஆற்றலை எமக்கு அருள்வீராக. நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !
jepin
2.5K views
1 days ago
#✝️இயேசுவே ஜீவன் அன்னையிடம் வேண்டுதல்* *கார்மேல் அன்னை வழியாக நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு, இறை இரக்கம் பெற்ற நாம் அன்னை வழியாக நம் வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பிப்போம்.* *திருச்சபையின் கருத்துக்காக செபிப்போம். திருச்சபையை வழி நடத்தும் எங்கள் திருத்தந்தை, அகில உலகத்திலிருக்கும் அனைத்து ஆயர்கள் குருக்கள், துறவறத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒரே ஆயனும் ஒரே மந்தையுமாக மாறுவதற்கும், விசுவாசத்தில் வளருவதற்காகவும் வரம் வேண்டி கார்மேல் அன்னை வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். கார்மேல் அன்னை வழியாக, ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.* *எல்லாம் வல்ல இறைவா. எங்கள் ஆன்மீக வாழ்வில் பக்தி விசுவாசமும் இறைப்பற்றும் வளரச் செய்யும். உலக சிந்தனைகளாலும் அவநம்பிக்கைகளாலும், செபமில்லாமல் பிரச்சனைகளிலும், போராட்டங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும அனைவரிலும் தனிச்செபம், குடும்பசெபம் செய்யும் அருளைத் தரும்படியாக கார்மேல் அன்னை வழியாக உம்மை மன்றாடுகின்றோம். கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.* *பாவத்தின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்காகவும் செபிப்போம். போதைப் பொருட்களுக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள், தவறான உறவுமுறைகளிலும் அசுத்தமான பழக்க வழக்கங்களிலும் வாழ்கின்றவர்கள், பிரிவினை, சண்டை, கோபம், தற்பெருமை. சோம்பேறித்தனம் போன்ற எல்லாப் பாவங்களிலிருந்தும் எங்களை விடுவிக்கும்படியாகவும் நல்ல பாவ அறிக்கை செய்து கடவுளோடும், மனிதர்களோடும் அன்புறவு கொண்டு வாழக் கிருபை தரும்படி கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.* *பொருளாதார நெருக்கடிகளால் வாடுகின்றவர்களுக்காக செபிப்போம். கடன் தொல்லை, எதிர்பாராத விபத்து, தோல்வி, நிரந்தர வேலையின்மை, விவசாயத்திலும், வியாபாரத்திலும், தொழிலிலும் ஏற்படும் நஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார செழிப்பைத் தரும்படியாக கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.* *குடும்பக் கருத்துக்களுக்காக செபிப்போம். கணவன், மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் ஏற்படும் கருத்து வேற்றுமை உள்ள குடும்பங்கள், திருமணமாகியும் குழந்தைபாக்கியம் இல்லாத தம்பதியர்கள், திருமணத் தடைகளால் கவலைப்படுகின்றவர்கள், உறவினரோடிருக்கும் பகைமை, கசப்பு, வெறுப்பு அனைத்தையும் நீக்கி உண்மையான இறைப்பிரசன்னம் நிறைந்த குடும்ப வாழ்க்கையைத் தரும்படியாக கார்மேல் அன்னை வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.* *நம்முடைய தனிப்பட்ட கருத்துகளை மௌனமாக கார்மேல் அன்னையிடம் சமர்ப்பிப்போம்.* *கபிரியேல் சம்மனசோடும், எலிசபெத்தம்மாவோடும், அர்ச்சியாசிஸ்டவர்களோடும் இணைந்து நம் அன்னையைப் புகழ்வோம்.* *பிரியதத்தத்தினாலே பூரண மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்ஜாதிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிஷ்ட மரியாயே! சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.* *ஆமென்.*
jepin
578 views
2 days ago
#✝️இயேசுவே ஜீவன் *இயேசுவின் திரு இருதய ஜெபங்கள் மற்றும் புகழ்மாலை* 🌹🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _(இதய ஆண்டவரிடம் இந்த 3 ஜெபங்களை ஜெபித்து இறையாசீரை பெருவோம்)_ *இயேசு நாதருடைய திருஇருதயத்துக்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்* 🕯️💞🕯️💞🕯️💞🕯️💞 இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.இதுவுமன்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்று கோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, இந்த விசாரணையிலுள்ள சகல பிள்;ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே, முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். *- 🙏🏻ஆமென்.🙏🏻* 👑🌏👑🌏👑🌏👑🌏👑 *இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்* 👑🌏👑🌏👑🌏👑🌏👑 ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக. ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. *🌹- ஆமென்.🌹* 💖🍀💖🍀💖🍀💖🍀💖🍀 *திரு இருதய* *மன்றாட்டுமாலை* 💖🍀💖🍀💖🍀💖🍀💖🍀 ஆண்டவரே இரக்கமாயிரும் -2 கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2 ஆண்டவரே இரக்கமாயிரும்-2 கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும்-2 கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்-2 பரமண்டலங்களிலிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, *எங்கள்மேல் இரக்கமாயிரும் சுவாமி.* உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, *எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.* தூய ஆவியாகிய இறைவா, *எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.* என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.* பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே ! *இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.* உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே ! *இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே ! *இயேசுவே எங்களைத் தயை செய்து இரட்சித்தளும் சுவாமி.* *முதல்வர்* - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே *துணைவர்* - இயேசுவே எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்ததாக இருக்கும்படிக்கு கிருபை செய்தருளும். *செபிப்போமாக:* 💝💝💝💝💝💝💝 என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். *-🙏🏻ஆமென்🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
jepin
556 views
2 days ago
#✝️இயேசுவே ஜீவன் ஜார்ஜியார் நவநாள்* நாள் -04 நவநாள் செபம்: வேத சாட்சியான புனித ஜார்ஜியாரே! நீர் விசேஷமாய் களங்கமற்ற இருதயமுள்ளவர்களுக்கும் உமது உதவியை நாடி வருபவர்களுக்கும் செய்து வரும் அற்புத அதிசய நன்மைகளால் சர்வ வல்லவரான கர்த்தருக்குண்டாகும் மகிமையைக் கண்டு நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். மென்மேலும் உமது நாமம் பிரபலியப்படவும், உம்முடைய புதுமைகள் எல்லாவிடங்களிலும் பரவவும், கிறிஸ்தவர்களாகிய உமது சகோதரர்கள் உத்தம விசுவாசிகளாய்த் திருச்சபையில் நிலைத்திருக்கவும், பதித மதம் நாளுக்கு நாள் குறைந்து போகவும், உமது வாழ்நாளில் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருநாமம் எங்கும் ஓங்கவும், அவருடைய திருச்சபை பெருகவும், நீர்கொண்ட முயற்சி நாங்கள் கொள்ளவும், உம்மைப்போல் எவ்வித வருத்தமும் உயிர்வதை நேர்ந்தாலும் பின்னடையாதிருக்கவும், சீவியத்திலுண்டாகும் கஷ்டம் துன்பம், வறுமை சோதனைகளை வெல்லவும் தேவ கிருபையை மன்றாடியருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்கிறோம். வானுலகில் முடிசூட்டப்பெற்ற புனித ஜார்ஜியாரே! உமது அடியவர்களாகிய நாங்கள் மென்மேலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் திழைத்து நிற்கவும். இம்மாய உலகில் ஆன்மீகத் துறையிலும் பிற துறைகளிலும் எங்கள் எதிரிகளால் ஏற்படும் சோதனைகளை விலக்கி, தூய மனத்தோராய் இவ்வுலகில் வாழ வரம் அருள்வீராக. (வேண்டியதை உறுதியோடு கேட்கவும்) இரக்கமுள்ள இறைவா, உமது புனித ஜார்ஜியார் வழியாக எங்களுக்கு இவ்வரங்களை தந்தருள்வீராக. - ஆமென். வேதசாட்சியான புனித ஜார்ஜியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். (3 தடவை சொல்லவும்) செபிப்போமாக: சைலானா என்னுமிடத்தில் ஓர் மாயப் பறவைநாகத்துக்கு இரையாய் போடப்பட வேண்டிய ஆன்ட்ரோ மேடா என்னும் இராஜ குமாரத்தியை மீட்க, அப்பறவை நாகத்தைக் கொலை செய்தீர். வெகு சந்தோஷங் கொண்ட அரசன், நீர் அவளை மணம் புரிந்து கொள்ள கெஞ்சி மன்றாடியும், மாய மூவாசையும் அறவே மறந்து வேண்டாமென்று நயந்துபேசி அவர்களை எல்லாம் வேதத்தில் சேர்த்தவரான புனித ஜார்ஜியாரே! நாங்களும் மாய ஆசாபாசங்களையும் முற்றும் மறந்து உம்மைப் போல் இயேசுக்கிறிஸ்துவென்னும் ஞான செஞ்சுடரில் எப்பொழுதும் நிலைத்திருக்க அவரை மன்றாடியருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறோம். - ஒரு. பர. அரு. பிதா.
