Follow
prithvi
@adhirupan
399
Posts
2,414
Followers
prithvi
575 views
6 days ago
எங்கும் துரோகம், எதிலும் சுயநலம் என்று உணரும்போது மனதில் ஒரு கேள்வி வரும் ! உண்மையான மனிதர்கள் இருக்கிறார்களா என்று. ஆனால் , வாழ்க்கை முழுவதும் துரோகமும் சுயநலமும் மட்டும் அல்ல.. சில அனுபவங்கள் நம்மை விழிக்க வைக்கவே வருகிறது. நாம் அனைவரிடமும் ஒரே அளவு அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்போம், ஆனால் , எல்லோருக்கும் அதே மதிப்புகள் இருக்காது. அப்போது ஏமாற்றம் உருவாகும். துரோகம் நடந்தால் பலர் உலகமே தவறு என்று நினைக்கிறார்கள்.. உண்மையில் அது மனிதர்களை தேர்ந்தெடுத்து நம்ப வேண்டும் என்பதை கற்றுத்தரும் ஒரு அனுபவம். சுயநலம் நிறைந்த சூழலில் கூட நம் மனசாட்சியை இழக்காமல் இருப்பது ஒரு பெரிய வலிமை. எல்லோரையும் திருத்த வேண்டிய அவசியமில்லை, எல்லோரிடமும் நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பதை காலம் காட்டும்.. யார் தேவைக்காக மட்டுமே வந்தார்கள் என்பதையும் சூழ்நிலை காட்டும். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 அதனால் , மனதை கசப்பாக மாற்றாமல், அனுபவத்தை அறிவாக மாற்றி முன்னேறுவது தான் அமைதியான வளர்ச்சி ! நல்லவைகள் வாழ்க நல்லாற்றல் பெருக 🙏🏻🦚📿.. அண்ணாமலைக்கு அரோகரா 🙏🙏🙏ஓம் நமச்சிவாயம் வாழ்க .....❤️❤️❤️🙏