#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி பனிமய மாதா பேராலத்தில் இன்று அன்னையின் திருவுருவ பவனி
தூத்துக்குடி ஆக.5
தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது
புனித சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை மழலையர் துவக்கப்பள்ளி, மனைவியல் கல்லூரி புனித சார்லஸ் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான திருப்பலி நடைபெற்றது
தொடர்ந்து புனித யூதாதேயு ஆலய பங்கு இறைமக்கள், திருஇருத சபையினர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் தாளமுத்துநகர் பங்கு இறைமக்கள், திருஇருதய சபை அருட்சகோதரிகளும் கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது இத்திருப்பலிகள அத்தனாசியுஸ் ஜோ,சிபு ஜோசப், ததேயுஸ் ஆகியோர் நிறைவேற்றினர்.
நேற்று இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெற்றது பெருவிழா மாலை ஆராதனையில் தலைமை ஆயர் ஸ்டீபன் பங்கேற்றார்.
இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5.8.26 இன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஜான் செல்வம், உதவி பங்கு தந்தை ஜெரால்டு, களப்பணியாளர்கள் மைக்சன், சவேரியா இயேசு சபையினர், லசால் அருட்சகோதரர்கள், அடைக்கல அன்னை, அமலவை சகோதரிகள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர் மற்றும் இறைமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்