Follow
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
133,480
Posts
117,816
Followers
S.ANTHONY✝️YESUMARY
1.3K views
3 days ago
*உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கான ஜெபம்..!!* ⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺 பலர் இந்த ஜெப பக்தி முயற்சியை அறிந்து இருக்கலாம். அறியாது இருப்பவர்களுக்கு இந்த பதிவு. உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக நாம் ஜெபிப்பது நம் இறைவனாம் ஆண்டவருக்கு மிக பிடித்தமான ஒன்று. நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் பொழுது நம் ஜெபத்தின் பலனாக விண்ணகம் செல்லும் ஆன்மாக்கள் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்கள் என்று நாம் அறிவோம். உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க சிறந்த நேரம் பகல் 3.00 மணி. இந்த பகல் 3.00 மணி மாபெரும் இரக்கத்தின் நேரம், இந்த நேரத்தில் நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் போது நம் ஜெபத்திற்கு சிறப்பான பலன் கண்டிப்பாக உண்டு என்று *"புனித பாஸ்டினா அம்மாளுக்கு"* நமது இரக்கத்தின் ஆண்டவர் கூறி உள்ளார். (கீழ் கண்ட ஜெபத்தை, நாம் ஒவ்வெரு முறை ஜெபிக்கும் போதும் உத்தரிக்கும் நிலையில் உள்ள 1000 ஆன்மாக்கள் விண்ணகம் செல்லும் என்று நமது ஆண்டவர் *"புனித ஜெர்த்ரூத் அம்மாளுக்கு"* வெளிப்படுத்தி உள்ளார்.) *🙏🏻ஜெபம்..!!🙏🏻* ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ *"என்றும் வாழும் தந்தாய்! உமது தெய்வ மகனாகிய இயேசுவின் விலைமதிப்பற்ற திரு இரத்தத்தை இன்று உலகெங்கிலும் செலுத்தப்படும் திருப்பலிகளோடு ஒன்றித்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் அனைவருக்காகவும், உலகெங்குமுள்ள பாவிகளுக்காகவும், அகில திருச்சபையிலுள்ள பாவிகளுக்காகவும், எனது இல்லத்திலும் குடும்பத்திலுமுள்ள பாவிகளுக்காகவும் உமக்கு அர்பணிக்கிறேன்."* 3.00 மணிக்கு ஜெபிக்க தவறினால், நமக்கு நேரம் கிடைக்கும் போது இந்த ஜெபத்தை ஜெபிக்கலாம் பலன் உண்டு. *நாம் இந்த சிறு ஜெபத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இந்த ஜெப பக்தி முயற்சியை பற்றி அறியாத கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நாம் இந்த ஜெபபக்தி முயற்சியை பற்றி தெரியப்படுத்தலாம்.* நன்றி.🙏 ⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️ *சகல ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ளும் செபம்* ⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️ ஆண்டவரே அளவில்லா வேதனையில் உம்மை நோக்கி கூவிஅழைக்கின்றேன். ஆண்டவரே என் கூக்குரலுக்கு செவிசாய்த்தருளும். என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும். ஆண்டவரே! யான் செய்த பாவங்களை நினைவுகூர்வீராகில் உமக்கு முன் யார் நிற்க முடியும்? வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கின்றிர். ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்; அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது. என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது; இரவின் காவலர் உதயத்தை எதிர் நோக்குவதைவிட, அதிக ஆர்வமுடன் எதிர்நோக்குகிறது. காவலர் உதயத்தை எதிர்பார்ப்பதற்கு மேலாக, இஸ்ராயலர் ஆண்டவரை எதிர் பார்ப்பார்களாக் ஏனனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துனை பொங்கி வழிகின்றது. இஸ்ராயேலரை அவர் மீட்பார்; அவர்கள் செய்த பாவங்களை; அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக்கொள்வார். *🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே. *🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக. *🙏🏻செபிப்போமாக:🙏🏻* ⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️ சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா! மரித்த உமது அடியோகளுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாடுக்களை அங்கரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்பிக் காத்திருக்கிற பாவப் பொறுத்தலை கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்ளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் -ஆமென்.🙏🏻 *🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் அளித்தருளும் ஆண்டவரே. *🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக. *🌹முதல்:* அவர்கள் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவார்களாக. *🌻துணை:* ஆமென். #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
S.ANTHONY✝️YESUMARY
1.8K views
3 days ago
