தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது.
இன்று அதிகாலை முதல் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகி வருகிறது, இன்று சென்னை முதல் ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழை வாய்ப்பு உள்ளது, குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை வாய்ப்பு உள்ளது.
நாளை திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது,
அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது,
மற்ற உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.
நாளை மறுதினம் அனைத்து கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது, அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது,
மற்ற அனைத்து உள் மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கும் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
19 முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழையின் பரப்பளவு குறைந்து ஆங்காங்கே தொடரும், மீண்டும் 22 ஆம் தேதி முதல் மழை அதிகரிக்கும்.
#🌧️மழைக்கால மீம்ஸ்😆