Follow
Edappadi K Palaniswami
@officeof_eps
4,096
Posts
79,165
Followers
Edappadi K Palaniswami
34K views
5 years ago
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலில் மதுரை-பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர் திரு.பாலுச்சாமி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். வீரமரணம் எய்திய திரு.பாலுச்சாமி அவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். #rip
Edappadi K Palaniswami
256.4K views
5 years ago
மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் "கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெற்று நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி" செய்யப்படுகிறது. #🤷‍♀️மகளிர் சுயஉதவி கடன் தள்ளுபடி🤗
Edappadi K Palaniswami
722.1K views
5 years ago
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று, திரும்ப செலுத்த முடியாத ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, "கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி" செய்யப்படுகிறது. #🥇நகைக்கடன் தள்ளுபடி🥳
Edappadi K Palaniswami
11K views
5 years ago
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் திரு.தா.பாண்டியன் அவர்கள் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். #tngovt
Edappadi K Palaniswami
10.4K views
5 years ago
சேலம் மேட்டூரில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று, மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை திறந்து வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். #tngovt
Edappadi K Palaniswami
9.7K views
5 years ago
சேலம் மாவட்டம், மேட்டூரில் இன்று (26.2.2021) நடைபெற்ற அரசு விழாவில், மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தேன். #tnahead #tngovt
Edappadi K Palaniswami
8.8K views
5 years ago
நெய்வேலி புதிய 2x2500 மெகா வாட் அனல்மின் திட்டம், தென் மாவட்டங்களில் 709 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை கோவையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia அவர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்தார். #tngovt
Edappadi K Palaniswami
7.9K views
5 years ago
கோவை-கொடிசியாவில் நடைபெற்ற விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கோரப்பள்ளம் பாலம், ரயில்வே மேம்பாலம் மற்றும் அதன் இணைப்புச்சாலை விரிவாக்கம் பணிகள் ஆகியவை மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களால் துவக்கி வைக்கப்பட்டன. #tngovt