ஃபாலோவ்
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
134,173
போஸ்ட்
113,537
பின்தொடர்பவர்கள்
S.ANTHONY✝️YESUMARY
670 காட்சிகள்
புனிதர் அருளானந்தர் நவநாள் செபம் மற்றும் மன்றாட்டுமாலை ✞🍄🌿* செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். *–🙏🏻 ஆமென்.🙏🏻* *(தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)* புனித அருளானந்தருக்குச் செபம் கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக! இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். *🙏🏻– ஆமென்.🙏🏻* *🌿🍄✞புனித அருளானந்தரின் மன்றாட்டுமாலை✞🍄🌿* சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும் சுவாமி பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.. மறைச்சாட்சியரின் மாண்புமிகு அரசியாகிய மரியாவே... மறைசாட்சியான புனித அருளானந்தரே.... போர்த்துக்கல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே 1647 இல் உதித்தவரான புனித அருளானந்தரே.... அரசவையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையிலாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும் “வானத்தூதர்” என்றும், “மறைச்சாட்சி” என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே.... இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே.... புதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே.... உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே.... பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும், அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோப் பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே.... 1673-ல் பாய்மரக் கப்பலில் பயணமாகி பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும் புன்முறுவல் மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே... கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே... 14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து நாடுகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே.... தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே... வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே... பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே... கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும், துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றிய புனித அருளானந்தரே... குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே.... துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே... தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணியாற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே.... பகைவர் உம்மைக் கொல்லப் பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே... மறைச்சாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே... சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில் பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே... உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே.... உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே... உயர் பொறுப்பிற்காக 1686 ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே.... எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயணமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690 இல் வந்தவரான புனித அருளானந்தரே.... சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே.... புகழ் பெற்ற் தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே... மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே. இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே.... கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே... மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே.... ஓரியூரிலே, 1693 பெப்ருவரி 4-ம் தேதி. புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே.... எங்களை விசுவாசத்தில் வளர்க்க உமது இரத்தத்தையே சிந்தியவரான புனித அருளானந்தரே... மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே.... அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே.... தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே.... தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான் டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே.... விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே.... உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே.... ஆன்மப் பிணிகளையும், உடல் நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே.... மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே.... உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி. உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும் சுவாமி. உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.. மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி. து. – புனித அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். *🌿🍄செபிப்போமாக:🍄🌿* ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறiவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடு அறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். *– 🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
S.ANTHONY✝️YESUMARY
343 காட்சிகள்
*புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம், 7மன்றாட்டு, மற்றும் புகழ்மாலை* 🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பும் சர்வேசுரன்; பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி:க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன். தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்புபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும். ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய:;டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். – *🙏🏻ஆமென்.🙏🏻* 💕🌺💕🌺💕🌺💕🌺💕🌺💕🌺 *புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு* 💕🌺💕🌺💕🌺💕🌺💕🌺💕🌺 பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத புண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்புக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா. ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து புத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபுரி முதலிய இராச்சியங்களில் விடாதநோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலான வியாதிகளில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று, நீரே எங்களுக்காக பரம கர்த்தரை வேண்டிக்கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு வி:பேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு புத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோ:மடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் புண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா உரோமாபுரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்புகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சரீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா. முதல்: இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக. துணை: புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *🍄செபிப்போமாக:🍄* 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவரீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சரீர நோய்களுக்கு சரியான சுகமருந்தாக்கத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சரீரத்திலும் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, வியாதி, பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி *-🙏🏻ஆமென்.🙏🏻* 🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 *புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை* 🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி. . . . . இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி. . . . வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே... உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . . இத்தாலி தேசத்தில் அதிசயப்புண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரான புனித ஜெபஸ்தியாரே. . . . வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . தரித்திரர்களுக்கு உதார தகப்பனான புனித ஜெபஸ்தியாரே. . . . . . நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் புத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவரான புனித ஜெபஸ்தியாரே... அநேக அற்புதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . . வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . . பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . அதிசயமான சகல புண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபுரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . ஊமையைப் பேசவைத்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . அநேக வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . எண்ணப்படாத புண்ணிய நன்மை அற்புதங்களைச் செய்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . உலகம் பசாசு சரீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. . உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் புறக்கணித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . திரளான அம்புகளால் எய்யப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . அம்புகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில் போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூர அரசைக் கண்டித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . குரூர மனம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியான புனித ஜெபஸ்தியாரே. . . . விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியான புனித ஜெபஸ்தியாரே. . . . உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்;பித்த உத்தம வேதசாட்சியரான புனித ஜெபஸ்தியாரே. . . . மிக தைரிய சந்தோசத்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு புண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . வேதசாட்சிகளுக்குள் விசேச மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபுரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரான புனித ஜெபஸ்தியாரே. . . . பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே, சகல கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரான புனித ஜெபஸ்தியாரே. . . . வைசூரி முதலிய வியாதி துன்பத்தில் ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே. . . எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களைப் . . . எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களைப். . . எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. மு: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக. து: புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். *🍄செபிப்போமாக🍄* 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 சர்வ வல்;லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். *🙏🏻ஆமென்🙏🏻* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
