Follow
முழுமதிபாலா
@muzumathi
464
Posts
466
Followers
முழுமதிபாலா
844 views
2 months ago
#அம்மா அண்ணன்,தம்பி வேரறுத்து தனித்தனியே தான் வாழ தாயும் அவள் அனாதையாய் தெருமுனையில் தான் கிடக்க. பெத்த புள்ள பேர புள்ள அத்தனையும் ஒன்னும் இல்ல. பெத்தவளே உன்னை வச்சு செய்யறாங்க பெரும் தொல்லை. எல்லாம் மீறி போச்சு தாயே நீ படும் கொடுமை காட்சி. வந்தவளின் ராஜ்யம் தான் வாயும் கையும் அடங்கல பெத்தவளே உன் புள்ள நான் பாவம் பட்டு நிக்கையில. அம்மானு நான் அழைக்க அவள் இல்லாத நேரம் வேணும். சாப்பிட்டியா என்று நான் கேட்க செத்து செத்து பிழைக்க வேண்டும். புத்தாடை எனக்கு உடுத்தி நீ பூரிப்பாய் எனை ரசித்த புது துணி உனக்கு எடுக்க நான் பயந்து பதுங்குகிறேன். கந்தளாட சல்லடையில் சூரிய ஒளி குடி போக நீ சூட்டால் உடல் தவிக்க அதை சொரணைக்கட்டு பாக்குற பாவி ஆகி போனேன் அம்மா. வந்தவளும் விதவிதமாய் அடுக்குறாம்மா அலமாரியில் அதில் ஒன்ன உனக்கு தர மறுக்குறாளே எனை முறைத்து. என் மனமும் மரணித்து. மதிக்கட்டு நிக்கிறேன் அம்மா. பக்குவமாய் பொங்க வெச்சு பலவிதமாய் சோறு போட்ட பல ருசியாய் அதை ருசித்த நான். உன் உயிர் காக்க சோறு போட, தகுதியற்றுத் தரங்கெட்டு நிக்கிறேன் அம்மா. புது புது உறவு வந்து நம் வீட்டில் விதவிதமா உணவ தின்ன உன்ன பாக்க வச்சு அவர்களோடு நானும் உண்ண அது உணவில்லை எனக்கு மலமாகி போனதம்மா. உடல் வேர்வை உதிரம் சொட்ட வயிற்று பசி கண்ண கட்ட நான் படிக்க பசி மறந்த உன் பசியாற்ற மறுத்தேன் அம்மா. மரணம் ஆகி நின்னேன் அம்மா. உயிர் இருந்தும் மனம் இறந்து. பேரப்புள்ள ஓடி வந்து பாட்டின்னுதான் கத்த பெத்தவளே உன்னை அவ பிச்சைன்னு தான் இழுத்து பிள்ளைகளை உள்ளே தள்ளி கதவை சாத்த... சத்தம் கேட்டு ஓடி வந்து பெத்தவளே உன்னை பார்த்து, செத்துப் போய் நின்னேன் அம்மா. சத்தம் போட்டு மனம் கதற சத்தம் இன்றி விழி அழுவ. பெத்தவளலே வளர்த்தவளே பெத்தபுள்ள பேர புள்ள ஒன்னும் உன்னை பாக்குலன்னா. செத்துபோய் தான்கிடந்த நான் சத்தம் போட்டு தான் கதற அக்கம் பக்கம் மக்கள் எல்லாம் கேவலமா என்னை பார்த்து இருக்கும்போது பார்க்காதவன் இறந்தபின் கத்துறான் என்று. நீ உயிர் பிரிந்து பிணமானாய். நான் உயிர் இருந்தும் ‌ பிணமானேன். மகள் காப்பாள், மகள் போனபின் வருபவள் காப்பாள் என்றுதான். மருமகள் என்றோம் அவள் எதிரியாய் இருப்பாள் என்று எண்ணாமல் . மண்ணுக்குள் போனவளே உன்னை எண்ணி புலம்புகிறேன் புண்ணான என் மனதால். தாயை இழந்த ஈன பிறவி #அம்மா
முழுமதிபாலா
768 views
2 months ago
#அரசியல்களம் #தலைவர் தலைவர் வந்து போகும் வசதிக்காக சந்து பொந்து அடச்சி வச்சோம் சாலையில். ஒருமுறை மட்டுமே பயன்படும் பொருளுக்கு பல லட்சம் செலவு செய்து வாங்கி வச்சோம் மேடையில். மண் பட்டால் புண்ணாகி விடும் என்று பாதம். பூ போட்டு வர வேற்றோம் நாமும் நமக்கு நாமம்.. தாலி விற்றுக் கொடி கட்டுவான் சாலையில். தன் தாயின் சேலை கந்தல் என்பதை மறந்து. மலர் பாய் விரிப்பில் தலைவரின் பாதம் புரளும். வறுமையால் ஏழைகளின் வயிற்றில் குடல் புரளும் பசியால்.. பசியாற பாலின்றி கதறும் ஏழைக் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்ட பால். குடம் குடமாய் தலைவரின் பாதாகையில் ஊற்றப்படும். மாசுக்கட்டுப்பாட்டு துறையை வரவேற்க மாசுபடும் பட்டாசுகள் வெடிக்கப்படும்.. அலங்கார ஆடம்பரம். ஆங்காங்கே ஆடல் பாடல். தலைவர் எப்போ வருவார் என்று மக்களின் தேடல் தேடல்.... தேடித்தேடி விழிப்பூக்கும் மனசோ திட்டி தீர்க்கும் எப்படா வருவான் என்று.. வாங்கிய காசுக்கு வேதனை போதுமா என்று. அவசர அவசரமாய். வெள்ளை கூட்டம் ஓடிவரும். வழிவிடு வழிவிடு என்று.. தலைவர் வந்துவிட்டார் என்று அறிந்து விரிந்து கிடந்த கூட்டம் முட்டி மோதி அலைமோதும்... அரை மாத உழைப்பின் மேடையில் ஆறு நிமிடம் பேசிவிட்டு சென்றுவிடுவார் தலைவர்.. வறுமையில் வாழும் மக்கள் கையேந்தி காத்து கிடப்பார் கூட்டத்திற்கு வந்த கூலியை கேட்டு.... ஆளைப் பார்த்து பணம் பிரியும் கேட்பாராற்றவனுக்கு அதுவும் இல்லை என்று விரட்டி அடிக்கும் . முன்னே நிற்பவன் தின்னமீதியில்.... நொடிகள் பேசுவதற்கு, கோடிகள் செலவு செய்த தலைவன் பேசுவார். வறுமையை ஒழிப்போம் வாருங்கள் என்று... #அரசியல்
See other profiles for amazing content