ஃபாலோவ்
💙 kalai 💙
@panjamugan
457
போஸ்ட்
1,775
பின்தொடர்பவர்கள்
💙 kalai 💙
803 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
*தவெக தலைவர் விஜய் கைது?* *கரூரில் 29 பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 'புஷ்பா-2' திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என ஐகோர்ட் கூறியிருந்தது.*😤😤😤 #"ஆழ்ந்த இரங்கல்"
💙 kalai 💙
884 காட்சிகள்
20 நாட்களுக்கு முன்
**🙏🏻 கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கர்மாவின் ரகசியம்.... நல்லவர்களுக்கு ஏன் துன்பம்? கெட்டவர்களுக்கு ஏன் இன்பம்? நம் அனைவருக்கும் அடிக்கடி மனதில் எழக்கூடிய கேள்வி ‘கர்மா என்பது உண்மை என்றால், கெட்டவர்கள் ஏன் தொடர் வெற்றிகளைப் பெறுகிறார்கள்? ஒருவர் செய்த பாவங்கள், அவரை எவ்வாறு தண்டிக்காமல் உள்ளது. அவர் மிகவும் நன்றாக, மகிழ்ச்சியாக இருக்கிறாரே, எப்போதும் நல்ல செயல்களைச் செய்தும், புண்ணியங்கள் சம்பாதித்தும் நம்மால் அவ்வளவு வெற்றி பெற முடியவில்லை’ என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. கர்மா குறித்து இந்தப் பதிவில் சில விஷயங்களைப் பார்ப்போம். கர்மா: ‘கர்மா இஸ் பூமராங்’ என்றுதான் இந்து மதம் சாராத வெள்ளைக் காரர்களும் சொல்கிறார்கள். உலகில் பெரும்பாலான மக்கள் கர்மாவை நம்புகிறார்கள். உலகில் பூர்வகுடி ஆன்மிகக் கோட்பாடுகள் அனைத்தும் செய்த பாவங்களுக்கு ஏற்ப தண்டனை கிடைக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளன. கர்மா என்பது நமது செயல்களின் விளைவுகளைக் குறிக்கிறது. நாம் ஒரு நல்ல செயலை செய்தால், நமக்கு அதன் வினையாக நல்ல செயல்கள் நிகழும். அதே நாம் ஒரு தீய செயல் செய்தால், அதன் பாவங்கள் நம்மை சூழ்ந்து துன்பப்பட வைக்கும். நல்ல செயல்கள் நன்மையும் தீய செயல்கள் துன்பத்தையும் தருகின்றன. தீயவர்கள் அதிகாரத்திற்கு வருகிறார்கள், ஊழல்வாதிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள், பேராசை பிடித்தவர்கள் செல்வத்தைக் குவிக்கிறார்கள், இரக்கம் அற்றவர்களிடம் பதவி இருக்கிறது. நேர்மையான ஒருவரால் அதிகாரத்திற்கு வர முடியவில்லை, ஊழலை எதிர்ப்பவனால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை, உதவி செய்ய நினைப்பவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு எந்தப் பதவியும் கிடைப்பதில்லை. சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதும் போராட்டத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்கின்றனர். அதனால், கர்மாவின் மீது சந்தேகம் எழுகிறது. கர்மாவை பற்றி புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், அது எப்போதும் செயலில் இருக்கிறது. வேகமான எதிர்வினையை அது உடனடியாகத் தருவதில்லை. கர்மாவின் வினைப்பயன் ஒருவரின் அந்தப் பிறவியில் மட்டும் முடிவதில்லை, அது தனது வினை தீரும் வரையில் அடுத்த பிறவியில் கூட தொடர்கிறது. இதையே தமிழில் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரம் கூறியுள்ளது. மகாபாரதத்தில் பீஷ்மர் அரச பதவி பெறக் கூடாது, பீஷ்மரின் சந்ததிகள் ஆட்சியில் பங்குக்கு வந்து விடக் கூடாது, அவர் இறுதிவரையில் பிரம்மச்சாரி ஆகவே இருக்க வேண்டும் என்று அவரது மாற்றாந்தாய் சத்தியவதி வாக்கு பெற்றுக் கொள்வாள். அதன் பின்னர் அரசுக்குரிய, சத்தியவதியின் மகன்கள் இருவரும் அற்ப ஆயுளில் இறந்து விடுவார்கள். சத்தியவதியின் வம்சாவளிகள் மகாபாரதப் போரில் பெருமளவில் அழிந்து விடுவார்கள். சத்தியவதி பீஷ்மரின் வம்சம் அரசாளக் கூடாது என்று பெரும் பாவத்தினை செய்தாள். அதன் பலனாக அவளது சந்ததிகள் யாரும் நிம்மதியாக அரியணையில் இருக்க முடியவில்லை. இந்த கர்ம வினை பரீட்சித்து மன்னர் வரை தொடர்ந்தது. ஒருவரின் கர்ம வினைகள் இப்படித்தான், அது நீண்ட காலம் அவரை பாதிப்பது மட்டுமல்லாது, அவரது சந்ததிகளையும் பாதிக்கும். பாவ செயல்களின் மூலம் கிடைத்து இருக்கும். அந்த வருவாயை அனுபவித்த அனைவருக்கும், அந்தப் பாவத்தின் பங்கில் இடம் இருக்கும். இராமாயணத்தில் தசரதன், கண் தெரியாத பெற்றோரின் மகனை அறியாமல் அம்பெய்தி கொன்றிருப்பான். அந்தப் பாவத்தின் பலனால் அவனும் தனது மகன் ராமனை பிரிந்து புத்திர சோகத்தால் உயிரிழந்து இருப்பான். ஒரு தீயவன் நிறைய செல்வமும் செல்வாக்கும் விரைவில் பெற்று பேரும் புகழோடு வாழ்கிறான் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அவன் தனது கர்ம வினையின் தீய பலன்களை அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறான் என்றுதான் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு நல்லவன் நிறைய துன்பங்களை அனுபவிக்கும் போது அவனுக்கான விடிவு காலத்தினை அவன் நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ளவும். அவன் முக்தி நோக்கி சென்று கொண்டிருப்பான் அல்லது இந்தப் பிறவியில் அவன் செய்த நல்வினைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். இதுதான் கர்மா!🌺கர்ம வினையின் அசுப பலத்தின் தாக்கத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஆனாலும் அதன் வீரியத்தின் வேகத்தின் தாக்கத்தின் அளவை இறைவன் எம்பெருமான் சிவன் அருளால் 💯 குறைத்து தற்காத்துக் கொள்ளலாம்... 🔥ஓம் நமச்சிவாய💥 சிவாய நம ஓம்🪷 என்றென்றும் ☀️நற்றுணை ஆவது🌼 நாதன் நாமம்🔥 நமச்சிவாய, வாழ்க 🙏 #🙏 ஓம் நமசிவாய
💙 kalai 💙
1.2K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
*பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்* பிள்ளையார்பட்டி என்று பெயர் வரக்காரணமே கற்பக விநாயகர் கோவில் இந்த ஊரில் அமைந்து இருப்பதுதான். இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயம், விநாயகர் வழிபாடுக்காக போற்றப்படும் ஆலயம். உலகின் பல இடங்களில் விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. விநாயகர் சிற்பங்களும் பல இடங்களில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நற்றுணையாகப் பற்றினேன் அடியேன். உலகத்திலேயே முதல் பிள்ளையாராக விளங்குவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிற்பம் என்றால் மிகையாகாது. உலகிலேயே இரண்டு கைகளுடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று பிள்ளையார் பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. ஆனாலும் பிற்கால அணிகலன்களுடன் அவர் காணப்படுகிறார். ஆனால் பிள்ளையார்பட்டியில் பிற்கால அணிகலன்கள் இல்லாமல் பழைய வடிவத்தில் காணப்படுவது சிறப்பாகும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு முற்கால பாண்டிய மன்னர்கள், குன்றைக் குடைந்து கோவிலையும், கற்பக விநாயகர் சிற்பத்தையும், திருவீசர் என்னும் லிங்கத்தையும் இவ்வூரில் வடிவமைத்துள்ளனர். கி.மு 500 முதல் கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் முயற்சி செய்தனர். அவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் எடுத்துக்கொண்டனர். அசுரர்கள் பாம்பின் தலை புறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்போது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை ‘பஞ்ச தருக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசிக்க பிரதான சாலையில் இருந்து தெற்குநோக்கி செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றால் அங்கே பிரமாண்டமான குளம் தென்படும். இந்த திருக்குளத்தில் கோவில் கோபுரத்தில் நிழல் விழுவது மிகச்சிறப்பாகும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்புறம் சென்று, கிழக்கே இருந்து கோபுர தரிசனம் முடித்துவிட்டு உள்ளே செல்லவேண்டும். அங்கே