ஃபாலோவ்
janulatha Janulatha
@janulatha5492
6,985
போஸ்ட்
28,778
பின்தொடர்பவர்கள்
janulatha Janulatha
1.3K காட்சிகள்
11 மணி நேரத்துக்கு முன்
சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!* 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். *1) பெண் சாபம் :* இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். *2) பிரேத சாபம் :* இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும். *3) பிரம்ம சாபம்:* நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும். *4) சர்ப்ப சாபம்:* பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும். *5) பித்ரு சாபம்:* முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும். *6) கோ சாபம்:* பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும். *7) பூமி சாபம்:* ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும். *8) கங்கா சாபம்:* பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது. *9) விருட்ச சாபம்:* பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும். *10) தேவ சாபம்:* தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர். *11) ரிஷி சாபம்:* இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும். *12) முனி சாபம்:* எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும். *13) குலதெய்வ சாபம் :* இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.🍃🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍃 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🙏🏻ராதா கிருஷ்ணன்✨ #🙏அயோத்யா ராமர் கோவில் #🙏ரங்க பஞ்சமி
janulatha Janulatha
555 காட்சிகள்
11 மணி நேரத்துக்கு முன்
சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!* 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். *1) பெண் சாபம் :* இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். *2) பிரேத சாபம் :* இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும். *3) பிரம்ம சாபம்:* நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும். *4) சர்ப்ப சாபம்:* பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும். *5) பித்ரு சாபம்:* முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும். *6) கோ சாபம்:* பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும். *7) பூமி சாபம்:* ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும். *8) கங்கா சாபம்:* பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது. *9) விருட்ச சாபம்:* பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும். *10) தேவ சாபம்:* தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர். *11) ரிஷி சாபம்:* இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும். *12) முனி சாபம்:* எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும். *13) குலதெய்வ சாபம் :* இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.🍃🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍃 #🕉️சதுர்த்தி விரதம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #✨பிரதோஷம்🕉️ #🙏ஆன்மீகம் #🙏மாத சிவராத்திரி🪔
janulatha Janulatha
583 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
🛕 “ராஜரிஷியாய் உயர்ந்த விஸ்வாமித்திரர் – காயத்ரி மந்திரம் பிறந்த தருணம்!” 🌞 முழு ஆன்மிகக் கதை ஒரு அமைதியான காடு… முன்னில் ஒரு சிறிய ஆசிரமம்… அந்த ஆசிரமத்தின் நடுவில் அமர்ந்து, ஆழ்ந்த கவனத்தில் எதோ எழுதி கொண்டிருந்தார் விஸ்வாமித்திரர்… அவர் — ஒரு காலத்தில் ராஜா… ஒரு சத்திரியன்… ஆனால் இன்று — ஞானத்தைத் தேடும் தவசீ! அந்த வேளையில், மௌனமாக ஆசிரமத்திற்குள் நுழைந்தார் வசிஷ்டர். விஸ்வாமித்திரர் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால் அவரை கவனிக்கவில்லை… அப்பொழுது வசிஷ்டர், லேசான கோபத்தோடு, “சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டார். அதிர்ந்தார் விஸ்வாமித்திரர்… உடனே எழுந்து நின்றார்… “வணக்கம் குருவே! எழுதுவதில் கவனம் சென்றதால் தங்களை கவனிக்கவில்லை… மன்னிக்கவும்!” ஆனால் வசிஷ்டர், சண்டைக்குத் தயாரானவர் போல, “என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார். “வேதாந்தம்… உபநிஷத்துகள்…” என்றார் விஸ்வாமித்திரர். உடனே வசிஷ்டர் கூர்மையாக, “நீங்கள் எப்படி வேதங்களை எழுதலாம்?” விஸ்வாமித்திரர் திகைத்தார்… “எனக்கு ஒன்றும் புரியவில்லையே…” “நீங்கள் சத்திரியன் தானே?” “ஆம்.” “அப்படியிருக்க, வேதங்களை எழுதுவது உங்கள் பணி அல்ல! பிராமணர்கள் மட்டுமே அதை எழுத வேண்டும்!” அப்போது விஸ்வாமித்திரரின் கண்களில் தீப் பறந்தது… “அது தவறு! சாதி அறிவுக்கு அளவுகோல் இல்லை! ஞானம் எல்லோருக்கும் பொதுவானது!” வசிஷ்டர் சற்று திட்டமாக, “நீ என்னை ஒருமையில் பேசுகிறாயா?” “ஆம்! நான் ஒரு ராஜா! மரியாதையோடு பேச வேண்டும்!” அப்போது வசிஷ்டர் சிரித்தார்… “அப்படியா? நீ உண்மையில் ரிஷி என்றால், உலகம் முழுவதும் பயன்படும் ஒரு தியான மந்திரத்தை எழுத முடியுமா?” விஸ்வாமித்திரர் கண்கள் சிவந்தன… “இது வேண்டுமென்றே செய்யும் வம்பு!” “நடக்கட்டுமே… ரிஷிதானே நீ?” என்றார் வசிஷ்டர். ஒரு நாழிகை அவகாசம் கேட்டார் விஸ்வாமித்திரர்… ✨ தியானத்தின் உச்சியில் பிறந்த ஒளி… விஸ்வாமித்திரர் கண்களை மூடிக் கொண்டார்… முதலில்… வசிஷ்டர் மீது இருந்த கோபத்தை மனத்திலிருந்து வெளியேற்றினார்… அதன் பின்… முழு மனதையும் ஒரே ஒளியிடம் அர்ப்பணித்தார்… அவர் மனக்கண்ணில் தோன்றியது… 👉 சூரியன்! உலகத்துக்கு ஒளி தரும் அந்த பேரோளி… ஒரு நாழிகை கடந்தது… அப்போது விஸ்வாமித்திரரின் உதடுகளில் இருந்து இந்தப் புனித ஒலியெழுந்தது… “ஓம் பூர் புவ: ஸுவ: தத்ஸவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்” அதில் எந்த ஒரு கடவுளின் பெயரும் இல்லை… 👉 “உலகத்துக்கு நீ ஒளி தருவது போல என் அறிவுக்கும் ஒளி தருவாயாக!” என்ற சுத்தமான தியானமே அதில் இருந்தது… அந்த மந்திரத்தை எழுதித் வசிஷ்டரிடம் கொடுத்தார் விஸ்வாமித்திரர்… 🌺 வசிஷ்டரின் பரவசமான தீர்ப்பு அந்த மந்திரத்தைப் படித்த வசிஷ்டர், மெய்சிலிர்த்து கூறினார்… “அற்புதம் விஸ்வாமித்திரரே! இந்த மந்திரத்தை உங்களிடம் இருந்து பெறவே நான் திட்டமிட்டு உங்களுக்கு கோபம் காட்டினேன்…” “இனி நீங்கள் வெறும் ரிஷி அல்ல… நீங்கள் ராஜரிஷி… நீங்கள் பிரம்மரிஷி!” அன்று பிறந்தது தான் — 👉 காயத்ரி மந்திரம்! இன்று அது — 👉 உலகின் உயிர்மந்திரம் #🙏ரங்க பஞ்சமி #🙏அயோத்யா ராமர் கோவில் #🙏🏻ராதா கிருஷ்ணன்✨ #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
See other profiles for amazing content