Follow
அன்புத்தோழன் ரா. அருண் எம்.பி.ஏ.,
@anbu_thozhan_arun_mba
5,195
Posts
35,272
Followers
அன்புத்தோழன் ரா. அருண் எம்.பி.ஏ.,
1.1K views
4 days ago
AI indicator
பல்லாயிரம் தியாகங்கள் விதைக்கப்பட்ட பூமியிது, பகைவர்கள் தடைகளைத் தகர்த்தெறிந்த வீரமிது! எல்லோரும் சமம் எனும் உன்னதக் கொள்கையுடன், ஏற்றமிகு பாரதம் எந்நாளும் வாழியவே! பட்டொளி வீசிப் பறக்கும் நம் மூவர்ணக் கொடி, பார்க்கும் போதெல்லாம் சிலிர்க்குதடி நெஞ்சம்! எட்டிய திசையெல்லாம் சுதந்திரக் காற்று வீச, இணையிலா நாட்டினில் நாமும் வாழ்வோமே! சாதி பேதங்கள் சவக்குழியில் வீழ்ந்திட, சமத்துவம் காத்து நாம் சிகரங்கள் தொடுவோமே! நீதியின் பாதையில் நிமிர்ந்தே நடந்திட, கோடியில் ஒருநாடாய் நம் கீர்த்தியைக் காப்போமே! 🇮🇳!🇮🇳 என் தாய்த் திருநாட்டின் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳❤️ வந்தே மாதரம்! 🇮🇳 Priya Ranganathan #சுதந்திரதினம் #சுதந்திரதினகவிதை #independencedayindia #IndiaNews #VandeMataram #JaiHind #👏Inspirational videos #🛕இந்திய பாரம்பரிய இடங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰
அன்புத்தோழன் ரா. அருண் எம்.பி.ஏ.,
1K views
4 days ago
AI indicator
பல்லாயிரம் தியாகங்கள் விதைக்கப்பட்ட பூமியிது, பகைவர்கள் தடைகளைத் தகர்த்தெறிந்த வீரமிது! எல்லோரும் சமம் எனும் உன்னதக் கொள்கையுடன், ஏற்றமிகு பாரதம் எந்நாளும் வாழியவே! பட்டொளி வீசிப் பறக்கும் நம் மூவர்ணக் கொடி, பார்க்கும் போதெல்லாம் சிலிர்க்குதடி நெஞ்சம்! எட்டிய திசையெல்லாம் சுதந்திரக் காற்று வீச, இணையிலா நாட்டினில் நாமும் வாழ்வோமே! சாதி பேதங்கள் சவக்குழியில் வீழ்ந்திட, சமத்துவம் காத்து நாம் சிகரங்கள் தொடுவோமே! நீதியின் பாதையில் நிமிர்ந்தே நடந்திட, கோடியில் ஒருநாடாய் நம் கீர்த்தியைக் காப்போமே! 🇮🇳!🇮🇳 என் தாய்த் திருநாட்டின் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳❤️ வந்தே மாதரம்! 🇮🇳 Priya Ranganathan #சுதந்திரதினம் #சுதந்திரதினகவிதை #independencedayindia #IndiaNews #VandeMataram #JaiHind #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👏Inspirational videos #🛕இந்திய பாரம்பரிய இடங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😎வரலாற்றில் இன்று📰
அன்புத்தோழன் ரா. அருண் எம்.பி.ஏ.,
1.4K views
5 days ago
AI indicator
தூக்கணாங் குருவியைப் போல் காதலியுங்கள்... "அப்படி என்ன தூக்கணாங்குருவிகளின் உன்னதமான காதல்"... பறக்கத் தெரிந்து தனது இறையைத் தானே தேடிட ஆரம்பித்து, தனது தாய் தந்தைக் குருவிகள் கட்டியிருக்கும் அற்புதமான கூட்டிலிருந்து தன் ஜோடியை தேடி ஆண் குருவிகள் வெளியேறும்.... கூடு கட்டுவது ஆண் குருவி தான், பெண் குருவிகளுக்கு கூடு கட்டத் தெரியாது... அதனுடைய வீடு அது கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே அதனுடைய ஜோடியை அது தேடிப் பிடிக்கும், தான் கட்டியிருக்கும் கூட்டிற்கு தனது காதலியைக் கூட்டி வந்து காட்டும் காதலியைக் கவருவதற்காக களி மண்ணில் மின் மினிப் பூச்சிகளைக் கூட்டினுள் வைக்கும், சிறு சிறு வண்ணப்பூக்களைக் கொண்டு கூட்டினை அலங்கரிக்கும், காதலிக்குப் பிடித்தமான உணவைக் கூட்டினுள் வைத்து காதலிக்காக அது காத்திருக்கும்... கிட்டத்தட்ட மனிதனின் வாழ்க்கையும் இப்படித் தான்... பிழைக்கக் கூடிய வயது வந்தவுடன் தனக்கென ஒரு வீட்டைக் கட்டுகிறான், சிலர் காதலித்து கல்யாணம் முடித்து வீடு கட்டுகின்றனர், சிலர் வீடு கட்டியப் பிறகே கல்யாணம் என்கின்றனர்... தூக்குனாங் குருவியின் காதல்... ஆண் குருவி கூட்டைக் கட்டிக் கொண்டே தானும் இரைத் தேடி, இரை இருக்கும் இடத்தை தனது காதலிக்கும் காட்டி விடும், மீண்டும் மரத்திற்கே அழைத்து வந்து, கூட்டையும் கட்டிக், இது தான் என் வாழ்க்கை நான் இப்படித் தான் வாழ்கிறேன், என்னுடன் சேர்ந்து உனக்கு வாழ விருப்பமா? என பெண் குருவியின் சம்மதத்தைக் கேட்கும்... பெண்களைப் போலவே தான் சில பெண் குருவிகள் ஏற்றுக் கொள்ளும், சில குருவிகள் ஆண் குருவி காட்டும் உணவை இருக்கும் இடத்தை அறிந்து அதை கலட்டி விட்டு வேறொரு துணையைத் தேடும், ஆண் குருவிகள் அப்படிக் கிடையாது பெண் குருவிகளிடம் சண்டையிடாது அதைக் கட்டாயப்படுத்தாது, தனக்கான ஜோடி கிடைக்கும் வரை அது பல பெண் குருவிகளுடன் பழகி வரும்... அதனுடைய ஜோடி அதற்கு கிடைத்துவிட்டால், பெண் குருவி முட்டையிட்டு அடைக் காத்து குஞ்சுப் பொறிக்கும் வரை ஆண் குருவி தூங்கவே தூங்காது, ஏரத்தாள ஆண்களைப் போலத் தான் தன் மனைவி கருவுற்றக் காலங்களில் பல ஆண்கள் விழித்துக் கொண்டு தான் இருப்பார்கள், குஞ்சுப் பொறிக்கும் வரை பெண் குருவி கூட்டை விட்டு வெளியே போகாது எப்பேற்பட்ட காற்று மழையிலும் பெண் குருவி கூட்டை விட்டு வெளியேறாது, இதில் மனிதர்களுக்கு அவை சொல்லிக் கொடுப்பது... குடும்பம் என்றால் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கத் தான் செய்யும் அவற்றைச் சமாளித்து கூட்டினிலேயே அதாவது கணவனிடமே வாழ பழகிக் கொள்ள வேண்டும், குஞ்சுப் பொறிக்கும் வரை இடைவிடாத நேரத்தில் ஆண் குருவி தனது துணைக்கு இறை தேடத் தொடங்கும் பெண் குருவிக்கு ஆண் குருவி தான் இறையை ஊட்டிவிடும்... இது எவ்வளவு அழகான காதல் நண்பர்களை இதுவரை எந்த ஆராய்ச்சியாளர்களாலும், ஒரு தூக்கணாங்குருவிக் கூட்டை கலைத்துப் போட்டு மீண்டும் கூட்டை சரி செய்ய இயலவில்லை! இந்தத் தருணம் வரை தூக்கணாங்குருவிக் கூடுகள் புதிரானவை! மர்மமானவை! தான் வளர்ந்த கூட்டிற்குள் எந்த ஆண் குருவியும் மீண்டும் நுழைவது இல்லை... பெண் குருவிகள் கூட்டிற்குள் இருக்கும்! தன் மணவாளன் தனக்காகத் கட்டிய அந்த வீட்டிற்குள் காத்துக் கொண்டிருக்கும்... அதே போல் அந்தக் கூட்டில் முதன் முதலாக காதலியை உள்ளே போக அனுமதித்து, அதாவது வலது காலை வைத்து அழைத்துப் பின்னால் செல்லும்... காதலன் நீண்ட தூரம் வரை பயணித்துப் பஞ்சுகளை சுமந்து, ஒரு படுக்கை அறை, முட்டைகளை அடைகாப்பது, கழிவுகளை வெளியேற்றுவதும், குஞ்சுப் பொரித்து வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் அந்தக் கூட்டின் புடைத்தப் பகுதியில் இருக்கும்! குருவி வகைகளைச் சேர்ந்த சில பறவைகள் கூட்டைப் பூக்களாலும் அலங்கரிக்கும். சில பறவை இனங்கள் கூடு முழுவதும் வெளியே மலர்களால் அலங்காரம் செய்து, நடனம் ஆடும்! பின் கூடுகளுக்குள் செல்லும், பின் மீண்டும் வெளியில் வந்து நடனம் ஆடும்! சொக்கிப் போவாள் காதலி! உள்ளே வாழ்ந்துத் தீர்க்கும்... விதவிதமாக வெஜ் நான்வெஜ் போன்ற உணவுகளை, கிடைக்கும் அனைத்தையும் எடுத்துச் சென்று காதலிக்கு ஊட்டிவிடும்... காதலி கரு உருவாவாள். அதன் பின் இன்னும் அதிகம் கவனம் செலுத்தும்! சத்தான அத்திப்பழங்கள், ஆலம்பழங்கள், கொய்யா, மா, மற்றும் என்னவெல்லாம் அரிதான பழம் கிடைக்கிறதோ நாவல்பழம் உட்பட ஊட்டி ஊட்டி காதலியை இன்பத்தில் திளைக்க வைக்கும். இதில் இன்னொரு ஹைலைட் இருக்கிறது. ஆடிப் போவீர்கள். தான் வெளியே இரைத் தேடும் சில சமயங்களில் பாம்புகளாலோ, பருந்துகளாலோ தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ‘காதலியும் குழந்தையும் பட்டினி இருக்கக்கூடாது’ என்று, கர்ப்பக் காலத்தில் தானியங்களை உள்ளே குவித்து விடும்... இரைத் தேடும் போது சமயங்களில் பாம்புகள் காதலனைக் கவ்விப் பிடித்து விடும்! காதலி இரண்டு நாட்கள் தவிக்கும். வெளியே வந்து தேடி விட்டு கூட்டுக்குள் ஓடும். மீண்டும் வெளியே வந்து படபடவென்று அடித்துக் கொண்டு உள்ளே வந்து விடும்... இனி காதலன் வர மாட்டான், காதலனுக்கு என்னவோ நிகழ்ந்து விட்டது. இனி இந்த இரைகள் காலியாகி விடும்! தானே சம்பாதிக்க வேண்டும். குஞ்சுகளைப் பெரிதாக்கி வெளியே அனுப்ப வேண்டும், - என்று மிகப் பொறுப்புடன் குஞ்சுகளை வளர்க்கும்! இன்னொரு காதலனைத் தேடாது! குஞ்சுகள் வளர்ந்துப் பெரிதானதும், “போ மகனே, சமத்தாய் போ மகளே, யாரோ ஒரு காதலன் உனக்காகக் கூடு கட்டிக் கொண்டிருப்பான். மகனே போ யாரோ ஒரு காதலி நீ வீடு கட்டக் காத்திருப்பாள்! போய் வா செல்வங்களே...” என்று அனுப்பி வைத்து விட்டு அளவாய் இரைத் தேடி, உண்டு கூட்டுக்குள்ளயே முடங்கி ஒருநாள் அந்தக் கூட்டுக்குள்ளயே இறந்துக் கிடக்கும்... இப்போது சொல்லுங்கள்... தூக்கணாங் குருவிகளைப் போல் உண்மையாகக் காதலியுங்கள் √ #sparrow #sparrownest #sparrowlake #Wow #WowMoment #WowFactor #WowWowWow #amazingfacts #amazingvideo #amazingnature #amazingview #Amazing #birds #love #lovestory #moral #storytelling #MoralStory #😍Spread Happiness❤️ #👏Inspirational videos #👉வாழ்க்கை பாடங்கள் #💞Feel My Love💖 #🏞நம்ம ஊர் சுற்றுலா