Follow
B. CELLIN
@cellin8516
15,978
Posts
74,234
Followers
B. CELLIN
492 views
2 hours ago
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 *இயேசுவின் திரு இருதய ஜெபங்கள் மற்றும் புகழ்மாலை* 🌹🍃🌹🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 (இதய ஆண்டவரிடம் இந்த 3 ஜெபங்களை ஜெபித்து இறையாசீரை பெருவோம்) *🙏🏻இயேசு நாதருடைய💝 திருஇருதயத்துக்கு தங்கள்👨‍👩‍👦‍👦 குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்* 🤲🏻 🕯️💞🕯️💞🕯️💞🕯️💞🕯️💞 இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.இதுவுமன்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்று கோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, இந்த விசாரணையிலுள்ள சகல பிள்;ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே, முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். *- 🙏🏻ஆமென்.🙏🏻* 👑🌏👑🌏👑🌏👑🌏👑🌏👑 *இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்* 👑🌏👑🌏👑🌏👑🌏👑🌏👑 ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக. ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. *🌹- ஆமென்.🌹* 💖🍀💖🍀💖🍀💖🍀💖🍀 *திரு இருதய* *மன்றாட்டுமாலை* 💖🍀💖🍀💖🍀💖🍀💖🍀 ஆண்டவரே இரக்கமாயிரும் -2 கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2 ஆண்டவரே இரக்கமாயிரும்-2 கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும்-2 கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்-2 பரமண்டலங்களிலிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, *எங்கள்மேல் இரக்கமாயிரும் சுவாமி.* உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, *எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.* தூய ஆவியாகிய இறைவா, *எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.* என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.* பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.* உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே ! *இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.* உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே ! *இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.* உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே ! *இயேசுவே எங்களைத் தயை செய்து இரட்சித்தளும் சுவாமி.* *முதல்வர்* - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே *துணைவர்* - இயேசுவே எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்ததாக இருக்கும்படிக்கு கிருபை செய்தருளும். *செபிப்போமாக:* 💝💝💝💝💝💝💝 என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். *-🙏🏻ஆமென்🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
B. CELLIN
700 views
10 hours ago
#✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்". (திருப்பாடல் 19: 1-4) அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகின்றோம். வாழ்த்துகின்றோம். ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இன்றைய நாளில், உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் விலகாதிருக்க அருள் புரியும். இயேசுவே! உமது பன்னிரு சீடர்களை தேர்ந்தெடுக்கும் முன், இரவெல்லாம் இறை வேண்டலில் நீர் கழித்தீரே! எங்கள் வாழ்வில், இனி நாங்கள் செய்யும் முக்கிய செயல்களுக்கு முன் இறைவேண்டல் செய்து, உமது திருவுளத்தை அறியக் கூடிய ஞானத்தை, எங்களுக்குக் கொடையாக கொடுத்தருளும். இதுநாள் வரை இறைவேண்டல் செய்யாது துவக்கிய பல காரியங்களுக்காக, நாங்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். அக்காரியங்களில் பெரும்பாலும் உமது விருப்பமின்றி, எங்களது சுய விருப்பமே மேலோங்கி இருந்ததால் அவைகளில் குழப்பங்களும், தடைகளும், அவமானங்களும் மிகுந்திருந்தன. எங்கள் இனிய இயேசுவே! இனி வரும் காலங்களில், எங்களது வாழ்வில் நிகழும் அனைத்தும் உமது விருப்பமே. எங்களது விருப்பமன்று. இறைவா! இந்த புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றோம். தூய ஆவியின் துணை கொண்டு, எங்களைக் காத்து வழிநடத்தியருளும். எங்கள் இறுதி மூச்சு வரை உம் பிள்ளைகளாக, உம் அன்பில் என்றும் நிலைத்திருக்க வரம் தாரும். இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில்... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும் சுதனுக்கும்...(1) *ஆமென்.*
B. CELLIN
992 views
19 hours ago
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இணைந்து செபிப்போம்* *ஆண்டவரே இயேசுவே, நல்லவரே; நேர்மையுள்ளவரே! உம்மை ஆராதிக்கிறேன். நல்வழிகள் கற்பித்து, உமது அன்பில் வாழ, வல்லமை தந்து வழிநடத்துவதற்காக நன்றி கூறுகிறேன். "கடவுளை முழு இதயத்தோடும்; முழு அறிவோடும்; முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல்; அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவது; எரி பலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது” என்று, இன்றைய இறைவார்த்தை மூலமாய் கற்பிக்கின்றீரே. இயேசுவே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! 'ஏனெனில்; அன்பு கடவுளிடமிருந்து வருகிறது' என்பதை மனதில் இருத்தியவனாய், மற்றவர்களை அன்பு செய்து, விண்ணகத் தந்தையின் பிள்ளையாக வாழ அருள் கூருமப்பா. உமது அன்புக்குள் வளர, எந்நாளும் என்னை வழிநடத்தும் தந்தையே.* *ஆண்டவரே இயேசுவே! “ஆழ்ந்த அன்பு திரளான பாவங்களைப் போக்கும்” என, உமது வார்த்தை கற்றுத்தந்ததை, நான் என் மனதில் கொண்டு வாழ்ந்து, என் பாவங்களில் இருந்து விடுதலை பெறும் ஆற்றலைத் தாரும் அப்பா.* *அன்பின் இணைப்பான மூவொரு இறைவனே! நானும் என் அயலாரை அன்பு செய்து வாழ்ந்து, உமக்கு உகந்த பிள்ளையாக என்னாளும் உம் அன்பில் வளர்த்திட அருள் தாரும். 'என் மீது அன்பு கொண்டு, என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு; ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்' என்றவரே, இன்றைய நாளில் உமது கட்டளையைக் கடைப்பிடித்து; அறிவுத் தெளிவோடு வாழவும், அனைவரையும் அன்பு செய்து வாழவும்; பாவத்தை விலக்கி வாழவும் வரம் தரவேண்டும் என்று, இயேசு என்ற பரிசுத்த நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்.* நன்றி - தமிழ் ஆன்மீக பணியகம்