Follow
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
@hey___i___am___ash
93
Posts
197
Followers
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
662 views
17 days ago
எங்கோ யாரோ இருவருக்கு #மகளாக பிறந்தாள் எனக்கு #மனைவியாக வந்த பின்பு அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகலை மறந்து விட்டாள் இப்போது நான் அழுதால் அழுகிறாள் நான் சிரித்தால் சிரிக்கிறாள் நான் துடித்தால் துடிக்கிறாள் எனக்காகவே வாழ்கிறாள் ருசியாக உணவு சமைத்து தருகிறாள் ரகசியமாக காதல் செய்கிறாள் காலையில் நான் எழும்புவதற்கு முன்பு அவள் எழுந்து விடுகிறாள் இரவில் வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால் நான் வரும் வரை தூங்காமல் விழித்திருக்கிறாள் மாதவிடாய் வலி அவளை கொல்லும் போதும் சிரித்துக் கொண்டே என் ஆடைகள் துவைக்கிறாள் வீட்டை சுத்தம் செய்கிறாள் அன்பாக பேசுகிறாள் அனைத்து வேலைகளையும் சளைக்காமல் செய்கிறாள் சில இரவுகளில் கட்டிலில் கலந்து இனிப்பான இன்பம் தருகிறாள் ஓர் நாள் கர்ப்பம் ஆகி விட்டேன் என காதுக்குள் சொல்லி மார்பில் சாய்ந்தால் பக்குவமாக குழந்தை போல் பார்த்துக் கொண்டேன் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன் ஒரு தாதிப் பெண் என்னையும் உள்ளே வர சென்னாள் இப்போது அவள் அருகில் நான் கத்தினால் கதறினால் ஏதேதோ செய்தால் வலியால் அவள் துடிப்பதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை அழ வேண்டும் என்றும் நான் நினைக்க நினைக்கவில்லை ஆனால் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது இந்த அன்புக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை சதை கிழிந்து குழந்தை வெளியில் வரும் போது அவள் அடைந்த வலியை கடவுள் கூட கவிதையில் சொல்லிவிட முடியாது பாதி குழந்தை வெளியில் வந்திருகையில் வலி தாங்க முடியாமல் கைகள் இரண்டையும் எடுத்து கும்பிட்டு அழுதால் எவ்வளவு வலி இருந்தால் அவள் கும்பிட்டு அழுதிருப்பால் என்று நினைக்கும் போது நான் துடிதுடித்து அவளை இருக அணைத்து கொண்டேன் ஒரு பெரிய சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால் ஒரு சில நிமிடங்களில் குழந்தையை கையில் கொடுத்தார்கள் நான் அவள் நெற்றியில் முத்தம் வைத்து இருக அணைத்து கொண்டேன் அவள் அனுபவித்த வலி என்பது நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை என்று உணர்ந்தேன் மரியாதை செய்யுங்கள் எம் இறைவிகளுக்கு நான் நேசிக்கும் மனைவிக்காகவும் இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும் நன்றிகள் கோடி #பெண்களே...💗 #தனிமையின்_காதலன்_ஆஷ்💗💗💗 #👭பெண்களின் நட்பு #🤝நேர்மையான துணை👫 #🤗குடும்ப பாசம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
723 views
23 days ago
