இது வெறும் சம்பவம் அல்ல..
ரயில் கதவின் பின்னால் எழுதப்பட்டிருந்த
ஒரு மொபைல் எண்ணை நான் அழைத்தேன்.
“ரேணு பேசுறிங்களா?”
பதற்றமும் பயமும் கலந்த குரல் மறுபுறம்
“ஆமாம் ஆனா நீங்க யார்?
எங்கிருந்து என் எண்ணை பெற்றீங்க?”
நான் உண்மையை சொன்னேன்.
“அந்த ரயில் பெட்டியில் யாரோ உங்கள் பெயரும் எண்ணையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
நல்லவரா கெட்டவரா தெரியாது.
ஆனா பாதுகாப்புக்காக
இந்த எண்ணை மாற்றிக்கொள்ளுங்கள்
அல்லது எதற்கும் தயாரா இருங்கள்.”
“இன்றுக்குப் பிறகு தெரியாதவர்கள் யாரும்
இந்த எண்ணுக்கு அழைக்க மாட்டார்கள்
ஏனென்றால்
நான் அதை அழித்துவிட்டேன்.”
போனை வைத்த பிறகு
அவள் மீண்டும் அழைத்தாள்.
“புதிய புதிய எண்களிலிருந்து
மோசமான, ஆபாசமான பேச்சுக்கள்
நான் ரொம்ப பயந்திருந்தேன்.
யாராக இருந்தாலும்
நீங்கள் எனக்கு பெரிய உதவி செய்தீர்கள்”
என்றாள்.
அன்றிலிருந்து
பொது இடங்களில் எழுதப்பட்ட
அத்தகைய எண்களை
நான் அழிக்கத் தொடங்கினேன்.
நாம் தீமைக்கு காரணமாக இல்லாமலே இருக்கலாம்
ஆனா
நன்மைக்கு காரணமாக
நிச்சயமாக இருக்க முடியும்.
எங்காவது
பெண்களின் பெயர்களுடன்
எண்கள் எழுதப்பட்டிருந்தால்
உடனே அழிக்கவும் 🙏
ஒரு சகோதரி
ஒரு மகள்
தெரியாத ஆபத்திலிருந்து
காப்பாற்றப்படலாம்.
பல ஆயிரம் நல்ல மனங்கள்
ஒரே ஒரு மனிதனை ஆதரித்தால்
மாற்றம் நிச்சயம் வரும்..
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள்