Follow
SakthiSure
@revathy4119
173
Posts
326
Followers
SakthiSure
538 views
8 hours ago
அத்தியாயம் 71 என்னடா பண்ணுவ ??? ... யாருன்னா இவங்க ??? ... கல்யாணம் என்ற பெயரில அவங்க வாழ்க்கை அழிச்சான்னு சொன்னேன்ல அது அவர்தான் ராவணன் .. மைத்ரேயின் ராவணன் அவன் ... அண்ணா !!! ... ம்ம் !!! ... என்று மட்டுமே சொல்லிவிட்டு விக்ரம் உள்ளே செல்ல  .... அப்பொழுது இருவர் மட்டும் தான் ... எதிரெதிரே இருக்க ... அவர்களின் மூச்சுக்காற்றும்  அனலாக தான் தெரிந்தது  ... 🔥 அந்த அளவுக்கு கோபத்தை இருவரும் உடல் மொழியில் உணர்த்துக் கொண்டிருக்க ... ஒரு கட்டத்தில் முடியாது என்பது போல _ " இன்னொரு வாட்டி .... என் பொண்டாட்டி பக்கம் நீ  திரும்பின " 🔥 ... "என்னடா பண்ணுவ ? ... இப்ப சொல்றத நல்ல கேட்டுக்கோ ... என்னோட ஃபுல் போக்கஸ்சும் இனிமே அவங்க மேல தான் இருக்கும் ... உன்னால முடிஞ்சத பாத்துக்கோ வரட்டா .. என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தருண் செல்லும்போது .. சொடக்கிட்டு திரும்ப அழைத்த ராவணனோ ... She is my life ♥️ ... you can't do anything about it , can you ??? .... அதற்கு சிறு புன்னகை மட்டும் சிந்தி விட்டு அங்கிருந்து தருண் சென்ற விட ... அதே சமயம் அந்த புன்னகையில் மறைந்திருக்கும் எண்ணங்கள் யார் அறிவார் ??? ... அது இராவணனையோ ஏதோ செய்து விட்டது !!! ... இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ... எனக்கு பாட்டி வேணும் ... ஆ !!! ... அவங்கள வர சொல்லுங்க ??? ... இப்பவே வந்தாகணும் ....  அப்பதான் நான் சாப்பிடுவேன் ... பிடிவாதம் பிடிக்காத வம்சி .... நேத்துல இருந்து நீ எதுவும் சாப்பிடல டா .. ஒரு வாய் வாங்கிக்கோ அம்மாவுக்காக . .. முடியாது !!! .... அவங்கள நீங்க சொல்லுங்க ??? ... அப்பதான் சாப்பிடுவேன் ... வம்சி அம்மா சொல்றதை கேளு ??? ... முடியாது 🔥 ... என்று வம்சி சொல்லிக் கொண்டே ... அவள் கையில் இருந்த சாப்பாடு தட்டை தூக்கி அடிக்க ...  அப்போது தட்டில் உள்ள  சாப்பாடு எல்லாம் மைத்ரேயின் மேல் பட்டு தெறித்து கீழே விழ ... அப்பொழுது !!! .... அச்சோ  என்னடி ஆச்சு ??? ... இப்படி இருக்கு ??? ... மைத்ரேயி யார் இதை பண்ணது ??? .. விடு ஜனனி ... என்ன விடு ??? ... ம்ம் !!! ... டேய் !!! ... வாண்டு இது உன்னோட வேலை தானே !! ... எதுக்குடா இப்படி பண்ண ??? .. அம்மா கிட்ட சாரி கேளு ... கேட்க முடியாது 🔥 .... அவங்கள போ சொல்லுங்க ??? ... எனக்கு பாட்டி வந்தாகணும் இப்பவே .... என்று .... மீண்டும் அடம் பிடிக்க ... ஏய் !!!! என்னடி இது ??? .. இப்படி அடம் பிடிக்கிறான் ... நீ பாட்டு அமைதியா இருக்க ??? ... ரெண்டு போடு ... போடு ... அடிச்சா மட்டும்  திருந்திருவானா ... வேற சாப்பாடு எடுத்துட்டு வர ... அவன சாப்பிட சொல்லு ... என்று சொல்லிக்கொண்டே கீழே சிதறி கிடந்த சாப்பாடை எல்லாம் தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு மைத்ரேயியோ சமையல் கட்டுக்குள் சென்று விட .. அப்பொழுது ... சாப்பிட முடியாது ... சாப்பிட முடியாது .... என்று சொல்லிக் கொண்டே வம்சி வெளியே ஓட  ... டேய் !!! ... டேய் !!! ... எங்க டா போற ... என்று கத்திக்கொண்டே ஜனனியும் அவன் பின்னால் ஓட ... அப்பொழுது வம்சியோ ஓடிய வேகத்தில்  சிதறி கிடந்த தண்ணீரை கவனிக்காமல் கால் வைக்க ... அதே சமயம் சாப்பாடு தட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்த மைத்ரேயியோ ...  அதை பார்த்து ஒரு நிமிடம் பெண் அவளுக்கு இதயமே நின்று போனது ..  