jepin
623 views
2 days ago
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்* ஏப்ரல்-17 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா. பரம தேவ பிதாவிடத்தில் அடியோர்களுக்காக, மிகவும் மனுப்பேசுகிற மத்தியஸ்தராகிய திவ்விய இயேசுவே! மிகுந்த நன்றியறிந்த மனதுடனே தேவரீரை ஆராதிக்கிறேன். திருச்சபையில் யாதோர் அதிகாரம் பெற்றவர்கள், உம்முடைய தேவாலயங்களில் தேவரீருக்குச் செய்யப்பட்ட, சங்கையீனமான அநாசாரங்களைத் திருத்தாமலும், கண்டியாமலும் விட்ட அசதி, அசட்டைத் தனத்துக்குப் பரிகாரமாக, அடியேன் பரிசுத்த மறைஆயர்களும், சிரேஷ்ட குருக்களும், தேவரீருடைய ஊழியத்திற் கொண்ட அணுநுணுக்கமான கவனத்தையும், சுறுசுறுப்புள்ள விசாரப் பத்தியையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி. ஆன்ம வலிமைக்காக பரிசுத்த ஆவியிடம் செபம்: என் ஆன்மாவைத் திருமுழுக்கினால் தூய்மையடையச் செய்த பரிசுத்த ஆவியே! என் இதயத்தை என்றும் உமக்கு ஏற்புடைய இல்லமாக்கியருளும். உறுதிபூசுதலின் வழியாக, என் இதயத்தைத் திடப்படுத்திய பரிசுத்த ஆவியே! உலகம், உடல், அலகை ஆகிய என் ஆன்மாவின் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும். உலக சிற்றின்பங்கள், என் ஆன்மாவை சிறைப்பிடிக்காமல் என்னைப் பாதுகாத்தருளும். செபம், தவம் இவற்றில் நான் அன்றாடம் நிலைத்திருந்து, என் ஆன்ம எதிரிகளை வெற்றிகொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும். என் ஆன்மா இழந்து போன அருளை, பாவ மன்னிப்பு என்னும் திருவருட்சாதனத்தின் வழியாகத் திருப்பிக் கொணரும் பரிசுத்த ஆவியே! என் பலவீனமான ஆன்மாவிற்கு வலுவூட்டி, பாவச் சேற்றில் என் ஆன்மா புதைந்து விடாதபடி, என் ஆன்மாவைப் பாதுகாத்தருளும். சோதனை வேளையில், என் ஆன்மாவின் பகைவரை வென்றிட, எனக்கு ஆன்ம பலன் தாரும். பரிசுத்த கன்னி மரியாவின் பரிசுத்த உடலிலிருந்து, இயேசுவின் திருவுடலை உருவாக்கிய பரிசுத்த ஆவியே! அத்தாயின் அன்பையும், தாழ்ச்சியையும் நான் பெற்று, நற்கருணையில் இயேசுவை வரவேற்க, எனக்குத் துணையாக வரும். அதற்கேற்ப என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும். விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஆகிய புண்ணியங்களில் நான் சிறந்து விளங்கி, என் வாழ்நாள் முழுவதும் உமக்கே சேவை செய்வதற்கு, என் ஆன்மாவைத் தகுதியுடையதாக்கி அருளும். ஆமென். நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !