ஃபாலோவ்
Rahamathulla
@4698289655
8
போஸ்ட்
8
பின்தொடர்பவர்கள்
Rahamathulla
522 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் தொழுகை மூன்று விதம். 1. அவாம்களின் தொழுகை 2. ஆபிதீன்களின் தொழுகை 3. ஆரிஃபீன்களுடைய தொழுகை அவாம்களின் தொழுகை நிலை. அவர்கள் அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் கட்டிய பொழுது அவர்களுக்கு பலவித சிந்தனைகள், குடும்ப பிரச்சினைகள், உலக சிந்தனைகள், இன்னும் சுற்றுச்சூழல்களில் அவர்கள் எதை சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த சிந்தனைகள் மனதில் வந்துக்கொண்டே இருக்கும். அவர்கள் எதன் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்களோ,அல்லது எதன் மீது அதிக கவலை கொண்டுள்ளார்களோ அது அவர்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். சினிமா பாடல்களும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், இந்த தொழுகை, ஒரு சடங்குக்காக தொழுகிற தொழுகை. ஓர்மை இல்லாத தொழுகை. இது அவாம்களின் தொழுகையாகும். இரண்டாவது ஆபிதுகளின் தொழுகை. இவர்களின் தொழுகை நிலை, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் சொல்கிறார்களல்லவா " நீங்கள் தொழுகையில் அல்லாஹ்வை பார்த்தவண்ணமாக தொழுதுக் கொள்ளுங்கள், அப்படி உங்களால் பார்க்க முடியாவிட்டால் அல்லாஹ் உங்களை பார்க்கிறான் என்ற உணர்வோடு தொழுது கொள்ளுங்கள்." இந்த ஹதீஸில் இரண்டாவதாக சொல்லப்பட்ட அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற உணர்வோடு தொழுவது ஆபிதீன்களின் தொழுகை. இவர்களுக்கும் மற்ற உலக சிந்தனைகள் அவ்வப்போது வரக்கூடும். இவர்கள் குர்ஆனின் ஆயத்துகளில் கவனம் செலுத்தி அதனுடைய பொருளை உணர்ந்து, கவனித்து தொழுக கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களது தொழுகை ஓரளவு சரியான தொழுகையாக அமைந்து விடும். மூன்றாவது ஆரிஃபீன்களுடைய தொழுகை. ஆரிஃபீன்களின் தொழுகை எப்படி இருக்குமென்றால், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்களல்லவா "அல்லாஹ்வை பார்த்தவண்ணமாக தொழுகுங்கள்" என்று. அதன் அடிப்படையில் தொழுவார்கள். முதலில் முர்ஷித் கற்றுக் கொடுத்த நுக்தாவில், அந்த ஜோதியை காண முயற்சிகள், பல பயிற்சிகள் செய்வார்கள். அந்த ஜோதியை கண்டபின்னர் தொழுகையில் அந்த ஜோதியை சுஹூது செய்து, ஆரம்பமுதல் தொழுகை முடியும் வரையிலும் சுஹூது செய்தவராகவே தொழுவார்கள். அஸ்ஸலாத்து மிஃராஜூல் முஃமினீன் (ஹதீஸ்) தக்கலை பீர் முஹம்மது வலியுல்லாஹ் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் சொல்வது போல்: முஃமீனின் மிஃராஜ் தொழுகையாகும் முஹம்மது ரஸூலைக் கண்டபின்னர். ஆமீன் முடிவதில் நினைவைப்பூட்டி அணுவில் அணுவதைக் கண்டு கொள்வோம். இந்த பாடலின் கருத்தை அறிந்து பயிற்சி செய்து தொழுக கூடியவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு தொழுகையிலும் லிகாயே