Follow
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
@hnjbc
2,868
Posts
2,211
Followers
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
574 views
1 days ago
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 11/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 320 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XIII 2. “பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று." (வெளி 14:13) கர்த்தருக்குள் அன்பான பரிசுத்தவான்களே, வெளி 14-ம் அதிகாரத்தில் வெளிப்படும் ஐந்தாவது அறிக்கையே வெளி 14:13-ம் வசனமாகும். முதலாவது வெளி 14:2-ம் வசனத்திலும் இரண்டாவது வெளி 14:6,7 வசனங்களிலும் மூன்றாவதாக வெளி 14:8 வசனத்திலும், நான்காவதாக வெளி 14:9 வசனத்திலும் ஆக நான்கு அறிக்கைகளை வாசித்து தியானம் செய்திருக்கிறோம். வெளி 10:4,8; வெளி 11:12; வெளி 18:4; வெளி 21:3 ஆகிய வசனங்களிலும் பரலோகத்திலிருந்து உண்டாகும் சத்தங்களையும் பார்க்கிறோம். கிறிஸ்தவ கல்லறைத் தோட்டங்களில் பல கல்லறைகளில் உன்றப்பட்டிருக்கும் சிலுவைகளில், "கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த வசனம் கிருபையின் காலத்தில் மரிப்பவர்களுக்குப் பொருந்தாது என்பதை விசுவாசிகள் அறிந்து கொள்வதில்லை. அடக்க ஆராதனைகளில் பிரசங்கம் பண்ணுபவர்களுக்கும் இது தெரியாது. “இது முதல்" என்று அன்பின் தேவனால் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருப்பதினால் அந்திக் கிறிஸ்துவின் உபத்திரவ, மகா உபத்திரவ காலமாகிய 7 வருடங்களில், மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்காமலும் அதின் முத்திரையைத் தங்கள் நெற்றியிலாவது கையிலாவது தரித்துக் கொள்ளாமல் அந்திக்கிறிஸ்துவை எதிர்த்துப் போராடியதினிமித்தம், அவனால் கொலை செய்யப்பட்டு கர்த்தருக்காக இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களை மட்டுமே பாக்கியவான்கள் என்று இந்த வசனத்தில் எழுத சொல்லுகிறார். காத்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள்" என்று எழுதப்பட்ட இப்பரிசுத்த கூட்டத்தாரைக் குறித்து வெளி 7:9-17: வெளி 13:5-7; வெளி 15:2-4; வெளி 20:4 ஆகிய கர்த்தருடைய திருவசனங்களில் எழுதப்பட்டுள்ளவைகளை வாசிக்கலாம். "இவர்கள் பாக்கியவான்கள்" என்பதை எழுதும்படியாக பரலோகத்தின் சத்தம் கட்டளையிடுகிறபடியால், இது கிறிஸ்து இயேசு ராஜாவின் சத்தமாகவே இருக்கும் என்று கர்த்தருடைய ஆவிக்குள் நிதானிக்கிறோம். ஏற்கனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜா, திவ்ய வாசகனாகிய அப். யோவானுக்கு “இவைகளை எழுது” என்று கட்டளையிட்டதை கீழ்க்காணும் வெளிப்படுத்தல் 1:11,19; வெளி 2:1,8,12,18; வெளி 3:1,7,14 ஆகிய வசனங்களில் வாசித்து தியானித்திருக்கிறோம். இவைகளை பரிசுத்த ஆவியானவரும் "ஆம்" என்று கிறிஸ்து ராஜாவின் அறிவிப்பை அங்கீகரிக்கிறார். இது ஒரு முக்கியமான சத்தியம் என்பதை அறிந்து கொள்கிறோம். "அவர் (பரிசுத்தாவியானவர்) என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” என்று யோவா 16:13,14ம் வசனங்களில் இயேசு மகாராஜா கூறியதை அறிகிறோம். “கர்த்தருக்குள் மரிப்பவர்கள் இது முதல் பாக்கியவான்கள்" என்பதற்கான இரண்டு காரணங்களை இந்த வசனத்தில் வாசிக்கிறோம். 1. பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள். 2.இவர்களுடைய கிரியைகள் அவர்களோடு போகும். இவர்கள் அந்திக்கிறிஸ்துவின் 7 வருட உபத்திரவ மகா உபத்திரவ காலங்களின் வாழ்க்கையில் பல பிரயாசங்களை அனுபவித்தவர்கள். உலகத்தார்களுக்குப் பொதுவாக உண்டாகும் வியாதி வருத்தங்கள், தோல்விகள் மட்டுமல்ல, சாத்தான், அந்திக்கிறிஸ்து கள்ளத்தீர்க்கதரிசி ஆகியோரின் மும்முனைத் தாக்குதலினால் மிகுந்த உபத்திரவங்களை அனுபவித்தவர்கள். அந்திக் கிறிஸ்துவின் 7 வருட ஆட்சியில் "இளைப்பாறுதல்" என்பதே இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவர்கள் (வெளி 7:14-17) வசனங்களில் இவர்கள் இளைப்பாறுதல் இல்லாத பாடுகளின் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் என்பதை அறிவிக்கின்றது. “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்" (வெளி 7:14). "பசி, தாகம், வெயில், உஷ்ணம், கண்ணீர் இவைகளுக்குரிய வாழ்க்கைச் சந்தித்தவர்கள்" (வெளி 14:16,17) "கண்ணீர், மரணம், துக்கம், அலறுதல், வருத்தம் (வெளி 21:4) ஆகியவைகளுடைய வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். "உலகமுண்டானது முதல் இது வரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவங்களை அனுபவித்தவர்கள்." (மத் 24:21) என்றெல்லாம் மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் மூலம் அறிகிறோம். இப்படிப்பட்ட வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு தேவனுக்காக அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு காலத்தில் வாழ்ந்து இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களானபடியால், இவர்களுடைய சரீர மரணத்தின் மூலமாக நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெறுகிறார்கள். மரணமடைந்த அவர்களுடைய சரீரம் பூமியில் விடப்பட்டாலும் அவர்கள் நடப்பித்த நற்கிரியைகள் அவர்களோடு சீயோனுக்கு எடுத்துக் கொள்ளப்படும். வெளி 14:12-ம் வசனத்தில் பரிசுத்தவான்களுடைய விசுவாசத்தையும் பொறுமையையுங் குறித்துப் பார்த்தோம். வெளி 2:19-ம் வசனத்தில் "உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்" என்கிறார் அன்பின் தேவனாகிய கர்த்தர். இவைகளுக்கான பிரதிபலன்கள் இவர்களுக்குப் பரலோகத்தில் உண்டாயிருக்கும். "பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." (மத் 6:20,21) என்கிறார் அன்புநாதர் இயேசு ராஜா. ''உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்: ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை". (யோவா 2:15) "எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக". (I கொரி 15:58) என்று அன்பின் ஆவியாகிய தேவன் கூறுகிறார். ஆனால் இந்த நித்தியத்தைச் சார்ந்த மேன்மைகளைச் சுதந்தரித்துக் கொள்ள ஒரு அதிமுக்கியமான நிபந்தனை இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. அவர்கள் கர்த்தருக்குள் மரித்திருக்க வேண்டும். கர்த்தருக்குள் மரிக்க வேண்டுமானால் முதலாவது அவர்களுடைய வாழ்க்கையின் ஜீவிதம் கர்த்தருக்குள்ளானதாய் இருக்க வேண்டும். "மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்" (எபே 4:22-24; கொலோ 3:10) என்ற திருவசனங்களின்படியான வாழ்க்கைக்குள்ளானவர்களாய் வாழ்ந்திருக்க வேண்டும். "கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும். பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்." (1 தெச 4:16) என்ற வசனத்தின்படியான சிலாக்கியத்திற்குரிய தகுதியை அடைய, கிறிஸ்துவோடு தாங்கள் கொண்டிருந்த ஐக்கியத்தை தங்கள் இறுதி மூச்சு வரை தளர விடாமல் காத்துக் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே கர்த்தருக்குள் மரித்தவர்கள் என்று அழைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அந்திக்கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு 7 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அதன் பின்பு மரித்து அவனோடு நித்திய காலமாய் அக்கினிக்கடலிலே வெந்து, அழுகையும் பற்கடிப்புமான வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கிலும், கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரித்து முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, கிறிஸ்துவோடு ஆயிர வருட அரசாட்சி, பின்பு நித்தியத்தில் நேசர் இயேசுவோடு என்றென்றைக்கும் வாழ்க்கை எவ்வளவு அதிக மேன்மையானது என்பதை அறிந்து கொள்ள அன்பின் ஆவியாகிய தேவன் நம்மை அழைக்கிறார். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #🙏ஆன்மீகம் #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝️இயேசுவே ஜீவன்
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
563 views
1 days ago
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 11/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 320 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : (V) 1. ''வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்: வலு சர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை." (வெளி 12:7) (Part - 5) "இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்." (மல் 4:5) “ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரேதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்." (மத் 14:3,4) “என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்க தரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயியிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்பட வேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு." ( வெளி 11:3,5,6) "இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று: சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டு போயின. மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின. அப்பொழுது தண்ணீர்களின் தூதன்; இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்கு குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டேன்." (வெளி 16:3-6) 'இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்." (மல் 3:1) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே. மேற்காணும் திருவசனங்களின்படி, வானத்தில் நடந்த யுத்தத்தில் "மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள். வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. (வெளி 12:7) என்ற திருவசனத்தின்படி, வானத்தில் நடந்த யுத்தத்தை தலைமையேற்று நடத்திய மிகாவேல் யார் என்பதை அறிந்து கொள்வது நலமானதாகும். மிகாவேல் என்றால் "தேவனைப் போன்றவன்" என்பதாகும். வேதாகமத்தில் தானி 10:13,21 , தானி 12:1 ,யூதா:9, வெளி 12:7 ஆகிய ஐந்து இடங்களில் மிகாவேலையும் அவருடைய நடவடிக்கைளையும் குறித்து அறிய முடிகிறது. அக்காலத்தில் (கடைசிக்காலத்தில்) எழும்பும் பெரிய அதிபதியாகவும்; அக்காலத்தில் புத்தகத்தில் எழுதியிருக்கிறவர்களை (வெளி 7:4-8) விடுவிக்கிறவராகவும் காணப்படுகிறார். சத்திய எழுத்தில் கண்டிருக்கிறபடி வலு சர்ப்பத்திற்கு விரோதமாக பலங்கொண்டு யுத்தம் செய்கிறவராகவும் (தானி 10:13,21, வெளி 12:7) காணப்படுகிறார். பிசாசுடனே நேருக்கு நேராக போராடி, தர்க்கித்துப் அவனைக் கடிந்து கொள்பவராகவும் (யூதா;9) காணப்படுகிறார். இந்த மிகாவேல் கடைசிக் காலமென்ற அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் வெளிப்பட்டு தன் பரிசுத்த ஜனங்களுக்காக சாத்தானாகிய பிசாசோடு நேருக்கு நேராகப் போராடி தர்க்கித்து, கடிந்து கொண்டு வானத்திலே யுத்தம் செய்து, அவனைச் ஜெயிக்கவும், மணவாட்டி சபையாகிய ஸ்திரீயால், தன் கர்ப்ப வேதனை மூலம் பெற்றெடுக்கும் ஆண் குழந்தையாகவும் (வெளி 12:1,2,4); மறுரூபமடைந்து தேவனுடைய சிங்காசனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆண் குழந்தையாகவும் (வெளி 12:5); மணவாட்டி சபையை வனாந்தரத்திற்கு கொண்டு போகும் கடைசிக் காலத்து பெரிய அதிபதியுமான தலைமை அப்போஸ்தலனுமாகவும் (வெளி 12:6) வெளிப்படுகிறவராக ஆவிக்குள் அறியப்படுகிறார். அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு ஆட்சி ஆரம்பமாவதற்கு முன் எலியா தீர்க்கதரிசியாக வெளிப்படுவார். "இதோ, கர்த்தருடைய பெரிதும், பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்." (மல் 4:5) "பிதாக்களுடை இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்." (லூக் 1:17) “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்." (மல் 3:1, லூ 7:27; மத் 11:10; மாற் 1:2). மேற்காணும் கர்த்தருடைய வசனங்களின்படி எலியாவின் ஆவியும் பலமும் உடைய முன் தூதனாக எழும்பி கிருபையின் காலம் முடியும் தருவாயில் மணவாட்டி சபையாகிய ஸ்திரீயால் பெற்றெடுககப்படும் ஆண் குழந்தையான அப்போஸ்தலனாக வெளிப்படுவார். சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டும் மென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புற ஜாதியருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டாயிருக்கும். இந்தப் பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்." (ரோம 11:25,26) என்ற கர்த்தருடைய தேவத்தீர்மானங்களின்படி, அக்காலமான அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் முதல் 3½ ஆண்டில் புற ஜாதியாரிலிருந்து நீதிமான்களையும், பின் 3½ ஆண்டில் இஸ்ரவேலர்களிடமிருந்து, 1,44,000 பேர்களையும் மீட்டு அந்திக்கிறிஸ்துவின் 7 வருட இறுதியில் தேவனுக்குப் பிரியமான உத்தம ஜனங்களின் ஐக்கியமான மணவாட்டி சபையை கூட்டிச் சேர்க்கிறார் என்பதை அறிய முடிகிறது. இஸ்ரவேலர்களில் 1,44,000 பேர்களின் மீட்பின் காலமான அந்திக்கிறிஸ்துவின் பின் 3½ ஆண்டின் ஊழியத்தில், ஆண் குழந்தையாகவும், மிகாவேலாகவும், எலியாவின் ஆவியும் பலமும் பெற்ற அப்போஸ்தலனாகவும் இருந்து ஊழியத்தை ஜெயமாக செய்து நிறைவேற்றுகிறார். வானத்திலிருந்து அக்கினியை இறக்கவும், மழையை அடைக்கவும், தண்ணீர்களை இரத்தமாக மாற்றும்படியான (வெளி 11:5,6) வல்லமையான எலியாவின் ஊழியத்தை செய்து மனுக்குலத்தின் மீட்பின் ஊழியத்தை ஜெயமாக செய்து நிறைவேற்றுகிறார் என்பதை அறிய முடிகிறது. கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🙏ஆன்மீகம்
