ஃபாலோவ்
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
@hey_i_am_ash
70
போஸ்ட்
69
பின்தொடர்பவர்கள்
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
556 காட்சிகள்
பெண்ணே !உன் பெருமை. *✳ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அல்லாஹூத்தஆலா அனைத்திலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.* *✳உணவில் சம உரிமை, உறங்குவதில் சம உரிமை, உடுத்துவதில் சம உரிமை, கல்வியில் சம உரிமை,சம்பாதிப்பதில் சம உரிமை என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.* *✳பெண்களுக்கு தாய்மை போன்று பல சிறப்புகளை தந்த அல்லாஹ், முஸ்லிம் பெண்களுக்கு சலுகைகள், சிறப்புகள் என வழங்கி மேன்மை படுத்தி இருக்கின்றான்.* *🌹அகீகா – பெண்ணுக்கு ஒரு ஆடு, ஆணுக்கு இரண்டு ஆடு* *🌹தங்க நகைகள் ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்* *🌹பட்டாடை ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்* *🌹தனக்கு விருப்பமான கணவரை பெண் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.* *🌹திருமணத்தின் போது பெண்ணுக்கு எந்தவொரு பொருளாதார செலவும் இல்லை. ஆனால் பெண் கேட்கும் மஹர் தொகையை ஆண்மகன் கட்டாயம் கொடுக்க வேண்டும்* *🌹தனக்கு பிடிக்காத கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமை பெண்ணுக்கும் உண்டு.* *🌹குழந்தைகளுக்காக பொருளாதாரம் திரட்டுவது ஆணுக்குத் தான் கடமை, பெண்களுக்கு கடமை இல்லை.* *🌹பெண் சம்பாதிக்க தேவையில்லை, ஆண் சம்பாதித்து பெண்ணுக்கும் கொடுக்க வேண்டும்.* *🌹ஒரு பெண் சம்பாதித்ததை ஆணுக்கு தர தேவையில்லை, ஆண் சம்பாதித்து கட்டாயம் பெண்ணுக்கு தர வேண்டும்* *🌹கடைசிவரை பெற்றோரை பாதுகாப்பது ஆணுக்கு கடமை, பெண்ணுக்கு அது இல்லை.* *🌹அகீகா தந்தை கொடுக்க வேண்டும், தாய்க்கு அது இல்லை.* *🌹மூமினான பெண்கள் மீது யாரும் அவதூறு கூற முடியாது. அப்படி களங்கம் சுமத்தினால் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு 80 கசையடி கொடுக்க வேண்டும். அவனது சாட்சியை ஏற்றுக் கொள்ளவே கூடாது என இஸ்லாம் சொல்கின்றது.* *🌹ஒரு ஆண்மகன் மாதத்தின் எல்லா நாட்களிலும் தொழுதே ஆக வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும் தொழ வேண்டாம் என தொழுகையில் இறைவன் சலுகையளித்துள்ளான்.* *🌹ஒரு ஆண்மகன் ரமலான் மாதத்தின் எல்லா நாட்களிலும் நோன்பு வைத்தே ஆக வேண்டும். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் நோன்பு வைக்க வேண்டாம், அடுத்தடுத்த மாதங்களில் வைத்தால் போதும் என இறைவன் பெண்களுக்கென நோன்பில் சலுகை வழங்கி இருக்கின்றான்.* *🌹இவ்வாறு இறைவன் சலுகைகளையும் உரிமைகளையும் சிறப்புகளையும் பெண்களுக்கு வழங்கி மேன்மைபடுத்தி இருக்கின்றான்.* *அது மட்டுமா!* *🌹இறைவன் இரண்டு பெண்மணிகளை சுட்டிக்காட்டி இவர்கள் , உலக மூமின்களுக்கு முன்மாதிரி என்று குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் 66 வது அத்தியாயாம் 11 & 12 வது வசனங்களில் அல்லாஹு_தஆலா உலகிலுள்ள நம்பிக்கை கொண்ட மூமின்கள் அனைவருக்கும் ஆஸியா மற்றும் மர்யம் அம்மையார்களையே முன்மாதிரியாக சொல்கிறான்.* *🌹இறுதியாக இங்கே இன்னொரு சம்பவத்தையும் நான் குறிப்பிடுகின்றேன்.* *🌹தனது குழந்தை தாகத்தால் தவித்த போது மக்காவில் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையில் அன்னை ஹாஜர் அவர்கள் தண்ணீருக்காக ஓடினார். அந்த அம்மையார் செய்தது போல உம்ரா, ஹஜ்ஜூக்காக செல்பவர்கள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த பெண்மணி செய்தது போல் செய்கிறார்கள்.* *🌹இவ்வாறு அல்லாஹ_தஆலா பெண்களை மேன்மைபடுத்தி வைத்திருக்கின்றான்.* #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
