ஃபாலோவ்
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
134,297
போஸ்ட்
113,672
பின்தொடர்பவர்கள்
S.ANTHONY✝️YESUMARY
659 காட்சிகள்
before sleeping✨* Heavenly Father, We thank You for the gift of our family. Thank You for the love that binds us together and for the home You have given us. We place our family into Your loving hands. Lord, protect every member of our family wherever we may be. Keep us safe from harm, sickness, and danger. Surround our home with Your peace and let Your presence dwell among us. Grant us understanding, patience, and forgiveness. Help us to speak words that build up and not tear down. When misunderstandings arise, guide us to choose love, humility, and reconciliation. Bless our parents with wisdom and strength. Guide them in leading our family according to Your will. Bless the children with obedience, good character, and a heart that seeks what is right. Provide for our needs, Lord. Open doors of opportunity, bless the work of our hands, and grant us stability in our daily lives. Heal every illness, ease every burden, and renew our strength each day. May our family grow in faith, hope, and love. Let our home be filled with joy, respect, and gratitude. Above all, teach us to honor You in all that we do. In Jesus Name, I pray. Amen. #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
S.ANTHONY✝️YESUMARY
1.7K காட்சிகள்
இரவு ஜெபம்* எங்களை என்றும் நேசிக்கும் அன்பு தகப்பனே, இந்த நல்ல நாளுக்காகவும், நீர் எங்களை எப்போதும் கவனித்துக்கொள்ளும் சிறப்பு வழிக்காகவும், இந்த இரவு வேளைக்காகவும் நன்றி கூறுகிறோம். இறைவார்த்தையின் ஊற்றான தந்தையே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையால்; எங்களை வளப்படுத்துவதற்காக நன்றி. இறைவார்த்தையில் நாங்கள் காட்டும் ஆர்வத்தை, அதை வாழ்ந்து காட்டுவதிலும் காட்ட அருள் தாரும். துன்பங்கள் வந்தாலும், நிலைகுலையாது உம் வார்த்தையில் நிறைவாக வாழ்வோமாக. இந்த நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல பாதுகாத்து, வழிகாட்டி மற்றும் எங்கள் கூடவே இருந்ததற்காக நன்றி ஆண்டவரே, நாங்கள் உறங்கும்போதும் இரவிலும் அதை நீடிக்கவும் உங்கள் பிடியில் இருந்து நழுவியதற்கு எங்களை மன்னியுங்கள் ஆண்டவரே, எங்கள் உள்ளம் பண்பட்ட நிலமாக இருந்து உம் வார்த்தையை ஏற்றுப் பலன் நல்கிட அருள்தாரும். நாங்கள் உமக்கு கீழ்ப்படியாதபோதும் அல்லது மற்ற காரியங்களை எங்கள் சொந்த வழியில் செய்ய முயற்சித்தபோதும் கூட எங்களைத் தொடர்ந்து நேசித்ததற்கு நன்றி ஆண்டவரே, நாங்கள் இருக்க ஒரு வீடு மற்றும் உறங்க சுகமான ஒரு இடம் மற்றும் சாப்பிட நல்ல உணவை ஆசீர்வாதமாக தந்ததற்கு நன்றி ஆண்டவரே, எங்களுக்கு நல்ல, அமைதியான கனவுகள் நிறைந்த உறக்கத்தையும் எங்களுக்குக் கொடுத்து, இரவு முழுவதும் எங்களைப் பாதுகாக்க உமது தேவதூதர்களை எங்கள் வீட்டைச் சுற்றி அனுப்பியருளும். உம்மை நம்பவும் உம்மை மேலும் மேலும் நேசிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் விலைமதிப்பற்ற பெயரில், *- ஆமென்!* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
