Follow
Kpr
@kpr4294
9,329
Posts
43,033
Followers
Kpr
855 views
21 days ago
17/2/26 எட்டையாபுரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு மானாவாரி விவசாய நிலங்கள் இருக்கும் நிலையில் இதில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர் போதிய மழையின்மை,. தொடர் பனி பொழிவு, காட்டுப்பன்றிகள், மான்கள், மயில்கள் தொல்லை காரணமாக விளைச்சல் ஒரு புறம் பாதிப்பு என்றால் போதிய விலை கிடைக்காத நிலை மறுபுறம். ஒரு ஏக்கருக்கு 15,000 முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் இன்றைக்கு விவசாயிகளுக்கு விதைப்பு கூலிக்கு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் அந்த கடனை எப்படி கட்டுவது, அடுத்த ராபி பருவத்தில் விவசாயம் செய்வது எப்படி என்று விழி பிதுங்கி நிற்கின்றனர். எனவே மக்காச்சோளம் அறுவடை செய்து போதிய விலை இல்லாத காரணத்தினால் செய்வது தெரியாமல் இருக்கும் விவசாயிகளை காப்பாற்றும் வகையில் தமிழக அரசே ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் டெல்டா மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பது போல கோவில்பட்டியை மையமாகக் கொண்டு மக்காச்சோளம் மற்றும் நவதானியங்கள் கொள்முதல் செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில்பட்டியில் நவதானியங்கள் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பாதுகாப்பாக வைக்கும் வகையில் குளிர்சாதன சேமிப்பு கிட்டங்கி அமைக்க வேண்டும். * மகளிருக்கு கோடைகால சிறப்பு நிதி கொடுத்த தமிழக முதல்வர் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 10000 பாதிப்பு சிறப்பு நிதி வழங்க வேண்டும் * கூட்டத்திற்கு கடைசில விவசாயத் தலைவர் அண்ணன் வரதராஜன் மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் மாவட்ட துணைத் தலைவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் திருமுருகன் மேற்கு வட்டார தலைவர் பாண்டியன் கோவில்பட்டி மேற்கு வட்டார தலைவர் கனி வட்டாரத் துணைத் தலைவர்கள் தங்கராஜ் கயத்தாறு கருப்பசாமி பி எம் டி மகாராஜா பாண்டியன் உள்ளிட்ட பலர் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #🤝பா.ம.க #🔶பாஜக #📺அரசியல் 360🔴
See other profiles for amazing content