Follow
அரசகுமார்
@arasakumar5
11,694
Posts
37,747
Followers
அரசகுமார்
559 views
19 hours ago
கடையநல்லூர் - செங்கோட்டை இரயில் நிலையங்களின் உடகட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் சென்னை தெற்கு இரயில்வே தலைமை அலுவலகத்தில், கூடுதல் பொது மேலாளரிடம் தி.மு.இராசேந்திரன் எம்.எல்.ஏ., நேரில் கோரிக்கை சென்னை தெற்கு இரயில்வே கூடுதல் பொது மேலாளர் திரு விபின் குமார் IRSE (Vipin kumar IRSE) அவர்களை இன்று பிற்பகல் 4.45 மணி அளவில் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அளித்தேன். கூடுதல் பொது மேலாளர் மற்றும் பொதுமேலாளர் அவர்களின் செயலாளரும், துணைப்பொதுப்மேலாளருமான திரு விவேக் சர்மா ஆகியோர் இக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதி அளித்தனர். கடையநல்லூர் கடையநல்லூர் இரயில் நிலையம், கடையநல்லூர் நகர மக்களுக்கு மட்டுமல்லாமல், அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் சேவை செய்யும் ஒரு முக்கியமான இரயில் நிலையமாகும். ஏராளமான பயணிகள், மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், வர்த்தகர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நோயாளிகள் அன்றாடம் தங்கள் பயணத் தேவைகளுக்காக இந்த நிலையத்தைச் சார்ந்துள்ளனர். தற்போது, நிலையத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயணிகள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, பின்வரும் வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இரயில்வே துறையை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 1. இரயில்கள் வரும்போது இரயில்பெட்டி எண் குறிகாட்டிகளை முறையாகக் காட்சிப்படுத்துதல். 2. இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக நடைமேடைகளிலும், இரயில் நிலைய வளாகத்திலும் கூடுதல் விளக்கு வசதிகள். 3. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் உடமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கான மின்தூக்கி வசதி. 4. பயணிகளை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க நடைமேடைகளில் போதுமான நிழற்குடை வசதிகள். 5. இரயில் நிலைய வளாகத்தில் பயணிகளுக்கான வசதிகளையும் தூய்மையையும் மேம்படுத்துதல். கடையநல்லூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துவதால், இந்த மேம்பாடுகள் பொதுமக்களுக்குப் பெரிதும் உதவுவதோடு, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தையும் உறுதி செய்யும். செங்கோட்டை கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான கோரிக்கைகளைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்து,, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பிற்கு இந்த மேம்பாடுகள் அவசியமானவை. 1. சாலை எண் 5-இல் நடைமேடை அமைத்தல். 2. நடைமேடை 4 மற்றும் 5-இல் உள்ள தீவு நடைமேடைகளில் மின்தூக்கிகள் (லிஃப்ட்) நிறுவுதல். 3. பகவதிபுரம் முனையில் சாலை 5 மற்றும் சாலை 6-ஐ இணைத்தல். 4. கூடுதலாக இரண்டு நிறுத்துமிடங்கள் அமைத்தல். பயணிகளின் நலனுக்காகவும், இப்பகுதியில் ரயில்வே சேவைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காகவும் எனது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய யுமாறு வேண்டுகிறேன். நன்றி தி.மு.இராசேந்திரன் #MLA #மதிமுக #கடையநல்லூர் 13.05.2026 #📺அரசியல் 360🔴 #மதிமுக #💪தி.மு.க #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி