இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 11/07/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 320
வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் :
(V) 1. ''வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்: வலு சர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை." (வெளி 12:7) (Part - 5)
"இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்." (மல் 4:5)
“ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரேதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்." (மத் 14:3,4)
“என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்க தரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயியிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்பட வேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு." ( வெளி 11:3,5,6)
"இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று: சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டு போயின. மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின. அப்பொழுது தண்ணீர்களின் தூதன்; இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்கு குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டேன்." (வெளி 16:3-6)
'இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்." (மல் 3:1)
அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே. மேற்காணும் திருவசனங்களின்படி, வானத்தில் நடந்த யுத்தத்தில் "மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள். வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. (வெளி 12:7) என்ற திருவசனத்தின்படி, வானத்தில் நடந்த யுத்தத்தை தலைமையேற்று நடத்திய மிகாவேல் யார் என்பதை அறிந்து கொள்வது நலமானதாகும். மிகாவேல் என்றால் "தேவனைப் போன்றவன்" என்பதாகும். வேதாகமத்தில் தானி 10:13,21 , தானி 12:1 ,யூதா:9, வெளி 12:7 ஆகிய ஐந்து இடங்களில் மிகாவேலையும் அவருடைய நடவடிக்கைளையும் குறித்து அறிய முடிகிறது.
அக்காலத்தில் (கடைசிக்காலத்தில்) எழும்பும் பெரிய அதிபதியாகவும்; அக்காலத்தில் புத்தகத்தில் எழுதியிருக்கிறவர்களை (வெளி 7:4-8) விடுவிக்கிறவராகவும் காணப்படுகிறார். சத்திய எழுத்தில் கண்டிருக்கிறபடி வலு சர்ப்பத்திற்கு விரோதமாக பலங்கொண்டு யுத்தம் செய்கிறவராகவும் (தானி 10:13,21, வெளி 12:7) காணப்படுகிறார். பிசாசுடனே நேருக்கு நேராக போராடி, தர்க்கித்துப் அவனைக் கடிந்து கொள்பவராகவும் (யூதா;9) காணப்படுகிறார். இந்த மிகாவேல் கடைசிக் காலமென்ற அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் வெளிப்பட்டு தன் பரிசுத்த ஜனங்களுக்காக சாத்தானாகிய பிசாசோடு நேருக்கு நேராகப் போராடி தர்க்கித்து, கடிந்து கொண்டு வானத்திலே யுத்தம் செய்து, அவனைச் ஜெயிக்கவும், மணவாட்டி சபையாகிய ஸ்திரீயால், தன் கர்ப்ப வேதனை மூலம் பெற்றெடுக்கும் ஆண் குழந்தையாகவும் (வெளி 12:1,2,4); மறுரூபமடைந்து தேவனுடைய சிங்காசனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆண் குழந்தையாகவும் (வெளி 12:5); மணவாட்டி சபையை வனாந்தரத்திற்கு கொண்டு போகும் கடைசிக் காலத்து பெரிய அதிபதியுமான தலைமை அப்போஸ்தலனுமாகவும் (வெளி 12:6) வெளிப்படுகிறவராக ஆவிக்குள் அறியப்படுகிறார்.
அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு ஆட்சி ஆரம்பமாவதற்கு முன் எலியா தீர்க்கதரிசியாக வெளிப்படுவார். "இதோ, கர்த்தருடைய பெரிதும், பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்." (மல் 4:5) "பிதாக்களுடை இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்." (லூக் 1:17) “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்." (மல் 3:1, லூ 7:27; மத் 11:10; மாற் 1:2). மேற்காணும் கர்த்தருடைய வசனங்களின்படி எலியாவின் ஆவியும் பலமும் உடைய முன் தூதனாக எழும்பி கிருபையின் காலம் முடியும் தருவாயில் மணவாட்டி சபையாகிய ஸ்திரீயால் பெற்றெடுககப்படும் ஆண் குழந்தையான அப்போஸ்தலனாக வெளிப்படுவார்.
சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டும் மென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புற ஜாதியருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டாயிருக்கும். இந்தப் பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்." (ரோம 11:25,26) என்ற கர்த்தருடைய தேவத்தீர்மானங்களின்படி, அக்காலமான அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் முதல் 3½ ஆண்டில் புற ஜாதியாரிலிருந்து நீதிமான்களையும், பின் 3½ ஆண்டில் இஸ்ரவேலர்களிடமிருந்து, 1,44,000 பேர்களையும் மீட்டு அந்திக்கிறிஸ்துவின் 7 வருட இறுதியில் தேவனுக்குப் பிரியமான உத்தம ஜனங்களின் ஐக்கியமான மணவாட்டி சபையை கூட்டிச் சேர்க்கிறார் என்பதை அறிய முடிகிறது.
இஸ்ரவேலர்களில் 1,44,000 பேர்களின் மீட்பின் காலமான அந்திக்கிறிஸ்துவின் பின் 3½ ஆண்டின் ஊழியத்தில், ஆண் குழந்தையாகவும், மிகாவேலாகவும், எலியாவின் ஆவியும் பலமும் பெற்ற அப்போஸ்தலனாகவும் இருந்து ஊழியத்தை ஜெயமாக செய்து நிறைவேற்றுகிறார். வானத்திலிருந்து அக்கினியை இறக்கவும், மழையை அடைக்கவும், தண்ணீர்களை இரத்தமாக மாற்றும்படியான (வெளி 11:5,6) வல்லமையான எலியாவின் ஊழியத்தை செய்து மனுக்குலத்தின் மீட்பின் ஊழியத்தை ஜெயமாக செய்து நிறைவேற்றுகிறார் என்பதை அறிய முடிகிறது.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n.
#✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🙏ஆன்மீகம்