மரியாளின் மாசற்ற இருதய வணக்க மாதம்* ஆகஸ்ட் 09 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பிரியத்தத்தத்தினாலே பூரணமான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். சகல இருதயங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்ட திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மகிமைப் பிரதாபச் சிம்மாசனமாகிற திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். அத்தியந்த தாழ்ச்சியுள்ள திரு இருதயமே திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தேவ சிநேகத்தின் பலியான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சியும் உண்டாகக்கடவது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க ! #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள்
S.ANTHONY✝️YESUMARY
1.3K views
3 days ago
நீர் இல்லை. தானாக வளரும் செடியின் அற்புதம்!* உக்ரைன் நாட்டின் ஒடேசா மாகாணத்தில், சராதா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான குலேவ்சா, கடந்த சில ஆண்டுகளில் உக்ரைன், மால்டோவா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலமான புனிதத் தலமாக மாறியுள்ளது. குலேவ்சாவில் உள்ள புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெறும் அற்புதங்களைத் தங்கள் கண்களால் காண்பதற்காக, தினமும் ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர். புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெறும் அற்புதங்கள் அனைத்திலும், பார்ப்போருக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்துவது அங்குள்ள ஒரு மாதா படமே ஆகும். கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இந்த அழகிய மாதா படம், ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறுக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமை அன்று, மக்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் இருந்து லில்லித் தண்டுகளைக் கொண்டு வருகிறார்கள். அவை ஆசீர்வதிக்கப்பட்ட பின்னர், கண்ணாடிப் பெட்டி திறக்கப்பட்டு, பழைய மலர்கள் அகற்றப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக புதிய லில்லித் தண்டுகள் உள்ளே வைக்கப்படுகின்றன. காலப்போக்கில், வெட்டப்பட்ட தண்டுகளின் கீழ்பகுதிகள் உலர்ந்து விடுகின்றன. ஆனால், மேல்பகுதிகள் தொடர்ந்து வளர்ந்து, தேவமாதாவின் திருமுகத்தைச் சுற்றி ஒரு கிரீடம் போல வளைந்து, மொட்டுகளை உருவாக்குகின்றன. அந்த மொட்டுகள் மூவொரு கடவுள் பெருவிழா நாளில் மலர்கின்றன. நீர் இல்லாமல், மண் இல்லாமல், வேறு எந்த ஆதாரமும் இல்லாமல், வெட்டப்பட்டு காய்ந்து போன தண்டுகள் வளர்ந்து புதிய மொட்டுகளை உருவாக்கும் புதுமை இங்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இது விஞ்ஞானத்தால் விளக்க முடியாத மாபெரும் அற்புதம். அதன் பின்னர், தண்டுகளின் உலர்ந்த கீழ்ப்பகுதியில் இருந்து சிறிய கிழங்குகளும் (small white tubers), புதிய பச்சை இலைகளும் வெளிவருகின்றன. அந்த இலைகள் அடுத்த ஈஸ்டர் வரை, ஒரு முழு ஆண்டும் வாடாமல் இருக்கின்றன! திருநாட்களின் தேதி மாறினாலும், அந்த மலர்கள் எப்போதும் அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றன. இந்த அற்புதத்தை அறிவியலால் விளக்க பலர் முயற்சி செய்து தோல்வியடைந்தனர். ஒடேசா மெக்னிகோவ் தேசியப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவைச் (Odessa I.I. Mechnikov National University Botanical Garden) சேர்ந்த தாவரவியலாளர் அலெக்ஸாண்ட்ரா ஸ்லியுசரென்கோ (Олександра Слюсаренко) மற்றும் இளநிலை ஆய்வாளர் சினைடா கோடிகோவா (Зинаида Котикова) ஆகியோர் இதனை ஆய்வு செய்தனர். ஆனால், விரிவான ஆய்வுக்குப் பிறகும், மண், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில், முற்றிலும் உலர்ந்த தண்டுகளில் உயிருள்ள லில்லி கிழங்குகள் எவ்வாறு உருவாயின என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை. ரஷ்யாவின் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய விஞ்ஞானியான திமித்ரி திமித்ரியேவிச் கோஸ்ஸே (Дмитрий Дмитриевич Госсе), மண் அறிவியல் மற்றும் சூழலியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளராக (soil scientist–ecologist), இந்த நிகழ்வை ஆய்வு செய்தார். மாதாவின் படத்தில் லில்லிப் பூக்கள் வைக்கப்படும்போது, அவை தண்டுகளோடு மட்டுமே வைக்கப்படுகின்றன. தண்ணீரையும் ஊட்டச்சத்துக்களையும் சேமித்து வைக்கும் உறுப்பு (கிழங்கு) இல்லாத நிலையில், லில்லி செடி நீண்ட காலம் வாழ முடியாது; அது இறந்து விடும். இந்நிலையில், தண்டுகளிலிருந்து புதிய லில்லி மலர்கள் தோன்றுவது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்கிறார் அவர். இந்த அதிசயம் கீவ் நகரத்தைச் சேர்ந்த உயிரியல் அறிஞர் மரியா போல்ஷகோவா அவர்களையும் கவர்ந்தது. கீவ் மற்றும் ஒடேசா நகரங்களின் தாவரவியல் பூங்காக்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்வை ஆய்வு செய்து வருகின்றனர். சில லில்லி தண்டுகளை அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள். மற்றவற்றை ஆலயத்தில் உள்ள ஏனைய படங்கள் மீது வைக்கின்றனர். அவர்களுடைய ஆய்வுக் கூடத்தில் தண்டுகள் பூப்பதில்லை. புனித நீக்கிலார் ஆலயத்தில், அதுவும் அந்த குறிப்பிட்ட மாதா படத்தில் மட்டும் தான், உலர்ந்த தண்டுகளில் இருந்து லில்லிப் பூக்கள் பூக்கும் அதிசயம் நடைபெறுகிறது. இங்கே ஏமாற்றுவதற்கு இடமில்லை. லில்லி மலர்கள் மக்களால் அவர்களுடைய வீடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. படத்தில் வேறு எதுவும் இல்லை. மக்கள் அருகில் சென்று பார்க்கலாம். இந்த மாபெரும் அற்புதம் மக்களின் கண்களுக்கு முன்னால் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. குலேவ்சாவில் உள்ள புனித நீக்கிலார் ஆலயத்தில் வேறு பல புதுமைகளும் நடைபெறுகின்றன. நம்பிக்கையோடு இங்கு வந்து பல நோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஆலயத்தில் நடந்த புதுமைகள் எழுதப்பட்ட ஒரு புத்தகமும் அங்கு உள்ளது. மகா வணக்கத்திற்குரிய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். சக்தி உடையவளாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
S.ANTHONY✝️YESUMARY
1.6K views
3 days ago
ஆரோக்கிய நாதர் நவநாள்* ​🗓️ நாள்: 03 *"நோயாளிகள் மீது பரிவுகொண்ட புனித ஆரோக்கியநாதர்"* *​📜 வரலாற்றுத் துணுக்கு:* தனது நெடிய பயணத்தில் புனித ஆரோக்கியநாதர் இத்தாலி நாட்டை அடைந்தபோது, அங்கு கொடிய பிளேக் (கொள்ளை நோய்) கடுமையாகப் பரவியிருந்தது. மக்கள் பயந்து ஊரை விட்டு ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால் புனித ஆரோக்கியநாதரோ பயந்து ஓடாமல், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவித்துக்கொண்டிருந்த மருத்துவமனைகளைத் தேடிச் சென்று அவர்களுக்குப் பரிவோடு உதவினார். *​📖 திருவிவிலிய வாசகம்:* "நான் நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்." (மத்தேயு 25:36) *​🕊️ சிந்தனை:* நோயாளிகளிலும், துன்பப்படும் மனிதர்களிலும் இயேசுவைக் காண்பதே உண்மையான பக்தி. தற்போதைய உலகில் நோயுற்றவர்களையும், முதியவர்களையும் ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை பெருகி வருகிறது. இந்நிலையில் புனித ஆரோக்கியநாதரின் அளப்பரிய பரிவு நமக்கு ஒரு சிறந்த பாடமாகும். *​🙏 செபம்:* இரக்கத்தின் இறைவா, நோயாளிகள் மீதும், ஆதரவற்றவர்கள் மீதும் நாங்கள் உண்மையான அன்பு காட்ட எங்களுக்கு இரக்கமுள்ள இதயத்தைத் தாரும். புனித ஆரோக்கியநாதரின் பரிவும், துணிவும் எங்கள் வாழ்விலும் ஒளிரச் செய்தருளும். ஆமென். #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
S.ANTHONY✝️YESUMARY
2.2K views
3 days ago
பரலோக மாதா நவநாள்* நாள்-4 செப்பனியா 3:14 *"மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி".* *சிந்தனை:* புனித ஜான் தமசீன் அன்னை மரியாளின் விண்ணேற்பினைக் குறித்து மிக ஆழமாகக் கற்பித்து வந்தார். அன்னை மரியாள் விண்ணேற்பிற்கு தகுதியானவர் என்பதைக் குறித்துப் பேசினார். அன்னை மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்த பின்பும் கன்னிமகிமை கெடாமல் இருந்ததென்பது அவரது மண்ணுல வாழ்வு முடிந்த பின்னரும் அவர் உடல் அழியாது விண்ணேறிச் செல்ல ஓர் மிகச்சிறந்த காரணி என்று சுட்டிக்காட்டினார். ஆண்டவர் இயேசுவை தனது மார்பில் சுமந்து பாலூட்டிய அன்னை மரியாள் ஆண்டவருடைய திவ்ய நற்கருணைப்பேழையில் உறையத் தகுதியானவரே! தந்தைக் கடவுளே தனக்கெனத் தெரிந்துகொண்ட அன்னை மரியாள் ஆண்டவரின் திருக்கோவிலில் உறைந்திடத் தகுதியானவரே! தனது வயிற்றில் இறைமகன் கருவாக உருவெடுப்பின் தன் வாழ்நாள் முழுவதும் இன்னலைச் சந்திக்க நேரிடும் என்று அறிந்தும் தனது உள்ளத்தினை ஓர் வாள் ஊடுருவிப் பாயும் என்று அறிந்த பின்னரும் தப்பி ஓடாமல் ஆம் என்று அடிபணிந்து ஆண்டவரைக் கருவில் சுமந்து பெற்றெடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்து சிலுவையில் பலியாகும்போது உடனிருந்து அந்த வாளை தன் உள்ளத்தில் ஏற்ற அன்னை மரியாள் ஆண்டவரை இறுதிநாள்வரை முகமுகமாய் தரிசித்து அவரது வலப்புறம் நிற்கத் தகுதியான பட்டத்து அரசியே! கடவுளின் தாயாக விளங்கும் ஆண்டவளாம் அன்னை மரியாளை அனைத்து உயிர்களுக்கும் தாயாக ஆண்டவரே கொடுத்தார். இத்தகைய அன்னை மரியாள் ஆண்டவனின் அடிமையாக கடவுளின் அன்னையாக அனைவராலும் போற்றப்பட அவர் விண்ணகம் ஏறிச் செல்ல முற்றிலும் தகுதியானவரே என்று புனிதர் ஆழமாகக் கூறுகிறார். *செபம்:* தூய கன்னித் தாயே! கடவுளால் தனக்கெனத் தெரிந்து கொள்ளப்பட்டவளே! சம்மணசுக்களால் திருச்சங்கீதங்கள் முழங்க மனுவுருவான உம் திருமகனை எந்நாளும் முகமுகமாய் தரிசிக்க உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டவரே! உம்மோடும் வானதூதர்களோடும் புனிதர்களோடும் இணைந்து மூவொரு கடவுளை முகமுகமாய் தரிசித்து புகழினைப் பாடி ஆராதித்து நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்க எங்களுக்காக இறைவனை மன்றாடும். ஆமென். *பொது நவநாள் செபம்:* மகா மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்துக்கு எழுந்தருளின பரிசுத்த தேவமாதாவே! நீர் சரீரத்தோடு வான மண்டலங்களைக் கிழித்தேறின மகிமை ,உமது சுகிர்தங்களுக்கு ஏற்ற வெகுமானந்தானே/அதேனெனில், மண்ணால் உண்டாக்கப்பட்ட சரீரம் மண்ணாய்ப் போக வேண்டுமென்று ஆதாம் செய்த பாவத்துக்கு ஆக்கினையாகக் கட்டளையிருந்தாலும், உம்மிடத்தில் அப்படிப்பட்ட பாவத்தின் அடையாள முதலாய் காணாததினால் அதற்குள்ள ஆக்கினையும் காணவில்லையே / அதனால் ஆண்டவர் தாம் மரித்தோரிடத்தில் நின்று எழுந்தருளினது போல உம்மையும் உயிரோடு எழுந்திருக்கப் பண்ணினார். தம்முடைய சரீரம் அழியாமல் இருக்கப் பண்ணித் தம்முடைய திருத்தேகம் வரப்பிரசாதங்களினால் அலங்கரிக்கப்பட்டது போல அவ்வலங்காரத்தை உமது சரீரத்துக்கும் கொடுத்தார். கடைசியாய் அவர் தாமே சரீரத்தோடு வானத்துக்கு ஏறினது போல, உம்மையும் அந்தப்படி ஆத்ம சரீரத்தோடு ஏறப் பண்ணினாரே! நீர் பரலோகத்துக்கு ஏறினபோது சந்திரன் உம்முடைய பாதத்தைத் தாங்க / சூரியன் உம்முடைய உடலில் போர்வையாய் படிய / தாரகைக் கணங்கள் உமது சிரசில் மகுடமாய் விளங்க /தூதர்கள் ஸ்துதியங்கள் பாட / பர மண்டலத்தில் சேர்ந்த உடனே /பிதா, சுதன் , பரிசுத்த ஆவியாரால் நித்திய பரலோக ராஜேஸ்வரியாக முடிசூட்டப்பட்டீரே ஆ! இவ்வித வெகுமான மகிமையோடு பரலோகத்துக்கு எழுந்தருளிய உம்மைக் கண்ட அடியேன் இன்று தானே உம்மோடே பறந்து வரத்தக்க ஆசையோடு இருக்கிறேன் . ஆனாலும் இந்த மண் சரீரபாரத்தோடு இப்படிப்பட்ட நன்மை பெற நான் பாத்திரமாகாதபடியால் இன்று உம்மோடு என்னுடைய நினைவைப் பரலோகத்துக்கு உயர்த்தி , இவ்வுலகத்தை மறந்து நடக்கப் பண்ணியருளும் . அப்படியே சாகுந்தனையும் உம்முடைய சலுகையால் நான் நடந்து உமக்குப் பணி செய்து என்னாத்துமம் பரலோகத்தில் சேர்ந்து எக்காலமும் உம்மைக் கண்டு ஸ்துதித்து மோட்ச ஆனந்தம் அனுபவிக்கும்படி கிருபை பண்ணியருளும் *ஆமென்* . தேவ பிதாவின் குமாரத்தியுமாய், சுதனின் தாயாருமாய், பரிசுத்த ஆவியின் நேச பத்தினியுமாய் இருக்கிற சுகிர்த அலங்காரியே,, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
S.ANTHONY✝️YESUMARY
1.7K views
3 days ago
*அனைத்து புனிதர்களை நோக்கி ஜெபம் மற்றும் மன்றாட்டு மாலை.* ⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️ *அனைத்து புனிதர்களை நோக்கி ஜெபம்* _______________________________ அன்புள்ள , புனிதர்களே.. உங்களின் முன்மாதிரிக்கு நன்றி. நான் உங்களுடன் சேர்ந்து, பரலோகத்தில் என்றென்றும் கடவுளை வணங்க விரும்புகிறேன். இறைவனில் வாழும் புனிதர்களே... தயவுசெய்து உங்களின் அடிச்சுவடுகளையும், இயேசுவின் வழியையும் பின்பற்ற எனக்கு உதவுங்கள். நீங்கள் செய்தது போல், எல்லாவற்றிலும் இறைமகன் இயேசுவின் சித்தத்தைத் தேடி, இயேசுவின் சாயலுக்கு என்னை இணங்க வைக்க எனக்கு உதவுங்கள். தயவுசெய்து, என்னையும், நான் செய்யும் அனைத்தையும், இயேசுவின் மகிமைக்காகவும், என் அண்டை வீட்டாரின் சேவைக்காகவும், உலக மாந்தர் அனைவருக்காகவும் அர்ப்பணிக்க எனக்கு உதவுங்கள். ஆமென். ⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️ *புனிதர்களின் மன்றாட்டு மாலை* _______________________________ ஆண்டவரே இரக்கமாயிரும் -2 கிறிஸ்துவே இரக்கமாயிரும் -2 ஆண்டவரே இரக்கமாயிரும் -2 புனித மரியாயே .. இறைவனின் தாயே புனித மிக்கேலே.. இறைவனின் புனித தூதர்களே.. புனித திருமுழுக்கு யோவானே... புனித சூசையப்பரே... புனித இராயப்பரே புனித சின்னப்பரே... புனித அருளப்பரே... புனித மதலேன் மரியம்மாளே.... இறைவனின் அனைத்து சீடர்களே... புனித ஸ்தேபானே... புனித லாரன்சே... புனித ஆஞ்ஞேசம்மாளே... *இறைவனின் அனைத்து மறைசாட்சிகளே..* புனித பசிலியாரே... புனித அகுஸ்தினாரே... புனித ஆசீர்வாதப்பரே... புனித பெர்னாந்துவே... புனித பிரான்சிஸ் அசிசியாரே.. புனித சுவாமிநாதரே... புனித அக்குவினாஸ் தோமையாரே... புதின சிலுவை அருளப்பரே... புனித ஜோவான்னி ... லியோனார்தியே... புனித பிலிப்பு நேரியாரே.. புனித லயோலா இஞ்ஞாசியாரே... புனித பதுவை அந்தோணியாரே... புனித கலசான்ஸ் சூசையப்பரே... புனித பிரான்சிஸ் சவேரியாரே... புனித ஜான் போஸ்கோவே... புனித அவிலா தெரசம்மாளே... புனித குழந்தை யேசு தெரசம்மாளே... புனித கித்தேரியம்மாளே.. இறைவனின் எல்லா புனிதர்களே, புனிதையரே.. கருணைகூர்ந்து... *எங்களை மீட்டருளும் ஆண்டவரே* தீமை அனைத்திலுமிருந்து.. பாவம் அனைத்திலுமிருந்து.... முடிவில்லா சாவிலிருந்து.... உமது மனுவுடலேற்பினாலே... உமது இறப்பினாலே உயிர்பினாலே... தூய ஆவியின் வருகையினாலே... பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம் -எங்கள் மன்றாட்டை கேட்டருளும். உமது ஊழியர்களின் பணியாலும், கொடைகளாலும், உமது திருச்சபையின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் அடியார் திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், ஆயர்கள் மற்றும் அனைத்து அதிபர்களையும் உமது தூய ஆவியின் கொடைகளால் நிரப்ப வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். துறவியரின் வாழ்வும் பணியும் மனித குல முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். அனைத்து துறவற சபையினரும் கிறிஸ்துவின் அன்பிலும், தங்கள் நிறுவுனரின் வழியிலும் வாழவும், வளரவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இறையன்னை சபையினர் தங்கள் நிறுவனரான தூய ஜான் லியோனார்தியின் நிரந்தர சீர்திருத்தத்தின் தனிகொடையை வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். தங்கள் பிள்ளையை இறைபணிக்காக அளித்திட்ட இவர்களின் பெற்றோர்களை உமது நிறைவான ஆசீரினால் ஈடுசெய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இன்று தங்கள் வாழ்வை உமக்கு அர்ப்பணம் செய்யும் இந்த சகோதரர்களை கிறிஸ்துவைப்போல் வாழ செய்யவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் அடியார்ராகிய இவர்கள் தங்கள் அர்ப்பண வாழ்வில் நிலைத்திருக்க அருளும் ஆற்றலும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த எங்கள் சகோதரர்களை ஆசீர்வதித்து அர்ச்சித்து, அர்ப்பணிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உயிருள்ள இறைவனின் திருமகனான இயேசுவே உம்மை மன்றாடுகிறோம். கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்த்தருளும் -2 கிறிஸ்துவே தயவாய் செவிசாய்த்தருளும் -2 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
S.ANTHONY✝️YESUMARY
0 view
3 days ago
*நவவிலாச சபை சம்மனசுக்களுக்கு நவநாள் ஜெபமாலை மற்றும் பிரார்த்தனை* 👑🧚🏻‍♀️👑🧚🏻‍♀️👑🧚🏻‍♀️👑🧚🏻‍♀️👑🧚🏻‍♀️👑🧚🏻‍♀️ *✝️பிதா சுதன் இஸ்பிரித்து சாந்துவின் பெயராலே* *ஆமென்🙏🏻* சர்வேசுரனின் அதி உன்னத உத்தமதனத்தையும் மேலான மகிமையையும் சதாகாலமும் பிரதிபலித்துக்கொண்டே இருப்பதுதான் நவவிலாச சம்மனசுக்களின் அலுவல். இவர்கள் மூன்று பேர் அடங்கிய மூன்று பகுப்பினராகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். *முதலாவது வகுப்பினர்* பக்திச்சுவாலகர்கள், ஞானாதிக்கர்கள், பத்திராசனர்கள். இவர்கள் சர்வேசுரனுடைய சிம்மாசனத்திற்கு மிக அருகாமையில் நின்று தேவ ஆராதனையிலும் தேவ காட்சி தியானத்திலும் தேவ சேவை புரிவதிலும் ஈடுபட்டு, படைப்புக்கள் அனைத்தையும் பாதுகாத்து ஆள்கிறார்கள். *இரண்டாவது பகுப்பினர்* நாதகிருத்தியர்கள், சத்துவகர்கள், பலவத்தர்கள். இவர்கள் பிரமாணிக்கம், புண்ணியம் வீரம் ஆகிய தனித்தன்மைகளுடன் தேவ ஊழியத்தில் ஈடுபட்டு, பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் இடையிலுள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் பாதுகாத்து ஆள்கிறார்கள். *மூன்றாவது பகுப்பினர்* பிராதமிகர்கள், அதிதூதர்கள், தூதர்கள். இவர்கள் சர்வேசுரனுக்கும் சிருஷ்டிகளுக்கும் இடையே நின்று மனிதர்களின் ஜெபங்களைக் கடவுளுக்கும் கடவுளின் வரங்களையும் செய்திகளையும் மனிதர்களுக்கும் எடுத்துச் சென்று ஒவ்வொருவருக்கும் காவல் தூதர்களாகச் செயல்பட்டு, பூமி முழுவதையும் பாதுகாத்து ஆள்கிறார்கள். *விளக்கம்* நவவிலாச சம்மனசுக்கள் மீது பக்தியும் சிநேகமும் கொண்டு வாழ்வது நம் கடமை ஆகும். சும்மனசுக்களை நமது நண்பர்களாக்கிக் கொண்டு அவர்களிடம் ஜெபித்தால் நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழவும் பாவம், நோய் மற்றும் விபத்துக்களில் நின்று பாதுகாப்பு பெறவும் முடியும். குறிப்பு: இன்று திருச்சபை பல சோதனைகளை சந்திப்பதற்கு முக்கிய காரணம் நவ விலாச சம்மனசுக்களின் பரிந்துரை வேண்டப்படாததால்தான். இந்த நவநாள் ஜெபத்தை சிலுவைப்பாதை ஜெபம் போல் ஒவ்வொரு சுரூபத்தையும் தரிசித்து அல்லது படத்தைப் பார்த்து சொல்லலாம். கூடுமானால் அந்த அந்த சம்மனசுக்குரிய நிறமுள்ள மெழுகுவர்த்தியை எரியவிட்டு ஜெபிக்கலாம். சர்வேசுரனுக்குத் தோத்திரமாக - வெள்ளை (White) 1. பக்திச்சுவாலகர்கள் - ஊதா (Violet) 2. ஞானாதிக்கர்கள் - நீலம் (Blue) 3. பத்திராசனர்கள் - பச்சை (Green) 4. நாதகிருத்தியர்கள் - ரோஸ் (Rose) 5. சத்துவகர்கள் - ஆரஞ்சு (Orange) 6. பலவத்தர்கள் - மஞ்ச ள் (Yellow) 7. பிராதமிகர்கள் - சிவப்பு (Red) 8. அதிதூதர்கள் - தங்க ம் (Gold) 9. தூதர்கள் - வெள்ளி (Silver). *🌊1. பக்திச்சுவாலகர்களுக்கு நவநாள் ஜெபம் (Seraphim)*🌊. ஊதா நிற மெழுகுவர்த்தி. *🙏🏻ஜெபிப்போமாக.🙏🏻* ஓ பரிசுத்த பக்திச்சுவாலகர்களே! நீங்கள் சர்வேசுரனுடைய அளவில்லாத நன்மைத் தனத்தைக் கொண்டு தேவசிநேக அக்கினியால் பற்றி எரிகின்ற அரூபிகளாயிருக்கிறபடியால் அந்த தேவ அக்கினியின் ஒரு சுடர் என் இருதயத்திலே விழுந்து என்னிடத்திலுள்ள உலக நேச பாசங்களனைத்தும் எரிந்து தேவ பக்திச் சுடர்விடும்படிச் செய்ய உங்களை மன்றாடுகிறேன். (1 பர. 3 அருள். திரி) *ஆமென்.* *🎊2. ஞானாதிக்கர்களுக்கு நவநாள் ஜெபம்.🎊 (Cherubim)* நீல நிற மெழுகுவர்த்தி. *🙏🏻ஜெபிப்போமாக.🙏🏻* ஓ பரிசுத்த ஞானாதிக்கர்களே! நீங்கள் சர்வேசுரனுடைய அளவில்லாத வல்லமையையும் தெய்வீக பரம இரகசியங்களையும் நேருக்கு நேர் ஊடுருவிப் பார்த்து ஞான சமுத்திரைமாய்த் தெளிந்திருக்கிறபடியால், அந்த தேவஞானத்தின் ஒரு கதிர் என் மனதிலே விழுந்து என்னிடத்திலிருக்கிற அஞ்ஞான இருளனைத்தையும் அகற்றி, சர்வேசுரனிடமும் பரலோக ஞானத்தினாலும் என் மனதை ஒளிர்விக்கும்படி உங்களை மன்றாடுகிறேன். (1பர. 3 அருள். திரி). *ஆமென்.* *🌹3. பத்திராசனர்களுக்கு நவநாள் ஜெபம் (Thrones).