Follow
அன்புமணி ராமதாஸ்
@anbumani_ramadoss
1,795
Posts
51,903
Followers
அன்புமணி ராமதாஸ்
218 views
1 hours ago
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி அவர்களை ஆதரித்து மாம்பழம் சின்னத்திலும், சீர்காழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சக்தி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும்  வாக்கு சேகரித்து, மயிலாடுதுறையில் தேர்தல் பரப்புரை செய்த போது.! #election2026 | #PMK | #NDA ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
672 views
1 hours ago
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான வடிவேல் இராவணன் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்து, பிராதாமபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்த போது.! #election2026 | #PMK | #NDA ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
1.7K views
1 hours ago
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான O.S.மணியன் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து, செம்போடையில் தேர்தல் பரப்புரை செய்த போது.! #election2026 | #PMK | #NDA ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
297 views
1 hours ago
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர்.காமராஜ் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து, குடவாசலில் தேர்தல் பரப்புரை செய்த போது.! #election2026 | #PMK | #NDA ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
555 views
20 hours ago
மகளிர் அதிகாரம் மற்றும் உரிமைக்கு எதிராக துரோகம் செய்த மு.க.ஸ்டாலின்: வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் தான் இடம் பெறுவார்! நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை சமூக அநீதியாளர்களையெல்லாம் ஒன்று திரட்டி வீழ்த்தியது மட்டுமின்றி, மகளிருக்கு அதிகாரம் வழங்கப்படுவது தடுக்கப்பட்டதை பட்டாசு வெடித்தும் மு.க.ஸ்டாலின் கொண்டாடியிருக்கிறார். காலம் கொடூரமானவர்களை அடையாளம் காட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மகளிருக்கு எதிராக துரோகங்களை இழைத்ததுடன், அதை வெற்றியாகவும் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது. உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி சட்டப்ப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் வரை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சிந்தனை 1987&ஆம் ஆண்டில் எழுந்தது. முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 1993&ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின் இன்று வரையிலான 33 ஆண்டுகளில் மகளிர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க பல்வேறு தருணங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை வெற்றி பெறவே இல்லை. எண்ணற்ற தருணங்களில் இந்த முயற்சியைக் கூட்டணி வைத்து முறியடித்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான். சமூகநீதிக்கு எதிரான டி.என்.ஏ கொண்டவர்களின் குணமும், நடத்தையும் எந்தக் காலத்திலும் மாறாது என்பதற்கு எடுத்தக்காட்டாகத் தான் கடந்த காலங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டை முறியடித்த திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இப்போதும் தங்களின் சமூக அநீதி சாகசத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றியுள்ளன. தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற 5 பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்து சமூகநீதி படுகொலை செய்திருப்பதை ஏற்க முடியாது. மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வாக்களிப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக  நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலாகவே, இதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் மூகாரி இராகம் தான் பாடி வந்தார். முதலில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விடும் என்று குற்றஞ்சாட்டினார். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அனைத்து மாநிலங்களையும் போலவே தமிழ்நாட்டிலும் மக்களவைத்  தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்த்தப்பட்டு 59 இடங்களாக அதிகரிக்கும் என்று நானும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் உறுதியளித்த நிலையில், அதையெல்லாம் ஏற்க முடியாது; இதற்கான உத்தரவாதத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது; மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இப்போதுள்ள 7.18%ஐ விட சற்று அதிகமாக 7.23% ஆகவும்,  தொகுதிகளின்  எண்ணிக்கை 59 ஆகவும் உயரும் என்றும் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தனர். அதன்பிறகும் எதிர்க்கட்சிளை ஒன்று திரட்டி, மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை மு.க.ஸ்டாலின் வீழ்த்தியிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் அவர் மனதில் ஊறியிருக்கும் பெண்ணடிமை புத்தியும், பெண்கள் ஒரு காலத்திலும் சட்டமன்ற உறுப்பினராகோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ உயர்ந்து விடக் கூடாது; அவர்கள் எப்போதும் அடுப்பூதும் பெண்களாகவே தொடர வேண்டும் என்ற வன்மமும் தான். பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற தனது சமூகநீதி வெறுப்பை இப்போது ஸ்டாலின் உமிழ்ந்திருக்கிறார். மகளிர் இட ஒதுக்கீட்டு அரசியல் சட்டத் திருத்த முன்வரைவு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 816 ஆகவும், தமிழகத்தில் 59 ஆகவும்  அதிகரித்திருந்திருக்கும். தேசிய அளவில் 273 இடங்களும், தமிழக அளவில் 20 இடங்களும்  கூடுதலாக உருவாக்கப்பட்டு மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இன்னும் 3 ஆண்டுகளில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து குறைந்தது 20 பெண்கள் மக்களவையில் வீற்றிருந்திருப்பார்கள். ஆனால், அதைக் கெடுத்தது வன்மமும், வஞ்சகமும் நிறைந்த மு.க.ஸ்டாலினும், அவரது சகாக்களும் தான். மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவை தோற்கடிக்கச் செய்தது மட்டுமின்றி, அதை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடியிருப்பது அவரது சாடிச மனப்பான்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1941 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்ட ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த 90 லட்சம் யூதர்களில், மூன்றில் இரு பங்கினரான 60 லட்சம் யூதர்களை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் இனஅழிப்பு செய்தார். கொத்துக் கொத்தாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட போதெல்லாம் அதைக் கண்டு ரசித்ததாகவும், மகிழ்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கொடுங்கோலர் ஹிட்லரின் இந்த சாடிசமும், மு.க.ஸ்டாலினின் நவீனகால சாடிசமும் ஒன்று தான்; இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை வீழ்த்தி விட்ட மகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலினும் அவரது கூட்டாளிகளும்  எக்காளமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு கைநழுவி விட்டதை எண்ணி தாய்மார்கள் வேதனையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் கைக்கெட்டும் காலத்தில், அதாவது இன்னும் 3 ஆண்டுகளில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை அலங்கரித்திருப்பார்கள். இதன் மூலம் உலகில் அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட அவையாக இந்திய நாடாளுமன்ற மக்களவை உருவெடுத்திருக்கும். ஆனால், வன்மக் கிடங்கு மு.க.ஸ்டாலினும் அவரது சகாக்களும் இந்த வரலாற்று வாய்ப்பைக் கெடுத்து விட்டார்கள். அந்த வாய்ப்பு இந்தியப் பெண்களுக்கு இனி எப்போது மீண்டும் கிடைக்கும் என்பது தெரியவில்லை. சட்டமியற்றும் அவைகளில் பாலினச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். ஆனால், 23 நாடுகளின் மக்கள் அவைகளில் மட்டும் தான் இதுவரை பெண்களின் பிரதிநிதித்துவம்  40 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இந்திய மக்களவையில் மகளிர் பிரதிநிதித்துவம் இப்போது வெறும் 13.6% (74 பேர்) ஆகவே உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பைக் கெடுத்த மு.க.ஸ்டாலின் துரோகக் கருப்புப் பக்கங்களில் தான் இடம் பெறுவார். அவரை மகளிர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. இதற்கான தண்டனையை திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் அளிப்பார்கள். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
508 views
1 days ago
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான திருமதி. S.கோகுல இந்திரா அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திலும், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கே.என்.சேகர் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும்  வாக்கு சேகரித்து, அரும்பாக்கத்தில் தேர்தல் பரப்புரை செய்த போது.! #election2026 | #PMK | #NDA ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
581 views
1 days ago
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் அவர்களை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து, மேடவாக்கத்தில் தேர்தல் பரப்புரை செய்த போது.! #election2026 | #PMK | #NDA ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
896 views
2 days ago
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், புரட்சி பாரதம் கட்சித் தலைவருமான மு.ஜகன்மூர்த்தி  அவர்களை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து, கே.வி.குப்பத்தில் தேர்தல் பரப்புரை செய்த போது.! #election2026 | #PMK | #NDA ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
534 views
2 days ago
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கே.சி.வீரமணி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் அ.ஞானசேகர் அவர்களுக்கு பிரஷர் குக்கர் சின்னத்திலும் வாக்கு சேகரித்து, திருப்பத்தூரில் தேர்தல் பரப்புரை செய்த போது.! #election2026 | #PMK | #NDA ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
1.3K views
2 days ago
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயர்கிறது: மகளிர் அரசியல் அதிகாரத்தை எதிர்க்கும் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக மேற்கொள்ளப் படும் தொகுதிகள் மறுவரையறையின் போது தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது; அனைத்து மாநிலங்களையும் போலவே 50% அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்ட கூப்பாடு பொய் என்பது உறுதியாகியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதா 2023&ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டது. அந்தச் சட்டத்தின்படி அடுத்து நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், 2026&27ஆம் ஆண்டில் அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பணிகள் நிறைவடைய 2030&ஆம் ஆண்டுக்கு மேலாகும் என்பதால், 2034&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், அதன்பின் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். இது மிகவும் தாமதம் என்பதை உணர்ந்த மத்திய அரசு, இப்போது 2029&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்காக 2011&ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யவும், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும், அதில் 273 இடங்களை மகளிருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்த முன்வரைவு உள்ளிட்ட 3 மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று 16&ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் போது, தமிழ்நாட்டின் தொகுதிகள் விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி, அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் தடுமாறி வந்த மு.க.ஸ்டாலின், தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் வைத்து தேர்தல் பரப்புரையை திசை திருப்ப முயன்றார். தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை கண்டிப்பாக குறைக்கப்படாது; விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தப்படும் என்று நானும், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் அளித்த விளக்கத்தைக் கூட ஏற்க மறுத்து விட்டார். நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது; மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமர் தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்; அதுவும் நாடாளுமன்றத்தில் தான் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். அதுமட்டுமின்றி, கறுப்புக்கொடி போராட்டம், தொகுதி வரையறை சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம் என்று தேவையில்லாத பதட்டத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயன்றார். ஆனால், தொகுதிகள் மறுவரையறையின் போது, தமிழகத்தின் தொகுதிகள் எந்த வகையிலும் குறைக்கப்படாது; மற்ற மாநிலங்களின் தொகுதிகள் எவ்வாறு 50% அதிகரிக்கப்படுகின்றனவோ, அதேபோல், தமிழ்நாட்டின் தொகுதிகளும் 50%, அதாவது 59 இடங்களாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் நாடாளுமன்றத்தில் அறிவித்ததன் மூலம் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வந்த பொய்யான பரப்புரை முறியடிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, மு.க.ஸ்டாலின் அவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரம், தெலுங்கானம், கேரளம், கர்நாடகம் ஆகிய 5 தென் மாநிலங்களிலும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 129&லிருந்து 195 ஆக அதிகரிக்கப்படுகிறது. இந்த மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் இப்போதுள்ள 23.76 விழுக்காட்டிலிருந்து 23.87 விழுக்காடாக சற்று அதிகரிக்குமே தவிர எந்த வகையிலும் குறையாது. இதன் மூலம் தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலினும், அவரது சகாக்களும் நடத்திய நாடகங்கள் படுதோல்வி அடைந்திருக்கின்றன. நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது, தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் எந்த வகையிலும் குறையக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். இப்போது எவ்வாறு மு.க.ஸ்டாலின் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறாரோ, அதேபோல் கடந்த ஆண்டு மார்ச் மாதமும் பதட்டத்தை ஏற்படுத்த முயன்றார். அது தொடர்பாக விவாதிக்க கடந்த ஆண்டு மார்ச் 5&ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நானே பங்கேற்று, ‘‘மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இப்போது 7.20% ஆக உள்ளது. தொகுதிகள் மறுவ¬ரையறை செய்யப்படும் போது இந்த விகிதாச்சாரம் மாறக்கூடாது’’ என்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில்,‘‘தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவிகிதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது’’ என்ற கோரிக்கை புதிதாக சேர்க்கப்பட்டது. தமிழ்நாட்டின் இந்த நிலைப்பாடு முழுமையாக ஏற்கப்பட்டிருப்பதை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் உறுதி செய்திருக்கின்றனர். உண்மையில் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 58 ஆக இருக்க வேண்டுமா? அல்லது 59 ஆக இருக்க வேண்டுமா? என்ற வினா எழுந்த நிலையில், 59 என்றே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 விழுக்காட்டிலிருந்து 7.23% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் நடத்தும் நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. மு.க.ஸ்டாலினின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ வந்து விடக் கூடாது என்ற தீய எண்ணம் தான். தொகுதி மறுவரையின் மூலம் தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39&லிருந்து 59 ஆக உயர்த்தப்படும்; அதில் 20 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். இப்போது தமிழ்நாட்டிலிருந்து மக்களவைக்கு 5 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தேர்தலில் குறைந்தது 20 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இவர்கள் தவிர பொதுத்தொகுதிகளில் இருந்து கூடுதலாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். அதேபோல், தமிழக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 351 ஆக உயர்த்தப்படும் போது, 117 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக முடியும். ஆனால், தமிழ்நாட்டில் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிய மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதையும் விரும்பவில்லை. அதனால் தான் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்க்கிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியலமைப்பு சட்ட நகலை எரிப்பது குற்றம் மட்டுமின்றி, தேசத் துரோகமும் ஆகும். 1986&ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியலமைப்பு சட்ட நகலை எரித்ததற்காக பேராசிரியர் அன்பழகன், பரிதி இளம்வழுதி உள்ளிட்ட 10 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை அப்போதைய பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் பதவிநீக்கம் செய்தது வரலாறு. இப்போது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை எரித்ததற்காக மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முற்போக்குவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கும் அதிகாரம் அளிக்கும் இந்த விவாகாரத்தில் மிகவும் பிற்போக்குத்தனமாக நடந்து கொள்கிறார்; அவரது செயல்பாடுகள் தரம் தாழ்ந்த வகையில் உள்ளன. தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 59 ஆக உயர்த்தி, குறைந்தது 20 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாவதற்கு வகை செய்யும் இந்த சட்டத்தை எதிர்க்கும் திமுகவையும், எந்த பகுத்தறிவும் இல்லாமல் அதற்கு துணை போகும் கூட்டணி கட்சியினரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ளன. இந்த ஐந்தாண்டுகளில் தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் வெறும் 66&ஐ மட்டும் தான் நிறைவேற்றியிருக்கிறார். விலைவாசியைக் குறைக்கவோ, வேலைவாய்ப்புகளைப் பெருக்கவோ ஆக்கப்பூர்வமாக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மாறாக ஆண்டுக்கு ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்தியிருக்கிறார். இதனால் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள ஆட்சியாளர்களுக்கு எதிரான கொந்தளிப்பை மடைமாற்றம் செய்யவே இத்தகைய சதிகளில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். மு.க. ஸ்டாலினின் அனைத்து சதிகளும் படுதோல்வி அடைந்து விட்ட நிலையில், தொகுதிகள் மறுவரையறை விவகாரத்தில் வீண்பழி சுமத்தி, பொய் பரப்புரை செய்த மு.க.ஸ்டாலின் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மாறாக, இனியும் திருந்தாமல், புதிது புதிதாக செல்லாத காரணங்களைக் கூறி, மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட முன்வரைவுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்தால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தாய்மார்களும் தங்களுக்கு எதிரான திமுகவுக்கு எதிராக வாக்களித்து ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பார்கள். ##PMK2.0