228 காட்சிகள்
*Today’s Rosary Reflections* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 03.02.2026 *(Tuesday)* *⚜️The Sorrowful Mysteries⚜️* *🌿🌹1. The Agony of Jesus in the Garden Gethsemane* In today’s Responsorial Psalm, Psalm 86:2, we read: *"Guard my life, for I am devoted to You; save Your servant who trusts in You. You are my God."* Let us offer this first decade for the countless patients in intensive care units in hospitals, praying that God may protect their lives and grant them a new lease of life. *🌿🌹2. Jesus is Scourged at the Pillar* In Psalm 86:3, we read: *"Lord, have mercy on me, for I call to You all day long."* Let us offer this second decade for the many people who are longing for the merciful gaze of the Lord in their lives, that God may hear their earnest prayers. *🌿🌹3. Jesus is Crowned with Thorns* In today’s Gospel, we read about Jairus who fell at Jesus’ feet and pleaded, *"My little daughter is at the point of death. Please come and lay Your hands on her, so that she may be healed and live."* Let us offer this third decade, praying that God may touch and heal those who are struggling for life. *🌿🌹4. Jesus Carries the Cross* We thank God for giving the Church St.Blaise, today’s saint, who is known as a healer of bodily and spiritual illnesses, a physician of souls, and a martyr who brought relief even to those suffering from throat ailments. Let us offer this fourth decade in gratitude to God. *🌿🌹5. Jesus Dies on the Cross* As Tuesday is specially dedicated to St. Anthony, let us offer this fifth decade for families, praying that all disturbances and afflictions caused by evil spirits may be removed. *🙏🏻Amen.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
S.ANTHONY✝️YESUMARY
320 காட்சிகள்
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 03.02.2026 *(செவ்வாய்)* *⚜️துயர்நிறை மறையுண்மைகள்⚜️* *🌿🌹1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி பதிலுரைப் பாடல் திருப்பாடல் 86:2-ல், *"என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்."* எனக் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள எண்ணற்ற நோயாளிகளின் உயிரைக் காத்து அவர்களுக்கு புதியதொரு வாழ்வை இறைவன் அளிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 86:3-ல், *"என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்."* என கூறப்பட்டுள்ளது. தங்களது வாழ்வில் ஆண்டவரின் இரக்கப் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் மன்றாட்டுகளுக்கு இறைவன் செவிமடுத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து* இன்றையத் திருப்பலி நற்செய்தியில், யாயிர் என்பவர் *"அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்."* என்பதை வாசித்தோம். உயிருக்குப் போராடும் மக்களை இறைவன் தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,* உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்தியவரும், ஆன்மாக்களின் மருத்துவரும், தொண்டையில் சிக்கும் பொருள்களை நீக்கி சுகமளிப்பதில் வல்லவரும், மறைசாட்சியாக மரித்தவருமான இன்றைய புனிதர் பிளெய்ஸை திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,* அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
423 காட்சிகள்
of ✝️ the Day🕊️🔥* *(February 3)* *✠ Saint Blase ✠* (Bishop and Martyr) Other Names : Biagio, Blase, Blasius Born : Armenian Died : Flesh torn by iron wool-combs, then beheaded c.316 Patronage : • against angina • against bladder diseases • against blisters • against coughs • against dermatitis • against dropsy • against eczema • against edema • against fever • against goitres • against headaches • against impetego • against respiratory diseases • against skin diseases • against snake bites • against sore throats • against stomach pain • against storms • against teething pain • against throat diseases • against toothaches • against ulcers • against whooping cough • against wild beasts • angina sufferers • animals • cattle • children • healthy throats • motorists • pack horses • pets • pigs • bakers • brick layers • builders • carvers • cobblers, show makers • construction workers • cowherds • farm workers • hat makers, hatters • millers • musicians who play wind instruments • plasterers • sock makers • stocking makers • stone cutters, stone masons • swineherds • tailors • tanners • veterinarians • wool-combers • wool weavers • Dalmatia • Paraguay • 21 cities • Saint Blase devoted the earlier years of his life to the study of philosophy, and afterwards became a physician. In the practice of his profession he saw so much of the miseries of life and the hollowness of worldly pleasures, that he resolved to spend the rest of his days in the service of God, and from being a healer of bodily ailments to become a physician of souls. The bishop of Sebaste, in Arminia, having died, our Saint, much to the gratification of