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
540 views
2 days ago
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 10/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 319 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XIII (1) “தேவனுடைய கற்பனைகளையும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.'' (வெளி 14:12) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, கீழ்க்காணும் கர்த்தருடைய திருவசனங்களை வாசிப்போம். “சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன். பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்." (வெளி 13:10) “உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும் உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாக கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." (2 தெசலோனிக்கேயர் 1:6) "அவள் உங்களுக்குப் பலனளித்தது போல நீங்களும் அவளுக்கு பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்து கொடுங்கள்." (வெளி 18:6) "யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலன்களுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின் மேலும் நோக்கமாயிருக்கின்றன." (எரே 32:19) "பழி வாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."(எபி 10:30) "அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." (யாத் 14:13,14). மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் யாவும், தன்னுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக போராடி பாடுகளுக்கு உட்படுத்துகிறவர்களோடு தேவாதி தேவனாகிய கர்த்தர் யுத்தம் செய்து அழிப்பார். தமது ஜனங்களையும் பாதுகாப்பார் என்பதை அறிவிக்கிறதைக் காண்கிறோம். வெளி 13:10-ம் வசனத்தில் “பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்" என்று வாசித்தோம். துன்மார்க்கர்களுடைய இறுதி முடிவு நித்திய அக்கினிக்கடல் தான் என்றும், அவர்கள் உலகத்தில் அனுபவிக்கும் சுகபோக வாழ்க்கையின் மேன்மைகளும், மகத்துவங்களும், செழிப்பும், செல்வாக்கும் தேவனுடைய பரிசுத்தவான்களை வேதனையடையச் செய்கிறது. சங்கீதம் 73:3-7 ஆகிய திருவசனங்களில் ஆசாப் சொல்லுகிறான். "துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை." "அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது." என்பதைப் பார்க்கிறோம். சங் 73:12-14 திருவசனங்களில் சொல்லுகிறார். “இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுக ஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம் பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்." என்று பார்க்கின்றோம். நம்முடைய தேவன் யார் என்பதை கீழ்க்காணும் வசனங்கள் அறிவிக்கின்றது. “கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியை சரிக்கட்டுகிறவர், உக்கர கோபமுள்ளவர். கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்து வைக்கிறவர்." (நாகூ 1:2). "எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.” (லூக் 21:23) “இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங் குறித்துக் கர்த்தர் நீதியை சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்." (1 தெச 4:6) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் மூலம் நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டுகிறவராய் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறோம். ஆகையால் உபத்திரவ காலத்துப் பரிசுத்தவான்கள் ஆசாவைப் போல் மனக்கிலேசத்தினால் புலம்பி சோர்வடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே மூன்றாவது தூதன் தேவ கற்பனைகளையும், இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்பவர்கள் மிகுந்த பொறுமையோடு கர்த்தருக்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார். தேவனாகிய இயேசுவின் இரகசிய வருகையை எதிர்நோக்கி இருக்கும் தேவ ஜனங்களாகிய நாமும், நமக்கு உண்டாகிற பலவிதமான எதிர்ப்புகள், போராட்டங்கள், நிந்தைகள், அவமானங்கள். தோல்விகள் வழியாக கடந்து போகும் வாழ்க்கையில் பொறுமையைக் காத்துக் கொண்டவர்களாய் காணப்பட வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
157 views
3 days ago
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 09/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 318 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XII “அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதன் சொருபத்தையும் வணங்குகிறவர்களுக்கும் அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது." (வெளி 14:11) அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, இவ்வசனத்தின் படியும், வெளி 19:3-ம் வசனத்தின்படியும் "அவளுடைய (மகாபாபி லோன்) புகை என்றென்றைக்கும் எழும்புகிறது," என்று அறிய முடிகிறது. மிருகம், அதன் சொரூபம், அதின் நாமத்தின் முத்திரை என்று தேவனால் விரும்பப்படாத மூன்று காரியங்களும் மீண்டும் தனித்தனியே அறிவிக்கப்படுகின்றன. சதாகாலங்களிலும் வாதையின் புகை எழும்புகிறது என்று கூறும்பொழுது, இந்த துன்மார்க்கர்கள் நித்திய நித்தியமாக அக்கினியால் வாதிக்கப்படுவார்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. வெளி 19:20; வெளி 20:14,15; வெளி 21:8 ஆகிய திருவசனங்களும் மேற்காணும் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது என்பதை அறிகிறோம். “அவர்களை மோசம் போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள், இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்". (வெளி 20:10) என்று கூறுகிறது. அவர்கள் (சாத்தானுடைய திருத்துவத்தின் மூன்று நபர்களும்) இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள் என்றால், சாத்தானுடைய முத்திரையைத் தரித்து அவனை வணங்கினவர்களுக்கும் அதே தண்டனை தான் என்று அறிந்து கொள்கிறோம். உபத்திரவ, மகா உபத்திரவ காலத்தில் மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவின் அடையாளங்களாகிய அவன் சொரூபத்தையும், முத்திரையையும் ஏற்றுக்கொண்டு வணங்குபவர்கள் தான் இரவும் பகலும் இளைப்பாறுதல் இல்லாமல் வாதிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, "தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும். வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.. அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி. நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்." (2 தெச 1:7,8,10). இவ்வசனங்களின்படி உலக தோற்ற முதற் கொண்டு, முடிவு மட்டுமான மக்களில், தேவனை அறியாதவர்கள் தேவனுடைய சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் யாவருமே நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைவார்கள் என்பதை அறிய முடிகிறது. கிருபையின் காலத்திலிருக்கும் நாம் கர்த்தராகிய இயேசுவை நம்முடைய சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய ஜீவனை அடையும் பொருட்டு, பூரண பரிசுத்தத்தின் தேவனாகிய கிறிஸ்து இயேசுவின் மகிமையின் மறுரூபத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவனுடைய சத்திய வசனங்கள் போதிக்கின்றது. இப்படிப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு சுதந்தரவாளியாகும் ஜீவியம் செய்து ஆயத்தமாக வேண்டும். மாறாக ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருக்கிறோம் என்பதற்காகவோ, ஒரு திருச்சபையில் ஐக்கியமாயிருக்கிறோம் என்பதற்காகவோ, ஜெபித்து வேதம் வாசிப்பது போன்ற சில கிறிஸ்தவ கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவோ கர்த்தருடைய இரகசிய வருகையில் சேர்ந்து சீயோனின் நித்திய வாழ்க்கையை அடைந்து கொள்ள இயலாது. கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝பைபிள் வசனங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன்
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
545 views
4 days ago
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 08/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 317 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : "அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்." (வெளி 14:10) அன்பான கர்த்தருடைய பரிசுத்த பிள்ளைகளே, இவ்வசனத்தில் தேவனுடைய கோபாக்கினையானது, அவருடைய கரத்தில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள தண்ணீர், கலப்படம் இல்லாத போதை நிறைந்த மதுபானத்துக்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறது. " நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்தி கெட்டுப் போகும்படிக்கு, இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லோருக்கும் அதிலே குடிக்கக் கொடு," (எரே 25:15,16) என்று தேவாதி தேவன் எரேமியாவிடம் கூறுகிறார். “கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக்குடிப்பார்கள்” (சங் 75:8) என்கிறார் ஆசாப். "துன்மார்க்கன் சர்வ வல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்". (யோபு 21:20) ''கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்து நில், தத்தளிக்கச் செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.”(ஏசா 51:17) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களில், தேவனுடைய உக்கிரமான கோபத்தினிமித்தம் உண்டான நியாயத்தீர்ப்புகளை, கர்த்தருடைய கரத்தில் இருக்கும் பாத்திரத்தில் உண்டான மதுவிற்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறதை அறிய முடிகிறது. அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அந்திக்கிறிஸ்துவின் முத்திரையைத் தரித்து அவனை வழிபட்டவர்கள் யாவரும் வாதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. இதைக் குறித்த எச்சரிப்புகளை கிறிஸ்து இயேசு ராஜாவும் தன் ஊழியத்தில் வெளிப்படுத்தியுள்ளதை சுவிசேஷங்களில் வாசிக்க முடிகிறது. “லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து. எல்லாரையும் அழித்துப் போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்”. (லூக் 17:29,30) சோதோம் கொமோரா பட்டணங்கள் அழிக்கப்பட்ட போது "அவற்றிலிருந்து எழும்பிய புகை சூளையின் புகையைப் போல் எழும்பிற்று”. (ஆதி 19:28) அக்கினியினாலும் கந்தகத்தினாலும் உண்டாகும் அழிவைக் குறித்து வெளி 19:20; வெளி 20:10; வெளி 21:8 ஆகிய வசனங்களில் வாசிக்கின்றோம். நரக அக்கினியின் வேதனையை வார்த்தையினால் விவரிக்க முடியாது. வெளி 20:15-ம் வசனத்தை தியானிக்கும் பொழுது நரகத்தைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள அன்பின் தேவன் இரக்கம் செய்வாராக. இந்த வாதைகள் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாக நடக்கும் என்ற கர்த்தருடைய வார்த்தையானது லூக்கா 12:9-ம் திருவசனத்தை நினைவுபடுத்துகிறதாய் உள்ளது. "மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவ தூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்” (லூக் 12:9) என்கிறார் அன்பின் ஆண்டவர் இயேசு மகாராஜா. கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
533 views
5 days ago
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 07/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 316 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XII 4. "அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதன் சொருபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக் கொள்கிறவனெவனோ." (வெளி 14:9) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, இந்த அதிகாரத்தில் 9 முதல் 12 வசனங்கள் முடிய நான்காவது தரிசனம் விவரிக்கப்படுகிறது. இந்த நான்கு வசனங்களில் வேதாகமத்தில் இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான எச்சரிப்புகள் காணப்படுகின்றது. வெளி 13-ம் அதிகாரத்தில் மிருகத்தைக் குறித்தும், சொரூபத்தைக் குறித்தும், அதின் முத்திரையைக் குறித்தும் சொல்லப்பட்ட எச்சரிக்கைகளைப் பார்த்தோம். மிருகத்தை வணங்காதவர்கள் பொருளாதார நிலைகளில் பாதிக்கப்படவும், கொலை செய்யப்படவும் கள்ளத்தீர்க்கதரிசியானவன் கட்டளையிடுவான். அதனிமித்தம் கோடிக்கணக்கானவர்கள் மிருகத்தின் முத்திரையை தங்கள் நெற்றியிலாவது, கையிலாவது தரித்துக் கொண்டு மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவை தங்கள் தேவனாக ஏற்றுக் கொள்வார்கள். தேவ கோபக்கலசங்கள் ஊற்றப்படும் போது இவர்களுக்கு உண்டாகும் தண்டனைகளாகிய நியாயத்தீர்ப்புகளைக் குறித்து இந்த தரிசனத்தில், வானத்தில் வெளிப்படும் மூன்றாம் தூதன் பூமியின் குடிகள் யாவரும் கேட்கும்படியாக சத்தமிட்டு அறிவிக்கிறான். அந்த கொடூரமான கட்டளைகளான நியாயத் தீர்ப்புகளைப்பற்றி வருகிற வசனங்களில் தியானம் செய்வோம். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝பைபிள் வசனங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன்