Follow
Makkal Mugam
@epaper
689
Posts
734
Followers
Makkal Mugam
531 views
2 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 அருப்புக்கோட்டை விருதுநகர் ரோட்டில் கட்டப்பட்டு வந்த பாலம் வேலை நிறைவு பெற்றது. Sundar Photos
Makkal Mugam
611 views
2 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
Makkal Mugam
3.3K views
3 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் கோட்ட சுவற்றில் உட்கார்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் பொதுமக்கள் மற்றும் பேருந்துகள் அதிகளவில் செல்லக்கூடிய நேரங்களில் பாதையில் மது அருந்தும் காட்சி
Makkal Mugam
520 views
3 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஸ்ரீபுரம் ஸ்ரீசக்தி அம்மாவின் 50-ஜெயந்தியை முன்னிட்டு, சித்த வைத்தியர்களுக்கு பாராட்டு விழா! *********************************** வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஸ்ரீசக்திஅம்மா அவர்களின் 50-ஜெயந்தியை முன்னிட்டு, ஆலய நிர்வாகத்தின் சார்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வரும் 108 சித்த மருத்துவர்களை தேர்வு செய்து பாராட்டி கௌரவிக்கும் விழா ஆக.2-அன்று நடைபெற்றது! இவ்விழாவில்,இந்திய உச்ச நீதிமன்ற நீதீபதி அரவிந்த்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றி, சித்த வைத்தியர்களுக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் பரிசப்பொருட்களை வழங்கி கௌரவித்தார்! ஸ்ரீசக்தி அம்மா தனது அருட்பேருரையில் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்! சித்த மருத்துவர்.சுந்தரி மேனாள் பல மாவட்டங்களில் இருந்து 108 சித்த மருத்துவர்களை நிகழ்ச்சிக்காக ஒன்றிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது! மேலும்,நாராயணி மருத்துவமனை தலைவர். டாக்டர்.பாலாஜி, டாக்டர்.சுரேஷ்குமார் மற்றும் நாராயணி ஆலய நிர்வாகிகள், இந்திய மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்!
Makkal Mugam
1K views
3 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி பனிமய மாதா பேராலத்தில் இன்று அன்னையின் திருவுருவ பவனி தூத்துக்குடி ஆக.5 தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது புனித சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை மழலையர் துவக்கப்பள்ளி, மனைவியல் கல்லூரி புனித சார்லஸ் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான திருப்பலி நடைபெற்றது தொடர்ந்து புனித யூதாதேயு ஆலய பங்கு இறைமக்கள், திருஇருத சபையினர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் தாளமுத்துநகர் பங்கு இறைமக்கள், திருஇருதய சபை அருட்சகோதரிகளும் கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது இத்திருப்பலிகள அத்தனாசியுஸ் ஜோ,சிபு ஜோசப், ததேயுஸ் ஆகியோர் நிறைவேற்றினர். நேற்று இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெற்றது பெருவிழா மாலை ஆராதனையில் தலைமை ஆயர் ஸ்டீபன் பங்கேற்றார். இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5.8.26 இன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஜான் செல்வம், உதவி பங்கு தந்தை ஜெரால்டு, களப்பணியாளர்கள் மைக்சன், சவேரியா இயேசு சபையினர், லசால் அருட்சகோதரர்கள், அடைக்கல அன்னை, அமலவை சகோதரிகள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர் மற்றும் இறைமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்
Makkal Mugam
550 views
3 days ago
#செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிகழ் ✍️🌹 வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி ஒன்றியம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் பாதி வேலை முடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏரிகளில் நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்துக் குள்ளாகியுள்ளனர். மேலும் குடிநீருக்காகவும் கால்நடைகளுக்கு குடிநீர் இல்லாமலும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தமிழக விவசாய சங்கத்தின் கண்ணியம்பட்டி ஒன்றிய தலைவர் என்.ஜெய் சாமி தலைமையில் பலமுறை மாவட்ட ஆட்சியர் இடமும் , தாசில்தாரிடமும் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனை கண்டித்து வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருடன் துணை தலைவர் பழனி, பொருளாளர் பி. நந்தகுமார் மற்றும் பல விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்களில் கோரிக்கையாக ஏரிகளின் வேலைகளை முழுமையாக முடிக்க வேண்டும் ஏரிகளின் கறைகளை பலப்படுத்த வேண்டும், ஏரிக்கு நீர் வரும் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என்று வேலூர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு வைத்தார்கள்.
Makkal Mugam
552 views
3 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 புதுதில்லியில் முதல்வர் ரேகா குப்தாவை இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசிய விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்.
Makkal Mugam
528 views
3 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி ஸ்பிக்நிர்வாகம் சார்பில் வாய்க்கால் தூர்வாரும் பணி தூத்துக்குடி ஆக.5 முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தின் கோரிக்கை ஏற்று ஸ்பிக் நிர்வாகம் சார்பில் ஸ்பிக் நிறுவன உதவி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் வாய்க்கால் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்வில் மக்கள் தொடர்பு உதவி மேலாளர் மணிகண்டன், முதுநிலை அலுவலர் சரவணன், விவசாய சங்க தலைவர் மற்றும் விவசாய பெருமக்கள் உடனிருந்தனர்.
Makkal Mugam
674 views
3 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல் தூ/டி ஆக.5 தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய இளைஞரணி, மகளிரணியினர் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்து காவல் வாகனத்தில் கொண்டு சென்றனர்.
Makkal Mugam
523 views
3 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டு 300 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார் பின்பு கட்னார்பட்டி பட்டாசு ஆலை வெடிஸவிபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்கினார் விழாவில் நகரச் செயலாளர் ரசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.