the inhabitants of that city, was appointed to succeed him. Saint Blase at once began to instruct his people as much by his example as by his words, and the great virtues and sanctity of this servant of God was attested by many miracles. From all parts the people came flocking to him for the cure of bodily and spiritual ills. Agricolaus, Governor of Cappadocia and the lesser Armenia, having begun a persecution by order of the Emperor Licinius, our Saint was seized and hurried off to prison. Whilst on his way there, a distracted mother, whose only child was dying of a throat disease, threw herself at the feet of Saint Blase and implored his intercession. Touched at her grief, the Saint offered up his prayers, and the child was cured; and since that time his aid has often been effectually solicited in cases of a similar disease. Refusing to worship the false gods of the heathens, Saint Blase was first scourged; his body was then torn with hooks, and finally he was beheaded in the year 316. Reflection – There is no sacrifice which, by the aid of grace, human nature is not capable of accomplishing. When Saint Paul complained to God of the violence of the temptation, God answered, “My grace is sufficient for thee, for power is made perfect in infirmity.” The blessing of St. Blaise : According to the Acts, while Blaise was being taken into custody, a distraught mother, whose only child was choking on a fishbone, threw herself at his feet and implored his intercession. Touched at her grief, he offered up his prayers, and the child was cured. Consequently, Saint Blaise is invoked for protection against injuries and illnesses of the throat. In many places on the day of his feast the blessing of St. Blaise is given: two burning candles, blessed on the feast of the Presentation of the Lord ("candlemas"), are held in a crossed position by a priest over the heads of the faithful or the people are touched on the throat with them. At the same time the following blessing is given: "May Almighty God at the intercession of St. Blaise, Bishop and Martyr, preserve you from infections of the throat and from all other afflictions". Then the priest makes the sign of the cross over the faithful., #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
330 காட்சிகள்
*(பிப்ரவரி 3)* *✠ புனிதர் பிளெய்ஸ் ✠* (St. Blaise) மறைசாட்சி, தூய உதவியாளர் : (Hieromartyr, Holy Helper) பிறப்பு : தெரியவில்லை செபஸ்டீ, வரலாற்று ஆர்மேனியா (Sebastea, historical Armenia) இறப்பு : கி.பி. 316 ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Churches) ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church) பாதுகாவல் : விலங்குகள், கட்டிடப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தொண்டை, கல் வெட்டும் தொழிலாளர், செதுக்கும் பணி செய்பவர்கள், கம்பளி தொழிலாளர்கள், குழந்தைகள், "மராட்டி" (Maratea), "இத்தாலி" (Italy), "சிசிலி" (Sicily), "டாலமஷியா" (Dalmatia), "டப்ரோவ்னிக்" (Dubrovnik), "சியுடாட் டெல் எஸ்ட்" (Ciudad del Este), "பராகுவே" (Paraguay), "காம்பானரியோ" (Campanério), "மேடிரா" (Madeira), "ரூபியரா" (Rubiera). புனிதர் பிளெய்ஸ், ஒரு மருத்துவரும், பண்டைய "வரலாற்று ஆர்மேனியாவின்" (Historical Armenia) "செபஸ்டீ" (Sebastea) எனுமிடத்தின் ஆயருமாவார். இது, தற்கால "மத்திய துருக்கி" (Central Turkey) நாட்டிலுள்ள "சிவாஸ்" (Sivas) எனுமிடமாகும். நம்மிடமிருக்கும் அவரைப்பற்றிய முதல் குறிப்பு, 5ம் ஆண்டின் இறுதியில் அல்லது 6ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உள்ள ஒரு மருத்துவர், "அடியஸ் அமிடெனஸ்" (A�tius Amidenus) மருத்துவ எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது; தொண்டையில் சிக்கியிருக்கும் பொருட்களை நீக்கி சிகிச்சையளிப்பதில் அவரது உதவி அங்கு இருந்திருக்கிறது. புனிதர் பிளெய்ஸ், மறைசாட்சி என்ற மகத்துவம் பெற்ற இடம், "செபஸ்டீ" (Sebastea) என்று அறிவித்தது, இத்தாலியின் பெரும் வர்த்தகரும், ஆராய்ச்சியாளரும், மற்றும் எழுத்தாளருமான "மார்க்கோ போலோ" (Marco Polo) ஆவார். இத்திருத்தலம் "சிட்டாடல்" மலைக்கு (Citadel Mount) அருகில் இருப்பதாக 1253ம் ஆண்டு அறிவித்தவர், பிளெமிஷ் பிரான்சிஸ்கன் மிஷனரியும், மற்றும் ஆராய்ச்சியாளருமான (Flemish Franciscan missionary and explorer) வில்லியம் (William of Rubruck) ஆவார். இருப்பினும், அது தற்போது இல்லை. தாம் பிறந்த ஆர்மேனியாவின் செபஸ்டீ நகரில், தமது இளமையில் தத்துவம் கற்ற இவர், ஒரு மருத்துவராக பணியாற்றினார். உடல் வியாதிகளை குணமாக்கிய புனிதர் பிளெய்ஸ், ஒரு ஆன்மாக்களின் மருத்துவர் ஆவார். அனைத்து பகுதிகளிலிருந்தும், உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்துவதற்காக மக்கள் அவரிடம் திரண்டனர். தாமாக தம்மைத் தேடி வந்த விலங்குகளைக்கூட அவர் குணப்படுத்தியதாகவும், பின்னாளில், அவர் அவைகளால் உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், தமது தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒரு குகைக்கு சென்று செப வாழ்வில் ஈடுபட்டார். "செபஸ்டீ" ஆயராக, பிளெய்ஸ், தமது மக்களுக்கு தமது வாய் வார்த்தைகளை முன்னுதாரணமாக அறிவுறுத்தினார். கடவுளுடைய ஊழியரான பிளெய்ஸின் மகத்தான நற்பண்புகளும், பரிசுத்த தன்மைகளும் அவருடைய பல அற்புதங்களால் உறுதிப்படுத்தப்பட்டன. (Acta Sanctorum) எனும் புனிதர்களின் சரித்திர பதிவு நூலின்படி, இவர் அடித்து துன்புறுத்தப்பட்டும், கூரிய இரும்பினாலான முனைகள் கொண்ட சீப்பு போன்ற ஆயுதத்தால் (Iron comb) சித்திரவதை செய்யப்பட்டும், இறுதியில் தலை வெட்டப்பட்டும், மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார். 