ரப்பி அல்லாஹ்வின் தரிசனத்தை காண கூடியவர்களாக இருப்பார்கள் அதாவது எல்லா தொழுகையிலும் அவர்களுக்கு மெஹராஜ் கிடைக்கும். அல்லாஹ்வை சுஹூது செய்வது அவர்களுக்கு அவசியமானதாகும். பிறகு தான் லிகாயே ரப்பி அவர்களுக்கு கிடைக்கப்படும். இப்படியான ஆரிஃபீன்களுடைய தொழுகை தான் பரிபூரணமான தொழுகை. அல்ஹம்துலில்லாஹ். மீண்டும் அவாம்களின் தொழுகை பற்றி காண்போம். இந்த அவாம்கள் நடைமுறையில் எப்படியென்றால் பள்ளிக்கு ஜமாத்தோடு தொழுக வேக வேகமாக ஓடோடி வருவார்கள். அங்குள்ள நண்பர்கள், சுற்றத்தார், உறவினர்கள், இவர் ஒரு தொழுகையாளி என்று சொல்ல வேண்டும் என்பதற்காக தொழுகச் செல்வார்கள். இவர்களுக்கு தொழுகையில் திருப்தி இல்லாவிட்டாலும் பிறருக்காக தொழுக வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு நாம் சரியாக தொழுகவில்லை என்ற கவலை இருந்தாலும், மற்றவருக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக முகஸ்துதிற்காக தொழுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நினைத்தால் தொழுவார்கள், இல்லாவிட்டால் தொழமாட்டார்கள் .இப்படி பொடுபோக்கான தொழுகையை பற்றிதான் அல்லாஹ் சுப்ஹானஹூ தஆலா குர்ஆனிலே சூரா மாஊன். அரஅய்தல்லதி ... என்ற சூரவில் குறிப்பிடுள்ளான். அத்தகைய தொழுகையாளிகளுக்கு நரகத்தில் நாம் வைல் என்ககூடிய ஓடையை தாயார் செய்திருக்கின்றோம். அவர்களை அந்த நரக ஓடையில் போட்டு வதைப்போம்" என்று சொல்கிறது. ஆகையினால் இப்படி பொடுபோக்காக தொழும் அவாம்கள், காமிலான முர்ஷிதை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் தன்னை சரணாகதியாக ஆகிக்கொண்டு, முர்ஷித் சொல்லக்கூடிய இல்முகளை பெற்று முயற்சியும், பயிற்சியும் பெற்று சரியான முறையில் செய்து கொண்டு வெற்றி பெற்றுவிட்டால் இவர்களும் ஆரிஃபீன்களுடைய தொழுகையை அடைவார்கள். அல்ஹம்து லில்லாஹ்... -சையது காஜா முஹிப்பி அலி ஷாஹ் Khwaja Muhibbi Ali Shah Khwaja Muhibbi Ali Shah Ansari Muhibbi Ali Shah Muhibbi Ali Shah Khwaja
Rahamathulla
4.5K காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
#😊எனது முதல் பதிவு🤙🏼 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் ஒரு நாளை கற்பனை செய்து பாருங்கள்… அவ்வளவு மகத்துவமிக்க ஒரு நாள்; அந்த நாளில் அல்லாஹ் தானே அருகிலுள்ள வானத்திற்கு இறங்கி, தன் அடியார்களை பெருமையுடன் நோக்குகிறான். அந்த மகத்தான நாள் தான் அரஃபா நாள் — ஆண்டின் உச்சமான ஆன்மிக நாள். அரஃபா வெளியில் ஹஜ் பயணிகள் நிற்கும் அந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் நமக்கும் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புனித நாளுக்கான உங்கள் ஆன்மிகப் பயண வழிகாட்டி இதோ. முதலில், நோன்பை முக்கியமாகக் கொள்ளுங்கள். ஹஜ் செய்யாதவர்களுக்கு, நபிகள் நாயகம் ﷺ கூறியுள்ளார்: “அரஃபா நாளில் நோன்பு நோற்பது, கடந்த ஒரு ஆண்டின் பாவங்களையும் வரும் ஒரு