Follow
💙 kalai 💙
@panjamugan
484
Posts
1,992
Followers
💙 kalai 💙
437 views
3 days ago
என் கடன் பணி செய்து கிடப்பதே நமசிவாய🤘🤟 #என்றும் இறைபணியில் உழவாரப்பணி குழு
💙 kalai 💙
513 views
9 days ago
*#கடவுள் எப்படிப்பட்டவன்?* *#கவியரசன் கண்ணதாசன் சொன்னது*. ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். *அவன் தான் கடவுள்*, பூலோகத்தில் வாழும் போது புகழையும் கொடுப்பான். பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். *அவன் தான் கடவுள்*, பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான். அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான். பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான். *அவன் தான் கடவுள்*, கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான். அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான். *அவன் தான் கடவுள்*, ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான். பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான். *அவன் தான் கடவுள்*, அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான். அதை முழுவதும் பயன் படுத்தாத மனிதர்களையும் படைப்பான். *அவன் தான் கடவுள்*, தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். *அவன் தான் கடவுள்*, ‌நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான். அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான். *அவன் தான் கடவுள்*, புரியாதவனுக்கு புதிராய் இருப்பான். தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். *அவன் தான் கடவுள்*, கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான். *அவன் தான் கடவுள்*, மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். பின்னிருந்து இயக்குவான். *அவன் தான் கடவுள்*, தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான். (உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். நமசிவாய🤘 #🙏ஆன்மீகம் *அவன் தான் கடவுள்!!!
💙 kalai 💙
652 views
17 days ago
என் கடன் பணி செய்து கிடப்பதே 🤘 நமசிவாய🤟 #என்றும் இறைபணியில் உழவாரப்பணி குழு
💙 kalai 💙
680 views
19 days ago
அறியப்படாத உண்மைகள் 😩ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை 🙆 எச்சரிக்கையாக இருப்பது நமது பொறுப்பு 🥹 இழந்ததை மீண்டும் பெற முடியாத காலம் 🥴கலியுகம் 🤘🤟 #ஆரம்பம் ஆகிய கலியுகம்
💙 kalai 💙
1.3K views
20 days ago
#🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 மாறினோம் எங்கள் மரபணு மாறவில்லை நாங்கள் எவரும் எங்களுக்கு #அரபுபெயர் வைத்துக் கொள்ளவில்லை இன்னும் நாங்கள் #இந்துபண்பாட்டின் படியே வாழ்கிறோம்..!! இந்தோனேசியா அதிபர் #பிரபாவோ_சுபியாண்டோ உலகிலேயே அதிக முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட நாடான #இந்தோனேஷியாவிற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை , விமான நிலையத்திற்கே வந்து வரவேற்ற அந்நாட்டு அதிபர் பிரபோவா சுபியாண்டோ...... 14 வது நூற்றாண்டு வரை #இந்துக்கள்மெஜாரிட்டியாக இருந்த இந்தோனேசியா அதன்பிறகு முஸ்லீம் நாடாக மாறியது..... இருந்தாலும் அங்குள்ள மக்கள் மதம் மாறினாலும், தங்கள் கலாச்சாரம் இந்து என்பதில் உறுதியாக உள்ளனர்.... வாஷிங்டனில் உள்ள இந்தோனேசியா தூதரகம் முன் இந்தோனேசியா அரசு சார்பாக, #கல்விக்கடவுள்_சரஸ்வதிதேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது.. இந்தோனேசியா அரசு சார்பாக பல #ராமாயாண_மகாபாரத தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன... அந்த நாட்டின் தேசிய வங்கியின் பெயர் செல்வத்துக்கு அதிபதியான #குபேரோ " என உள்ளது.... இந்தோனேசியாவின் ஏர்லைன்ஸ் பெயர் #கருடா " அந்த நாட்டின் கரன்சியின் பெயர் ஏறத்தாழ நம்நாட்டை போல Rupiah. அதாவது #ரூப்பியா... அந்த நாட்டின் 20,000 ரூ கரன்சியில் #வினாயகர் படம் உள்ளது.... ஜகார்த்தாவில் #அர்ஜுனனுக்கு தேரோட்டும் #கண்ணனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மாபெரும் தலைவரான #சுகர்னோவிற்கு (SUKARNO) மகாபாரதத்தின் புகழ்பெற்ற கதாபாத்திரமான #கர்ணனின் பெயரே சூட்டப்பட்டது.... சுகர்னோவின் தந்தை கர்ணனின் குணாதிசயங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். இருப்பினும், மகாபாரதப் போரில் கர்ணன் தவறான தரப்பையே அதாவது கௌரவர்களை ஆதரித்திருந்ததால் அவரது தந்தை தனது மகனுக்கு 'சு' (நன்மை/நல்ல) மற்றும் 'கர்ணன்' ஆகியவற்றை இணைத்து அதவாது SU- KARNO 'சுகர்னோ' என்று பெயரிட்டார். சுகர்னோ தனது மகளுக்கு #மேகாவதிசுகர்னோ புத்ரி' என்ற சமஸ்கிருதப் பெயரை சூட்டினார்... மேகாவதி கூட அந்நாட்டின் அதிபராக 2001-2004 வரை இருந்துள்ளார்.... நம்நாட்டு முஸ்லிம்களும் இந்தோனிசியா முஸ்லிம்களைப் போல் இருந்தால் #இந்தியா விரைவில் வல்லரசு ஆகிவிடும்...👌 பாரத் மாதா கி ஜே 🚩
💙 kalai 💙
874 views
21 days ago
மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள்! 🚩 ஆம்... காஷ்மீரில் இந்துக்கள் சந்தித்ததைப் போன்ற ஒரு பெரும் வெளியேற்றம் மேற்கு வங்கத்தில் மீண்டும் நடக்கக்கூடாது என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவர்கள் வருகிறார்கள். 1946-ஆம் ஆண்டின் நேரடி நடவடிக்கை நாள் போன்ற கொடூரமான அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும், தங்கள் சொந்த மண்ணில் பெருமையுடன் வாழவும், இன்று வங்காள இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ். கிளைகளுக்குப் படையெடுக்கின்றனர். தீவிர இடதுசாரி-மாவோயிச சித்தாந்தத்திற்குப் பெயர் பெற்ற 'தி டெலிகிராஃப்' செய்தித்தாள் மற்றும் ஜீ நியூஸின் டி.என்.ஏ. அறிக்கைகள் கூட இன்று இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளன. வங்காளம் காவி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது... அச்சம் எனும் இரும்புத் திரையை உடைத்து, இந்து எழுச்சியின் ஒரு மாபெரும் வரிசை அங்கே காணப்படுகிறது! மத்தியில் நிலவும் சாதகமான சூழ்நிலையால், ஒரே மாதத்தில் வங்காளத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த காலத்தை விட 5 மடங்கு அதிகம்! ஆன்லைன் புள்ளிவிவரங்களைத் தவிர, நேரடியாகக் கிளைகளுக்குச் சென்று சேருபவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. புரட்சியின் செந்நிறத்திலிருந்து... இதுதான் ஒரு காலத்தில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் தொழிலாளர் மீதான அன்பு எதிரொலித்த பூமி; இங்குதான் கம்யூனிச பயங்கரவாதம் 34 ஆண்டுகள் (1977 - 2011) ஆட்சி செய்தது. 'வர்க்கப் போராட்டத்தை'ப் போதித்த அந்தச் செந்நிற ஆட்சி, தேசிய இயக்கங்களை வேட்டையாடியது; நந்திகிராம், சிங்கூர் மற்றும் கிராமங்களில் நாட்டுப்பற்றாளர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கோயில்கள் அழிக்கப்பட்டு, இந்துக்கள் வேட்டையாடப்பட்டபோது அந்த "புரட்சியாளர்கள்" எங்கே இருந்தார்கள் என்று இன்று மக்கள் கேட்கிறார்கள். அதனைத் தொடர்ந்த பசுமைக் கட்சியின் (தமது காங்கிரஸ்) ஆட்சி கம்யூனிஸ்டுகளுக்குப் பிறகு வந்த தமது காங்கிரஸ் ஆட்சியில் முகமூடிகள் மட்டுமே மாறின. துர்கா பூஜை போன்ற பெரிய கொண்டாட்டங்கள் கூட நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒரு சூழ்நிலையை மக்கள் கண்டனர். வாக்கு வங்கி அரசியலுக்காக இங்கு இந்து நம்பிக்கைகள் அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்பட்டன. உயிர் பிழைப்பின் பாதுகாவலர்: ஆர்.எஸ்.எஸ். வங்காளத்தில் வன்முறையும் அரசியல் அடக்குமுறையும் நிகழ்ந்தபோது, அச்சத்தின் காரணமாக யாரும் பின்வாங்காத நிலையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) மட்டுமே மக்களுக்கு உதவ முன்வந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும், சிறுமிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலும், சட்ட உதவி அளிப்பதிலும் சங்கம் எப்போதும் முன்னணியில் இருந்தது. இன்றும், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று மார்பில் கை வைத்துச் சொன்ன அந்த இயக்கத்துடன் வங்காள இளைஞர்கள் மிகவும் பிணைந்துள்ளனர். இங்கு ஜம்மு காஷ்மீர் போன்றோ அல்லது அண்டை நாடுகளில் உள்ள நிலைமையோ ஏற்படக்கூடாது! காஷ்மீரில் இந்துக்கள் அனுபவித்த பெரும் வெளியேற்றத்தின் வரலாறும், 'ரலிவ், காலிவ், சாலிவ்' என்ற அச்சுறுத்தலும் நம் கண்முன்னே உள்ளது. பிரிவினைக் காலத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இந்துக்களின் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தது. இன்றும் கூட, அண்டை நாடுகளில் இந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இதுபோன்ற ஒரு சோகம் வங்காள மண்ணில் மீண்டும் நிகழக்கூடாது. தேசிய அளவில் பெரும் முன்னேற்றம் வங்காளத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் ஒரு பெரிய அளவிலான நிறுவன வளர்ச்சி காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான புதிய கிளைகளும் செயல்பாட்டு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, வரும் தலைமுறையின் பாதுகாப்பிற்கான ஒரு மாபெரும் விழிப்புணர்வு. வங்காளம் தன் பெருமையை நோக்கி! வங்காளம் என்பது சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், 'வந்தே மாதரம்' எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி, மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் பிறந்த புனித பூமி. இன்று, அச்சத்தின் இருண்ட நாட்களை முடிவுக்குக் கொண்டுவந்து அந்த பூமி விழித்தெழுந்துள்ளது, இனி பின்வாங்குதல் இல்லை! இது வெறும் அரசியல் அல்ல, இது அடையாளம் மற்றும் கலாச்சாரத்தின் உயிர்வாழ்விற்கான போராட்டம்! பாரத் மாதா கி ஜெய்... 🇮🇳 வந்தே மாதரம்... 🙏🤘🤟 #ஆர் எஸ் எஸ்
💙 kalai 💙
700 views
23 days ago
*✒️உங்கள் கணவன்* *யாரோ* *ஒரு பெண்ணை காட்டி* *அந்த பெண்* *உன்னை விட* *பெட்டுக்கு பெஸ்ட்* *என்று சொன்னால்* *உங்களுக்கு எப்படி* *இருக்கும்* *விசித்திரங்கள்..* *சமீபத்தில்* *நடந்த* *ஷாருக்கானின் நிகழ்ச்சியில்* *ஒரு பெண் தனது கணவரை அருகில் வைத்துக் கொண்டே* *என் புருஷனை விட எனக்கு உங்களைத்தான் சார் ரொம்ப பிடிக்கும்* *என்று ஷாருக்கானிடம் ஓப்பனாகக் கூறியுள்ளார்.* அதற்கு பதிலளித்த ஷாருக்கான், " என்னை லவ் பண்றது ரொம்ப ஈஸி. ஏன்னா நான் உங்க கூட இருக்கறது இல்ல உங்க வீட்டு பட்ஜெட் போடுறது இல்ல, உங்க கூட சண்டை போடுறது இல்ல. நான் அழகா ஸ்கிரீன்ல வந்துட்டு போறேன்" ஆனால் "உங்க கஷ்ட நஷ்டத்துல உங்க கூடவே நிற்கும் உங்கள் கணவரைத்தான் நீங்கள் அதிகமாக லவ் பண்ண வேண்டும். என்னை விட அவர்தான் உங்களுக்காக நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.. ஷாருக்கான் தன் குடும்பத்தின் கௌரவத்தையும், கூடவே வாழும் கணவனின் மானத்தையும் பொதுவெளியில் ஏலம் விடும் சில பெண்களின் "தற்குறித்தனம்" நாளுக்கு நாள் எல்லையைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. "என் புருஷனை விட எனக்கு அந்த நடிகரைத்தான் பிடிக்கும்", " அவர்தான் என் கனவு நாயகன்" என்று கணவனின் முகத்திற்கு நேரே, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கூச்சமே இல்லாமல் பற்களைக் காட்டிப் பேசும் சில பெண்களைப் பார்க்கும்போது, வரும் கோபமும் ஆதங்கமும்... ஒரு சில பெண்களின் இந்த மலிவான விளம்பர மோகத்தால், குடும்பத்திற்காகவே தங்களை அர்ப்பணித்து வாழும் கோடிக்கணக்கான உன்னதமான பெண் சமூகமே இன்று தலைகுனிய வேண்டிய கொடுமையான நிலை... என் இனிய சகோதரிகளே... மேக்கப் போட்டு, கேமரா கோணங்களில், பிறர் எழுதிய வசனத்தைப் பேசி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகன் எப்படி உங்களுக்கு ஹீரோவாக முடியும்? உங்களின் கௌரவத்தை நீங்களே அழித்துக் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?? தியேட்டரில் நீங்கள் கொடுக்கும் டிக்கெட் காசில் சொகுசு வாழ்க்கை வாழும் அந்த நடிகர், உங்கள் வீட்டுப் பட்ஜெட்டில் துண்டு விழும்போது வந்து காசு கொடுப்பாரா? அல்லது உங்கள் வீட்டில் அடுப்பு எரியாத போது அரிசி மூட்டை தூக்கிக் கொண்டு வருவாரா? தார் ரோட்டிலும், சிமெண்ட் ஃபேக்டரியிலும், ஐடி கம்பெனியிலும் தன் ஆயுளைக் கரைத்து, மாலையில் சோர்ந்து போய் வீடு திரும்பும் கணவனின் முகத்தில் இருக்கும் அந்த "களைப்பு" தான் உலகின் ஆகச்சிறந்த மேக்கப்! தன் பசி, தன் ஆசை, தன் கனவுகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு *தன் மனைவியும்* *பிள்ளைகளும்* *நிம்மதியாக வாழ வேண்டும்* *என்பதற்காக* வெயிலிலும் மழையிலும் உழைக்கிறானே... அந்த மனுஷன் தான் உங்கள் கணவன் தான் உண்மையான உங்கள் ஹீரோ! திரையில் தோன்றும் நடிகர்களின் சிக்ஸ் பேக் உடம்பையும், சொகுசான நடையையும் பார்த்து உருகும் பெண்கள்..... உங்களின் உழைக்கும் கருத்த ராவுத்தர் மரணம் பகவ கணவனின் " வியர்வைத் துளிக்கு ஈடாகுமா ? என்பதை யோசிப்பதேயில்லை. உங்களுக்கு ஒரு தலைவலி என்றால் ஓடிவந்து தைலம் தடவுவதும், உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த பாரத்தையும் தன் ஒற்றைத்தோளில் சுமப்பதும் உங்கள் கணவன் தான். அவன் சட்டை காலரில் படிந்திருக்கும் அழுக்கும், அவன் கைகளில் இருக்கும் தழும்புகளும்தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அழகு! அதை விடுத்து, சினிமாவில் கலர் லைட்டுகளுக்கு நடுவே ஜொலிக்கும் முகங்களைப் பார்த்து மயங்குவது எவ்வளவு பெரிய அறியாமை? அது உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்வது போல் இல்லையா??. குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும் பெண்களுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டியது ஒன்றுதான்: சினிமா என்பது மூன்று மணி நேரப் பொழுதுபோக்கு; வாழ்க்கை என்பது நாற்பது 50 வருடப் பயணம்." திரையில் தோன்றும் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்துவதை நிறுத்திவிட்டு, உங்கள் வாழ்வின் அஸ்திவாரமாக இருக்கும் கணவனை மதியுங்கள்... குறைகளோடு இருக்கும் ஒரு மனிதனை, அவனது கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டு, அவரோடு வாழ்வதுதான் உண்மையான காதல். நம் பெண் சமூகம் கற்பிலும், கண்ணியத்திலும், குடும்பத்தைக் காப்பதிலும் உலகிற்கே வழிகாட்டியாக இருந்த பண்பாடு கொண்டது... திரை உலக நாயகர்களை ரசியுங்கள், அது பொழுதுபோக்குடன்" மட்டுமே" முடியட்டும். ஆனால், உங்கள் வாழ்வின் உண்மையான, உன்னதமான ஒரே சூப்பர் ஸ்டார் உங்கள் கையைப் பிடித்து, உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் துணை நிற்கும் உங்கள் ""கணவன் மட்டும்தான்"" அவன் காட்டும் அன்பு விளம்பரத்திற்கு அல்ல, அது உங்கள் வாழ்விற்கானது! பைத் தியங்களை உருவாக்கும் சினிமா துறை.😩😩😩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
💙 kalai 💙
1.8K views
25 days ago
*🕉️ஒரு மணி நேரம் நீங்கள் ஓம் நாமம் சொன்னால்*🌹 ஒரு மணி நேரம், 1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது . 2. ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது . 3. ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது . 4. ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது . 5. ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது . 6. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது . 7. ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது . 8. ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது. 9. ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது. 10. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் . 11. ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். 12. ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள். 13. ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள். 14. ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள். 15. ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள். 16. ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள். 17. ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள். 18. ஒரு மணி நேரம் பாண்டுரங்கன் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறான் . 19. ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள். 20. ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான். 21. ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள். 22. இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான். 23. ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள். 24. ஒரு மணி நேரம் பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள். 25. ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள். 26. ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள். 27. ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள். 28. ஒரு மணி நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள். 29. ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள். 30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை . அந்த ஒரு மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்... பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே இறைவன் திரு நாமம் சொல்ல முடியும்...!!! *இறைவன் அருளால் ,* *வாழ்க வளமுடன் !!!* *வளர்க அருளுடன் !!!*🤘🤟 #🙏நமசிவாய ஓம்✨
💙 kalai 💙
3.8K views
1 months ago
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருத்தேர் திருவிழா 28 6 2026 ஞாயிற்றுக்கிழமை #தேர் திருவிழா திருநெல்வேலி
💙 kalai 💙
1.4K views
1 months ago
திருவாரூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனக்கு அருகில் வந்து உட்கார்ந்தார். ஏதோ சில காரணங்களால் பேருந்து சிறிது நேரம் நின்று கொண்டிருந்தது. பொதுவாகப் பேருந்தில் பயணிக்கும் போது ஏதாவது ஒரு வாராந்திர புத்தகத்தை வாங்கிப் படிப்பது என்னுடைய வழக்கமாக இருந்த காலக் கட்டம் அது. என்னை வழியனுப்ப வந்த என் மாமனார் தண்ணீர் பாட்டிலுடன் சக்தி விகடன் புத்தகத்தை வாங்கிக் கொடுத்திருந்தார். அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பேருந்து சில நிமிடங்களில் நகரத் தொடங்கியது. அருகிலிருந்தவர் புன்னகையுடன் "தம்பிக்கு கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி போல.." என்றார். நானும் சிரித்துக் கொண்டே "அப்படி எல்லாம் இல்லைங்க.. இந்த ராசி பலன் மட்டும் அப்பப்ப பார்த்துக்குவேன்.." என்றேன். சரி தான்.. அப்ப உங்களுக்கு நம்பிக்கை இருக்குன்னு தான அர்த்தம்.. புன்னகையுடன் புத்தகத்தை அவரிடம் கொடுக்க, அவரோ "எனக்கெல்லாம் வீட்டுக்கே தபால்'ல வந்துடும்.. வந்த உடனே நானும் என் மனைவியும் படிச்சிடுவோம்.." என்றார். "நல்லதுங்க.." என்றபடி சக்தி விகடனை என்னுடைய பேக்கிற்குள் வைத்து விட்டு, புஷ்-பேக் சீட்டை லேசாகச் சாய்த்து விட்டபடி கண்களை மூடிக் கொண்டேன். அவர் ஏதாவது பேச்சை ஆரம்பிக்க, அது பிறகு சீர்காழி சிதம்பரம் பண்ருட்டி வடலூர் வரை தொடர்ந்தால் என்ன செய்வது என்ற பயம் தான் காரணம். தம்பி.. தம்பி.. என்னங்க.. தூக்கம் வருதுங்களா?.. ஆமாங்க.. சரி தூங்குங்க.. பேருந்தில் அணைந்து விளக்குகளையும் அனைத்து விட்டார்கள். சில வினாடிகளுக்குப் பிறகு அவராகவே மீண்டும் "தம்பி.. இந்தக் கர்மா பத்தி என்ன நினைக்குறீங்க?.." என்றார். "இதோ.. உன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறேன் பாரு.. இது தான் அந்தக் கருமம் பிடிச்ச கர்மா.." என்று நினைத்துக் கொண்டு "சார்.. தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்குத் தூக்கம் வருது.." என்றேன். சரிங்க தம்பி.. சட்டென்று அவருடைய முகம் வாட, எனக்கு என்னவோ போல இருந்தது. சரி சொல்லுங்க சார்.. என்னமோ சொல்ல வந்தீங்களே?.. இல்ல இந்தக் கர்மா மேல எல்லாம் நம்பிக்கை இருக்கா?.. இருக்கு சார்.. நிறையவே இருக்கு.. பேருந்திற்குள் விளக்குகள் அனைத்தும் அனைக்கப்பட்டு ஜன்னல் கண்ணாடி வழியாக அவ்வப்போது வெளிச்சம் உள்ளே வந்து கொண்டிருந்தது. சாமி கும்பிட்டா இந்த கெட்ட கர்மா எல்லாம் குறையுமா தம்பி?.. அப்படித் தான எல்லாரும் சொல்றாங்க.. தம்பி.. நான் அரசாங்கத்தோட உள்கட்டமைப்புப் பிரிவு துறையில அதிகாரியா வேலை செய்திருக்கேன்.. கிட்டத்தட்ட 36 வருஷ சர்வீஸ்.. கை நிறையப் பென்சன் வாங்குறேன்.. ஆனா மன நிறைவே இல்ல.. நான் அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டபடி இருந்தேன். நான் வேலை செய்த காலத்துல ஒரு பைசா கூட லஞ்சம் வாங்குனதே கிடையாது.. எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.. அழகான அன்பான மனைவி.. எல்லாமே திருப்தியா அமைஞ்சது எனக்கு.. நான் வேலை செய்த துறையில, எந்தவொரு திட்டமும் அமைச்சரவையோட (Cabinet) இறுதி ஒப்புதலுக்குப் போறதுக்கு முன்னாடியே, அதோட மதிப்பீடு, அதுக்கான தேர்வு செய்யப்படுற இடம், அரசுத்துறையில ஒருசிலருக்கு மட்டும் தான் தெரியும்.. அதுல நானும் ஒருத்தன்.. விஷயம் வெளிய கசியுறதுக்கு முன்னாடியே எங்களுக்குத் தெரிஞ்சிடும்.. நாங்களும் உடனே அந்த லொகேஷன்'ல இருக்குற ஒரு ஏக்கர் ரெண்டு ஏக்கர்'ன்னு வாங்கிப் போட்டு, திட்டம் அறிவிச்ச கொஞ்ச காலத்துலயே, அந்த இடத்தை நல்ல ரேட்டுக்கு வித்துடுவோம்.. அதாவது விஷயம் தெரிஞ்சு பத்து லட்சத்துக்கு வாங்குன இடம், ரெண்டு வருஷத்துல நாற்பது ஐம்பது லட்சத்துக்குப் போகும்.. "அட ஒங்கொக்க மக்கா.." சட்டென்று என் மனதில் இருந்த சலிப்பு முழுவதுமாக நீங்கி விழிப்புணர்வு வந்து விட்டது. என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டவரை போல மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்த அந்த நபர் மேலும் பேசினார். நான் யாரையும் ஏமாத்தலையே.. அன்னைக்கு ரேட்'ல தான இடத்தை வாங்கிப் போட்டேன்.. இப்படித் தான் தம்பி நானும் நினைச்சுகிட்டு இருந்தேன்.. வர்ற லாபத்துல ரெண்டு சதவிகிதம் குலதெய்வ கோவிலுக்குக் கொடுத்துடுவேன்.. வருஷா வருஷம் கிடா வெட்டு அது இதுன்னு அமர்களப்படுத்துவேன்.. எங்க ஊர் பக்கம் இருக்குற பாதிக் கோவில்கள்'ல ஏதாவது ஒரு மார்பிள் கல்லுல என்னோட பெயர் இருக்கும்.. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். திருப்பதி திருச்செந்தூர் எல்லாக் கோவிலுக்கும் போவோம், ஸ்பெஷல் தரிசனம் அன்னதானம் எல்லாம் அடிக்கடி பண்ணுவோம்.. சிறிது நேரம் ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓட விட்டவர் "ஒரு முறை எங்க ஊர்'ல புதுப் பஸ் ஸ்டேண்ட் கட்ட இடம் பார்த்துகிட்டு இருந்தாங்க நம்ம அரசாங்கம்.. நான் அந்தப் பஸ் ஸ்டேண்ட்அமைய போற இடத்துக்கு 100 மீட்டர் தொலைவுல ரெண்டு கிரவுண்ட் இடத்தை வாங்கிப் போட்டேன்.. அந்த இடத்தை வித்த அம்மாவுக்கு ஒரே மகன் அவன் சிங்கப்பூர்'ல இருந்தான்.. இடத்தை அவன் வர்ற வரைக்கும் விக்க வேண்டாம்'னு சொல்லி இருந்தான்.. அவனோட மனைவியும் பிரசவத்துக்குப் போயிருந்தா போல.. இடத்தை விக்கப் பவர் ஆப் அட்டார்னி அந்த அம்மா பெயர்'ல இருந்தது.. ஏதோ ஆத்திர அவசரத்துக்கு இடத்தை விக்க வேண்டி வந்தா என்ன பண்றதுன்னு, அந்த மகன் அம்மா பெயர்'ல பவர் ஆப் அட்டார்னி கொடுத்திருப்பான் போல.. நான் அந்த அம்மா கிட்ட அப்படி இப்படிப் பேசி, கூடக் காசு தர்றேன்னு சொல்லி இடத்தை வாங்கிட்டேன்.. நாலு மாசத்துல அந்த இடத்துக்குப் பக்கத்துல அரசாங்கம் புதுப் பஸ் ஸ்டேண்ட் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. இடத்தை வித்த அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல.. சிங்கப்பூர்'ல இருந்து வந்த மகனுக்கு விஷயம் தெரிஞ்சு என்கிட்ட வந்து சண்டை போட்டான்.. மீண்டும் பேருந்தின் ஜன்னல் வழியே பார்வையை ஒட விட்டவர், பிறகு என்னைப் பார்த்து "அரசாங்க அதிகாரி.. என் கூடவே ஆளுங்க வேற இருப்பாங்க.. அவனால என்னை எதிர்த்துச் சண்டை போட முடியல.. நான் பத்து மடங்கு லாபத்துக்கு அந்த இடத்தை வேற பார்ட்டிக்கு வித்துட்டேன்.." என்றார். அந்த அம்மாவோட மகன் கோபத்துல அந்த அம்மாவை அடிச்சு விரட்டிட்டான்.. அந்த அம்மா என் வீட்டுக்கிட்ட வந்து அழுதுச்சு.. "இப்படி ஏமாத்திட்டீங்களே ஐயா.." அப்படின்னு அழும்.. என் வீட்டு வேலைக்காரங்க அந்த அம்மாவை விரட்டி விடுவாங்க.. அங்கங்க சாப்பிட்டுக்கிட்டுப் பித்துப் பிடிச்சு திரிஞ்ச அந்த அம்மா ஆக்சிடெண்ட்'ல செத்து போச்சு.. என் மனதை ஏதோ ஒன்று பிசைவதை போல இருந்தது. சில வினாடிகள் அமைதியாகத் தலையைக் குனிந்தபடி இருந்த அவர், பிறகு சட்டென்று "என் மகன் அமெரிக்கா போகணும்'னு ஆசைப்பட்டான்.. அனுப்பி வைச்சேன்.. அங்கேயே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான்.. அவனுக்குக் குழந்தையும் பிறந்தது.. என் பொண்ணையும் அமெரிக்கா அனுப்பி வைச்சேன்.. அவளும் கல்யாணம் குழந்தைன்னு செட்டில் ஆகிட்டா.. ரிட்டையர்மெண்டுக்கு பிறகு நானும் என் மனைவியும் நாலைஞ்சு தடவை அமெரிக்கா போயிட்டு வந்தோம்.. என் மகனோட மகன், அதாவது என் பேரனுக்கு ரெண்டு வயசாகும் போது தான் அவனுக்கு ஆட்டிசம் இருந்தது தெரிய வந்தது.. நிறையச் செலவு பண்ணி பார்த்தான் என் மகன்.. ஒரு கட்டத்துல அவனோட மனைவி அவனை விட்டு விலகி போயிட்டா.. ரெண்டு வருஷம் என் மகன் என் பேரனோட வந்து இங்க இருந்தான்.. அப்புறம் பேரனை எங்க கிட்டயே விட்டுட்டு அவனும் அமெரிக்கா போயிட்டான். ரெண்டு மூனு மாசத்துக்கு ஒரு தடவை போன் பண்ணுவான்.. அவ்வளவு தான்.. என் மகளுக்கும் விவாகரத்து ஆகிடுச்சு.. ஏதேதோ காரணம் சொல்றா.. அமெரிக்காவுல இருக்குற என் நண்பரோட மகன் சொல்றான்.. என் மக யாரு கூடவோ கல்யாணம் பண்ணாமலே தங்கியிருக்காளாம்.. சட்டென்று உடைந்து அழுதார். நான் ஒருவித அசௌகரியத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தேன். பேருந்தில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஒருசிலர் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் திரும்பி கொண்டார்கள். சார்.. அழாதீங்க.. தன் இரண்டு கரங்களால் முகத்தைத் துடைத்துக் கொண்டவர், "இப்ப தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் மனைவிக்குப் பக்கவாதம் வந்துடுச்சு.. மாசத்துக்கு ஐம்பதாயிரம் சம்பளம் கொடுத்து என் பேரனையும் மனைவியையும் பார்த்துக்க ரெண்டு ஆள் வைச்சிருக்கேன்.. அவங்களும் பாவம் நல்லா தான் பார்த்துக்குறாங்க.." என்றார். இப்ப எங்க சார் போய்கிட்டு இருக்கீங்க?.. அவர் கண்கள் கலங்க புன்னகையுடன் "ஒரு அம்மா ஆக்சிடெண்ட்'ல செத்து போச்சுன்னு சொன்னேன் தான.. அவங்க மகன் இப்ப சென்னையில இருக்கானாம்.. ஏதோ கஷ்டத்துல இருக்கான்னு கேள்விப்பட்டேன்.. அதான் அவன் கிட்ட இருபது லட்ச ரூபா செக்'கை கொடுத்துட்டு வரலாம்னு போய்கிட்டு இருக்கேன்.." என்றார். நல்லதுங்க.. என்னமோ தம்பி.. நான், என் மனைவி, மகன், மகள், எல்லாரும் சிங்கப்பூர், மலேசியா அப்புறம் ஒரு முறை லண்டனுக்குக் கூடப் போயிட்டு வந்திருக்கோம்.. எல்லா ஸ்டார் ஹோட்டல்'லயும் திருப்தியா சாப்பிட்டிருக்கோம்.. ஆனா எந்த நினைவுகளும் சந்தோஷத்தை தரல தம்பி.. வயசான பிறகு ஒரு இடத்துல உட்காருவோம் தான.. அப்ப நம்ம மனசாட்சி நம்மள குடைய ஆரம்பிக்கும் பாருங்க.. ஐயோ.. அது ரொம்ப வலிக்கும்.. ஒரு பக்கம் எழுந்து நடமாட முடியாத மனைவி.. இன்னொரு பக்கம் பத்து வயசாகியும் குழந்தையாவே இருக்குற பேரன்.. பெத்த மகனும் மகளும் எப்படி இருக்காங்கன்னு தெரியாத கொடுமை.. இதுக்காகவா நான் ஓடி ஓடி சம்பாதிச்சேன். ரொம்பப் புத்திசாலித்தனமா சொத்து சேர்த்தேன்?.. பேருந்து விக்கிரவாண்டியை தாண்டி திண்டிவனம் நெடுஞ்சாலையில் வேகமெடுக்க ஆரம்பித்தது. சரிங்க.. மனசை தளர விடாதீங்க.. தம்பி.. கொஞ்சம் நினைச்சு பாருங்க.. எனக்கு இடத்தை வித்த அம்மாவை, அவங்க பெத்த மகனே வீட்டை விட்டு விரட்டிட்டான்.. அந்த அம்மா மனசு எப்படித் துடிச்சிருக்கும்.. வயசான காலத்துல பித்துப் பிடிச்சுத் தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்கும் போது கூட, என்னை எங்கயாவது ரோட்டுல பார்த்தா கையெடுத்து கும்பிட்டு "ஐயா சாமி.. என் பேரனை தொட கூட விட மாட்டேங்குறாங்க சாமி.. குடுத்துடுங்க சாமி.." அப்படின்னு அழும்.. இதைச் சொல்லும் போது அவர் உடல் அளவுக்கு அதிகமாக நடுங்கியது. அவரைத் தேற்ற நினைத்த நான் "சரி விடுங்க.. அப்படிப் பார்த்தா பெத்த அம்மாவை விரட்டியடிச்ச அந்த மகனும் தான தப்பு பண்ணியிருக்கான்.." என்றேன். இங்க தான் தம்பி கர்மா வேலை செய்யுது.. பாவம் ஒரு சங்கிலி தொடர் மாதிரி.. அந்த அம்மாவோட மகனும் பைக்'ல இருந்து கீழ விழுந்து கால் துண்டாகிடுச்சு.. இப்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்.. நான் அந்த இடத்தை அன்னைக்கு வாங்காம இருந்திருந்தா அந்த அம்மாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது தான.. அந்த அம்மா மகன் எல்லாரும் நல்லா இருந்திருப்பாங்க தான.. நான் அமைதியாகப் பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். இத்தனைக்கும் அந்த அம்மா என்னைத் திட்டுனதில்ல.. சாபம் விட்டதில்ல.. ஏமாத்திட்டீங்களே ஐயா.. அப்படின்னு ஈனஸ்வரத்துல புலம்பும்.. நான் கோடி கோடியா சம்பாதிச்சு இருக்கேன், ஆனா இப்ப அதெல்லாம் ஒரு மயிருக்கும் பிரயோஜனப்படல.. அதிகாலை ஐந்து மணிக்கு அவர் மறைமலை நகரில் இறங்கி கொண்டார். அதன் பிறகு பேருந்து நிலையத்தில் இருந்து வீடு வந்து சேரும் வரை அவர் கூறிய வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மண்ணை வாரி தூத்தல.. காது கூச கெட்ட வார்த்தையால திட்டல.. என் பொண்டாட்டி புள்ளைங்க மேல சாபம் விடல.. ஆனா என்னைப் பார்த்து வெம்பி அழுதா அந்தக் கிழவி.. அவளோட ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நான் பல சொட்டு இரத்தம் சிந்திக்கிட்டு இருக்கேன்.. அதான் தம்பி கர்மா.. உடம்புல ஒட்டுத் துணி இல்லாம நெருப்புல புரண்டு பரிகாரம் பண்ணாலும், என்னால அநியாயமா பாதிக்கப்பட்டு அழுதவனோட கண்ணீருக்கு நானும் என் வம்சமும் பதில் சொல்லியே ஆகணும்.. நமசிவாய🤟🤘 #கர்மா 🕉️