அதில் கையில் இருந்த தட்டை கீழே போட்டு விட்டு ... பயத்தில் வம்சி என்று அலறிக்கொண்டு ஓடி வர ... அதுவோ வழுக்கிக் கொண்டு கீழே விழப்போனவனை ... தாங்கியது வலியை கரம் .... ஆம் !!! ராவணன் தான் ... அதே சமயம் அதை பார்த்துக் கொண்டிருந்த ஜனனியோ பெருமூச்சுடன் நல்லவேளை அண்ணா கரெக்ட் வந்துட்டீங்க  .... ம்ம் !!!! ... ஜனனி ... ஆமா !!! ...  இது யாரு குழந்தை ???  ... என்று ராவணன் கேட்கும் போதே  .... வம்சி என்று ஓடிவந்த மைத்ரேயியோ ...  ராவணனிடம் இருந்து பிடுங்கி கொண்டு ... அதே சமயம் ராவணனின் பார்வையில் தன் மைத்ரேயின் மீது படிய ... ஏன்டா !!! ... ஏன்டா !!! ... இப்படி பண்ற ??? .. கீழ விழுந்திருந்தனா ....  என்ன ஆகியிருக்கும் டா ... எங்கேயாவது வலிக்குதா ... உனக்கு அடிபட்டுடுச்சா ... ஏதாவது பதில் சொல்லு ???  ... அம்மா கிட்ட ... என்று சொல்லும்போது ராவணனின்  கண்கள் விரிய ..... எனக்கு பாட்டி வேணும் ... வர சொல்லுங்க ??? ... இப்பவே .... என்று சொல்லும்போது மைத்ரேயின் கண்களில் இருந்து கண்ணீர் ... மைத்ரேயி !!!  .... ஜனனி என்னடி பண்றது ??? ... நேத்துல இருந்து என் குழந்தை சாப்பிடல ... என்னால முடியலடி இல்லாதவங்க எப்படி வருவாங்க .. அவனுக்கு இதை இப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல எனக்கு தெரியல ???  .  ... அவனோட பிடிவாதம் எனக்கு பயமாயிருக்கு . ... பார்த்தல்ல !! ... என்று சொல்லும்போதே   ... குழந்தையை என்கிட்ட கொடு ... ம்ம் !!! ... ஜனனி ... அண்ணா டி ... ம்ம் !!! ... என்று முகத்தை திருப்பிக் கொண்டு  .. என்  குழந்தையை யார் கிட்டயும் தர முடியாது ... என்று சொல்லும்போதே  அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்த ராவணனோ ... பிரித்தெடுக்கும் அந்த சமயம் "அதில் அவள் உலகமே ஒரு நிமிடம் நின்றது போல இருக்க " 💔 ... அடுத்த நொடியே !!!  .... ஏய் !!! என்ன பண்ற ??? .. என் குழந்தை ... என்று மைத்ரேயி கத்தி கொண்டு இருக்க ... அந்நொடி அவளைப் பாராது ... குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல பார்க்கும் போது தான் ... என்ன  நினைத்தானோ !!! .... என்னமோ !!!! ... ஜனனி தம்பிய வெளிய கூட்டிட்டு போறேன் ... அவள அழ வேண்டாம்ன்னு சொல்லு !!! ...  அப்புறம் அவளும் சாப்பிடலாம் நினைக்கிறேன் சாப்பிட சொல்லு .... நான் இப்ப வந்துடறேன் ... மைத்ரேயி அண்ணா சொன்னது கேட்டுச்சா !!!  .. ம்ம் !!!! ... என்று மட்டும் சொல்லி விட்டு மைத்ரேயி விறு விறுவென்று  தன் ரூம் கதவை சாற்றி கொண்டு உள்ளே சென்று விட ... எப்போ !!!  புயலோஞ்ச மாதிரி இருக்கு ... ஆனா !!!! ரெண்டுத்துக்கும் ஒன்னும்  சளைச்சவங்க இல்ல ... சரியான ஆளுங்க தான் ரெண்டு பேரும் 🔥 ... இரண்டு மணி நேரம் கழித்து .... ஜனனி இப்படி இத கட் பண்ணு ... அப்ப தான் சாம்பருக்கு நல்லா இருக்கும் ... மைத்ரேயி இப்படியா ???  ... ம்ம் !!! ... அத நீட்ட வேணும் ... இங்க பாரு !!! ... எத்தனை வாட்டி சொல்றது ??? ... ஒருவாட்டி சொன்னா புரியாது ... இப்படி இல்ல அது இப்படி .. மறந்துட்டேன் ... அதுக்குள்ளயா ... ம்ம் !!! ... சமையல் பண்ணனும்னு ஆசைப்படுறேன் ... ஆனா !!!  எல்லாத்தையும் மறந்தா எப்படி ??? .. கொஞ்சம் சலிச்சுக்காம சொல்லுடி.  ... உனக்கே தெரியும் இல்ல ... நான் சாப்பிட்டே பழக்கப்பட்டேன் ... இத்தனை வருஷம் ... இப்பதான் ஒழுங்க சமைக்க ஆசைப்படுறேன் ..... அது சரிதான் .. அப்போ கொஞ்சம் ஆர்வமா இருடி ... இனிமே கரெக்டா இருக்கிற மேடம் .. நீங்க சொல்லிக்குடுங்க ... உன் பணிவ பாத்தா பயமா இருக்கு .... என்று சொல்லிக்கொண்டே வாசலை பார்த்தபடியே இருக்க. .. ஓய் !!! ... என்னாச்சு ??? ... அது ஒன்னும் இல்லடி ... அண்ணாவ தேடுறியா ??? ... ம்ம் !!! ..  என்னோட பிள்ளைய தேடற ... உன் அண்ணாவ கிடையாது ... நம்பிட்டேன் நம்பிட்டேன் ... சரி நீ நம்பு நம்பாம போ ... இப்ப சமையல் வேலையை பாரு ... சொல்லிக் கொடுத்த மாதிரி நீ தான் சமைக்கணும் ... சரிங்க மேடம் ... ஒரு நிமிஷம் !!! ... என்று சொல்லிக்கொண்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுக்க ... இப்ப எதுக்கு இதெல்லாம் எடுக்க ??? ... மொத வாட்டி ஒழுங்கா சமைக்க போறேன்  ... எதுவும் மிகப்பெரிய செஃப் கூட அதான் செல்பி ... அப்படியே இன்ஸ்டாகிராம் பேஸ்புக்ல எல்லாம்  போட்டுடலாம்னு ... விளங்கிடும் ... சரி நீயும் வா நம்ம ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக்கலாம் ... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ...  நீ மட்டும் எடுத்துக்கோ ... போடி என்று சொல்லிக்கொண்டே போனில் உள்ள கேமராவை ஆன் செய்ய ... உன்னையெல்லாம் எந்த லிஸ்ட் ல சேர்க்கறதுன்னு எனக்கு தெரியல என்று சொல்லிக் கொண்டே திரும்பும் போது தான் ... அதே சமயம் ... கை கால்களில் சிராய்புடன்  குழந்தை தூக்கி கொண்டு வந்தவனை பார்த்து ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ... ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி ... தொடரும் ... "ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.app.link/9zrPblI4R1b #Audio story #love #story #pratilipi stories #💝இதயத்தின் துடிப்பு நீ இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம் இந்த கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க அதுமட்டுமல்ல இது போட்டி கதை ... இதை படிக்கிறவங்க லிங்க் கொடுத்து இருக்கேன் பிடிச்சிருந்தா படிங்க friends
SakthiSure
983 views
6 days ago
அத்தியாயம் 12 என் செல்ல குட்டி என்று  சொல்லிக்கொண்டே .... அவளை தன் கைவளையில் மெல்ல அணைத்து கொண்டு ..  அவனும் கண் அசந்து விட .. அத்ரித் வீட்டில் ... சிறிது நேரத்தில் அவன் தடைகள் எல்லாம் உடைக்கும் விதமாக ... குளிருக்கு இதமாக அவன் மார்புச் சூட்டில் தஞ்சம் புகுந்தாள் அவன் தாரிகை ... அவனுமே  தூக்கத்திலேயே சிறு சிரிப்பை தந்துவிட்டு அவளை அணைத்துக் கொள்ள ... நிம்மதியாக அவன் கரம் வந்து சேர்ந்த நிம்மதியில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டாள் .. அவனும் அப்படித்தானே ... அவள் கரத்தை இறுக பற்றிக் கொண்டு  .... அவன் ராட்சசியை விடமாட்டேன் என்பது போல இருக்க .. நாளை  கரத்தை விடுவானா இல்ல அத்ரித்யின் கரம் கோர்த்த ராட்சசியாக இருப்பாளா ??? ... சிறிது நேரத்தில் எப்பொழுதும் போல கதிரவன் தன் பணிகளை  செவ்வனே  செய்ய ஆரம்பிக்க ... அதே சமயம் ... எப்பொழுதும் போல் காலை எழும் பழக்கம் கொண்ட நிலாவோ முதலில் பார்த்தது தன் அருகில் தன்னை கட்டிக்கொண்டு படுத்து இருக்கும்   கணவனை தான் ... அதேசமயம்  அவன் பிடி இறுக்கமாகும் நெருக்கமாகவும் இருக்க ... அதில் பெண்ணவள் ஒரு நிமிடம் தள்ளாடித்தான் போனால் அவன் செய்கையில் ... அது ஒரு நிமிடம் தான் ... அதே சமயம் நேற்று நடந்த  ஞாபகங்களை  நினைத்து  பார்க்கையில் தன்னை அறியாமலேயே பெண் அவளின் விழியோரம்   சிறு கண்ணீர் துளி சிந்த ... அதுவோ கன்னங்களைத் தாண்டி கழுத்துக்கு  சென்றடைந்து அவன் மார்பில் தஞ்சம் புக ... அதே சமயம் அதில் சூடான உமிழ் நீரை உணர்ந்த அத்ரிதோ ... மெல்ல தன் கண்களை விரிக்க ... அப்போது அவன் கண்ட காட்சி அவளை அனைத்திருப்பது தான் ... அதேசமயம் அவள் விழியில் வழிந்தோடும் கண்ணீரில் அதில் நேற்றைய ஞாபகங்கள் அவனுக்கு வந்து போக ... அதே சமயம்  பட்டென்று அவன் பிடியும் தளர  ... அதை உணர்ந்த நிலவோ  ... அடுத்த நிமிடமே அவளின் கண்களோ  இறுக்கியபடியே ஒரு விதம் நடுக்கத்துடன் அவன் அருகே இருக்க .  .. ஆனால் கண்களை மட்டும் கண்ணில் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது ... ஆனால் அவன் பார்வை மட்டும் அவளிடம் இருந்து விலக முடியவில்லை ... அது ஏன் என்றும் அவனுக்கு புரியவில்லை ... எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை ... அதேசமயம் செல்போன் அலறும் சத்தத்தில் தன்னிலைக்கு வந்த அத்ரிதோ ... ம்ம் !!! .. எங்க வெச்ச யோசித்துக் கொண்டே ... அவளிடம் இருந்து விலகி அவனோ ... அப்போது போன் இருக்கும் இடத்தை கவனிக்க ..... ச்சே  .. இப்போ எப்படி எடுக்கிறது ?? ... ஆமா !!! இது எப்படி போச்சு ... என்று யோசித்த அவனுக்கோ ... நேற்று நடந்தது ஞாபகம் வர ... அது தன்னால் தான் என்று புரிய ... ஐயோ !!! இப்போ ஏ டா குடமா மாட்டிக்கிச்சு ... இப்ப எழுப்பலாமா வேண்டாமா என்று பார்த்த அவனுக்கோ .. அவளின் கலங்கிய கண்கள் அவனை ஏதோ செய்ய .. இப்ப எழுப்ப வேண்டாம் நல்லா தூங்கிக்கிட்டு இருக்க .. அதே சமயம் அடில இருக்க போனை எடுக்கணும் .. . உனக்கு வந்து சோதனை டா இது ஏற்கனவே ... இவ கிட்ட நேத்து யோசித்து பார்த்த அவனுக்கோ ... ஐயோ !!! வந்து சிக்கிட்டேனே பங்கு ... இவள பங்கம் பண்ணலாம்னா ... என்ன வச்சி செஞ்சுட்டாங்க ... இவ பக்கம் போக கூடாது இனிமே ... அதேசமயம் செல்போன் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க. .. அதே சமயம் கண்களை மூடி கொண்டிருந்த நிலாவுக்கோ ஏதோ செய்ய ... கண்ண திறந்தா அதுக்கும் ஏதாவது சொல்லுவான் நம்ம எப்படி இங்க வந்தோம் ... ஒருவேளை தூக்கத்துல நடந்து வந்துட்டோமோ ... அப்படியே இருந்தாலும் அவன் போன் மேலயே அதுவும் கடவுளே போயும் ... போயும் ... எங்க போய் மாட்டி இருக்கு பாரு ... ஒரு மாதிரி ஆகுதே ... பேசாம எழும்பிடலாமா திட்டினாலும் பரவாயில்லை ... போன் இருக்கிற இடம் ரொம்ப டேஞ்சரஸ் ... அதே சமயம் அவள் மார்பின் நடுவில் குறுக்கே இருக்க ... ரொம்ப டார்ச்சர் பண்ணுதே என்று யோசித்துக் கொண்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டு இருந்த நிலாவுக்கோ ...  அது தரும் தொடர் இம்சைகளால்  அவஸ்தை ஆக ... இவன் வேற விடமாட்டான் போல ... வேற வழி இனி இந்த பக்கமே வரக்கூடாது ... போயும் ...  போயும் ... இந்த இடத்திலேயே சிக்கனும்  .. ஆ !!! ... பேசாம உருட்டி விட்டுடலாமா ... அப்ப கூட நான்தான் மாட்டுவேன் ... பேசாம கைய விட்டு எடுத்துடலாம் ... தூங்கிட்டு தானே இருக்க ... ...  என்று சொல்லும் போதே கண்களை மூடிக்கொண்டு அதைக் கேட்டுக் கொண்டு இருந்த நிலவுக்கோ ... இப்ப என்ன பண்றது ??? ... அவன் கிட்ட வரதுக்குள்ள ... நம்மளே கீழ விழுந்துடலாம் ... ஈஸ்வரா என காப்பாத்து என்று சொல்லிக் கொண்டே அடுத்த நொடி பெட்டில் இருந்து  உருள ஆரம்பிக்க ... அதேசமயம் அதை கண்டு கொண்ட மறுநொடி என்று நினைத்தானோ ... அவள் உருள  வண்ணம் தாவி பிடித்த அவனோ ... கீழே விழாதவாறு ... அதே சமயம் கண்களை திறந்த அவளோ ... முதலில் பார்த்தது அவன் கை வைத்திருக்கும் இடத்தை  பார்த்த அடுத்து நிமிடமே பெண் அவளோ அலறிய விட்டாள் ... அப்பொழுது தான் அதில் சுயம் உணர்ந்த அவனோ ... அப்பொழுது தான் அதை  கவனித்தான் மார்புக்கு குறுக்கே அவன் கைகள் உரிமையாக படர்ந்து இருப்பதை உணர ... அதில் ஒரு நிமிடம் நிலை தடுமாறிய அவனோ ... அடுத்த நிமிடமே விலகி விட ... ஆனால் நிலவோ பயத்தில் கத்துவதை விடவில்லை ... அதே சமயம் அந்த சத்தம் கேட்டு அடித்து பிடித்து மேலஓடி வந்த  காவியாவோ .... அவர்கள் இருக்கும் நிலை மறந்து கதவை திறந்து உள்ளே வருவது கூட தெரியாமல் ... அவளோ இன்னும் கத்திக் கொண்டுதான் இருந்தால். .. அதே சமயம் அவளை அடக்க வழி தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் ஆணவன் ... அப்பொழுது ஒரு குரல் கேட்க அதில் இருவருமே அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்க ... அம்மா ... அ .. அத்தை. .. என்ன ஆச்சு ??? ... எதுக்கு இப்படி கத்துன ... ஏதாவது ... அடக்கடவுளே !!! ... அ  .. அவங்க என்ன கீழ விழாம காப்பாத்த தான் செஞ்சாங்க ... நான்தான் பயத்துல கத்திட்டேன் .... அவங்க ஏதும் பண்ணல ... அவங்கள நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ...  என்று எடுத்துரைக்க ... அதே சமயம் அதைக் கேட்டுக் கொண்டே இருந்தவனுக்கோ  ... இவ்ளோ விளக்கம் சொல்றாலே அன்னைக்கே உண்மைய சொல்லி இருந்தா .. நான் எதுக்கு இப்படி நடந்துக்க போறேன் ... என்று யோசித்துக் கொண்டு இருக்க  ... சரி சீக்கிரமா குளிச்சிட்டு ரெண்டு பேரும் சாப்பிட வாங்க ... அம்மா ... உன் மேல இருக்க கோபம் எனக்கு போகல ... கொஞ்சம் டைம் வேணும் என்று ... சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்று விட ... சாரி என்னாலதானே  ... அதே சமயம் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் குளியலறைக்குள்  புகுந்து விட்டான் ... சிறிது நேரத்தில் . அத்தை உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணவா ??? . இங்க என்னம்மா வேலை இருக்கு  ... எல்லாத்தையும் வேலை செய்றவங்க பாத்துப்பாங்க ... நீ ஏதாவது டிவி பாக்கணும்னா பாரு இல்லன்னா கார்டன் இருக்க வெளிய அங்க போயி கொஞ்சம் சுத்தி பாரு மனசு ரிலாக்ஸா இருக்கும் ... அத்தை ஏதாவது வேலை கொடுங்க .. இவ்ளோ ஆசை  கேட்கிற இல்ல ... ம்ம் !!! ... என்ன வேலை கொடுக்கலாம் ... இனிமே நீ எல்லாருக்கும் நீ தான் சாப்பாடு  பரிமாறணும் ... முக்கியமா உன்னோட வீட்டுக்காரனுக்கு ... என்று  சொன்னதும் நிலவின் கண்கள் விரிய ... அதே சமயம் மாடி படிக்கட்டில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் அவன் ... நிலவை புரிந்து கொள்வானா  அத்ரித் ??? ... அபிஜித் தங்கையை கண்டுபிடிப்பானா ??? ... எதிர்பாராத திருப்பத்துடன் காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? .. கரம் கோர்த்த ராட்சசியே சீசன் 2  ... தொடரும் ... "கரம் கோர்த்த ராட்சசியே சீசன் 2 தொடர்கிறது ....", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.app.link/rIkTGgw8R1b #love #story #pratilipi stories #Audio story #💝இதயத்தின் துடிப்பு நீ இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
SakthiSure
402 views
10 days ago
https://youtu.be/aSZRcR9xHvQ?si=0HQ3h3uXTSz9Smy1அத்தியாயம் 63 ஒரு மாதம் கடந்த நிலையில் ... வழக்கம் போல் தன் வேலைகளை இருவரும் பார்த்துக் கொண்டிருக்க ... அன்று ஒரு நாள் ... என்னாச்சு டி ஒரு மாதிரி இருக்க ... காலையில இருந்து உன்னோட முகம் சரி இல்ல ... தெரியல மலர் ... ரொம்ப டயர்டா இருக்கு ... சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்துட்டேன் ... இது காலையில இருந்து ரொம்ப ... கீர்த்தனா ... காலேஜ் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சதும் ...  உடனே  ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்கு போலாம்  கீர்த்தனா ... ம்ம் !!! ... சிறிது நேரத்தில் ... ஒரு நிமிஷம் இரு கீர்த்தனா ... ஏய் ! எங்கடி போற மலர் . .. கொஞ்சமா அவசரம் அப்படி போயிட்டு வந்துடறேன்.   இப்படி தானடி போகணும் . . எங்க போற ... தங்கச்சி எங்க போறது இருக்கட்டும் ... நீ எங்க போற கீர்த்தனா ... ஹாஸ்பிடல் போகணும் டா அசோக் ... அடியே !!! மறுபடியும் சாப்பிடாம உடம்புக்கு  கெடுத்துக்குறியா ... என்னடி ஆச்சு உடம்புக்கு ... நீ எல்லாம் திருந்தவே மாட்டியா .. உனக்கு எத்தனை வாட்டி சொல்றது ??? ... ம்ம் .. ஏய் ! கொஞ்சம் என்ன பேச விடுறியா ... இப்ப எல்லாம் ஒழுங்காதான் சாப்பிடுறேன் ... ரெண்டு நாளா தான் ரொம்ப டயர்டா இருக்கு ... சாப்பிட்டதெல்லாம் வாந்தி வருதுடா ... ஏய் !  என்னடி ஆச்சு ??? ...இப்படி பயமுறுத்துற .... சரி வா ஹாஸ்பிடலுக்கு போகலாம் ... இல்லடா !!! ...  நீ யார் கூட வந்த அசோக் ... நான் யார் கூடயும் வரல டி ... அப்படியே கௌதம பார்த்துட்டு ... அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் ... ஓ ! பாக்க போலயா ... ம்ம் .. என் தங்கச்சி போய் இருக்கா பார்க்க ... ஓ !  அதுக்குத்தான் அவசரமா போனாளா ... வேற என்ன உன்ன மாதிரி இருக்க சொல்றியா ??? ... புருஷனை பார்த்தா கொஞ்சம் கட்டிப் பிடிக்கணும் ... கிஸ் கூட இல்லனா ! எப்படி டி ... அப்போ ! நீ என்கிட்ட இருந்து எதுவுமே வாங்கல ... பொய் எல்லாம் சொல்ல மாட்டேன் உன்னை கொடுத்திருக்கியே அது போதாதடி ... ம்ம் .. அப்போ !  வேற என்ன வேணும் சாருக்கு ... எல்லாம் வேணும் தான் வீட்டுக்கு போய் பேசலாமா ... அடிங் ... மறுபடியுமா ... போதும்டா நாலு நாளா ஒரு மாதிரியாவே இருந்தது .. எங்க அம்மா கேட்டாங்க உடம்பு சரியில்லன்னு சமாளிச்சுட்டேன் ... ஏண்டி உண்மையை சொல்ல வேண்டியது தானே ... நான் என்னமோ உன்ன தள்ளிடு போன மாதிரி பேசுற ... நீ என் பொண்டாட்டி டி ... எப்படி எனக்கே தெரியாம என் கல்யாணத்தை நடத்துன ... அதே மாதிரி இதுவும் அப்படி நடந்து போச்சுன்னு சொல்லவா ... ம்ம் .. ஆமால்ல ... சரிடா ஹாஸ்பிடல் என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு ... நான் உனக்கு போன் பண்றேன் ... கீர்த்தனா நம்ம ரெண்டு பேரும்  ஒன்னாவே இருக்கலாம் டி ... எனக்கும் ஆசைதான் அம்மாகிட்ட பேசிகிட்டு தான்டா இருக்கேன் ... அம்மா சொல்றாங்க என்ன உன் கூட இருக்க சொல்றாங்க ... அவங்க இங்கதான் இருப்பாங்களா ... அதுக்காகதாண்டா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் அவங்க சரின்னு சொன்ன உடனே நம்ம எல்லாரும் ஒன்னாவே இருக்கலாம் ... சீக்கிரம் டி நம்ம குடும்பமா இனிமே சந்தோஷமா இருக்கலாம் ... ம்ம் .. கண்டிப்பா .. சிறிது நேரத்துக்கு முன்பு ... மே கமிங் சார் ... உள்ள யாரும் இல்ல டி வாடி ... எதுக்குடா என்ன வர சொன்ன ??? .. யாராவது பாத்துற போறாங்க  .. கௌதம் ... பாக்கட்டும் ... என் பொண்டாட்டின்னு சொல்லுவேன் ... அப்புறம் ... அப்புறம் .. ரொம்ப இழுக்காத சொல்லு டைம் ஆகுது ... வீட்டுக்கு தானடி போற ... இல்லடா ஹாஸ்பிடல் போறேன் ... என்னாச்சு டி மலர்  ... நல்லா தானே இருக்க ... மறுபடியும்  எங்கேயாவது கீழே விழுந்துட்டியா ... ம்ம் !!! .. ஹாஸ்பிடல் போறேன்னு சொன்ன உடனே எப்படி யோசிக்கிற ... எனக்கு இல்லடா கீர்த்தனாவுக்கு ... தங்கச்சிக்கு என்ன ஆச்சு ??? .. தெரியல டா ... மயக்கம் வருதுன்னு சொன்னா சாப்பிட்டதெல்லாம் வாந்தியும் வருதுன்னு சொன்னா ... அதனால ஹாஸ்பிடல் போலாம்னு இருக்கேன் அவ கூட துணைக்கு ... இந்த சிம்ப்டம்ஸ் ... எனக்கு ஒன்னும் புரியல .. ஹாஸ்பிடல் போயிட்டு வரோம் ... என்ன எதுன்னு வீட்டுக்கு வந்து சொல்றேன் டா ... நான் இப்ப கிளம்புறேன் டைம் ஆயிடுச்சு ... அவ வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா ... சரி பார்த்து போ .... நீங்க ரெண்டு பேரும் தான் ... ம்ம் .. என்று சொல்லி கொண்டே வெளியே வந்த மலரோ  ... அப்பொழுது ... அசோக் அண்ணா இங்கதான் இருக்கீங்களா ??? ... கௌதம பாத்துட்டு போலன்னு வந்த அப்படி  உன்னையும் சேர்த்துதான் .. அப்போ இவள பாக்க வரலையா ... உங்க எல்லாரையும் பார்க்க தான் வந்தேன் போதுமா ... கௌதம் உள்ள தான இருக்கான் .. சரி நான் போயிட்டு வரேன் கீர்த்தனா ... நான் போயிட்டு வந்து தங்கச்சிமா .. ஹாஸ்பிடல் போயிட்டு உடனே ... என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு போன் பண்ணு ... சரிங்க ... சரி போலாமா ... என்று சொல்லிக்கொண்டு மலர் தன் பைக்கை  ஸ்டார்ட் செய்ய ... S . V . K  பிரபல கல்லூரியில் இருந்து ஆழ்வார் புறத்தில் இருந்து ஸ்டார்ட் செய்தவர்களோ ... அங்கிருந்து அழகர் கோவில் மெயின் ரோட்டிற்கு இருந்து ...அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கிருக்கும் சவுத் வெஸ்ட் இருக்கும் ஜவஹர் ரோட்டில் வண்டியை நேராக செலுத்த ... அதே சமயம் மிகப் பிரபலமான ரோஜா ஹாஸ்பிடல் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அடைந்த அவளோ ... கீர்த்தனா நீ இறங்கு ... நான் பைக் பார்க் பண்ணிட்டு வந்துடறேன் ... ம்ம் ..மலர்: சரி வா போலாம் ... ம்ம் .. இங்க உட்காரு ... நான் போய் டோக்கன் நம்பர் வாங்கிட்டு வரேன் .. ம்ம் .. சிறிது நேரத்தில் ... எத்தனை நம்பர் டோக்கன் டி மலர் ... நம்ம தான் லாஸ்ட்  ... ஓ ! அப்போ வீட்டுக்கு  லேட்டா தான் போகணுமா ... ம்ம் .. ஆனா சீக்கிரமா முடிஞ்சிடும் ... நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு ... 10 போங்க ... ஏய் !!! இப்பதான் பத்தே போகுது ... ம்ம் ... நம்ம எவ்ளோ .. 50 ... என்ன ??? .. ஷாக்க குறை  .. இப்படிங்கிறதுக்குள்ள போயிடும் .. போகும்டி நல்லா போகும் ... ரொம்ப நேரம் வெயிட் பண்ணனும் ... லேட்டா வந்தா அம்மா தேடுவாங்க ... உனக்கென்ன ... என்னையும் தேட இருக்காங்க .. அப்படி சொல்லல அண்ணா கிட்ட சொல்லிட்டு தானே வந்த ... ம்ம் ... நான் சொல்லாம வந்துட்டேன் ... அதுக்குத்தான் பயப்படுறேன். ... ஓ ! சாரதா ஆன்ட்டி கிட்ட நான் பேசுறேன் ... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ... ஏற்கனவே அம்மாவுக்கு உடம்பு சரியில்ல .. எனக்கும் சரி இல்லன்னு சொன்னா ! ... ரொம்ப கஷ்டம் டி ... புரிஞ்சுக்கோ ..  சரி சரி நான் எதுவும் சொல்லல ... ம்ம் ... 25 37 43 49 50 டோக்கன் போங்கப்பா ... என்று சொல்லும் போதே மணி எட்டை கடக்க ... வாடி போலாம் ... ம்ம் !!! ... என்று உள்ளே சென்ற இருவரும் ... உக்காருங்கம்மா ... யாருக்கு என்ன பிரச்சனை ??? ... டாக்டர் இவளுக்குத்தான் பாக்கணும் ... சொல்லுங்க ... எனக்கு அடிக்கடி வாந்தி வருது அது மட்டும் இல்ல மயக்கம் இரண்டு நல்ல அதிகமா இருக்கு ... சரி வாங்க செக் பண்ணிட்டு சொல்ற ... சிறிது நேரத்தில் .. கங்கிராட்ஸ் ... நீங்க பிரக்னண்டா இருக்கீங்க ...  அதனாலதான் உங்களுக்கு இப்படி சிம்ப்டம்ஸ் இருக்கு .. எத்தனை நாள் ஆச்சு கடைசியா பீரியட்ஸ் வந்து ... அது ... நவம்பர் 5 ... இப்போ டிசம்பர் 20 ... 