ஃபாலோவ்
செந்thilகுமார்
@senthil5821
12,843
போஸ்ட்
44,646
பின்தொடர்பவர்கள்
செந்thilகுமார்
2.1K காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
செலவே இல்லாமல் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் மருந்து ஒன்றினை பார்ப்போமா.... நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு செலவே இல்லாமல் மூன்று மூலப்பொருட்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம். வெந்தயம் - 250 கிராம், ஓமம் - 100 கிராம், கருஞ்சீரகம் - 50 கிராம். மேலே உள்ள மூன்று பொருட்களை சுத்தம் செய்து தனித்தனியாக வறுத்து தூள் செய்து கலவையை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இக்கலவையை ஒரு டீஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக்கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ☆ நன்மைகள்: 1) நம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக் கழிவுகள் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு நீக்கப்படுகிறது. 2) ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. இதயம் சீராக இயங்க உதவுகிறது. 3) சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும் தோளில் மினுமினுப்பும் சுறுசுறுப்பும் உண்டாகிறது. 4) எலும்புகள் உறுதி அடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலிமை அடைகிறது. கண்பார்வை, நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. 5) மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகளை நீக்குகிறது. 6) நீரிழிவுநோய் பராமரிக்கப்படுகிறது. இந்த கலவையை இரண்டு, மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது..... #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💊சர்க்கரை நோய்
செந்thilகுமார்
1.7K காட்சிகள்
4 மணி நேரத்துக்கு முன்
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது. இன்று அதிகாலை முதல் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகி வருகிறது, இன்று சென்னை முதல் ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழை வாய்ப்பு உள்ளது, குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை வாய்ப்பு உள்ளது. நாளை திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது, அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது, மற்ற உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. நாளை மறுதினம் அனைத்து கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது, அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது, மற்ற அனைத்து உள் மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கும் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. 19 முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழையின் பரப்பளவு குறைந்து ஆங்காங்கே தொடரும், மீண்டும் 22 ஆம் தேதி முதல் மழை அதிகரிக்கும். #🌧️மழைக்கால மீம்ஸ்😆
செந்thilகுமார்
555 காட்சிகள்
4 மணி நேரத்துக்கு முன்
சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள் இனியும் அலட்சியம் வேண்டாம். நம் உடலில் சிறுநீரகத்தின் வேலை என்பது மகத்தானது. அதை கண்டுகொள்ளாமல் விடுவது நமக்கு மிகப்பெரும் பின் விளைவுகளை உண்டாகும். குறிப்பாக சிறுநீரக நோயாள் அவஸ்தை ஏற்பட கூடும். இதனை முன்கூட்டியே அறிந்து கொண்டு இதிலிருந்து விடுதலை பெற வேண்டும். இதனை ஒரு சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ள முடியும். தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பொதுவான அறிகுறியாக இருக்கிறது. காரணம் சிறுநீரகமானது சரியான முறையில் நச்சுக்களை வடிகட்ட முடியாமல் போனால் அவை இரத்தத்தில் கலந்து தங்கிவிடுகின்றன. இதனால் சிறுநீரகம் வழியாக வெளியேர முடியாமல் அவை இரத்ததிலேயே தங்குவதால் தூக்கமின்மை பிரச்னை வருகிறது. நீங்கள் சமீப நாட்களாக சரும பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்கிறீர்கள் எனில் அதற்கு சிறுநீரகம் பாதிப்பு காரணமாக இருக்கலாம். சருமத்தில் கடுமையான வறட்சி, அரிப்பு போன்றவை நீரிழப்பு மற்றும் எலும்பு பாதிப்புகளை உணர்த்தும். சிறுநீரக நோய்கள் பெரியோர்பிடல் எடிமாவை ஏற்படுத்தும், இது கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும். கண்களைச் சுற்றியுள்ள இந்த வீக்கம் சிறுநீரகத்திலிருந்து அதிக அளவு புரதத்தை உடலில் வைத்திருப்பதற்கு பதிலாக சிறுநீர் வழியாக வெளியேற்றுவதன் காரணமாக இருக்கலாம். சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு பொதுவானது. உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி பிடிப்புகள் ஏற்படுகின்றன. பிடிப்புகள் நரம்பு சேதம் மற்றும் இரத்த ஓட்ட பிரச்சனைகளாலும் ஏற்படுகின்றன. பலவீனமான சிறுநீரக செயல்பாடு காரணமாகவும் இருக்கலாம். சில நேரங்களில் சிறுநீரகங்கள் கூடுதல் திரவத்தை அகற்ற முடியாமல் போகும்போது, அது சில நேரங்களில் கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் கைகளில் வீக்கத்தை உண்டாக்குகிறது. சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுவது சிறுநீரக நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தால், சிறுநீரக நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீரக வடிகட்டிகள் சேதமடைந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க தூண்டும். கடுமையான பசி மற்றும் எடை இழப்பு ஆகியவை சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். உலகிலேயே விலை மதிக்க முடியாத சொத்து நமது உடல் அவற்றை பாதுகாத்துக் கொள்வது நமது முதல் கடமை. உங்கள் உடலை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். #🏋🏼‍♂️ஆரோக்கியம்
See other profiles for amazing content