Follow
💙உனக்காகவே🌹காத்திருப்பேன்💙
@jp052320
3,290
Posts
8,880
Followers
💙உனக்காகவே🌹காத்திருப்பேன்💙
673 views
5 months ago
ஒரு பறவையை சிறைப்பிடிக்கும் போது அதன் வானத்தையும் சிறைப்பிடித்து விடுகிறார்கள் மனிதர்கள்.. பின் அது தனககு இறக்கை இருப்பதையே மறந்து அந்த கூண்டின் முழுப் பரப்பையும் தன் கால்களால் நடந்தே தாண்டுகிறது.. அதிகாலை எழுந்து உணவு தேடிப் பழக்கப்பட்ட பறவை கூண்டின் வாசலில் காத்திருக்கிறது உணவுக்காக.. பின் தன் மொழி மறந்து இவர்களுக்காக கொஞ்சம் பேசவும் கற்றுக் கொள்கிறது .. உண்மைதான் மனிதன் அன்பெனும் தூண்டிலை வீசி சக மனிதனையே சிறைப்படுத்தும் வல்லமை படைத்தவன் ஆயிற்றே .. பறவைகள் இவனுக்கு எம்மாத்திரம் சிறைப்படுத்துவது மட்டுமல்ல அதனது போக்கில் பறக்க விடுவதும் அன்பு தான்.. #❤️எங்கேயும் காதல் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes #💞Feel My Love💖
💙உனக்காகவே🌹காத்திருப்பேன்💙
617 views
5 months ago
யாரோ ஒருவரை மகிழ்வித்தாக நினைத்துக் கொண்டு கொட்டிக் தீர்த்துக் கொண்டிருந்தது மழை .. யாருமே ரசிக்கவில்லை சாளரங்கள் மூடியிருந்தன அவர்கள் தத்தம் வேலைகளில் மூழ்கி கிடந்தனர்.. வீதிகளில் வருபவர்கள் எல்லோரும் குடைகளை பிடித்து மழை நீர் தங்களை நனைத்து விடாமல் பார்த்துக் கொண்டனர்.. இத்தனை நிராகரிப்பின் மத்தியிலும் ஓடி வந்த மழைநீர் கால்களை நனைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.. ஒரு சாரல் மழையில் நனையக்கூட நேரமில்லாமல் மனிதர்கள் அப்படி எதைத்தான் சாதித்து விடப் போகிறார்கள்.. #⚡️Trending Quotes✍️ #😒தனிமை Quotes #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #❤️எங்கேயும் காதல்