சிவபெருமான் திருவீசுவராக காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மை தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். கற்பக விநாயகரோ வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டு கரங்களுடனும், அங்குச பாசங்கள் இல்லாமலும் இங்கு காட்சி தருகிறார். அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடித்து அருள் புரிகிறார். இந்த அமைப்பு எல்லாம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரிடம் வித்தியாசமாக உள்ளது. கற்பக விநாயகரின் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி அதன் அருகிலேயே அவரது கையெழுத்தை கல்வெட்டில் செதுக்கியுள்ளார். எக்காட்டூர் கோன் பரணன் பெருந்தச்சன் என அவரது கையெழுத்து உள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர் தனது கையில் மோதகத்தை வைத்திருக்கவில்லை. யோக நிலையில் அமர்ந்து உலக நன்மைக்காக கையில் லிங்கத்தை வைத்து தியானம் செய்யும் திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். அவர் யோக விநாயகராக இருப்பதால் கேட்ட வரங்கள் எல்லாம் எளிதில் கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக வளைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வலம்புரி சங்கு போல் வலம்புரி துதிக்கையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வடக்கு திசையை நோக்கி இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் மட்டுமே. எனவே தான் பிள்ளையார்பட்டி வலம்புரி விநாயகரை வணங்குபவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி என்கிறார்கள். இந்த கோவிலில் திருமண வரம் தரும் காத்தாயினி வழிபாடு, செல்வ வளம் தரும் பசுபதிசுவரர் வழிபாடு சிறப்பானதாகும். இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரியது, விநாயகர் சதுர்த்தி திருவிழாவாகும். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 9 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டி விடுவார்கள். இத்திருவிழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் பல்வேறு பகுதியில் இருந்து கற்பக விநாயகரின் பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். ஒரு வருட காலத்திற்கு சதுர்த்தி நாட்களில் உண்ணாவிரதம் இருந்த பக்தர்கள், அதை நிறைவு செய்ய பிள்ளையார்பட்டி வந்து சேருவார்கள். விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று விநாயகர் சன்னிதியில் உண்ணாநோன்பு இருந்து கும்ப ஜெபத்தில் கலந்துகொள்வது சிறப்பாகும். இந்த கும்பத்தினை தரிசனம் செய்யும்போது கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு கணேசப்பெருமான் வாகனங்களில் திருவீதி உலா வருவார். இறுதி நாளில் தேர் பவனி நடைபெறும். வைகாசி மாதம் இவ்வூரின் காவல் தெய்வமான கொங்குநாச்சியம்மனின் கோவில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் இந்த ஆலயத்தோடு இணைந்தே திருவிழா நடைபெறும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் சுற்றி வருவார். திருக்கார்த்திகையன்று விநாயகப்பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப்பெருமானும் திருவீதி பவனி வர சொக்கப்பனை கொளுத்தப்பெறும். மார்கழித் திருவாதிரை நாளன்று நடராஜப்பெருமான் வீதி உலா வருவார். இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் தினத்தில் இருந்து மார்கழி மற்றும் தை மாதம் பூச நட்சத்திரம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களுக்காக கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடி - திருப்பத்தூருக்கு இடையில் குன்றக்குடிக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது.🌹🙏 #🕉️சதுர்த்தி விரதம்
See other profiles for amazing content