45 டேஸ் .. நான் உங்களுக்கு அயன் டேப்லெட் எழுதி தரேன் ... அதுமட்டுமில்லாம இனிமேதான்  ஜாக்கிரதையா இருக்கணும் நல்லா சாப்பிடணும் .. நான் கொடுக்கிற டேப்லெட்ல மறக்காம சாப்பிடணும் ... அடுத்த வாட்டி வரும்போது ஹஸ்பண்ட் ஓட வாங்க ... கங்கிராட்ஸ் ... ம்ம் ... வா போலாம் ... ம்ம் ... ரொம்ப ஹேப்பியா இருக்குடி .. இந்த விஷயத்தை அண்ணாவுக்கு போன் பண்ணி சொல்லிடு ..  கங்கிராட்ஸ் ... தேங்க்யூ டி ... சீக்கிரம் சொல்லு .. அது மட்டும் இல்ல  அம்மாவுக்கு போன் பண்ணி பாட்டியாக போறேன் சொல்லு ... அப்புறம் அண்ணாக்கும் போன் பண்ணி மாமாவாக போறேன் நான் அத்தையாக போற சொல்லிட்டேன் ... ஹேப்பியா இருக்கு ...  சீக்கிரம் சொல்லு அசோக் அண்ணா ரொம்ப சந்தோஷப்படுவாங்க ... ம்ம் ... ஏ !!!! .. உன்னோட முகம் இப்படி டல்லா இருக்கு ... அது ... வந்து ... என்ன ஆச்சு ??? ... அம்மா கிட்ட சொல்றது ??? ... எப்படின்னு ... ஓ ! அதுக்குத்தான் பயப்படுறீங்களா ??? ... மேடம் ... ம்ம் ... ஏய் ! நீ நினைக்கிற மாதிரி ... எதுவும் நடக்காது ... வா வீட்டுக்கு போகலாம் ... ம்ம் ... ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன் ... ம்ம் .. போலாமா ... ம்ம் .. சிறிது நேரத்தில் ... அடுத்த பத்து நிமிடத்தில் ஜவகர் ரோட்டில் இருந்து மாட்டுத்தாவணிக்கு வர ... என்னாச்சு கீர்த்தி இவ்ளோ லேட்டா வந்திருக்க ??? ... வா மா மலர் ... எப்படி இருக்க ??? ... நல்லா இருக்கேன் சாரதா ஆன்ட்டி ... நீங்க எப்படி இருக்கீங்க ?? .. நான் நல்லா இருக்கேன்  ... சரி வாம்மா உள்ள போய் பேசலாம் ... ம்ம் ... வா கீர்த்தனா ... ம்ம் ... என்ன ஆச்சு டி  இவ்ளோ லேட்டா வந்திருக்கா ... முகம் எல்லாம் சரியில்லாத மாதிரி இருக்கு ... என்னாச்சு ??? .. உடம்புக்கு ஏதாவது .. ஆன்ட்டி படாதீங்க .. ஆன்ட்டி நீங்க பாட்டியாக போறீங்க .. என்ன சொல்ற இவ ... ஆன்ட்டி கீர்த்தனா பிரக்னன்ட் ... ம்ம் .. அவ சொல்றது உண்மையா ... ம்ம் ... சொல்லுடி ... ம்ம் .. ஏண்டி ...  ஏண்டி ... இப்படி பண்ண ???  ... என்ன அவசரம் அதுக்குள்ள ... என்று கை நீட்டி கோபத்தில் ஒரு அடி அடித்த விட .. ஆ .. அம்மா ... என்று வலி தாங்க முடியாமல் கத்தி விட்ட ... கீர்த்தனவை பார்த்த சாரதா ... அடுத்த நொடியே ஐயோ தெரியாம அடிச்சுட்டேன் சாமி வலிக்குதா மா ... அம்மாடி என் பிள்ளை வலி கூட தாங்காதே ... அம்மாடி வலிக்குதா என்று தடவி விட ... ஒரு நிமிடம் தன் வலியை மறந்து .. இல்லம்மா நான் தப்பு பண்ணதுனால தான் அடிச்சீங்க ... உங்க கையாள கொன்னு போட்டு இருந்தா கூட பரவாயில்லை .. அம்மாடி பேசாத அம்மா அப்படி ... வாயும் வயிருமா இருந்துட்டு ... ஆன்ட்டி நீங்க பரவாயில்ல தான .. எனக்கு என்னம்மா ... நான் நல்லா தான் இருக்கேன் .. என் பிள்ளைய அடிச்சிட்டேன் அவ்வளவுதான் .... ஆன்ட்டி உங்களுக்கு இதுல ... இது கடவுள் கொடுத்தது ... ஆமா ! ஆன்ட்டி நீங்க கரெக்டா சொன்னீங்க ??? .. மலர் ... நான் இல்ல .... அங்க பாருங்க அண்ணா ... தம்பி வாங்க வாங்க ... சீக்கிரம் அந்த ஷேர் எடுத்து போடு ... அதெல்லாம் வேண்டாம் ... நாங்க கீழே உட்கார்ந்துக்கிறோம் ... கங்கிராட்ஸ் மா  ... தேங்க்ஸ் அண்ணா ... கீர்த்தனா ...  காத்திருங்கள் அடுத்த பதிவில் ?? ... தொடரும் ... "தாயுமானவன்", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.app.link/wmV2a4hJB1b இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம் #love #story #pratilipi stories #Audio story #💝இதயத்தின் துடிப்பு நீ