1.1K காட்சிகள்
*புனித வியாகுல மாதாவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை.* 🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨ என் ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துநாதரின் மிகுந்த நேசமுள்ள திருமாதாவே, மனஸ்தாபத்தினால் நொறுங்கிய உள்ளத்தோடு உம்மை நோக்கித் திரும்பும் எவனையும் தள்ளி விடாதவரும், துன்பப்படுவோரைத் தேற்ற மறுக்காதவருமாகிய தேவரீருடைய திருப்படத்தின் முன்பாக, நீசப் பாவியாகிய நான் ஆழ்ந்த பக்தியோடு வந்து, என் முழு பலத்தையும் கொண்டு உம்மை நேசிக்கவும், வாழ்த்தித் துதிக்கவும் வேண்டிய வரப்பிரசாதத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும்படியாக உம்மை இரந்து மன்றாடுகிறேன். ஓ மரியாயின் இரக்கமுள்ள திரு இருதயமே, மிக அநேக பாவிகள் ஏற்கெனவே உம்மிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுக் கொண்டது போலவே நானும் உம்மிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தயை செய்தருளும். ஏனெனில், ஓ மகா பரிசுத்த மரியாயே, உம்முடைய இருதயம் இரக்கத்தின் இருதயமேயன்றி வேறு என்னவாயிருக்கிறது? இந்தக் கிருபையின் ஆசனத்திடமிருந்து அந்த வரப்பிரசாதத்தை மன்றாடிக் கேட்கும் யாருக்கும் அது மறுக்கப்படுவது எப்படி? மிகுந்த கருணையும், தயவிரக்கமும் உள்ள மாதாவே, துன்பப்பட்டுள்ள ஓர் இருதயத்திற்கு உம்முடைய தயவும் ஆதரவும் எவ்வளவு அதிகமாய்த் தேவைப்படுகிறது என்பதை நீர் அறிந்திருக்கிறீர். ஏனெனில் மனுக்குலம் முழுவதும் ஒன்றாய்ச் சேர்ந்தாலும் அதனால் தாங்க முடியாத அளவுக்கு உமது துன்பங்களும், வேதனைகளும் மகா தீவிரமுள்ளவையா யிருந்தன. ஓ, உமது நேசக் குமாரனின் உருக்குலைக்கப்பட்ட உருவத்தை நீர் கண்டு தியானித்தபோதும், சிதைக்கப்பட்டதும், உயிரற்றதுமான அவருடைய திருச் சரீரத்தை உமது கன்னிமைக் கரங்களில் தாங்கி, உமது தாய்க்குரிய இருதயத்தின் மீது மென்மையாகச் சேர்த்துக் கொண்டு, எண்ணற்ற தடவைகள் அதை அரவணைத்து, சுட்டெரிக்கும் கண்ணீர் வெள்ளத்தைக் கொண்டு அதை மூடி, இறுதியாக உமது சேசுவின் காயப்பட்ட நெற்றியின் மீது உமது வாதைப்பட்ட இருதயத்தைச் சாய்த்த போது, உமது ஆத்துமத்தை நிரப்பிய சொல்லிலடங்காத கசப்பை எந்த மனிதனால் உணரக் கூடும்! இந்த வாக்குக் கெட்டாத உம்முடைய வேதனையை உமக்கு ஞாபகப்படுத்தி, என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும்படியாக உம்மை மன்றாடுகிறேன். மரியாயே, இப்போது நீர் உமது கரங்களில் தாங்கியுள்ள சேசுவிடம் எனக்காகப் பரிந்து பேசியருளும்! ஓ சேசுவே! ஓ மரியாயே! உங்கள் சொல்லொணாத துன்பத்தைப் பார்த்து, நீசப் பாவியாகிய அடியேன் மீது தயவாயிருங்கள். ஓமிகுந்த நேசத்திற்குரிய சேசுவே, எனக்காக நீர் தாங்கிய சகல காயங்களையும், வேதனையையும் உமது பரலோகப் பிதாவுக்குக் காண்பித்தருளும். அளவற்ற இனிமையுள்ள திவ்விய கன்னிகையே, தேவரீர் என் நிமித்தமாக சிந்தின கண்ணீர் முழுவதையும் அவருக்குக் காண்பியும். ஓ திருச்சுதனே! ஓ மாதாவே! எனக்காக நீங்கள் அனுபவித்த எல்லா அவஸ்தைகளையும், எல்லா இருதய வாதையையும் அவருக்குக் காட்டுங்கள். மரியாயே, உமது வியாகுலங்களின் இந்த வேதனை மிக்க பரம இரகசியத்தின் வழியாக, பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து எனக்கு இரக்கத்தைப் பெற்றுத் தாரும். உமது நேசப் பிரிய குமாரனின் நொறுக்கப்பட்டதும், உயிரற்றதுமாகிய திருச்சரீரத்தை உமது தாய்க்குரிய கரங்களில் எடுத்து, முன்பு நீர் செய்த அதே விதமாக இப்போது சேசுவின் குத்தித் திறக்கப்பட்ட திருவிலாவையும், உமது உடைந்த இருதயத்தையும், அவரது கசப்பான துன்பங்களையும், உமது வேதனையுள்ள தயாள இரக்கத்தையும், அவருடையவும், உம்முடையவும் சுட்டெரிக்கிற கண்ணீர்களையும், அவருடையவும், உம்முடையவும் பெருமூச்சுகளையும், ஒரே வார்த்தையில், சேசுவும் நீரும் இவ்வுலகில் அனுபவித்த சகல துன்பங்களையும் நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தருளும். இந்தத் துன்பங்களின் வழியாக, இரக்கத்தையும் மன்னிப்பையும் எனக்குப் பெற்றுத் தந்தருளும். 🙏🏻ஆமேன்.🙏🏻 🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨ *வியாகுல அன்னைக்கு மன்றாட்டு மாலை* 🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨ முத: ஆண்டவரே இரக்கமாயிரும்! எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்! முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்! எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்! முத: ஆண்டவரே இரக்கமாயிரும்! எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்! முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும். முத: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா… எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்! முத: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா… எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்! முத: தூய ஆவியாராகிய இறைவா… எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்! முத: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா… எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்! *🌹✨உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்✨🌹* முத: புனித மரியாயே… முத: இறைவனின் புனித மாதாவே… முத: கன்னியருள் உத்தமக் கன்னிகையே… முத: வேதனையடைந்த மாதாவே… முத: வியாகுலமடைந்த மாதாவே… முத: கண்ணீர் சொரிந்த மாதாவே… முத: துயரமடைந்த மாதாவே… முத: கைவிடப்பட்ட மாதாவே… முத: ஆறுதலற்ற மாதாவே… முத: மகனை இழந்த மாதாவே… முத: வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே… முத: சஞ்சலத்தில் அமிழ்ந்திய மாதாவே… முத: இதயத்தினுள் சிலுவை சுமந்த மாதாவே… முத: மகா துக்கமுள்ள மாதாவே… முத: கண்ணீர்ச் சுனையான மாதாவே… முத: பாடுகளின் திரளான மாதாவே… முத: பொறுமையின் கண்ணாடியே… முத: உறுதி நிலைமையின் குன்றே… முத: நம்பிக்கையின் பெட்டகமே… முத: கைவிடப்பட்டோர்களுக்கு அடைக்கலமே… முத: துன்பப்படுகிறவர்களின் கேடயமே… முத: அவிசுவாசிகளின் ஜெயசீலியே… முத: நிர்ப்பாக்கியர்களின் ஆதரவே… முத: நோயுற்றவர்களின் ஆரோக்கியமே… முத: மெலிந்தவர்களின் திடனே… முத: யாத்திரையில் துன்பப்படுகிறவர்களின் துறைமுகமே… முத: பெரும்புயலைத் தணித்தவளே… முத: பயணத்தில் துன்பப்படுகிறவர்களுக்குத் தஞ்சமே… முத: துஷ்டர்களின் அச்சமே… முத: விசுவாசிகளின் பொக்கிஷமே… முத: இறைவாக்கினர்களின் நேத்திரமே… முத: திருத்தூதர்களின் உதவியே… முத: மறைசாட்சிகளின் கிரீடமே… முத: துதியர்களின் ஒளியே… முத: கன்னியர்களின் ஆரமே… முத: கைம்பெண்களின் தேற்றரவே… முத: எல்லாப் புனிதர்களின் ஆனந்தமே… முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே… எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்! முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே… எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்! முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே… எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்! எல்: இறைவனின் தூய அன்னையே, இதோ உம்மிடம் சரணடைய ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும் போது நீர் பாரா முகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற நித்தியக் கன்னியே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படியாக… எல்: வியாகுல அன்னையே… எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *🌺🙏🏻மன்றாடுவோமாக🙏🏻🌺* ✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨ இறைவா, உமது அடியாராகிய சிமியோன் இறைவாக்குரைத்தபடியே உம் திருமகன் சிலுவை சுமந்துப் பாடுபட்ட போது மாட்சி மிக்கக் கன்னித் தாயான மரியாவின் மதுரமான ஆன்மா வியாகுல வாள்களால் ஊடுருவப்பட்டதே. அவருடைய வியாகுலத்தையும் வேதனையையும் வணங்கி ஆராதிக்கிற நாங்கள், உம் திருமகனுடைய சிலுவையை நேசித்த எல்லாப் புனிதர்களின் மகிமையுள்ள பேறுகளினாலும் மன்றாட்டுக்களினாலும் உம் திருமகனுடைய திருப்பாடுகளின் பலனை அடையும்படி அருள் புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். *🙏🏻ஆமென்.🙏🏻* 🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
S.ANTHONY✝️YESUMARY
610 காட்சிகள்
*வியாகுல மாதா* *ஜெபமாலை* 💔🗡️💔🗡️💔🗡️💔🗡️💔🗡️💔 அர்ச். கன்னிமரியம்மாள் தமது திருக் குமாரனின் பாடுகள் நிமித்தமாக அநுபவித்த ஏழு வியாகுலங்களைத் தியானிப்போம். *✝️முதலாம் வியாகுலம்💔🗡️* இந்த முதல் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாளுக்குச் சிமியோன் சொன்ன தீர்க்கதரிசனத்தால் தமது திருக்குமாரனுடைய மரணத்தையும் மனுஷருடைய சேதத்தையும் அறிந்து, அவர்கள் தமது இருதயத்தில் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️இரண்டாம் வியாகுலம்💔🗡️* இந்த இரண்டாம் இரகசியத்தில் அர்ச். கஅர் மரியம்மாள் தமது திருக்குமாரனை ஏரோது என்பவன் கொல்லத் தேடுகிறதை அறிந்து, அவரை எடுத்துக் கஅரஅர்கிப்து தேசத்துக்கு ஓடிப்போய் ஏழு வரு­மளவும் மகாதுக்கம் அநுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️மூன்றாம் வியாகுலம்💔🗡️* இந்த மூன்றாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனோடு தேவாலயத்திற்குப் போனவிடத்தில் மூன்றுநாள் தேடியும் காணாமல் போனபடியினாலே தமது ஆத்துமத்தில் மிகுந்த வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. ✝️நான்காம் வியாகுலம்💔🗡️ இந்த நான்காம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் கபால மலையில் மரணமடைய சிலுவை சுமந்து போகையில், அவரை எதிர்கொண்டு மினவினபோது வாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️ஐந்தாம் வியாகுலம்💔🗡️* இந்த ஐந்தாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் சிலுவையில் அறையுண்டு அவர் சகலராலும் கைவிடப்பட்டு ஓர் ஆறுதலுமில்லாமல் மரணமடைகிறதைக் கண்டு துக்க சாகரத்தில் அமிழ்ந்தி மனோவாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️ஆறாம் வியாகுலம்💔🗡️* இந்த ஆறாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய திருச் சரீரத்தைச் சிலுவையினின்று இறக்கி தமது மடிமேல் வளர்த்தி அதிலுள்ள காயங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் சொல்லக் கூடாத வியாகுலம் அநுபவித்தார்களென்று தியானிப் போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️ஏழாம் வியாகுலம்💔🗡️* இந்த ஏழாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய சரீரத்தைக் கல்லறையில் அடக்கம் பண்ணின பின்பு அவரது மரணத்தையும் திருப்பாடுகளையும் தமது தனிமையையும் நினைத்து மட்டில்லாத துயரம் அனுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை ஜெபிப்போம் ஜெபமாலை ஜெபம் ஜெபிப்பதை நாம் ஒவ்வொருவரும் குடும்பங்களில் கட்டாய ஆக்குவோம்🙏🏻 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
S.ANTHONY✝️YESUMARY
1.5K காட்சிகள்
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்* பாகம்-2 பெர்னதெத் தரையில் அமர்ந்து காலுறைகளைக் கழற்றும்போது சூறாவளி போன்ற காற்று நான்கு பக்கங்களிலுமிருந்தும் பலமாக வீசியது பெர்னதெத் பயந்து அங்கும் இங்கும் பார்த்தாள். மரங்களில் கிளைகளோ, இலைகளோ அசையவில்லை. மீண்டும் காலுறைகளைக் கழற்ற பெர்னதெத் குனிந்தாள். அப்போது, முன்பு வீசியதை விடப் பலமான வேகத்துடன் ஒரு காற்று வீசியது. ஆனால், மரங்களோ, செடி கொடிகளோ அசையவில்லை. பயந்து நடுங்கிய பெர்னதெத் அங்கிருந்து ஓட முயன்றாள். அப்போது அவள் பார்வை 'மசாபியேல்' பாறை மீது விழுந்தது. "மசாபியேல்' பாறைக் குன்றில் பெரிய மாடக்குழி போல் இருந்த குகையின் மேல் படர்ந்திருந்த ஒரு கொடி மெதுவாக அசைந்தாடியது! சில நொடிகளுக்குள் அதே கொடி வேகமாக ஆடத் தொடங்கியது. பயந்து நடுங்கி, ஓட கால் எடுத்த பெர்னதெத் குகையிலே எதையோ பார்த்து சிலையாக நின்றாள். அவளால் ஓட முடியவில்லை. அந்தக் குகையினுள் சூரியனைப் போன்று மிகப் பிரகாசமான ஒளி வீசியது! நடுவில் கற்பனைக்கும் எட்டாத அழகுடைய ஓர் இளம் மாது நின்றார். இது பற்றி பெர்னதெத் கூறுகிறாள்: *அக்காட்சியைப் பார்த்த நான் கண்களைக் கசக்கி உற்றுப் பார்த்தேன். கண்களை மூடி, மூடி திறந்து பார்த்தேன். பிரகாசமான பேரொளியின் நடுவே அந்த இளம் மாது இன்னும் நின்று கொண்டிருந்தார். யார் அவர் என்று என்னால் அறிய முடியவில்லை. சூரிய ஒளி போன்ற பிரகாசமும், சொற்களால் விவரிக்க முடியாத பேரானந்தமும் என் உள்ளத்தில் நிரம்பி வழிய, நான் பரவசத்தில் ஆழ்ந்தேன்." குகையில் நின்ற அந்த மாதரசியின் வலது கரத்தில் மணிக்கட்டுக்குக் கீழே ஒரு செபமாலை தொங்குவதைக் கண்டேன், உடனே, நான் என் சட்டைப் பையிலிருந்து என் செபமாலையை எடுத்தேன், முழந்தாளிலிருந்து செபமாலை செபிப்பதற்காக செபமாலையில் தொங்கிய சிறு பாடுபட்ட சிலுவையை என் நெற்றிக்குக் கொண்டு வர முயன்றபோது என் கைகளை உயர்த்த முடியவில்லை. குகையினுள் நின்ற மாது தன் செபமாலையை எடுத்து நெற்றிக்கு உயர்த்தினார்கள். அவர்களைப் போல் நானும் “பிதா, சுதன்..." சொல்ல கையை உயர்த்திய போது, எவ்வித சிரமமும் இன்றி சிலுவை அடையாளம் வரைய முடிந்தது, நான் செபமாலை செபிக்கும்போது அந்த அம்மா மௌனமாக இருந்தார். அவருடைய செபமாலையின் மணிகள் ஒன்று ஒன்றாக அவரது விரல்களிலிருந்து நழுவினதைப் பார்த்தேன். "பிதா வுக்கும், சுதனுக்கும்..." என்ற செபத்தைச் சொல்லும் போது மட்டும் அவருடைய உதடுகள் அசைந்தன, விறகு பொறுக்கி விட்டு பெர்னதெத்திடம் வந்த இருவரும் பெர்னதெத் முழந்தாளிலிருந்து செபமாலை செபித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தனர். பல முறை பெர்னதெத்தின் பெயரை உரத்த குரலில் கூப்பிட்டு அழைத்தும் அவள் அசையவில்லை. சிறு கற்களைப் பொறுக்கி பெர்னதெத் மீது வீசினார்கள். அவள் அசையவில்லை. பெர்னதெத் பரவச நிலையில் உலகத்தையே மறந்து குகையில் நின்ற அந்த அம்மாவையே உற்றுப் பார்த்தபடி செபமாலை செபித்துக் கொண்டிருந்தாள். மேரி அந்துவானத்தும், ஜேன் அபதியும் குகையைப் பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் கண்ணில் தெரியவில்லை. குகை காலியாகவே இருந்தது. தொடர்ந்து இனைந்திருங்கள்..... ஆமென் நன்றி - www.catholictamil.com #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
775 காட்சிகள்
லூர்து அன்னை நவநாள்* *நாள்-05* *தொடக்க செபம்..* என்றும் மாசற்ற கன்னியே, கருணையின் அன்னையே, நோயுற்றோரின் நலமே, பாவிகளின் அடைக்கலமே, துன்புற்றோரின் ஆறுதலே என உம்மை நோக்கி கூவி அழைக்கின்றோம். தூய லூர்து மாதாவே! என் தேவைகள், என் கஷ்டங்கள், என் துன்பங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். கருணையின் பார்வையை என் மீது திருப்பியருளும். லூர்து குகையில் தோன்றியதன் மூலம், உங்கள் உதவிகளை வழங்கும் ஒரு புனித ஸ்தலமாக மாற்றுவதில், நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்கள்.ஏற்கனவே பல பாதிக்கப்பட்டவர்கள், ஆன்மீக மற்றும் உடல் குறைபாடுகளை குணப்படுத்தியுள்ளீர். எனவே, உங்களைத் தாயன்போடு பரிந்து பேசுவதற்கு, மிகவும் அளவற்ற நம்பிக்கையுடன் வருகிறேன். அன்பான தாயே, எனது கோரிக்கைகள் நிறைவேற மன்றாடுங்கள். _(அவற்றை இங்கே குறிப்பிடவும்)_ உதவிகளுக்கு நன்றி செலுத்துவதன் மூலம், உங்கள் நற்பண்புகளைப் பின்பற்ற முயற்சிப்பேன், உங்கள் மகிமையை நான் ஒரு நாளிலே, விண்ணக வீட்டில் பகிர்ந்து கொள்கிறேன். *தினசரி செபம்..* கடவுளின் தாயும், எங்களின் தாயுமான தூய லூர்து மாதாவே! எங்களைக் கருணைக் கண்ணோடு நோக்கியருளும். நாங்கள் உம்மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டு, உம்மை நாடி வந்துள்ளோம். உம்முடைய மன்றாட்டை உமது திருமகன் ஒருபோதும் மறுப்பதில்லை; இந்த நவநாட்களிலே நாங்கள் மன்றாடிக் கேட்பவற்றை, உம் திருமகனிடமிருந்து பெற்றுத் தாரும். *நிறைவு செபம்..* ஓ தூய்மையின் நட்சத்திரமே, மாசற்ற அன்னையே, லூர்து மாதாவே, உங்கள் விண்ணேற்பிலும், முடிசூட்டு விழாவிலும் புகழ்பெற்றவரே, உமது திருமகனின் கருணையை எங்களுக்குக் காட்டுங்கள். கன்னி மாதாவே, புனிதர்களின் பேரரசியே உலகோரின் தாயே, எங்களின் ஆறுதலே, நம்பிக்கையே வலிமையே, ஆமென். லூர்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித பெர்னதத்தே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
See other profiles for amazing content