ஃபாலோவ்
selva
@81078422
2,072
போஸ்ட்
1,838
பின்தொடர்பவர்கள்
selva
494 காட்சிகள்
*பூலாங்குளத்தின் மண்ணின் இளம் நம்பிக்கை: P.V சரவணன் அரசியல் பயணம்* அரசியல் என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல அது மக்களுக்கான சேவை என்பதை தனது இளம் வயதிலேயே நிருபித்து வருகிறார் கீழப்பாவூர் ஒன்றியத்தை சேர்ந்த: *P.V சரவணன்* எங்க ஊர் அரசியல் வாதி இளம் வயதிலேயே தன்னை ஒரு (அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்) அரசியலில் கட்சியில் இனைத்துக் கொண்டு மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கியவர் *P.V சரவனண்* கீழப்பாவூர் ஒன்றியத்தில் அரசு சம்பந்தமான வேலைகளை எல்லாம் ஒப்பந்தம் எடுத்து அதை சிறப்பாக நடத்தி வருபவர் பூலாங்குளம் மக்களுக்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி அமைப்பதற்காக இவர் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் *K.R.P. பிரபாகரன்.M.P.* அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது *P.V சரவணன்* அவர்களின் முன் முயற்சியால் *2019 -2020* ஆண்டு *M.P* நிதியிலிருந்து தனது கிராமத்திற்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்து கோடை காலத்திலும் தனது கிராம மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க உறுதுணையாக நின்றவர் அதுமட்டுமல்லாமல் தனது கிராமத்தில் மூன்று ஆழ்துளை கிணறு அமைத்து மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கியவர் தனது கிராமம் மட்டும் அல்லாமல் தனது பக்கத்து கிராமமான கிருஷ்னபேரி ஊரிலும் ஆழ்துளை கிணறு அமைத்து வறட்சி காலத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்தவர். 2021 ஆம் ஆண்டு கீழப்பாவூர் ஒன்றியத்தில் 18வது வார்டு கிளை பூலாங்குளம் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தனது கட்சியின் சார்பாக விருப்பம் தெரிவித்தார் அதற்கான வேலைகள் செய்து வந்தார் எப்படியும் தனது கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தார் ஆனால் இவர் எதிர்பார்த்தது போல் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இருந்தும் தனக்கு வாய்ப்பு கேட்டு தனது கட்சி நிர்வாகிகளை அணுகி கேட்டபோது கூட்டணி கட்சிக்கான பிஜேபி வேட்பாளருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்கள் இவர் மனம் தளராமல் இந்த தேர்தலில் நான் எப்படியாவது போட்டியிட வேண்டும் என்று முடிவு எடுத்தார் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி கிடைக்கவில்லை மீண்டும் தன் முயற்சியை கைவிடாமல் சுயேட்சையாக நிற்போம் என்று முடிவு எடுத்தார் அதன் பின்பு வேப்பு மனு தாக்குதல் செய்து அந்த தேர்தலில் போட்டியிட தயாரானார் இவருக்கு தேர்தல் சின்னமாக நல்லி சின்னம் வழங்கப்பட்டது சின்னம் கிடைத்துடன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் இரவு பகல் பாராமல் தனது வெற்றிக்காக வீதி வீதியாக தெருத்தெருவாக ஒவ்வொரு வீடு விடாமல் தனது நல்லி சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஓய்வின்றி உழைத்தார் இந்த தேர்தலில் இவரை எதிர்த்து மூன்று பேர் போட்டிட்டனர் இந்த மூன்று நபர்களை விட அதிக வாக்கு பெற்று இந்த தேர்தலில் இவர் வெற்றி அடைந்தார் வெற்றிக்கு பெரும் காரணம் அன்பான பேச்சும் இவரின் நற் செயல்களும் எங்க கிராமத்தில் இவரை விட அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் வயது மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள் ஆனால் இவர் அளவுக்கு மக்களிடம் பிரபலம் அடைந்தவர்கள் இல்லை எங்க ஊர் காளியம்மன் கோவில் திடலில் வெளியூர் வியாபாரி ஒருவர் பல்லாரி மூடைகளை கொண்டு வந்து அடிக்கி வைத்து சிறிது நாள் கழித்து அந்த பல்லாரி எல்லாம் தட்டி காய போட்டு நல்ல பல்லாரிகளை எல்லாம் ஏற்றுமதி செய்துவிட்டு கழிவுகளை அனைத்தையும் அதே இடத்தில் போட்டு விட்டு சென்று விட்டார் அது அதே இடத்தில் கிடந்து மழையில் நனைந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது அருகில் வசிக்கும் மக்கள் எல்லாம் சேர்ந்து பஞ்சாயத்து தலைவரிடம் கூறினார்கள். ஆனால் அவர் சரி செய்வதற்கு முன்பாக இவர் முதல் ஆளாக களத்திற்கு வந்து நின்று மக்களோடு மக்களாக இந்த கழிவுகளை எல்லாம் டிராக்டர் மூலமாக அள்ளி அப்புறப்படுத்தி கடைசி வரைக்கும் உறுதுணையாக நின்றவர். தனது கிராமத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுவதற்காக வெளியூர் பள்ளிக்கு தான் செல்ல வேண்டும். மாணவ மாணவிகள் பெறும் பாதிப்புக்கு உள்ளானார்கள் தனது கிராமத்தில் உள்ள பள்ளியிலே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று தனது தொகுதி எம் எல் ஏ விடம் ஊர்மக்கள் சார்பாகவும் இவர் சார்பாகவும் கோரிக்கை வைத்து தனது கிராமத்திற்கு உள்ள பள்ளிக்கூடத்தில் தேர்வு மையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தவர் இப்பொழுது இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் இங்கே பொதுத்தேர்வு எழுதுகிறார்கள் எங்கள் கிராமம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கிராம வளர்ச்சிக்கு தேவையான, அனைத்து நலத்திட்டங்களையும் ஒன்றிய நிதியில் இருந்து சிறப்பாக செய்து வருபவர். அரசியல் என்றால் பல விமர்சனங்கள் உண்டு அதில் இவரும் விதிவிலக்கு அல்ல. இவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. அதை தாண்டி மக்கள் சேவைகள் செய்து வருகிறார். இந்த குறைந்த வயதில் இவனது வளர்ச்சி இவர் கடின உழைப்பால் சாத்தியமானது. மேலும் மேலும் இவர் வளர்ச்சி அடையவேண்டும். இவர் மேலும் பல பதவிகள் வகிக்க வேண்டும். எங்கள் கிராமம் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும். தனது கிராமம் மட்டுமல்லாமல் தனது பக்கத்து கிராமங்களில் மக்களின் பேரன்பையும் பெற்றவர். என்றும் மக்கள் பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் **எழுத்து ஆக்கம் செல்வா** #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #கதை #செல்வா கவிதை
See other profiles for amazing content