ஆண்டின் பாவங்களையும் மன்னிக்கச் செய்யும்.” ஒரு நாள் பொறுமையுடன் நோன்பு இருப்பதற்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளுக்கான பாவமன்னிப்பு! இதைவிட பெரிய அருள் என்ன இருக்க முடியும்? இரண்டாவது, துஆவை அதிகப்படுத்துங்கள். நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்: “அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆ.” இந்த நாளில் நபிகள் நாயகம் ﷺ மற்றும் அவருக்கு முன் வந்த அனைத்து நபிமார்களும் அதிகமாக ஓதிய திக்ர்: “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹூ லா ஷரீக லஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலை குல்லி ஷய்இன் கதீர்.” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; அவன் ஒருவனே, அவனுக்கு இணையில்லை; ஆட்சி அவனுக்கே, புகழ் அவனுக்கே; அனைத்திற்கும் வல்லவன் அவனே.) இந்த வார்த்தைகள் உங்கள் இதயத்தின் துடிப்பாக இருக்கட்டும். மூன்றாவது, அல்லாஹ்வின் நினைவில் நாவை ஈடுபடுத்துங்கள். தஹ்லீல், தக்பீர், தஹ்மீத், தஸ்பீஹ் ஆகியவற்றை அதிகமாக ஓதுங்கள். • “லா இலாஹ இல்லல்லாஹ்” — உண்மையை உறுதிப்படுத்துகிறது. • “அல்லாஹு அக்பர்” — உங்கள் எல்லா கவலைகளையும் விட அல்லாஹ் மிகப் பெரியவன் என்பதை நினைவூட்டுகிறது. • “அல்ஹம்துலில்லாஹ்” — அல்லாஹ்வின் அருள்களை உணரச் செய்கிறது. • “சுப்ஹானல்லாஹ்” — படைத்தவனின் பரிபூரணத்தை மகிமைப்படுத்துகிறது. இறுதியாக, இந்த நாளை உண்மையான தவ்பாவிற்காக பயன்படுத்துங்கள். அல்-஘ஃப்ஃபார் — எல்லாவற்றையும் மன்னிப்பவன் — அவனிடத்தில் கண்ணீருடன் மன்னிப்பு கேளுங்கள். நபிகள் நாயகம் ﷺ ஒரு மனதை உருக்கும் காட்சியை விவரித்தார்கள்: அரஃபா நாளில் அல்லாஹ் அருகிலுள்ள வானத்திற்கு இறங்கி, மலக்குகளிடம் பெருமையுடன் கூறுகிறான்: “என் அடியார்களைப் பாருங்கள்! அவர்கள் தொலைதூரங்களிலிருந்து, தூசி படிந்த முகங்களுடனும் சீரற்ற தலைமுடியுடனும் என் அருளை நாடி வந்துள்ளனர்.” அவர்களின் பாவங்கள் கடலின் நுரையைப் போலவோ மணற்கணுக்களைப் போலவோ இருந்தாலும், நான் அவர்களை மன்னித்து விடுவேன் என்று அல்லாஹ் வாக்களிக்கிறான். அரஃபா நாள் என்பது சாதாரண நாள் அல்ல; அது அல்லாஹ்வின் அருளை நோக்கி அகலமாகத் திறக்கப்பட்ட கதவு. உலகத்தின் கவனச்சிதறல்கள் அந்த கதவினுள் நீங்கள் நுழைவதைத் தடுக்க விடாதீர்கள். நீங்கள் வேலைக்குச் சென்றிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும், வீட்டில் இருந்தாலும் — உங்கள் இதயத்தை அல்லாஹ்வுடன் இணைத்துக் கொள்ளுங்கள். நோன்பு நோற்குங்கள். துஆ செய்யுங்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து உங்கள் நாவை உயிர்ப்பிக்குங்கள். இந்த புனித நாளில், அல்லாஹ்விடம் நீங்கள் மன்னிப்பு கேட்க விரும்பும் ஒரு விஷயம் என்ன? அல்லாஹ் நம்மை அனைவரையும் மன்னித்து, தனது அளவற்ற அருளில் சேர்த்தருள்வானாக. ஆமீன். 🤍