ஃபாலோவ்
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
134,306
போஸ்ட்
113,693
பின்தொடர்பவர்கள்
S.ANTHONY✝️YESUMARY
986 காட்சிகள்
செபம்* *அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே,* *இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமையுள்ளது; அவரின் வார்த்தைகள், எங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும், வல்லமையுள்ளதாகவும் எங்களுக்கு உமது ஆசீராக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.* *ஆண்டவரே, நாங்கள் எப்போதும் உம்முடைய குரலுக்கு செவி கொடுக்கிறவர்களாகவும், உம்முடைய இறை வார்த்தைகள், எங்கள் வாழ்வில் ஆசீர்வாதமாகவும் இருக்க உமது அன்பை எங்களுக்கு தந்தருள வேண்டுகிறோம்.* *இன்றைய எங்கள் அன்றாட பணிகளை, எங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.* *இந்த நாள் முழுவதும், எம் வாழ்க்கை பயணத்தில் சிறப்பாக பயணிக்க, நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியான மனநிலையையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.* *இன்று இரவு எமக்கு மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் தந்தருளும். அதிகாலை எழுந்து, உம்முடைய பாதத்தில் அமர்ந்து, செபித்து, நாளைய எங்கள் பணிகளை இனிதே துவங்க, உமது மேலான இரக்கத்தின் ஆசீரை எமக்கு அளித்தருளும்.* *எங்கள் தாழ்மையின் நன்றிகளையும், வேண்டுதல்களையும் ஏற்று, உமது அன்பின் ஊற்றால், இறை இரக்கத்தினால் எம்மை நிரப்பி ஆசீர்வதியும்.* *- ஆமென்.* #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
S.ANTHONY✝️YESUMARY
776 காட்சிகள்
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்* பாகம்-3 குகையில் தோன்றிய மாது பேசவில்லை பெர்னதெத்தைப் பரவசத்தில் ஆழ்த்திய அந்த மாது செபமாலை செபித்து முடிந்ததும் புன்முறுவல் பூத்து தலையை சாய்த்தபடி மெதுவாக மறைந்து சென்றார். எவ்வித உரையாடலும் நடைபெறவில்லை. பெர்னதெத் கெபியின் அருகில் ஒரு பாறையில் அமர்ந்து தனது கால் உறைகளை சரி செய்து கொண் டிருந்தாள். அருகில் வந்த இருவரையும் பார்த்து, "நீங்கள் எதையாவது பார்த்தீர்களா?" என்று கேட்டாள். “நாங்கள் எதையும் பார்க்கவில்லையே” என்று கூறியபடி அவர்கள் பெர்னதெத்துடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். பெர்னதெத் மௌனமாக, மெதுவாக நடந்தாள், "பெர்னதெத், எதையாவது பார்த்தீர்களா என்று கேட்டாயே, நீ எதையும் பார்த்தாயா?" என்று கேட்டாள் ஜேன் அபதி, "சும்மா கேட்டேன்" என்று பதில் கூறி விட்டு அமைதியாக நடந்தாள் பெர்னதெத் "முழந்தாளிலிருந்து வெகு நேரம் செபித்துக் கொண்டிருந்தாயே பெர்னதெத், என்ன அப்படி?" என்றாள் அந்துவானெத், “கோவிலில் மட்டும்தான் செபிக்க வேண்டுமா? எங்கேயும் செபிக்கலாமே" என்று சொன்னாள் பெர்னதெத், "ஏதோ ஒரு இரகசியம் இருக்கு, எங்களிடம் சொன்னால் என்ன?" என்று கூறி இருவரும் பெர்னதெத்தின் அருகில் வந்து நின்றனர். ஊருக்கு அருகில் வந்ததும், நடந்ததையெல்லாம் அவர்களிடம் சொல்லி விட வேண்டும் போல் தோன்றியது பெர்னதெத்துக்கு, *சரி, உங்களுக்குச் சொல்கிறேன். வேறு யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று வாக்குறுதி தருவீர்களா?” என்றாள் பெர்னதெத். அவர்கள் வாக்குறுதியளித்தனர். மூவரும் ஒரு ஒதுக்கமான இடத்தில் போய் நின்றார்கள். பெர்னதெத் சொல்லத் தொடங்கினாள். “மசாபியேல் குன்றின் மேலே உள்ள குகையில் அழகான இளம் மாதுவைக் கண்டேன். அவரைப் போல் அழகான ஒரு அம்மாவை இது வரை நான் கண்டதில்லை. அவர்களைச் சுற்றி சூரியனைப் போன்ற ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்களை நான் நன்றாகப் பார்க்க முடிந்தது, அந்த அம்மாவும் என்னை நன்றாகப் பார்த்தார்கள். நான் அவர்களுடன் செபமாலை செபித்தேன், மிக இளமையாகத் தோன்றினார்கள். வெள்ளை உடை அணிந்திருந்தார்கள். தலையில் வெள்ளை முக்காடு அணிந்திருந்தார்கள். இடுப்பில் நீல நிறக் கச்சை கட்டியிருந்தார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் பிரகாசமான ஒளி சூழ்ந்திருந்தது. அவர்களுடைய வலது கரத்தில், மணிக்கட்டுக்குக் கீழே வெள்ளை மணிகளாலான ஒரு செபமாலை தொங்கியது. செபமாலையில் தொங்கிய சிறு பாடுபட்ட சிலுவை பொன்னிறமாக மின்னியது. பாதங்களில் காலணிகள் அணியவில்லை. இரு பாதங்களிலும் தங்க நிறமான ஒரு ரோசா மலர் பதிந்திருந்தது..." பெர்னதெத் பேசி முடித்ததும், "இது நல்ல கதையா இருக்கே... என்றாள் ஜேன் அபதி ஏளனப் பார்வையுடன், பெர்னதெத் அவள் அருகில் நெருங்கி வந்து, யாரிடமும் சொல்லாதே வாக்குறுதியை மறந்து விடாதே" என்றாள். தொடர்ந்து இனைந்திருங்கள்..... ஆமென். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
1K காட்சிகள்
before sleeping✨* Heavenly Father, We thank You for the gift of our family. Thank You for the love that binds us together and for the home You have given us. We place our family into Your loving hands. Lord, protect every member of our family wherever we may be. Keep us safe from harm, sickness, and danger. Surround our home with Your peace and let Your presence dwell among us. Grant us understanding, patience, and forgiveness. Help us to speak words that build up and not tear down. When misunderstandings arise, guide us to choose love, humility, and reconciliation. Bless our parents with wisdom and strength. Guide them in leading our family according to Your will. Bless the children with obedience, good character, and a heart that seeks what is right. Provide for our needs, Lord. Open doors of opportunity, bless the work of our hands, and grant us stability in our daily lives. Heal every illness, ease every burden, and renew our strength each day. May our family grow in faith, hope, and love. Let our home be filled with joy, respect, and gratitude. Above all, teach us to honor You in all that we do. In Jesus Name, I pray. Amen. #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
See other profiles for amazing content