546 காட்சிகள்
#கணவன்_மனைவி #என் இதயத்தைப் பிரித்துக் கொண்டு நித்தம் நித்தம் எண்ணை கொல்லும் இதயக் கள்வனே, விழிகள் இருந்தும் பார்வையற்றவளாக இருளில் தவிக்கிறேன் உன்னை மட்டுமே காண என் இமைகள் இமைக்க வேண்டும் என்பதற்காக! #எப்போதும் என்னோடு நீ வேண்டும்! துக்கத்தில் தோழனாய்.. இன்பத்தில் கணவனை… இறுதிவரை எனக்கு காவலனாய் இருக்க வேண்டும் அன்பே! #தவம் இருப்பவர்களுக்கெல்லாம் வரம் கிடைத்து விடுமா என்று தெரியவில்லை ஆனால், நீயோ எனக்கு தவமின்றி கிடைத்த வரம்! #நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே, இமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள்!! #நீ ரோஜாவாக இருந்தால் நான் முள்ளாக இருப்பேன் உன்னை காயப்படுத்த அல்ல உன்னை யாரும் காயப்படுத்தாமல் இருக்க! #மனைவி என்பவள் உன்னில் ஒரு பாதி, உன் உயிரில் ஒரு பாதி, உன் உடலில் ஒரு பாதி அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோவை மறக்க பழகுங்கள்… #இதயத்தின் மொழி துடிப்பென்றால்… நான் உனக்காக துடிப்பதை.. உலகின் வேறு எந்த மொழியாலும் உனக்கு விளக்கிட முடியாது… #இத்தனை நாட்களாய் நான் நடந்த பாதை இன்று உன்னுடன் நடக்கும் போது தான் இவ்வளவு அழகு என்று தெரிந்து கொண்டேன்!!! #புரிந்து கொள்ளாத அன்பு எளிதில் பிரிந்து விடும் ஆனால்… புரிந்து கொண்ட உண்மையான அன்பு எவ்வளவு காயப்பட்டாலும் ஒரு போதும் பிரியாது…. #கண்களில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை இதயத்தில் இடம்பெற்ற அனைத்தும் அருகில் இருப்பதில்லை அதுதான் வாழ்க்கை… #நீ எனக்கு தந்த காயங்களை எண்ணி பார்த்தால் உன்னை உனக்கே பிடிக்காது ஆனால், நீ என்னதான் காயங்கள் கொடுத்தாலும், உன்னை தவிர வேறு யாரையும் எனக்கு பிடிக்காது… #ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும் போது, இன்னொருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அந்த உறவைவிட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை… #உன்னிடம் மட்டும் எனக்கு சுயநலம் அதிகம் உன் அன்புக்கு சொந்தக்காரி நான் மட்டும் என்பதில்! #நீ எனக்கு சொந்தம் என்பதை விட நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற வார்த்தையிலேயே உயிர் வாழ்கிறேன்! #💑என் காதல் கணவா💞 #💑கணவன் மனைவி காதல்💞 #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #👪 அன்பான குடும்பம் #💖நீயே என் சந்தோசம்🥰
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
2.3K காட்சிகள்
#கணவன்_மனைவி_ காதல் #கணவன் மனைவி நீயா..? நானா..? என வாழ்க்கை நடத்துவதை விட.., நீயும் நானும் என்று வாழ்க்கை நடத்தினால் இல்லறம் சிறப்பாக இருக்கும். #எவ்வளவு கடும் கோபமான சூழ்நிலையிலும் தன் அன்பு மனைவியிடம் தவறான வார்த்தைகளை உபயோகிக்காமல் பேசுபவனே நல்ல கணவன். #கணவன் மனைவி உறவில் சண்டை நடந்தாலும் அழகு தான் சமாதானம் ஆனாலும் அழகு தான். #பெண்ணின் பிரசவ போராட்டம் ஒரு மரணப் போராட்டம் என்று உணர்ந்த எந்த ஆணும் மனைவியை மதிக்காமல் இருக்க மாட்டான். #காதலிக்க அன்பான கணவன் அழகான குழந்தைகள் சொந்தமாக ஒரு சிறு வீடு இது தான் பல பெண்களின் கனவு. #உடலுக்கு துணையாக மட்டுமல்ல.. மனதிற்கு துணையாகவும் வாழ்பவர்கள் தான் உண்மையான கணவன் மனைவி..! #கருத்து வேறுபாடு ரசனை வேறுபாடு இருந்தும் மனம் ஒன்றி வாழ்வதே கணவன்-மனைவி உறவு. #மனைவியை தன் தாயாக நினைத்துக் கொள்ளும் ஆண்களும், தன் கணவனை பிள்ளையாக நினைத்துக் கொள்ளும் பெண்களும் இருக்கும் வரை உண்மை காதலுக்கு மரணமில்லை. #எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எனக்கு நீ.. உனக்கு நான்.. என்ற இந்த புனிதமான உறவு மட்டும் போதுமானது. #எந்த சூழ்நிலையிலும் எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்தும் உண்மையான உறவு கணவன் மனைவி உறவு மட்டும் தான். #என்னை கருவில் சுமந்த தாயையும் என் கருவை சுமக்கும் உன்னையும் நான் கல்லறை செல்லும் வரை நேசிப்பேன். #கணவன் மனைவி காதல் என்பது கட்டிப்பிடித்தல் முத்தமிடுதல் மட்டும் அல்ல. அதற்கும் மேலாக தன்னோடு வாழ்பவரின் உணர்வையும் வலிகளையும் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது. #தன் மனைவியின் கோபத்திற்கு அடங்கவும் அதே மனைவியை தன் அன்பால் அடக்கவும் தெரிந்த ஆண் கணவனாக கிடைக்கும் போது இல்லற வாழ்க்கை சொர்க்கமாக அமையும். #ஒரு ஆண் தன் கோபத்தைக் காட்டுவதும், அடிபணிந்து போவதும் தன் உயிரினும் மேலான அன்பைப் பொழிவதும் தன் ஆசை மனைவிடம் மட்டுமாக தான் இருக்கும். #கணவனை விட கணவனின் குடும்பத்தை உயிராய் நேசிக்கும் மனைவி தான் கணவனின் உயிரில் கலக்கிறார்கள். #விழுதுகள் மரத்தை தாங்கலாம் ஆனால் வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்.. அதே போல தான் கணவன் மனைவி எனும் உறவும். #கணவன் மனைவிக்கு குழந்தை பிறப்பது இயல்பு.. ஆனால் கணவன் மனைவிக்கும்.. மனைவி கணவனுக்கும்.. குழந்தையாக மாறுவது வரம். #தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. கடன் காரனாக மாறி விடக் கூடாது என நினைப்பவள் தான் உண்மையான மனைவி. #கணவன் மனைவி உறவு என்ற உறவிற்கு மேலான உறவு இந்த உலகில் வேறெதுவும் இல்லை இதை புரிந்து கொண்டால் மட்டும் போதும் இல்லறம் சிறப்பாக இருக்கும். #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #👭பெண்களின் நட்பு #👪 அன்பான குடும்பம்
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
3.6K காட்சிகள்
காதல் வலி “என்னை மறந்து விடு” எனும் வார்த்தையின் நீளம் சிறியது தான் ஆனால்.. அதன் வலி சாகும் வரை..! அன்று உனக்கு பிடித்த அனைத்தையும் நேசித்தேன்.. இன்று உனக்கு பிடிக்காத என்னையும் வெறுக்கிறேன்..! நீ என்னை காதலித்து ஏமாற்றி விட்டாய் என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன்.. காதலித்து இருந்தால் ஏமாற்றி இருக்கமாட்டாய்..! இந்த உலகில் உன்னை நேசித்தது என் தவறல்ல அன்பே..உலகத்திலேயே உன்னை மட்டும் உயிருக்கு உயிராய் சுவாசித்தது தான் என் தவறு..! உன்னை நான் மறந்து விட்டேன் என்று.. நீ எண்ணும் வேளையில் பிரிந்திருக்கும் என் உயிர்..! இதயமும் ஒரு சிறை தான் இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை.. பாசம் வைத்தவர்கள் மட்டுமே மாட்டிக் கொள்கிறார்கள்..! #👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #💔Breakup Quotes😔 #😒தனிமை Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
522 காட்சிகள்
#கற்பனை காதலன் எட்டாத தூரத்தில்லிருக்கும் அந்த வானத்தையும் எட்டிபிடித்து... மேக மெத்தையில் கனவுகளை இழுத்துபோர்த்தி உறங்குகையில் பெண்ணானவள் கற்பனைகளுக்கு உயிருட்டுகிறாள்!!! மனக்கோட்டை கட்டி வாழும் பெண்களின் உள்ளங்களில் பெரும்பாலும் வருங்கால கனவனையே கற்பனையால் செதுக்கி செதுக்கி சித்திரமாக்கி நெஞ்சோரத்தில் பதுக்கி வைக்கிறாள்... அவைகள்... தூங்குகையில் முன் நெற்றியில் நடனமாடும் ஒற்றை முடியை காதோரம் சொருகி தினமும் போதுமான அளவு என்னை ரசிக்க வேண்டும்... தாமதமாகி எழுந்த குற்றவுணர்வில் நான் பரபரக்க 'ஒருநாள் நான் எழுப்பினால் உலகம் நின்றுவிடாது' என அன்பால் அதட்டி காப்பியை என் முன் நீட்ட வேண்டும்... சமையல் நல்லாயிருக்கும் பட்சத்தில் 'அருமை' என்று ஒருமுறையாவது மனதார பாராட்ட வேண்டும்... 'சாப்பிட்டியா' என்று கேள்வியோடு நிறுத்தி விடாமல் எனக்கு முன் தட்டிட்டு முதல் வாயை அவனே ஊட்டிவிட வேண்டும்... அர்த்தமற்ற ஆயிரம் சண்டைகளின் தீர்வு அர்த்தமுள்ள ஒரேயொரு முத்தமாய் அமைய வேண்டும்... தொலைபேசியை தொலைவிலே வைத்துவிட்டு தொனதொனவென என்னிடம் மட்டுமே பேச வேண்டும்... என் நினைப்பு வரும்போதெல்லாம் இதழ்விரித்து புன்னகைத்து மேலும் என் ஞாபகங்களை அதிகபடுத்தி கொள்ள வேண்டும்... தள்ளிவைத்த வேதனையில் தலையணை சோக கீதம் பாட... பல நேரங்களில் அவனது மடியே என்னை தாங்கும் தலையணை ஆகவேண்டும்... என் சிணுங்களுக்கும், முணங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்... தேவை என்று குறிப்பிடும் முன்பே என் தேவைகளை அறிந்து சேவை புரிய வேண்டும்... என்னை மட்டுமல்லாமல் எந்தன் இம்சைகளையும் அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்... தோல்வியால் நான் சாயும்போது தோள் கொடுக்கும் தோழனாக வேண்டும்... தெரியாது என நான் பின்வாங்கும் செயல்களில் 'தெரிந்துகொள்' என்று தானே கற்றுக் கொடுக்கும் ஆசானாக வேண்டும்... வலி எனது என்றாலும், துடிப்பது அவனாக வேண்டும்... நான் சொல்லாமலே சின்ன சின்ன உதவிகளை அவனது தலைமையிலே நடந்திட வேண்டும்... என் கோபங்கள் எல்லாம் அவன் மீதுள்ள அதிகப்படியான அன்பின் வெளிப்பாடே என்பதை சொல்லாமலே உணர வேண்டும்... எனக்கு பிடிக்காததை செய்திருந்தாலும் அடுக்கடுக்கான பொய்களை விடுத்து நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்... நகைகளை கொண்டு அல்லாமல் வெறும் புன்னகையாலே என்னை மயக்கிட வேண்டும்... எத்தனை வேளைகள் இருந்தாலும் எனக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி கொஞ்சி பேசி கைக்கோர்த்து நடந்திட வேண்டும்... என் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி காதைதிருகும் தாயாக வேண்டும்... அவன் ரசித்து படிக்கும் ஒரேயொரு அர்த்தமான கவிதை நானாக வேண்டும்... நான் விழும்போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் மறுதந்தையாக வேண்டும்... பெண்மையையும், மனைவியின் திறமைகளையும் மதிக்க தெரிந்த கணவனாக வேண்டும்... காலக்கெடுவோடு சுமக்கும் கருவறை விடுத்து நாளறை கொண்ட இதயத்தில் ஐந்தாவது அறை ஒன்றை படைத்து அதில் இப்படிபட்ட கணவனை சுமக்கும் வரம் வேண்டும்... ஆண்களே, நீங்கள் எதிர்பாக்குற மாதிரி வரப்போகும் சீதையாகிய மனைவியின் மனதில் "வரும் கணவன் ராமனாக இல்லையென்றாலும் பரவாயில்லை ராவணாக இருக்க வேண்டாம்" என்பதே என்று நீங்கள் அறிவீர்களா??? இப்படிபட்ட கணவன் உங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் இனிமேல் வந்தாலும் தயவுசெய்து கோபத்தையும், சந்தேகத்தையும் கொண்டு அவரது விலைபேசமுடியாத அன்பை மட்டும் இழந்து விடாதீர்கள்... #எனது சின்ன வேண்டுகோள்# #கற்பனை மட்டுமே# #💖நீயே என் சந்தோசம்🥰 #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #🥰Girls Love feeling #💝இதயத்தின் துடிப்பு நீ #💑என் முதல் காதல்😊
See other profiles for amazing content