👉👉👉#ஜும்மா_நினைவுட்டல்👈👈👈 " #ஜும்மா_முபாரக் " எனக் கூறக்கூடாது #வெள்ளிக்கிழமைகளில் "ஜும்மா முபாரக் " என்ற ஒரு வாசகத்தை நம்மில் சிலர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை #மார்க்கத்தில்_உள்ளதாக_நினைத்துக் கொண்டுதான் சொல்கினறார்கள். உண்மையில் வெள்ளிக்கிழமையில் ‘ஜும்மா முபாரக்” என்ற வாசகத்தை சொல்வதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ #எவ்வித_ஆதாரமும் #கிடையாது. மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் (சுன்னா) இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது. இதோ :- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை பாருங்கள் :* 😡😡😡😡😡😡😡😡😡😡 ❌❌❌❌❌❌❌❌❌❌ இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றையாரேனும் உருவாக்கினால் அது #ரத்துசெய்யப்படும்.(புகாரி # 2697) என் கட்டளை இன்றி யார் செய்யும் எந்த செயலும் ( அமலும்) #நிராகரிக்கப்படும்!( முஸ்லிம் # 3243 ) யார் பிறமத கலாச்சாரத்திற்கு ஒப்ப நடக்கிறார்களோ அவர்கள் #அந்த_மதத்தை #சேர்ந்தவரே!( அஹ்மது # 4868) A.செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதம் ஆகும்! B.நடைமுறையில் மிகவும் சிறந்தது நபிகளாரின் " சுன்னா " ஆகும்! C.காரியங்களில் மிகவும் தீயது மார்க்கம் என்ற பெயரால் #புதிதாக_உருவானவைகள் ஆகும்! D.#புதிதாக உருவானவைகள் அனைத்தும் " #பித்அத்கள் " ஆகும்! E.ஒவ்வொரு " #பித்அத் "தும் வழிகேடாகும்! F.#ஒவ்வொரு_வழிகேடும்_நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்! நஸயீ # 1560 ஜாபிர் ரலி. ஆக #மார்க்கத்தில்_இல்லாத_எந்தவொரு செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக #ஏற்றுக்_கொள்ளப்படமாட்டாது!* "#ஜும்மா_முபாரக்" என்ற ஒரு வார்த்தையை வெள்ளிக்கிழமையில் சொல்வது #மார்க்கத்தில்_புதிதாக_உருவாக்கப்பட்ட "#பித்அத்" ஆகும்.* #இதற்கு_நன்மையையும்_கிடைக்காது, #மாறாக "#பித்அத்" #ஐ_உருவாக்கிய_குற்றம்_கிடைத்து_விடும் #அல்லாஹ்_நம்மை_பாதுகாப்பானாக! #குர்ஆன்_சொல்படி_ வாழ்வோம்! #நபி_வழி_நடப்போம்!! 💖💖💖#தனிமையின்_காதலன்_ஆஷ்💗💗💗 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 #🕌#Friday jumma💜 #Jumma Mubarak Friday🕋🕋🕋 #🌙வெள்ளிக் கிழமை ஜும்மா முபாரக்
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
6.4K views
1 months ago
நான் என் மனைவிக்காக அவள் விரும்பும் வகையில் என்னை அலங்காரம் செய்து கொள்வேன்’ மனித இனத்திற்கு அல்லாஹ் விதித்துள்ள மார்க்கக் கடமைகளில் ஆண் பெண் இருபாலரும் சமமானவர்கள். ஆண்களுக்கு அடிப்படையான ஐந்து கடமைகள் பெண்களுக்கும் உண்டு. அவற்றை முறையாக நிறைவேற்றினால் இருபாலருக்கும் சரிசமமாகவே நன்மைகள் வழங்கப்படும். ‘நீங்கள் உங்கள் மனைவியரான அவர்களிடம் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.’ (அல்குர்ஆன் 4:19) என்ற இறைவசனம் பெண்களிடத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறையை சொல்லித்தருகிறது. அந்த வகையில், உங்கள் மனைவியர் உங்களிடம் எவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்கிறார்களோ அதைப்போன்றே நீங்களும் அவர்களிடம் வாழ்க்கை நடத்துங்கள் என்பதை இஸ்லாம் தெள்ளத்தெளிவாக அறிவுறுத்துகிறது. ஆனால், இன்று நடப்பதென்ன? தம்முடைய மனைவி தம்மிடம் மரியாதையாகப் பேச வேண்டும். நான்கு பேருக்கு முன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போடுகிற கணவன்மார்கள் தங்கள் மனைவியரிடம் கொச்சையாகப் பேசுகின்றனர். அதுவும் நான்னு பேருக்கு மத்தியில் எனும்போது மிக மிக மோசமாகப் பேசுவதையே ஆண்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர். தம் மனைவி தம் கண்களுக்கு அழகான கிளியோபாட்ராவாக, ஐம்பது கிலோ தாஜ்மஹலாக, ஏதென்ஸ் தோட்டத்து ராஜகுமாரியாக காட்சியளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாம் மாத்திரம் அவர்கள் கண்ணுக்குப் பங்கரையாகத் தோற்றமளிப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தம் உடல், எடை மற்றும் பருமனைப்பற்றியும், தாம் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது பற்றியும் அதன் நாற்றத்ததை மனைவி சகித்துக்கொள்வாளா என்பது பற்றியும் கொஞ்சம்கூட யோசிப்பதில்லை. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள், ‘நான் என் மனைவிக்காக அவள் விரும்பும் வகையில் என்னை அலங்காரம் செய்து கொள்வேன்.’ (நூல்: ஃபிக்ஹுஸ்ஸுனன்) ‘தம் மனைவியரிடம் இனியமுறையில் நடந்துகொள்பவரே உங்களில் சிறந்தவராவார். நான் என் மனைவியிடம் இனிய முறையில் நடந்துகொள்கிறேன்’ என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை திர்மிதீ மற்றும் தாரமீ போன்ற நபிமொழி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இந்த நபிமொழி இஸ்லாம் ஓர்ஆணின் தராதரத்தை மதிப்பீடு செய்யும் தகுதியைக்கூட அவனின் மனைவியிடமே வழங்கியிருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மனைவியராகிய அவர்களுக்கு மரியாதை வழங்குபவனே மான்பாளன் ஆவான். அவர்களை இழிவு படுத்துபவன் தரம் தாழ்ந்தவன் ஆவான் என்றும் எச்சரிக்கை6 #💑என் காதல் கணவா💞 #💑கணவன் மனைவி காதல்💞 விடுக்கிறது. #தனிமையின்_காதலன்_ஆஷ் #💑கணவன் - மனைவி #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
738 views
1 months ago
என் நிலைமையை கொஞ்சம் நனிச்சு பாருங்க நான் ரொம்ப பாவம் டெய்லி எனக்கு இப்படி நாட்கள் கழித்துவிடுகிறேன் #தனிமையின்_காதலன்_ஆஷ் #🤗ஆண் பெண் நட்பு😎 #👭பெண்களின் நட்பு #💑கணவன் - மனைவி #💘Love Quotes & Videos #💞Feel My Love💖
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
839 views
1 months ago
♥பெண் ஒரு ஆணிடம் சற்று நெருக்கமாய் பழகினால் #ஆட்டக்காரி ♥கண்டுக்கொள்ளாமல் சென்றால் அமைதியாக இருந்தால் #திமிர்பிடித்தவள்.. ♥பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் ஆண்கள் பார்வையில் பெண்கள் #லூசுகள், சுயமாய் சிந்திக்க தெரியாதவர்கள், அரைவேக்காடுகள் etc... ♥ஆனால் இவற்றை ஆண்களால் யோசிக்க முடியுமா...?? 1♥எங்காவது வெளியே சென்றிருக்கும் போது சிறுநீர் கழிப்பதற்காக கழிப்பிடம் இல்லாமல் வீடு செல்லும் வரை அடக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவஸ்தையை... (இதனால் தான் பல பெண்கள் பின்னர் பல சிறுநீர் நோய்க்கு உட்படுகிறார்கள்) 2♥பயணத்திலோ, அலுவலகத்திலோ அல்லது நடந்து சென்றுகொண்டிருக்கும் போதோ அவசரமாய் கைப்பையில் தேடி நாப்கினை எடுத்து அதை மாற்ற இடம் தேடி அலையும் கொடுமையை... 3♥ஏதோ ஒரு கூட்டத்தில் இலேசாய் ஆடை விலகி உள்ளாடை வெளியே தெரிய நடந்துசெல்லும் ஒரு பெண்ணை பார்வையிலேயே கற்பழிக்கும் ஆயிரம் கண்களை கடந்து செல்லும் ஒரு சிரமத்தை... 4♥ஆள் நடமாற்றம் அதிகமற்ற ஒரு சாலையில் நான்கு ஆண்கள் கூட்டமாய் நிற்கையில் அவர்களை கடந்து செல்ல வேண்டிய ஒரு பெண்ணின் உளவியலை.... 5♥பயணத்திலோ கூட்டநெரிசலிலோ பாலுக்கு அழும் குழந்தைக்கு பால் கொடுக்கமுடியாத வேதனையான நிலையை.... 6♥மாதவிலக்கு நாட்களில் கூட பலகிலோமீட்டர் நடந்தோ அல்லது நாள்பூராகவும் நின்றோ வேலைபார்க்கவேண்டிய துயரம் நிறைந்த நாட்களை... 7♥அது ஒருபோதும் ஆண்களால் முடியாது.... இவ்வளவையும் வெகு சாதாரணமாய் அனுதினமும் கடந்து செல்லும் பெண்களின் வலிமையை ஆண்களால் ஒருபோதும் பெற முடியாது... 8♥இந்த வலிமையை பெற பெண்கள் கொஞ்சம் லூசுத்தனமாய் இருந்து தான் ஆக வேண்டும் அல்லது அப்படி இருந்தால் தான் அதை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியும்... 9♥உலகத்தின் அத்தனை கசப்புகளையும் மனதில் சுமந்துக்கொண்டு புன்னகையுடன் செல்லும் ஒரு பெண்ணை இனி சாலையில் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு நீங்கள் எந்த மரியாதையையும் தர வேண்டாம்.. அவர்களை அவர்கள் பாதையில் அமைதியாக செல்ல வழி விடுங்கள்... * என் சக பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வேன். * என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவேன். * என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்பேன். * எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டேன். * பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபடமாட்டேன். * பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டேன். * பெண்களின் உணர்வுகளை மதிப்பேன். * பெண்மையைப் போற்றுவேன். * மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன். #பெண்மையை போற்றுவோம். 💖💖💖#தனிமையின்_காதலன்_ஆஷ்💗💗💗 #📺வைரல் தகவல்🤩 #💪ஊக்குவிக்கும் கதைகள் #🤗ஆண் பெண் நட்பு😎 #👩🏻 அம்மா 👱‍♀️ #👫 அண்ணன் - தங்கை
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
1.3K views
1 months ago
💟💟💟முஸ்லிம் இளைஞரிடம் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் கேட்டார்💟 நீங்கள் ஏன் உங்கள் பென்களை மூடிவைக்கிறீர்கள் என்று ... (எந்த பதிலும் சொல்லாமல் அந்த இளைஞன்💟 அவர் முன் இரண்டு சாக்லைட்டை எடுத்து ஒன்றை திறந்து வைத்தார். சிறிது நேரத்தில் சாக்லைட் மீது ஈக்களும் தூசிகளும் ஒட்டிக் கொண்டன....💟 இலகியும் சாக்லட் போலவும் இல்லாமல் இருந்தன இப்போது முஸ்லிம் இளைஞர் கேட்டார் இதில் நீங்கள் எதை தேர்தெடுப்பீர்கள் என்று ! உடனே அந்த மனிதர் சொன்னார் நிச்சயமாக நான் மூடியிருப்பதை தான் எடுப்பேன் என்றார்- இப்போது முஸ்லிம் இளைஞர் சிரித்துக் கொண்டே சொன்னார் நாங்கள் எங்கள் பென்களை இப்படி💟💟 தான் பார்க்கிறோம் ....💟 பாதுகாக்கிறோம் என ! எவ்வளவு அழகான விளக்கம் : அனைத்து சகோதரிகளும் பர்தாவை💟 கடைபிடிக்க அல்லாஹ் தான் அருள் புரிய வேண்டும் ஆமீன் !!..💟ssf💟 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🤔புதிய சிந்தனைகள்