316ம் ஆண்டு, "கப்படோசியாவின்" ஆளுநரான (Governor of Cappadocia) "அக்ரிகோலா" (Agricola) என்பவரும், "லெஸ்ஸர் ஆர்மேனியா" (Lesser Armenia) என்றும், "ஆர்மேனியா மைனர்" (Armenia Minor) என்றும் அழைக்கப்படும் அதிகாரியும் இணைந்து, "ரோமப்பேரரசர்" (Emperor of the Roman Empire) "லிசினியஸ்" (Licinius) என்பவரின் உத்தரவின்படி, கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். பிளெய்ஸ் பிடிபட்டார். விசாரணை மற்றும் கடுமையான வாதங்களின் பின்னர், அவர் சிறையில் தள்ளப்பட்டார். பின்னர் அவர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போஸ்தலர்களின்படி, கைது செய்யப்பட்டு, சிறைச் சாலைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், தமது ஒரே குழந்தையின் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் துயருற்ற தாய் ஒருவர், இவரது காலடியில் வந்து விழுந்தாள். தமது குழந்தையை குணமாக்க வேண்டி அவரது பரிந்துரையை வலியுறுத்தினாள். நின்று, அவளுடைய துயரத்தைத் தொட்டு, அவர் தனது ஜெபங்களைக் கொடுத்தார்; குழந்தை குணப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தொண்டை காயங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பிளேஸ் அழைக்கப்படுகிறார். கவர்னரின் வேட்டைக்காரர்கள் அவரை திரும்ப செபஸ்டீ கொண்டு செல்லும் வழியில், ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தனர். அந்த பெண்ணுடைய ஒரே பன்றியை ஒரு ஓநாய் பிடித்ததாக அழுதாள். பிளெய்ஸின் கட்டளையின்பேரில், ஓநாய் பன்றியை உயிருடனும் காயப்படுத்தாமலும் விட்டுச் சென்றது. இவரது நினைவுத் திருநாளானது, "இலத்தீன்" (Latin Church) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாளும், "கிழக்கு மரபுவழி" (Eastern Orthodox) மற்றும் "கிரேக்க கத்தோலிக்க" (Greek Catholic) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் பதினொன்றாம் தேதியும் நினைவுகூறப்படுகின்றது. #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
S.ANTHONY✝️YESUMARY
274 காட்சிகள்
*(பிப்ரவரி 03)* *✠ புனிதர் ஆன்ஸ்கர் ✠* (St. Ansgar) வடக்கின் அப்போஸ்தலர்/ பேராயர் : (Apostle of the North/ Archbishop) பிறப்பு : செப்டம்பர் 8, 801 அமியன்ஸ் (Amiens) இறப்பு : ஃபெப்ரவரி 3, 865 ப்ரெமன் (Bremen) ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) லூதரன் திருச்சபை (Lutheran Church) ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion) பாதுகாவல் : ஸ்கேண்டிநேவியா (Scandinavia) புனிதர் ஆன்ஸ்கர், ஃப்ராங்க்ஸ் அரசின் (Kingdom of the East Franks) வடக்குப் பிராந்தியத்திலுள்ள "ஹம்பர்க-ப்ரெமன்" (Hamburg-Bremen) மறைமாவட்டத்தின் பேராயராக (Archbishop) பணியாற்றியவர் ஆவார். ஐரோப்பாவின் வடக்கு நாடுகளில் கிறிஸ்தவ மறையை எடுத்துச் செல்வதிலும், மறைபரப்பு பணியாற்றியதாலும், இவர் வடக்கின் அப்போஸ்தலர் (Apostle of the North) என்று அழைக்கப்படுகின்றார். இவர், கி.பி. 801ம் ஆண்டு, வடக்கு ஃபிரான்சின் (Northern France) "அமியன்ஸ்" (Amiens) நகர் அருகே பிரபல "ஃபிரான்கிஷ்" (Frankish) குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் இவரின் சிறு வயதிலேயே மரணம் அடைந்ததால், இவர் "கோர்பி" (Corbie Abbey) எனும் துறவற மடாலயத்தில் வளர்ந்தார். "பிகார்டி" (Picardy) நகரிலுள்ள "பெனடிக்டைன்" (Benedictine monastery) துறவு மடத்தில் கல்வி கற்றார். ஆன்ஸ்கர், கி.பி. 831ம் ஆண்டு, "ஹம்பர்க்" (Hamburg) மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். கி.பி. 831ம் ஆண்டு, நவம்பர் மாதம், இவர் பேராயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளுக்கு திருத்தந்தை நான்காம் கிரகோரி (Gregory IV) ஒப்புதல் அளித்தார். "பல்லியம்" (Pallium) (பேராயராக ஒருவர் அருட்பொழிவு செய்யப்படும் நிகழ்வின்போது அவர் அணிவதற்கான ஒருவித கம்பளியால் நெய்யப்பட்ட அங்கி, திருத்தந்தையால் அளிக்கப்படும். அதனை "பல்லியம்" என்பர்.) எனப்படும் மேலங்கியை பெற்றுக்கொள்வதற்காக ஆன்ஸ்கர் தாமே நேரில் ரோம் சென்றார். பின்னர் இவர் "டென்மார்க்" (Denmark), "நார்வே" (Norway), மற்றும் "ஸ்வீடன்" (Sweden) ஆகிய நாடுகளுக்கு திருத்தந்தையின் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாக சுவிசேஷப் பணியாற்றினார். இதன் பயனாக ஏராளமான பெனடிக்டைன் துறவு மடங்களை அங்கெல்லாம் நிறுவினார். ஆன்ஸ்கர் வாழ்நாள் முழுவதும் கடினமான மயிராடைகளையே (Rough Hair Shirt) அணிந்தார். ரொட்டி மற்றும் தண்ணீரையே உணவாக அருந்தினார். எழைகளின்பால் மிகுந்த பரிவும் கருணையும் காட்டினார். கண் பார்வையற்ற சகோதர சகோதரியர்க்கும், ஊனமுற்றோர்க்கும், ஏழை எளியோர்க்கும் கருணையுடன் சேவை புரிந்தார். இவர் நற்செய்திப் பணியாற்றுவதற்காக பல இன்னல்களுக்கு ஆளானார். இருப்பினும் இறுதிவரை தமது அழைத்தலில் மனந்தளராமல் இருந்து, நம்பிக்கை இழக்காமல் ஆர்வமுடன் பணியாற்றினார். ஸ்வீடன் நாட்டின் முதல் மறைப்பரப்பாளர் மற்றும் "நோர்டிக் நாடுகளில்" (Nordic countries) மறை பணியாளர்களின் வரிசைக் கிரமத்தினை (Hierarchy) அமைத்தவர் என்பதாலும் இவர் "ஸ்கேண்டிநேவியாவின்" (Patron of Scandinavia) பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டார். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
See other profiles for amazing content