🌹* பச்சை நிற மெழுகுவர்த்தி. *🙏🏻ஜெபிப்போமாக.🙏🏻* ஓ பரிசுத்த பத்திராசனர்களே! நீங்கள் சர்வேசுரனுடைய அளவில்லாத இராஜ நீதி ஆசனமாய் அவரைத் தாங்கி நிற்பதிலே களிகூர்ந்திருக்கிறதினால், நான் தேவ நீதி தவறாமல் நடந்து அதனிமித்தம் வருகிற சகல உபத்திரவங்களையும், உபகாரங்களையும் அமைந்த மனதோடு ஏற்றுத் தாங்கிக் கொள்ளும் வரம் கேட்டு உங்களை மன்றாடுகிறேன். (1 பர. 3 அருள். திரி). *ஆமென்.* *🛐4. நாதகிருத்தியர்களுக்கு நவநாள் ஜெபம் (Dominations).🛐* ரோஸ் நிற மெழுகுவர்த்தி. *🙏🏻ஜெபிப்போமாக.🙏🏻* ஓ பரிசுத்த நாத கிருத்தியர்களே! நீங்கள் சர்வேசுரனுடைய ஆச்சரியமான அதிகாரத்திற்கு அமைந்து அவர்மேல் முழு நேசப் பற்றுதலுடன் தேவசித்தத்தை வீர வைராக்கியமுடன் நிறைவேற்றி வருகிறீர்களே! அதே வல்லப அதிகாரத்தினால் என் துர்க்குணங்களைத் திருத்தி, என் சரீர இச்சையின்படியே நான் நடவாமல், தேவ சித்தத்திற்குப் பிரமாணிக்கமாய் நடக்க என் மனதைத் தெளிவிக்கும்படி உங்களை மன்றாடுகிறேன். (1 பர. 3 அருள். திரி). *ஆமென்.* *🌹5. சத்துவகர்களுக்கு நவநாள் ஜெபம் (Virtues).🌹* ஆரஞ்சு நிற மெழுகுவர்த்தி. *🙏🏻ஜெபிப்போமாக.🙏🏻* ஓ பரிசுத்த சத்துவகர்களே! நாங்கள் மனித சக்தியினால் செய்ய முடியாத சகல காரியங்களையும் நீங்கள் தெய்வீக சக்தியினால் செய்ய கூடியவர்களாய் இருக்கிறபடியால், என்னுடைய சரீர பலவீனத்தினால் நான் செய்ய இயலாத புண்ணிய நற்குண பயிற்சிகள் அனைத்தையும் தேவ வரப்பிரசாத சத்துவத்தால் செய்யும்படி என் மனதைத் திடப்படுத்த உங்களை மன்றாடுகிறேன். (1 பர. ,3 அருள். திரி). *ஆமென்.* *🔥6. பலவத்தர்களுக்கு நவநாள் ஜெபம் (Powers).🔥* மஞ்சள் நிற மெழுகுவர்த்தி. *🙏🏻ஜெபிப்போமாக.🙏🏻* ஓ பரிசுத்த பலவத்தர்களே! சர்வேசுரனுடைய சகல திட்டங்களுக்கும் மாறாக பசாசு செய்கிற எதிரிடைகளை அகற்றி அழிப்பதில் நீங்கள் விடமால் போராடி வெற்றி பெறுவதினால், நான் செய்யும் தர்ம கிரிகைகளுக்கு வருகிற எதிர்ப்புகளை விலக்கவும், எனது ஆன்மீக பரிசுத்த தனத்திற்கும் இரட்சணியத்திற்கும் இடையூறு செய்யும் எதிரிகளை வெல்லவும் உங்களை மன்றாடுகிறேன். (1 பர. 3 அருள். திரி). *ஆமென்.* *👑7. பிராதமிகர்களுக்கு நவநாள் ஜெபம்👑 (Principalities).* சிவப்பு நிற மெழுகுவர்த்தி. *ஜெபிப்போமாக.* ஓ பரிசுத்த பிராதமிகர்களே! நீங்கள் நாடுகளை ஆளும் இராஜ பிரதானிகளையும் அவர்களுடைய இராட்சியங்களையும் தற்காத்து நடப்பிக்கிறதினால், நான் வசிக்கிற நாட்டிலும் கிராமத்திலும் எதிரியின் யாதொரு ஆபத்தும் வராமல் பாதுகாத்து, நாட்டை ஆள்வோரும் நாட்டு மக்களும் தேவ சித்தம் தவறாமல் நடக்கச் செய்யும்படி உங்களை மன்றாடுகிறேன். (1 பர. 3 அருள். திரி). *ஆமென்.* *8. அதி தூதர்களுக்கு நவநாள் ஜெபம் (Archangels).* தங்க நிற மெழுகுவர்த்தி. *🙏🏻ஜெபிப்போமாக.🙏🏻* ஓ பரிசுத்த அதி தூதர்களே! நீங்கள் சர்வேசுரனின் பிரதானமான விசேஷங்களை உலகத்திலே வந்து அறிவிப்பதற்காக சர்வேசுரனாலே அனுப்பப்படுகிறதினால், என் ஆத்துமம் நித்திய ஜீவிய ஈடேற்றத்தை அடைவதற்கு வேண்டிய காரியங்களை எனக்கு அறிவித்து, அதற்கான கடமைகளை நான் விடாமல் செய்வதற்கு உத்தம வழியைக் காண்பிக்கும்படி உங்களை மன்றாடுகிறேன். (1 பர. 3 அருள். திரி). *ஆமென்.* *🧚🏻‍♀️9. தூதர்களுக்கு நவநாள் ஜெபம் (Angels).🧚🏻‍♀️* வெள்ளி நிற மெழுகுவர்த்தி. *🙏🏻ஜெபிப்போமாக.🙏🏻* ஓ பரிசுத்த காவல் தூதர்களே! நீங்கள் மனிதர்களுக்குக் காவலாளிகளாய் சர்வேசுரனின் எவ்வித பணிவிடைக்கும் அனுப்பப்படுகிறபடியால் என்னுடைய எல்லா வேலைகளிலும் என்னைக் கிருபையாய்க் கண்ணோக்கி, எனக்கு நல்ல வழிகாட்டி, என் ஜெபங்களையும் நற்செயல்களையும் சர்வேசுரனிடம் ஒப்படைத்து உங்களுடைய விருப்பத்தின்படியே என்னை நடத்த உங்களை மன்றாடுகிறேன். (1 பர. ,3 அருள்.திரி). *ஆமென்* 🎊பிதா சுதன் இஸ்பிரித்து சாந்துவின் பெயராலே.🎊 *🙏🏻ஆமென்🙏🏻* 🌜✨🪐🌜✨🪐🌜✨🪐🌜 *🧚🏻‍♀️நவ விலாச சபை 👑சம்மனசுகளின் பிரார்த்தனை🧚🏻‍♂️* 💫💥💫💥💫💥💫💥💫💥 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும். கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் சம்மனசுக்களுக்கு இராக்கினியாயிருக்கிற அர்ச். மரியாயே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்* அர்ச். பக்திச்சுவாலகர்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அர்ச். ஞானாதிக்கர்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அர்ச். பத்திராசனர்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அர்ச். நாதகிருத்தியர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். அர்ச். சத்துவகர்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அர்ச். பலவத்தர்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அர்ச். பிராதமிகர்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அர்ச். அதிதூதர்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அர்ச்.காவல் தூதர்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* நவவிலாச சம்மனசுக்களுக்கும், சர்வேசுர னுடைய மக்களுக்கும் எப்போதும் பரிபாலகரா யிருந்த அர்ச். மிக்காயேலே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.* லூசிபேரையும் அவனைச் சேர்ந்த கெட்ட சம்மனசுக்களையும் நரகத்தில் தள்ளின அர்ச். மிக்காயேலே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்* தானியேல் என்பவருக்கு அதிசய காட்சியை விளக்கிக் கூறிய அர்ச். கபிரியேலே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.* ஸ்நாபக அருளப்பருடைய பிறப்பையும், அலுவல்களையும் சக்கரியாஸ் என்பவருக்கு முன் னறிவித்த அர்ச். கபிரியேலே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்* திவ்விய சுதனின் மனிதாவதாரத்தை கன்னி மரியம்மாளுக்கு அறிவித்த அர்ச். கபிரியேலே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.* தோபியாஸ் என்பவரை சிந்தாயாத்திரையாய் கூட்டிக்கொண்டு போய், மீண்டும் கூட்டிக் கொண்டு சேர்த்த அர்ச். இரபாயேலே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.* சாராள் என்பவளைப் பசாசின் சோதனையில் நின்று இரட்சித்த அர்ச். இரபாயேலே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.* பெரிய தொபியாஸ் என்பவருக்குப் பார் வையை மீண்டும் தந்தருளின அர்ச். இரபாயேலே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.* உன்னத சர்வேசுரனுடைய மகிமை சிங்காசனத் தைப் புடைசூழ்ந்திருக்கிற நவவிலாச சம்மன சுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று என்றென்றைக்கும் சர்வேசுரனை ஸ்துதிக்கிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* பரலோகத்திலே இருக்கிற சர்வேசுரனுடைய சன்னிதானத்தை இடைவிடாமல் தரிசித்துக் கொண்டிருக்கிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்* சூரியனை ஆடையாக அணிந்து நின்ற நித்திய பெண்மணியைச் சூழ்ந்து நிற்கின்ற நவவிலாச சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* நவவிலாச சம்மனசுக்களிலிருந்து தேவமாதா வின் பணிவிடைக்காக சர்வேசுரனால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆயிரம் சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* மனுமக்களை விசாரித்துக் காப்பதற்கும், நல் வழியில் நடத்துவதற்கும் சர்வேசுரனால் கட்டளை பெற்றிருக்கிற அர்ச். காவல் சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* சோதோம் மக்களின் அக்கிரம குருட்டாட்டத் தால் அவர்களைத் தண்டித்த அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அந்த அக்கிரம அவிசுவாசிகளில் நின்று லோத் என்பவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மீட்டுக் காப்பாற்றின அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* யாக்கோபு என்பவரை சகல பொல்லாப்புகளி லிருந்து தப்புவித்தருளின அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அவர் காட்சியில் கண்ட ஏணியிலே ஏறியும் இறங்கியும் இருந்த அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* மோயீசனுக்குத் தேவ கற்பனைகளைக் கொடுத்தருளிய அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* உலக இரட்சகர் பிறந்த சமயத்தில் சர்வேசுர னுக்கு ஸ்துதியும், மனிதர்களுக்கு சமாதானமும் உண்டாகக் கடவது என்று வாழ்த்திப் பாடிய அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* சேசுநாதரைச் சோதித்த பசாசு நீங்கினவுடனே வனாந்தரத்தில் அவருக்குப் பணிவிடை புரிந்த அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்* பூங்காவனத்தில் மரண அவஸ்தைப்பட்ட சேசுநாதருக்கு ஆறுதல் சொல்லிய அர்ச். சம்மன சுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அவருடைய கல்லறையில் தூய வெண்ணாடை அணிந்தவர்களாய்க் காணப்பட்ட சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அவர் மோட்சத்திற்கு ஆரோகணமானபோது அவருடைய சீடர்களுக்குத் தரிசனையான அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்* சேசுநாதர் ஜீவியரையும், மரித்தோரையும் நடுத் தீர்க்க மகிமையோடு எழுந்தருளி வரும்போது, தேவமாதாவுடன் அவரைப் புடைசூழ்ந்து வரவிருக்கும் அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அச்சமயத்தில் ஆண்டவருக்கும் மாதாவுக்கும் முன்பாக சிலுவைக் கொடியை ஏந்தி வரப்போகிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* அப்போது நல்லோர்களையும், தீயோர் களையும் பிரிக்கப் போகிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* எங்கள் மன்றாட்டுக்களை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* மனஸ்தாபப்படுகிற பாவியின் மேல் ஆனந்த சந்தோம் கொள்கிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* மரணசமயத்தில் எங்களுக்கு உதவியாயிருக் கிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கூட்டிக் கொண்டு போய் வைத்த அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* சகல பாவங்களுக்கும் பரிகாரம் செய்த பரி சுத்த ஆன்மாக்களை மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போகிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* தேவ வல்லபவரத்தால் பற்பல அற்புதங் களையும், அதிசயங்களையும் செய்கிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* தங்கள் இரட்சண்ணிய சுதந்திரத்தைப் பற்றிக் கொள்கிறவர்களுக்கு உதவி செய்பவர்களாய் அனுப் பப்படுகிற பராமரிப்புள்ள அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* சர்வேசுரனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற தேவ ஊழியர்களாகிய அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* இராச்சியங்களுக்கும் நாடுகளுக்கும் பரிபாலகர் களாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். அநேகமுறை சத்துருக்களுடைய சேனை களைத் தோற்கடித்த அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* சிறைச்சாலைகளிலும் மற்ற அநேக ஆபத்துக் களிலுமிருந்து சர்வேசுரனுடைய அடியார்களை மீட்டுக் கொண்ட அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* வேதசாட்சிகளின் வேதனைகளில் அடிக்கடி ஆறுதலாயிருந்த அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* திருச்சபையை ஆளுகிற குரு சிரேஷ்டர்களை மிகுந்த பட்சத்தோடு பராமரிக்கிற அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* நவவிலாச சபைகளாய்ப் பகுக்கப்பட்டிருக்கிற சகல அர்ச். சம்மனசுக்களே, *எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.* சகல பொல்லாப்புகளிலேயும் நின்று உம் முடைய பரிசுத்த சம்மனசுக்களால், *எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.* பசாசினுடைய தந்திரங்களிலே நின்று உம் முடைய பரிசுத்த சம்மனசுக்களால், *எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.* சகல பாவங்களிலேயும் நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், *எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.* பிரிவினையிலும், பதிதத்தனத்திலேயும் நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், *எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.* கொள்ளை நோய், பஞ்சம், படையிலே நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், *எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.* ஆயத்தமில்லாமல் சடுதியிலே வருகிற துர்மரணத் திலே நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், *எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.* நித்திய மரணத்திலே நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், *எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.* பாவிகளாயிருக்கிற நாங்கள் அர்ச். சம்மன சுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* எங்கள் பாவங்களைப் போக்கியருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* எங்களுக்குத் தயைசெய்து இரட்சித்தருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* பரிசுத்த பாப்பரசர் மற்றும் அதிசிரேஷ்ட அதிகாரிகளையும், சத்திய திருச்சபையில் ஏற்பட்ட சகல குருக்கள், துறவியரையும் தற்காத்தருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* சத்திய வேத இராஜாக்களுக்கும் பிரபுக் களுக்கும், ஜனங்களுக்கும் சமாதானத்தையும், சரியான ஒருமைப்பாட்டையும் தந்தருள வேண்டு மென்று, அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* பூமியிலே நல்ல பயிர் விளைவின் பலன் தந்து காப்பாற்ற வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* மரணமடைந்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* எங்கள் மரண சமயத்தில் உம்முடைய சம்மன சுக்களை எங்களிடத்தில் அனுப்பியருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* 🌻மரணத்துக்குப் பின் எங்கள் ஆன்மாக்களைப் பரிசுத்த சம்மனசுக்கள் மூலமாக ஏற்று, நித்தியப் பேரின்ப பாக்கியத்தைத் தந்தருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், 🌷எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி. 🌻சர்வேசுரனுடைய சுதனே, தேவரீரை மன்றாடுகிறோம், 🌷எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களை... சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத் தக்கதாக, முத்தரான பரிசுத்த சம்மனசுக்களுடைய சகலவித சபைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். *ஜெபிப்போமாக:* 🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷 தயாபரரான சர்வேசுரா, சொல்லற்கரிய தேவ பராமரிப்பினால் எங்களைக் காத்து நடத்த உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களை அனுப்பி யருளுகிறீரே. உமக்கே தோத்திரம் உண்டாகக் கடவது. தேவரீரை மன்றாடுகிற அடியோர்கள் இவ்வுலகத்தில் சம்மனசுக்களின் ஆதரவால் காப் பாற்றப்பட்டு, உமக்கும், அவர்களுக்கும் பிரியப் பட பிரமாணிக்க பக்தியாய் நடக்கவும், மோட் சத்தில் அவர்களோடு உம்மை என்றென்றும் ஸ்துதித்து வாழ்த்தவும் கிருபை செய்தருளும் சுவாமி. 🙏🏻 *ஆமென்* 🙏🏻 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன்