சேவையை சத்தியமாக ஏற்று, சமூகப் பொறுப்பை ஏந்திய பட்டதாரிகளின் புதிய பயணம் வெற்றிகரமாக அமையட்டும். ❤️🎓
அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெருந்துறையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. K.G. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை அமைச்சர் திரு. M. விஜய் பாலாஜி அவர்கள், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வே.பெ. தமிழ்ச்செல்வி M.A., B.Lit., MLA அவர்கள், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி V. சத்தியபாமா அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மருத்துவப் பணியை வெறும் தொழிலாக அல்லாது, மனிதநேய சேவையாகக் கருதி அர்ப்பணிப்புடன் செயல்படும் இளம் மருத்துவர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கட்டும். அவர்களின் வெள்ளை அங்கிப் பயணம் எண்ணற்ற உயிர்களுக்கு நம்பிக்கையையும் நல்வாழ்வையும் வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்! 💫❤️🩺
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #👨🦰தளபதி விஜய் #👏Inspirational videos #💚I Love தமிழ்நாடு