Follow
selva
@81078422
2,084
Posts
1,873
Followers
selva
502 views
1 days ago
பூலாங்குளம் ஈஸ்வரிக்கு பூமாலை தோரணமா அவள் புகழைப் பாட வந்தோம் அதுவே நம் பாக்கியமா! பாடுங்கடி புகழ நம்ம ஈஸ்வரியின் புகழ கிழக்கு முகம் பார்த்திருக்கும் அழகு நீயும் பாரு நம்ம குலம் காக்கும் அன்னை அவளை நீயும் பாரு! பச்சை வண்ணப் பட்டுடுத்தி பவளமல்லி கொண்டு வந்து ஈஸ்வரிக்கு அலங்காரம் இன்பமாய் செய்தோம்! நிச்சயமாய் நல்லருளை அள்ளித் தரும் அன்னை அவள் அல்லிப் பூவைப் பறித்து வந்து காணிக்கையாய் தந்தோம்! அஞ்சாத வரம் தந்து அகிலத்தை ஆள்பவளே அருள் மழை பொழிந்து எங்களைக் காப்பவளே! ஆணவமும் இல்லையம்மா அகங்காரமும் இல்லையம்மா உன் பார்வையிலே தஞ்சம் புகுந்தோம் அம்மா! வேட்டுச் சத்தமும் கேட்குதடி வேகமாக வாராளே நாட்டு மக்கள் வினைதீர்க்க நலம் தரவே வாராளே! ஈஸ்வரியே பேரொளியே இந்த பௌர்ணமியில் நிலவொளியே உன் தீப ஆராதனையில் என் தீமைகள் எல்லாம் தொலையுதம்மா! கற்பூரம் ஜொலிக்குதம்மா உன் முகம் அங்கே தெரியுதம்மா சாந்தமாய் அமர்ந்தவளே ஈஸ்வரியின் புகழைப் பாடுங்கடி! வயல் எல்லாம் நாத்து நட்டு முதல் விளைச்சல் உனக்குத் தான் வண்டி வண்டியா நெல் வரும் உன் சன்னதிக்கு வந்து சேரும்! உடுக்கைச் சத்தம் அதிருதடி உச்சி வானம் பிளக்குதடி உன் பாதம் பட்ட இடமெல்லாம் செம்பொன்னாக மின்னுதடி! வேப்பிலை ஆடை உடுத்தி வேல் பிடித்து வாராளே காக்கும் தெய்வம் ஈஸ்வரியே கருணை மழை பொழிவாளே! உன் அருளால் எங்க மனம் மகிழுதம்மா உன் நினைவால் வாழ்வில் நலம் பெருகுதம்மா! நீயே எங்கள் குலதெய்வம் வரங்களை அள்ளித் தந்திடுவாய் நான் தேடாத போது வந்த தெய்வம் நீயே உன் புகழைப் பாட வரம் தந்து காக்க வந்த தாயும் நீயே! பங்குனி மாதம் சிறக்கும் எங்க ஆத்தா மனசு குளிரும் எங்க ஈஸ்வரியின் புகழை எந்நாளும் பாடிப் போற்றிப் போற்றிடுவோம்! செல்வா ✍️ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #அம்மன் #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #பத்தி
selva
369 views
2 days ago
முதல் பொருளே விநாயகனே! வினை தீர்ப்பவனே! முழுமுதற் கடவுளே எமைக் காப்பாய் விநாயகனே! ஒற்றைக்கொம்பு உடையவனே! ஓங்கார உருவனே! தும்பிக்கை நாதனே! துயரம் தீர்ப்பவனே! முறுக்கு மீசை கொண்ட ஈஸ்வரனே! என் குல ஆண்டவனே! உன்னை வணங்கி நிற்கிறோமே! ஆவேசம் கொண்டவனே! ஆலயத்தில் சிறந்தவனே! ​ சங்கரனே இல்லத்தில் உறைபவனே எண்ணற்ற இன்பங்கள் தருபவனே ஈஸ்வரனின் இடப்பாகம் அமர்ந்தவளே ஈஸ்வரி தாயே! இதயத்தில் வாசம் செய்பவளே இன்பங்கள் யாவும் உன் அருளாலே! ஓம் சக்தி ஓம் சக்தி தாயே இன்னல்கள் தீர்ப்பாயே ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சிவனே ஆதிப் பொருளே! எம் சிந்தை தெளிய வைக்கும் பரம்பொருளே! சந்தனமும் திருநீரும் அபிஷேகமா சங்கரரே சங்கமிக்கும் நாள்தான் ஐயா சிவபெருமானை நாடி வரும் அன்பனுக்கும் நண்பனே! வாசலில் வந்து நின்று வரம் கொடுக்கும் வள்ளலே ​ இறைவனின் வாகனமே நந்தியம்பெருமானே! நாளும் எங்களுக்கு நல்லது செய்திடுவாயே! விண்ணைத் தொட்டு நிற்கும் கொடிமரமே! உன்னைப்போல உயருமே என் வாழ்வே! அண்ணார்ந்து பார்த்து உன்னை தொழுதேனே அருளைப் பொழிந்து என்னை காப்பாயே வில்லேந்தும் ராமபிரான் சீதையுடனே! நல்லருள் புரிவாரே நம் நெஞ்சில் நிலையாகவே! மங்கலங்கள் தந்திடுவார் மங்கை சீதையுடனே! எம் மனக்கவலை தீர்ப்பாரே ரகுராமன் துணையுடனே! ஆறு முகம் கொண்ட சண்முகனே! அள்ளித் தரும் தெய்வமே! வள்ளி தெய்வானையோடு காட்சி தாராரே! வடிவேலன் வடிவில் வந்து எம் வாழ்வு காப்பாரே! ​ நவக்கிரக நாயகரே நல்லருள் புரிவாரே! நாளும் எமைக் காக்க துணையாய் வருவாரே! வெட்டருவா மீசை வச்சிக்கிட்டு ஒய்யாரமா நிற்காரே! உன் சன்னதியில் காவல் தெய்வம் சுடலைமாடன் தானய்யா! தோளில் அருவா ஏந்திக்கிட்டு துணையாய் நிற்க வாராரே! வாராரே மாடன் வாராரே! ​ உன் தாழ் தேடி வந்ததால் காலம் நேரமும் கூடி வந்ததே! என் புகழும் பாடிடுவேன் என் ஜென்மங்கள் உள்ளவரை! நீயே காவலனே! என் குல ஆண்டவனே உன்னை வணங்குகிறோமே! ​ ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... செல்வா ✍️ #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏அயோத்யா ராமர் கோவில் #பக்தி ​
selva
501 views
5 days ago
பூலாங்குளத்தின் பூபாலனே ஈஸ்வரியின் மைந்தனே! சண்முகநாதனே தமிழினத்தின் தலைமகனே! தனிப்பெருங் கடவுளே நீயல்லவா...! ​முருகா... முருகா... முருகா... முருகா! வள்ளி தெய்வானையோடு வேலனே... ஆறுமுக வேலனே! ஓம் என்று சொன்னாலே... என் வாழ்வு சிறக்குது சிங்கார வேலனே...! ​முருகா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சில் கலந்தவனே... முருகா! ​ முருகனே! அழகனே ஆதிகுடி முருகனே! குமரனே குகனே வடிவேலனே சிவனார் பெற்ற செல்வமே! வைகாசி விசாகம் உனது திருநாளாம்... வினை தீர்க்கும் பொன்னாளாம்! சகலமும் தந்து விடும் நன்னாளாம்...! ​நாள்தோறும் உன் எழில் கண்டு... என் செயல்கள் எல்லாம் சிறக்குது முருகா... எங்கள் உள்ளத்திலும் எண்ணத்திலும்... உன் நினைவே தான் முருகா... ​ உன்னை முன் நின்று வணங்கியதால் நான் பின் சென்றதில்லை என் வாழ்வில் முருகா! உன்னை நம்பியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் முருகா! உன்னை நம்பியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் முருகா! ​உன் பெயர் சொல்லி வாழும் இந்தக் காலம் ஒன்றே போதுமே... உன் காலடியில் தஞ்சம் அடைந்தேன் முருகா! ​ஆறுதல் சொல்ல யாரும் இல்லை ஐயா என் குறைகள் தீர்க்க வாராயோ முருகா! உன் முகம் பார்த்தால்... என் மன வேதனை எல்லாம் தீருது முருகா... ​ நான் விரதம் இருந்து வணங்கி வந்தேன் முருகா... என் விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றுவாய் முருகா! இந்தப் பொய்யான உலகில் எதுவும் நிலையில்லை முருகா... உன் மெய்யான வடிவமே போதும் முருகா... உன் திருவடியில் மலராய் இருக்க அருள்வாய் முருகா! ​அழகான வாழ்வு தந்து என்னை பெருவாழ்வு வாழ வைத்தாய் முருகா! ​ உறவுகள் ஆயிரம் இருந்தாலும் உன்னைத் தவிர உறவென்று யாரையும் எண்ணியதில்லை முருகா! பக்தியோடு பாசுரங்கள் பாடி சிந்தை குளிர வழிபடத் தெரியவில்லை முருகா! கண்ணீர் பெருக்கோடு உன் பாதம் சரணடைந்தேன் முருகா! இன்பமோ துன்பமோ அனைத்திலும் நீயே முருகா! ​ தாயும் உண்டு தந்தையும் உண்டு எனைப் படைத்த தகப்பன்சாமி நீ போதும் முருகா! நான் தேடிப் பெற்ற உறவும் என்னை பாதியில் விட்டுவிடாமல் உன் கரம் தந்து காப்பாய் முருகா! நாடி வரும் பிணிகள் யாவும் - உன் வேல் கொண்டு தீர்ப்பாய் முருகா! ​ பூலாங்குளத்தின் பூபாலனே... முருகா முருகா! முருகா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சில் கலந்தவனே... முருகா! ​ முருகா போற்றி! ஓம் முருகா போற்றி! முருகா போற்றி! ஓம் முருகா போற்றி... போற்றி... போற்றி... போற்றி! செல்வா ✍️ #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகா #🙏திருச்செந்தூர் முருகர்🙏 ஓம் முருகா 🙏கந்தா கடம்பா கதிர் வேலா 🙏கந்தனுக்கு அரோகரா🙏 #🙏🏼 ஓம் முருகா🙏🏼 👏👏ஓம் சரவணபவ 👏👏 ஓம் கந்தா கதிர்வேலா 🙏🏼🙏🏼
selva
635 views
8 days ago
மேள சத்தம் ஒலிக்க... வேட்டுச் சத்தம் அதிர... கொடி ஏற்றத்துடன்... தொடங்குதம்மா ஈஸ்வரியின் திருவிழா! வம்சம் தழைக்கவே... வந்து அமர்ந்த அரசியே! குலம் காக்க... குடி கொண்ட ஈஸ்வரியே! அன்னை அருளாலே... அகிலம் தழைக்குதம்மா! மனம் உருகி வேண்டினால்... மகத்தான வாழ்வு தருபவளே ஈஸ்வரியே! செப்புத்திருமேனி அம்மா... செஞ்சு வச்ச தேரழகு மா! கதிரவன் உதிக்கும் முன்னே... வீதி வலம் வரும் ஈஸ்வரியே! யான் அறியாத போதே... எனை ஆட்கொண்டாயே அம்மா! மேனி சிலிர்க்க... என் முன்னோர் உடலில் குடி கொண்டாய் அம்மா! ஓலைக் குடிசையிலே அன்று... அருள்வாக்குச் சொன்னவளே! ஓட்டுக் கூரையிலே அமர்ந்து... ஆட்சி செய்தவளே! ​ ஈஸ்வரி ஈஸ்வரி என்று துதித்தாலே... சிவஞானமும் உண்டாகும் அம்மா! ஈஸ்வரி ஈஸ்வரி என்று துதித்தாலே... சிவஞானமும் உண்டாகும் அம்மா! ​ கல் மண்டபம் எனும் கருவறையில்... இன்று நிலைத்தவளே! மண்ணால் செய்த தேகம் அன்று... சிற்பத்தில் உயிர் கொண்டு ஒளி தந்தாய் அம்மா இன்று! அய்யா கோவில் சப்பரம் முன்னே வர... அன்னை காளியின் சப்பரம் பின்னே வர... மூன்றாவதாய் உன் சப்பரம் வீதியுலா வரும் என... நீ தந்த வாக்கு இன்று... சத்தியமாய் பலிக்குதம்மா! ​ சொந்தம் பந்தம் ஆயிரம் இருக்க... நான் உன்னை மட்டும் நாடி வந்தேன் அம்மா! உன் பொற்பாதத்தில் தஞ்சம் கொண்டேன்... என் அம்மா! பேராசை ஏதும் இல்லை அம்மா... உன் பெயர் சொல்லி வாழ்ந்தாலே போதும் அம்மா! ​ காப்பாய் அம்மா... காலமெல்லாம் காப்பாய் அம்மா! ஈஸ்வரியே... சரணம் அம்மா! ஈஸ்வரியே... சரணம் அம்மா செல்வா ✍️ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #ஆன்மீகம் #மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஓம் சக்தி #செல்வா கவிதை
selva
412 views
1 months ago
இந்த பிரபஞ்சத்திற்கே நீ இராணி நான் ராஜா என்றேன் நீ சிரித்தாய் என்றைக்குமே நீ என் மகாராணி தான் என்றேன்.... கவிதையே வேண்டுமானால் பொய் அழகாக்கலாம் என் வாழ்க்கைய உன்னைத் தவிர யாரும் அழகாக்க முடியாது. உன் தோழியிடம் நீ பேசிய வார்த்தையை மறைந்திருந்து கேட்டேன் என்று எனக்கு நானே ஆறுதல் கூறுகிறேன். வருடம் தோறும் வரும் காதலர் தினம் உன் நினைவுகள் என் மனதில் இருப்பதனால் நாள்தோறும் எனக்கு காதலர் தினமே. உன் சந்தோஷம் என் சந்தோஷம் என்று சொன்னாய் உன் ஆசைய நிறைவேற்ற என் ஆசையை துறந்தேன். காளியம்மன் கோவில் திருவிழாவில் இருவரும் ஒரே கலரில் ஆடைகள் அணிந்தோம் ஊரே நம்மை கண்டு வியந்தது. ஊரே பேசியது நீ எனக்கானவள் என்று நான் அறியவே இல்லை இப்படி என்னை நடுவீதியில் விட்டு செல்வாய் என்று. உன் தாய் தந்தை ஆசைக்காக நீ என்னையே இழந்தாய் நீ இழந்தது என்னை மட்டுமல்ல நம் இருவரும் சேர்ந்து காதலித்த காதலையும் . காதலர் தினத்திற்கு கவிதை எழுதுவதற்கு நினைவுகள் வருதோ இல்லையோ. உன் நினைவுகள் வரும்போது எல்லாம் பல கவிதைகளை எழுதி விடுகிறேன். காதலர் தினத்தை எதிர்பார்த்த நாட்களை விட என் காதலியே நீ வரும் நாட்களை எதிர்பார்த்ததே அதிகம். காலங்கள் தான் ஓடியது நாம் அன்று பேசிய வார்த்தைகள் என் இதயங்களில் அழியாத பொக்கிஷமாய் ஆனது. ஓர் இரவை தொலைக்க ஒரு பாடல் போதும் என் மனதில் இருக்கும் உன்னை மறக்க இந்த ஒரு ஜென்மம் போதாது. செல்வா ✍️ #💞Feel My Love💖 #💔காதலர் தினத்தில் காதல் தோல்வி😢 #👗GRWM for காதலர் வாரம்💕 #💕காதலர் தினம் பரிசுகள்🎁 #😂காதலர் தின மீம்ஸ்💕
selva
533 views
1 months ago
எங்க ஊரு டூரிங் கொட்டாய் பழைய நினைவுகள் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக எங்கள் கிராமத்தில் டூரிங் கொட்டாய் இருந்தது அதில் படம் பார்த்த அனுபவம் இன்றுவரை நினைவில் இருக்கு ஊருக்கு மேற்கு புறம் அமைந்திருக்கும் அதை சுற்றி வீடுகள் அதிகம் கிடையாது இந்த டூரிங் கொட்டாய் தகர சீட்டுகளால் ஆனது மிகவும் காற்றோட்டமாய் அமைந்திருக்கும் முன் பகுதி மணல் அதிகமாக இருக்கும் அதற்கு பின்பகுதி பெஞ்ச் இருக்கும் அதற்குப் பின்புறம் சேர் இருக்கை இருக்கும் மணலில் அமர்ந்து படம் பார்ப்பதற்கு மூன்று ரூபாய் டிக்கெட் பெஞ்சில் அமர்ந்து படம் பார்ப்பதற்கு ஐந்து ரூபாய் டிக்கெட் சேரில் அமர்ந்து படம் பார்ப்பதற்கு ஏழு ரூபாய் டிக்கெட் இப்படி மூன்று விதமாக இருக்கும் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் மணலில் அமர்ந்து படம் பார்க்க மிகவும் வசதியாக இருக்கும் கால்களை நீட்டி படம் பார்க்கலாம் பார்த்துக் கொண்டே படம் பார்க்கலாம் மாலை 6:30 மணிக்கு முதல் பாடலாக பிள்ளையார் பாடல் ஒலிக்கும் அதன் பின்பு 5 பாடல்கள் ஒலிக்கும் கடைசி பாடலாக வெற்றிவேல் வீரவேல் என்ற பாடல் ஒலிக்கும் கடைசி பாடல் ஒலிக்கும் போது நிறைய பேர் படம் ஆரம்பம் ஆகிவிடும் என்று ஓடி வருவார்கள் டிக்கெட் எடுக்கும் ரூமில் வரிசையாக நிற்க வேண்டும் டிக்கெட் எடுக்கும் பொழுது நமது கை மட்டும் உள்ளே செல்வது போல் ஆங்காங்கே ஆறு துளைகள் இருக்கும் அதன் வழியாக நாம் டிக்கெட் எடுக்க வேண்டும் நாம் டிக்கெட் எடுக்கும் பொழுது தரை பெஞ்சு சேர் என்று கேட்டு வாங்க வேண்டும் சனி ஞாயிறு கிழமைகளில் நல்ல கூட்டம் இருக்கும் 7:00 மணிக்கு எல்லாம் படம் ஆரம்பம் ஆகிடும் நான்கு ரில்கள் ஓடும் இரண்டாவது ரில் முடிந்தவுடன் இடைவேளையில் முறுக்கு வில்லை கடலை மிட்டாய் என்று கூட்டத்தில் இரண்டு பேர் வியாபாரம் செய்வார்கள் இரண்டு பேரும் சுற்றி நிறைய கூட்டங்கள் இருக்கும் அதில் பெண்கள் பகுதி நிற்கும் நபரிடம் நிறைய பெண்கள் சுற்றி நிற்பார்கள் அவர்களை பார்க்கும்போது அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என்று தோன்றும் நிறைய படம் மணலில் அமர்ந்து பார்த்ததுண்டு மணலில் அமர்ந்து படம் பார்க்கும் பொழுது மிக அருமையாக இருக்கும் மணல்களை கூட்டி அதன் மேல் அமர்ந்திருந்து படம் பார்க்க வசதியாக இருக்கும் சேர் பெஞ்சி மட்டும் மின்விசிறிகள் இருக்கும் மணலில் அமர்ந்து படம் பார்ப்பதற்கு மின்விசிறி கிடையாது படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிட்டுக்குருவி எல்லாம் பறந்து ஓடும் 20 ரூபாய் இருந்தால் போதும் படம் பார்த்துவிட்டு தியேட்டர் அருகில் உள்ள கடையில் புரோட்டா சாப்பிடலாம் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது இந்த கடையின் புரோட்டா சாப்பிட படத்தின் கதையை ரசிக்கலாம் பின்பு தியேட்டரில் சிறிய மாற்றம் செய்து சைடில் உள்ள தூண்களில் சைடு ஸ்பீக்கர் பாக்ஸ் வைத்து அதை சண்டை காட்சிகள் மட்டும் ஒலிக்கும் அதை வைத்து பிறகு படம் பார்க்கிற்கு நல்லா இருக்கும் அந்த காலத்துல அதுதான் டிடிஎஸ் தியேட்டரில் இரண்டு புளிய மரங்கள் நிற்கும் நல்ல காற்று வாங்கிக் கொண்டே படம் பார்க்க வசதியாக இருக்கும் சில பேர் தர டிக்கெட் எடுத்துக்கொண்டு பெஞ்சில் அமர்ந்து படம் பார்ப்பார்கள் அது டிக்கெட் வாங்குவது பார்த்து விட்டால் அவர்களை அழைத்து தரை டிக்கெட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் தனது கிராமத்திற்கு பக்கத்துக் கிராமத்தில் இருந்து நிறைய பேர் சைக்கிள் பைக்கு வாகனத்தில் படம் பார்க்க வருவார்கள் இடைவேளை நேரத்தில் கூட்டத்தில் பாதி பேர் இருந்து பெண்கள் இருக்கும் இடத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள் பெண்கள் பகுதிக்கும் ஆண்கள் பகுதிக்கும் நடுவில் இரண்டடி சுவர் மட்டும்தான் இருக்கும் அந்த காலத்தில் தன் காதலியே பார்ப்பதற்கு இது இடமாக அமைந்தது நிறைய காதலர்களை உருவாக்கியது இந்த டூரிங் கொட்டாய் வாரத்தின் நான்கு நாட்கள் ஏதாவது பழைய படம் ஓடும் மீதி உள்ள மூன்று நாட்கள் நல்ல படம் போடுவார்கள் சரத்குமார் ராமராஜன் விஜய் அஜித் திரைப்படங்கள் எல்லாம் குரு வாரங்களுக்கு மேல் ஓடும் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படம் இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடியது அந்தப் படம் ஓடிய நாட்களில் தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழியும் பொங்கல் தீபாவளி என்றால் இந்த டூரிங் கொட்டையில் நான்கு காட்சிகள் திரையிடப்படும் சைடு எல்லாம் தார்பாயை வைத்து அடைத்து பகல் காட்சி திரையிடப்படும் இந்த தியேட்டர் நல்லா போய்க்கொண்டிருந்த காலத்தில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் வீட்டுக்கு வீடு டிவி கொடுத்து சன் டிவி நெட்ஒர்க் அறிமுகம் செய்து வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியை கண்டு களிக்க மக்களுக்கு வசதியானது நாட்கள் செல்ல செல்ல தியேட்டரில் நோக்கி செல்வதற்கு மக்களுக்கு மக்களுக்கு விரும்பவில்லை தொலைக்காட்சியிலேயே படங்கள் பார்த்து பழக்கம் மட்டும் மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை படிப்படியாக மக்கள் குறைக்க தொடங்கினார்கள் பின்பு சன் டிவி தொடர்ந்து நாடகம் ஒளிபரப்பு தொடங்கியது இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே நாடகத்தை கண்டு மகிழ்ந்தனர் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை வெகுவாக குறைத்து விட்டனர் தினம் இரண்டு காட்சிகள் மட்டும் ஓடிய டூரிங் கொட்டாயில் ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படும் அப்படி நாட்கள் செல்ல செல்ல கூட்டம் தியேட்டருக்கு வருவது குறைய தொடங்கினர் பின்பு சனி ஞாயிறு நாட்களை மட்டும் திரையரங்கம் காட்சிகள் ஓடும் இப்படி வெகுவாக குறைந்து நாட்கள் செல்ல செல்ல இந்த தியேட்டர் ஆட்கள் வரத்து குறைந்ததால் நிரந்தரமாக மூடப்பட்டது இன்றைய காலகட்டத்தில் 250 ரூபாய் கொடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ஃபுல் ஏசியில் படம் பார்த்தாலும் அன்றைய காலத்தில் ஐந்து ரூபாய் டிக்கெட் படம் பார்த்த மகிழ்ச்சி இப்போ கிடைப்பதில்லை செல்வா #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #கதை #பழைய நினைவுகள் #செல்வா கவிதை