ஃபாலோவ்
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
132,685
போஸ்ட்
111,957
பின்தொடர்பவர்கள்
S.ANTHONY✝️YESUMARY
588 காட்சிகள்
4 மணி நேரத்துக்கு முன்
𝐏𝐑𝐀𝐘𝐄𝐑🌛 Heavenly Father, As the day comes to an end, we bow before You with grateful hearts. Thank You for Your guiding hand that has kept us safe throughout this day. Lord, we ask for Your divine protection over us, our families, and those we love. Shield us from danger, harm, and every unseen threat as we rest tonight. Bless us, Lord, with Your favor and open doors of opportunity that lead to growth and purpose. Grant us good health in body, mind, and spirit, and restore the weary with Your peaceful presence. Father, we humbly ask for Your forgiveness for every wrong we have done today through words, thoughts, or actions. Cleanse us with Your mercy and renew our hearts to walk in Your truth. Stay with us through the night, O Lord. Surround our homes with Your angels, and let us rise tomorrow with joy, strength, and gratitude for another day in Your grace. In Jesus’ name, we pray. Amen. #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
725 காட்சிகள்
8 மணி நேரத்துக்கு முன்
*👑குழந்தை இயேசு பக்தி முயற்சி..* அன்பின் இறை மக்களே! இறை இயேசுவின் பிறப்பு விழாவினை ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டு, நம்மையே நாம் தயாரித்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக 1000 மங்கள வார்த்தை செபிக்கக்கூடிய, நவநாள் ஒன்றை உங்களோடு பகிர்கின்றோம். இந்த நவநாள் செபத்தில் ஒரு தொடக்க செபமும், 4 சிறு செபங்களும் இணைந்திருக்கும். இந்த நவநாளானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 25 வரை தினமும் குழுவில் பகிரப்படும். இதனை முழுமையாக தினசரி செபித்து முடிக்கும்போது, 1000 மங்கள வார்த்தைகளை நீங்கள் செபித்திருப்பீர்கள். இந்த 1000 மங்கள வார்த்தை இறுதி நவநாளானது, குடிலின் முன்பு 25ம் தேதி செபிப்பதோடு நிறைவுபெறும். 1000 மங்கள வார்த்தைகளை, பாலன் இயேசுவுக்கு காணிக்கையாக்க, தினமும் செபிப்போம்.. மாலையாகத் தொடுப்போம். நன்றி. பாலன் இயேசுவின் அருள் என்றும் நம்மோடு! 🕯️🎄🕯️🎁🕯️🎄🕯️ முதல் பெற்றோர் வழியாக பிறந்த எல்லாரிலும், திவ்விய குமாரனுக்குத் தாயாராயிருக்கத் தெரிந்துக்கொள்ளப்பட்ட மாதாவே, அதற்கு வேண்டிய எல்லா வரங்களையும் நிறைவாய் அடைந்த மாதாவே, அடைந்த வரங்களை கொண்டு செய்த மேலான புண்ணியங்களால் திருசுதனை கருதரித்த மாதாவே, உம்முடைய திருக்குமாரன் பிறக்கப்போகிற நாள் நெருங்கி வருகிறதென்று நீர் அறிந்திருந்தீர், அவரை பார்க்கவும், பணி புரியவும் விரும்பினீர். உமக்கிருந்த இந்த ஆவலைப் பார்த்து, எனக்கும் இந்தத் திருநாளில் அத்தகைய ஆவல் வளர வேண்டும். அவரை பார்த்து அவருக்கு பணிபுரிய, நீர் உம்மைத் தகுதியாக்கிக்கொள்ளச் செய்த தயாரிப்பை தியானித்து, நானும் அவருக்குத் தகுந்த பணிவிடை செய்ய, என்னையும் தயாரிக்க வேண்டும். நீர் செய்த தயாரிப்பினால், உமது பேரில் திவ்விய இயேசு பாலன் அடைந்த மகிழ்ச்சி ஒருபோதும் என் பேரில் அவருக்கு வரமுடியாது, இருப்பினும் நான், இந்த திருநாளைக் கொண்டாடுகிறதில் உம்முடைய திருக்குமாரனுக்கு என் பேரில் மகிழ்ச்சி வரச் செய்ய வேண்டும். இந்த 3 காரணங்களை குறித்து நான் செய்ய போகிற ஜெபத்தை, உம்முடைய திருப்பாதத்தில் அணிந்து, என்னுடைய கருத்து வீணாகாதபடிக்கு, நீர் எம் மன்றாட்டைக் கேட்டருள உம்மை வேண்டுகிறேன் சுவாமி. *- ஆமென்* 1. பரிசுத்த மாதாவே, நீர் திவ்விய குமாரனுக்கு மாதாவாகக் குறிக்கப்பட்ட நேரம், ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம். _[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_ 2. பரிசுத்த மாதாவே , நீர் திவ்விய குமாரனைப் பெற்ற மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம். _[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_ 3. பரிசுத்த மாதாவே, நீர் முதல் முறை உம்முடைய திருக்குமாரனைக் கட்டி அனைத்து முத்தமிட்ட மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம். _[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_ 4. பரிசுத்த மாதாவே, நீர் உம்முடைய திருக்குமாரனுக்கு முதல் முறை அமுதூட்டிய மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம். _[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_ *நிறைவு செபம்:* _அன்பின் இறைவா! இந்த நாளிலே எம்மை நன்முறையில் தயாரிக்க, இந்த நவநாளை செபிக்க அருள் புரிந்ததற்காக நன்றி. உம்மை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஆண்டவரே! விரைந்து வாரும்!_ _*- ஆமென்.*_ #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
629 காட்சிகள்
8 மணி நேரத்துக்கு முன்
கால சிந்தனைகள் - 6* திருவருகைக் காலத்தின் இரண்டு தலையாய நம் கடமைகளைப் பார்த்தோம். 1. நம்மைத்தாமே பரிசுத்தப்படுத்துதல். 2. இயேசு நம் இதயத்தில் பிறக்க ஆசைப்படுதல் இந்த நோக்கங்களை நடைமுறைப்படுத்த நான்கு வாரங்களிலும் திருவழிப்பாட்டு நிகழ்ச்சிகளில் கையாளப்படும் தேவ வாக்கியங்கள் பழைய ஏற்பாட்டில் தெறிந்து கொள்ளப்பட்ட மக்களின் மன நிலையை நம்மிடத்திலும் பிறப்பிக்கின்றன. ஜெபங்கள், ஆரம்ப வாக்கியங்கள், பாட்டுக்கள், சங்கீதங்கள் இவையாவும், மனிதனின் வீழ்ச்சி, இரட்சகர் வருமுன் அவன் அனுபவித்த துன்பங்கள் முதலியவற்றின் எதிரொலி போல இருக்கின்றன. “ எழுந்தருளி வாரும். தாமதஞ்செய்யாதேயும் “ போன்ற கூக்குரல் பலிபூசையில் அடிக்கடி ஒலிக்கின்றன. “ வானங்களே மேல்நின்று பனியை பெய்யுங்கள். மேகங்கள் நீதிமானை வருவிக்கக் கடவன. பூமி திறந்து இரட்சகரைப் பிறப்பிக்கக்கடவது “ என்ற இஸ்ராயேல் மக்களைப்போல நாமும் இரட்சகருக்காக ஏங்கி எதிர்பார்க்கச் செய்கின்றது. “ ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள் ; அவர்தம் பாதைகளைச் செம்மைப் படுத்துங்கள் ; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படுக, மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக, கோணலானவை நேராகவும், கரடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக, மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர் “ (லூக்.3:4-6) ஆண்டவருடைய வருகை : பிதாவின் மடியில் வீற்றிருந்த தேவ வார்த்தையானவர் மனுக்குலத்தின் பாவத்தைப் போக்க எளிய மனித அவதாரமெடுத்து பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது முதல் வருகை. “ ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான் ; என் தந்தையும் அவன் மேல் அன்பு கூர்வார் ; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம் “ ( அரு 14 : 23) என்று நமதாண்டவரே கூறியுள்ளது போல, அவர் நம் ஆத்துமத்தை தேவ இஷ்ட்டப்பிரசாத்தால் தம் வசமாக்கி நம் உள்ளத்தில் ஞான விதமாய் சினேகத்தினால் எழுந்தருளி வந்து நம்மோடு வாழ்வது நமக்கென உள்ள அவரது வருகையாகும். இரட்சகரின் இரக்கமுள்ள இந்த வருகைக்கு ஆயத்தமாக நாம் நம் பாவ நிலையை நினைத்து வருந்தி இப்போது அவரது வருகையை ஆவலுடனும், நம்பிக்கையுடனும் எதிர்நோக்கி காத்திருந்தால் இயேசு பிறந்த நாளன்று அவர் நம் உள்ளத்தில் பிறந்து தம் வரப்பிரசாதத்தினால் நம்மை நிரப்புவார். இவ்வாறு நாம், “ மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் உலகத்தை நடுத்தீர்க்க வரும் “ அவரது இரண்டாவது வருகைக்கும் ஆயத்தமாக இருக்கலாம். இந்த ஆகமன காலத்திலே திருச்சபை நம்மை இருவகை வருகைக்குமே ஆயத்தமாயிருக்க நம்மை அழைக்கின்றது. நன்றி : மாதா பரிகார மலர். சிந்தனை : ஆகவே நம்மிடமுள்ள பாவத்தை அடையாளம் கண்டு அதைப் பாவம் என ஏற்றுக்கொண்டு அதைவிட்டு விடுவதே சாலவும் நன்று. அப்போது நாம் இயேசுவை நோக்கி முன்னேறுகிறோம் என்று அர்த்தம். ஆன்ம மாற்றம் இல்லாமல் நான் அடையாளமாகத்தான் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம் என்று சொன்னால் அது ஒரு அர்த்தமற்ற விழாவாகத்தான் இருக்கும். அது மனம் வீசும் மலருக்கும், காகித மலருக்கும் உள்ள வித்தியாசமே. “ குளிரும் பனியும் கொட்டிலிலே, கோ மகனோ தொட்டிலிலே ஆரீரோ ஆராரோ ஆரிராரோ “ இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க ! #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
See other profiles for amazing content