Follow
-
@pattaalu
18,627
Posts
47,188
Followers
-
385 views
1 days ago
AI indicator
😀😍😇😜😎😝😭😆😂 பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார். ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்.... நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்.... 😀😍😇😜😎😝😭😆😂 *மாணவன்* : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்! *ஆசிரியர்* : இப்பவாவது உணர்ந்தியே! *மாணவன்* : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது! 😀😍😇😜😎😝😭😆😂 *தொண்டன் 1*: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு? *தொண்டன் 2*: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம். 😀😍😇😜😎😝😭😆😂 *மருத்துவர்* : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு.. *பெண்* : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க. 😀😍😇😜😎😝😭😆😂 எல்லா *stage*'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா *கோமா stage*'ல டான்ஸ் ஆட முடியுமா? 😀😍😇😜😎😝😭😆😂 *டாக்டர்*: நீங்க பிழைக்கிறது கஷ்டம்... *நோயாளி*: ஏன் டாக்டர்? *டாக்டர்*: ஸ்டெதஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே.. 😀😍😇😜😎😝😭😆😂 *நோயாளி*: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை. *டாக்டர்* : இந்த டானிக்கை சாப்பிடுங்க. *நோயாளி*: சாப்பிட்டா இருமல் சரியாப் போயிடுமா ? *டாக்டர்*: no no...நல்லா இருமலாம்... 😀😍😇😜😎😝😭😆😂 *டாக்டர்* : தற்கொலைக்கு முயற்சி செஞ்சீங்களாமே? *நோயாளி*: ஆமா டாக்டர் வயித்துவலி பொறுக்கமுடியல.... *டாக்டர்*: நான் தான் நாளைக்கு ஆப்பரேஷன் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல.... ஒரு நாள் பொறுக்கமுடியாதா.... 😀😍😇😜😎😝😭😆😂 *ஒருவர்:* எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்? *டாக்டர்*: ஏன்? *ஒருவர்*: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்... 😀😍😇😜😎😝😭😆😂 *நடிகை*: ''டாக்டர்! எனக்கு பல்லு கூச்சமா இருக்கு !'' *டாக்டர்*: ''பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!'' 😀😍😇😜😎😝😭😆😂 *டாக்டர்*: தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும் *ஒருவர்*: இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன். என்ன... என் மனைவிதான் அதை காபினு சொல்றா.. 😀😍😇😅🤭😅😆 ''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.'' ''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்....''' 😀😍😇😜😎😝😭😆😂 ‘‘ஆபரேஷன் பண்ணி எப்படியாவது எங்க அப்பாவைக் காப்பாத்திடுவீங்கன்னு நினைச்சேன்...ஸ்ரீ ஏமாத்திட்டீங்களே டாக்டர்...’’ ‘‘நல்ல கதையா இருக்கே... நீங்களே வீணா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா பொறுப்பு?’’ 😀😍😇😜😎😝😭😆😂 ராமு :எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்காறு. தெரியுமா.? சோமு :இப்பத்தான் டைனோஸரஸே கிடையாதே.! ராமு :எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே.அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!!!!! 😀😍😇😜😎😝😭😆😂 சார்…மீனுக்கு புழு வாங்கணும், அங்கே பக்கத்துல கடை இருக்கா..? – ரேஷன் கடை இருக்கு பாருங்க…!! 😀😍😇😜😎😝😭😆😂 மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??" கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க" மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!" 😀😍😇😜😎😝😭😆😂 [11/11, 10:28 PM] S N R: ROFL:: மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க! கணவன்: ஏன் .. .. ? மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே. ---------------------------------------- 2. டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ? ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னுஎழுதி வெச்சிருக்காங்களாம். ------------------------------------------ 3. என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ? இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள். ----------------------------------------- 4. தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..? ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..? பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..? ------------------------------------------ 5. நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே... நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே? --------------------------------------------- 6. கணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட? மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க? கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்... ----------------------------------------------- 7. உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…! என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…! ------------------------------------------------- 8. டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்... பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்... டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !! பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?.. ------------------------------------------------- 9. பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை… நிஜமாவா? ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???.. -------------------------------------------- 10. என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க... என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா. அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்... எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே... ------------------------------------------- 11. எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..! இருந்தா? அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!! -------------------------------------------------- 12 நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்! நிஜமாவா, எப்படி? அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'... --------------------------------------------------- 17. பல்லு எப்படி விழுந்திச்சு? அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்! ----------------------------------------------------- 18. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம். பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..! ------------------------------------------------------------------ 19 டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்." நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?" ----------------------------------------------------------- 20 வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!. ------------------------------------------------------ 21. நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் ! நபர் : ஏன்? நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் ! ----------------------------------------------------- 22. நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க. டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன். ------------------------------------------------------------------- 23. மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல.............. கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........! மனைவி . . . . ???? #🤩அசத்தலான போஸ்ட்🔥
-
517 views
1 days ago
AI indicator
ஸ்ரீராமரை ஏன் சாப்பாட்டு ராமன் என்று அழைக்கிறார்கள்? ‘சரியான சாப்பாட்டு ராமன்’ என்று சாப்பாட்டு ப்ரியர்களை கிண்டல் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ராமனுக்கு ஏன் சாப்பாட்டு ராமன் என்று பெயர் வந்தது தெரியுமா? இராமருக்கு இப்படியொரு பெயரை யார் வைத்தது? அயோத்தியா நகரில் வடிகட்டின சோம்பேறியாக ஒரு வாலிபன் வாழ்ந்து வந்தான். வீட்டில் உண்பதையும், உறங்குவதையும் தவிர வேறு எந்த வேலையையுமே செய்ய மாட்டான்.அவனது வீட்டில் இருந்த அவனது சகோதரர்கள், சகோதரிகள் மற்ற உறவினர்கள் அவனிடம், ‘ஏதாவது ஒரு தொழிலைப் பழகச் சொன்னால்’ அவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல், ‘நான் இது நாள் வரை வேலை செய்யாமல் இருந்ததால் உடல் பருத்த என்னால் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் இன்னும் சற்று அதிகமாக சாப்பிடுகின்றேன்’ என்று அதற்கும் பதில் சொல்வதாய் சாப்பாட்டைக் கொண்டு வந்தான். பொறுத்து பொறுத்துப் பார்த்த அவனது பெற்றோர்கள், பிள்ளை இப்படி கண்ணெதிரே பொறுப்பில்லாமல் சோம்பேறியாகத் திரிகின்றானே என்று, அவனை எதாவது மடத்தில் சேர்ந்து விடு என்று கூறினார்கள். அவனும் ஊரில் உள்ள பல மடங்களுக்குச் சென்று வெளியே நின்று அங்குள்ள அனைவரும் குண்டாக இருக்கின்றனரா? இந்த மடத்தில் நல்ல நிறைவான உணவு கிடைக்குமா? என்று தினமும் சோதித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனது நீண்ட சோதனைக்குப் பிறகு, மடாதிபதி முதல் அனைவரும் திடகாத்திரமாக உள்ள ஒரு மடத்தை தேர்ந்தெடுத்தான். அந்த மடாதிபதியிடம் சென்று ‘ ஐயா! நான் தங்கள் மடத்தில் சேர நினைக்கின்றேன்’ என்றான். மடாதிபதியும், ‘என்ன வேலை செய்யமுடியும்?’ என்று கேட்டார். அவனோ, ‘நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன். எனக்கு உணவளித்து வேலை எதுவும் கூறாமல் என்னை பராமரிக்க வேண்டும்’ என்றான். ‘ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் எப்படி? சரி போகட்டும்! அந்த ராமன் சித்தம் போல இங்கேயே இரு’ என்றார். ‘இங்குள்ள அனைவரும் புஷ்டியாக, குண்டாக இருக்கின்றனர். எனவே தேவையான உணவு கொடுக்கின்றீர்கள் என்று தெரிகிறது. ஆனால் ஒரு வேண்டுகோள். தயவு செய்து எனக்கு மட்டும் மற்றோரைவிட சற்று கூடுதலாக உணவளிக்க வேண்டும் ’ என்று ரொம்ப அக்கறையாக மடாதிபதியிடம் சொன்னான். மடாதிபதியும் ஒப்புக்கொண்டார். தினமும் சமையலறைக்குள் சென்று நன்றாக பல்வேறு வகையான உணவுகள் தயாராவதைக் கண்டு அன்றைய உணவு திருப்தியாக கிடைக்கும் என்று உறுதி செய்துக் கொள்வான். அப்படி ஒரு நாள் சமையலறையில் எட்டிப் பார்க்கும் போது, யாருமே சமையல் செய்யவில்லை. உடனே மடாதிபதியிடம் சென்று, ‘இன்று ஏன் யாருமே சமையல் செய்யவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘இன்று ஏகாதசி, எல்லோருக்கும் இன்று உபவாசம்’ என்றார் மடாதிபதி. நம்ம வாலிபனுக்கு கோபம் தலைக்கேற ஆரம்பித்தது. ‘எனக்கு இதை முதலிலேயே ஏன் கூறவில்லை . கூறியிருந்தால் நான் இந்த மடத்தில் சேர்ந்திருக்கவே மாட்டேன். நீங்கள் எனக்கு எப்படியும் உணவளித்தே ஆகவேண்டும்’ என்றான். ‘இன்றைக்கு விதிப்படி யாரும் இங்கு உணவு கூடத்தில் உணவு தயார் செய்யக்கூடாது . அப்படி நீ அதிக பசியோடிருந்தால், வேண்டுமானால் இங்கிருக்கும் மளிகைப் பொருட்களைக் கொண்டுச் சென்று தூரத்தில் உள்ள மரத்தடியில் நீயே சமைத்து சாப்பிட்டுக் கொள்’ என்றார் .‘எனக்கு சமைக்கத் தெரியாது. சுவைபட சாப்பிட்டே பழகி விட்டேன். எப்படி இப்போது நான் சுவையில்லாமல் சமைத்து, அதை நானே உண்பது?’என்று கேட்டான். அதற்கு மடாதிபதியும் ‘நாங்கள் சமைப்பது கூட சமையல் செய்யும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்காது. ஆனால் ராமனுக்கு படைத்து, பின் உண்பதால் சுவையானதாகின்றது’ என்றார். அதுபோல நீயும் சமைத்ததும் உண்ணும் முன்பாக இராமனுக்கு படைத்த பின்னர் சாப்பிடு’ என்று சொல்லி அனுப்பினார். மடாதிபதி கூறியதுபோல மரத்தடியில் உணவை சமைத்த பின்னர், ‘ஹே ராமா! வா சாப்பிட்டு விட்டு போ !’ என்றழைத்தான். பல முறைகளாக இராமனை அழைத்தும் இராமன் வரவேயில்லை . ‘ஏய் எனக்கு பசி அதிகமாகின்றது . விரைந்து வா! இல்லாவிட்டால் நான் உயிரை விட வேண்டி வரும்.எனக்கு உயிர், உணவு இரண்டும் மிக மிக முக்கியமானது’ என்றான். சீதை, இராமனிடம் ‘வாருங்கள் ஒரு முறை ராமர் சீதையாக சென்று வரலாம்… பாவம் குழந்தை’ என்று ராமனை அழைத்தாள். இருவரும் அந்த மரத்தடிக்கு வந்தனர் புன்னகையுடன். அவர்கள் இருவருக்கும் உணவிட்டு, அவர்கள் உண்ணும் போது அவன் சீதையையும், உணவையும் வாடிய முகத்தோடு மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். இராமர், அவனை நோக்கி, ‘ஏன் நாங்கள் வந்தது உண்பது உனக்கு பிடிக்கவில்லையா?’ என்று கேட்டார். அதற்கு ரொம்பவும் அப்பாவியாக, ‘நான் உன்னை மட்டும் தானே சாப்பிட வா என்று அழைத்தேன். நீயோ சீதையையும் உடன் அழைத்து வந்திருக்கிறாயே? நீங்கள் இருவரும் சாப்பிட்டு முடித்தால், எனக்கு மீதம் உணவு இருக்குமோ இருக்காதோ? அப்படி உணவு மீதமாகவில்லை என்றால் என்ன செய்வது? அதுதான் கவலையாக இருக்கிறது’ என்றான். ஆனாலும் எனக்கு பசியின் கொடுமைப் பற்றி ரொம்ப நன்றாகத் தெரியும். நீங்கள் இருவரும் நன்றாகவே உண்ணுங்கள் என்றான். இராமனும், சீதையும் சாப்பிட்டு முடித்து சென்றதும் அவன் உண்டு மகிழ்ந்தான். அடுத்த ஏகாதசியன்று அவன் மரத்தடிக்கு போகும் முன் சீதையை நினைத்து மடாதிபதியிடம் சற்று அதிகமாக சமையல் பொருட்களை கேட்டான். அவரும் இவன் நன்கு உண்பவன் என்பதால் கேட்கிறதை கொடுத்து அனுப்பினார். இம்முறை சீதா, ராமருடன் லஷ்சுமணனும் வந்திருந்தார். இம்முறை லக்ஷ்மணனையும் சென்றமுறை சீதையை பார்த்து செய்ததையே செய்தான். அடுத்த ஏகாதசியன்று மனசுக்குள் லக்ஷ்மணனையும் நினைத்துக் கொண்டு, இன்னும் அதிகமாக மளிகைப் பொருட்களைக் கேட்க மடாதிபதி சற்றே ஆச்சரியத்துடன் அவன் கேட்டதைக் கொடுத்து அனுப்பினார். இம்முறை இராம, லக்ஷ்மண், சீதை, பரத சத்ருகன் வந்தனர். அவர்கள் செல்லும் முன், ‘ஏய் ராமா! என்ன நீ இங்கிதம் இல்லாது இப்படி ஒவ்வொரு முறையும் யாரையாவது அதிகமாக கூட்டி வருகிறாய். இது போதும் . இனி உன் பரிவாரத்துடன் வா’ என்றான். அடுத்த ஏகாதசியன்று இராமர் தன் பரிவாரமான வானர சைண்யத்துடன் வந்து விட்டான். ஓ என்ன செய்வது? மடாதிபதியிடம் சென்று, ஆயிரம் பேருக்குத் தேவையான சரக்கு தேவை என்றான். எந்தக் கேள்வியும் கேட்காமல், அவன் கேட்டவற்றைக் கொடுத்தனுப்பிய மடாதிபதியும் இவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வாலிபனைப் பின் தொடர்ந்தார். மூட்டையை தூக்கி வந்த அலுப்பினால் மரத்தடி சேர்ந்ததும் மூட்டையை இறக்கி வைத்த பின் உறங்கி விட்டான் . இராமர் அவனை எழுப்பி உணவு தயார் செய்யுமாறு கேட்டபோது, ‘ஹை நான் ஒருவனாக சமைக்க நீங்கள் பல பேர் உண்பதா? நீயும் உன் சேனையும் என்னை விட சோம்பேறிகளா? இன்று நீங்கள் சமையுங்கள் நான் உண்கிறேன்’ என்று சொல்லி தூங்கச் சென்றான் . அந்த வாலிபனைப் பின் தொடர்ந்து சென்ற மடாதிபதிகளின் கண்களுக்கு ராமனின் படை பரிவாரங்கள் தெரியவில்லை. அவர் சிஷ்யனை எழுப்பி, ‘ஏன் சமைக்காமல் படுத்துக் கொண்டு இருக்கிறாய்?’ என்று கேட்டார். இராமனும் அவனது சகோதரர்களும் இன்று சமைக்கின்றனர். சீதை காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கிறாள். வானர சைண்யம் அவர்களுக்கு சமையலில் உதவி செய்கிறது. நான் ஏன் அவர்களுக்கு சமைக்க வேண்டும்? அவர்கள் சேதுவையே சமைத்தார்கள். இது ஒரு பொருட்டா?’ என்று கேட்டான். ஒன்றுமறியாத மடாதிபதி, ‘இராமனை எனக்கு காட்டு’ என்று கேட்க அவனும், ‘ இராமா ஏன் மடாதிபதிக்கு உன்னை தெரியவில்லை? உடனே உன்னை காட்டிக் கொள்’ என்றான் . இராமர் அப்படி முடியாது என்றதும், ‘டேய் ராமா அந்த மடாதிபதி நான் ஒருவனே ஏகாதசியன்று அனைத்தும் தின்பதாக நினைக்கின்றார்.என் மேல் வீண் களங்கம் உன்னால் ஏற்படும். அவர் கோபத்தில் என்னை மடத்தில் சேர்க்கா விட்டால் உனக்கும் இனி ஏகாதசியன்று உணவு கிடைக்காது. என்னிடம் சாப்பிட்ட நன்றிக் கடனாக அவருக்கு காட்சி கொடு’ என்றான். இராமரும் தன் பரிவாரங்களுடன் கையில் கரண்டியை ஏந்தியபடி மடாதிபதிக்கு காட்சியளித்தார். மடாதிபதி ‘ஓ பிரபுவே! போஜராஜனே! இது என்ன லீலை’ என்று பக்தி பரவசத்துடன் கேட்க, இராமனும் ‘ஆசார்யரான தங்கள் வார்த்தை மட்டுமே பொருட்டாக என்னை அழைத்தான் . நான் அவன் அன்பான கள்ளங்கபடமற்ற பக்தியை சீதையும் அறிய இருவருமாக வந்தோம். அடுத்தடுத்து லக்ஷ்மண, பரத, சத்ருகன் மற்றும் வானரங்களும் உணர அவர்களை அழைத்து வந்தேன். இராம சேவையில், பக்தியில் தன் ஒப்பாரில்லை என்று கர்வம் கொண்டவர்கள் அனைவருக்கும் பாடமாக இந்த செயலைச் செய்து காட்டினேன்’ என்றார். இராமன், சாப்பாட்டு ராமனானது இப்படித் தான். #🤩அசத்தலான போஸ்ட்🔥