#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏கோவில் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 மாதமே தமிழர் புத்தாண்டு)))))))
இந்துமதத் தந்தை 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் எழுத்துக் குவியல்களிலிருந்து “தையே தமிழ் புத்தாண்டு“என்பதன் விளக்கம் வழங்கியுள்ளதை தமிழர்கள் அனைவரும் படித்து அறிந்து, புரிந்துக்கொள்ள, பயன்படுத்திட சிறு தொகுப்பை வழங்குகிறோம்.
“பொதுவாக நாட்டு வழக்கில்; “தை பிறந்தால் வழி பிறக்கும்” - என்ற பழமொழி, என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது.
ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
நாள், கிழமை, வாரம், வாரத்தின் ஏழுநாட்கள், மாதம், ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய நாட்கள், ஒவ்வொரு மாதத்திற்கும் பெயர், 12 மாதம் சேர்ந்தது ஓர் ஆண்டு, ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயர், 60 ஆண்டுகள் சேர்ந்து இவ்வுலகின் இயக்கம், இவ்வுலகம் கடந்த வானவெளி சஞ்சாரம், முதலியவை அனைத்தும் ஒரு வட்டமாகின்றன; அதாவது முடிவு பெறுகின்றன; அதாவது முழுமை பெறுகின்றன. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 61வது ஆண்டை முதல் ஆண்டாக மீண்டும் கருத முடிகின்றது.
இதற்குக் காரணம் வானவெளி ஆராய்ச்சி, நிலவியல் ஆராய்ச்சி... முதலியவைகளில் இளமுறியாக் கண்டத்து மக்கள் மிகுந்த தேர்ச்சியைப் பெற்றிருந்தனர்.
அது மட்டுமல்ல, மக்கள் சாதாரணமாக இரண்டு அறுபது ஆண்டுகள் அல்லது மூன்று அறுபது ஆண்டுகள் காலம் என்று 120 முதல் 180 வயது வரை வாழுகிறவர்கள் அதிகமாக இருந்திட்டார்கள்.
அதனால் 60 ஆண்டுக்கொருமுறை நாள்நிலை, கோள்நிலை, மீன்நிலை, இராசிநிலை, இயற்கை வளம், ... முதலியவைகள் எல்லாம் திருப்பம் அடைகின்றன.
அதாவது அறுபது ஆண்டுக்கொரு முறை எல்லாமே மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகின்றன என்பதுதான் இளமுறியாக் கண்டத்து மக்கள் தங்களுடைய வாழ்நாளின் சோதனைகளின் மூலம் சாதித்த சாதனைகள் ஆகும்.
இச்சாதனைதான் இந்து வேதமாக, இந்துமதமாகப் பூத்துக் காய்த்து கனிந்து குலுங்குகின்றன.”
”உலகம் முழுவதும் சனவரி மாதத்தை ஆண்டின் ஆரம்ப மாதமாக, முதல் மாதமாகக் கருதுகின்ற மரபு தமிழர்களுடைய மரபுதான்.
தமிழர்கள்தான்; இந்த நான்காவது யுகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைமாதம் [சனவரி மாதம்] முதல்மாதமாக ஆண்டின் துவக்க மாதமாக இருந்ததை மாற்றினார்கள்; அல்லது மாற்றிக் கொள்ளும்படிச் செய்யப்பட்டார்கள்.
அதாவது இந்துவேதப்படி தை மாதம்தான் ஆண்டின் துவக்க மாதம்; ஆண்டின் முதல்மாதம்.
ஆனால், இப்பொழுது சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டின் துவக்க மாதமாக; முதல் மாதமாகக் கொண்டாடப் படுகின்றது.இதுபற்றி இக்கலியுகத்தில் 3001 முதல் 3250 முடிய செயல்பட்டிட்ட ‘சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கரூரிலுள்ள பசுபதீசுவரர் ஆலயத்தை நிர்மாணித்த; 10வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள்தான்’; தமது குருபாரம்பரிய நூலிலும், இலக்கிய பாரம்பரிய நூலிலும், அரச பாரம்பரிய நூலிலும் நேரடியாகத் ‘தமிழரின் புத்தாண்டுத் துவக்கம் தை மாதமாகத்தான் இருந்தது' என்பதையும்; காலப்போக்கில் சித்திரை மாதம் புத்தாண்டின் துவக்க மாதமாக, முதல் மாதமாக, ஆரம்ப மாதமாக மாற்றப் பட்டிட்டது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.”
தை மாதத்தின் சிறப்புக்கள் அல்லது இந்துவேதத்தில் தை மாதத்தின் சிறப்புக்கள்:
அண்டபேரண்டங்களிலிருந்து இந்த உலகம் வெறும் தண்ணீரால் ஆன உருண்டையாக இருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள்ளிலிருந்து கற்பாறைகள், கல் பரவலாக உள்ள இந்துமாக்கடல் பகுதியில் கல் மலைகள் வெளிப்பட ஆரம்பித்த காலத்தில்தான்; அண்டபேரண்டங்களிலிருந்து மூலப் பதினெண்சித்தர்களும், மூலப்பதினெட்டாம்படிக் கருப்புக்களும் அவர்களது துணைவர்களும் இவ்வுலகுக்கு வந்து கற்பாறைகள் மேல் தங்கி தங்களுடைய ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர்.
அந்த நிகழ்ச்சி தை மாதத்தில்தான் நடந்தது.இதுபற்றி மிகத் தெளிவான செய்திகள், மணுநீதி நூல்களிலும், இந்து வேதத்திலும், இந்துவேத நூல்களிலும், இந்துமத நூல்களிலும், ஆதிசிவனாரின் குருபாரம்பரியத்திலும், இலக்கிய பாரம்பரியத்திலும், அரச பாரம்பரியத்திலும் இருக்கின்றன.
இம்மண்ணுலகில் வாழ்ந்த மணீசர்கள் (மண் + ஈசர்கள்= மண்ணின் தலைவர்கள்) விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த நிலைமையினை மாற்றி, அவர்களைப் பக்குவப்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிட அனாதிசிவன்களான மணுநீதியார்கள் இம்மண்ணுலகத்திற்கு வர ஆரம்பித்த காலம் தை மாதமேயாகும்.
(1) ஆதிசிவனார் இம்மண்ணுலகுக்கு வந்த காலம் தை மாதமேயாகும்.
(2) ஆதிசிவனார் இப்பாரில் (பார் + உலகம்) வாழ்ந்து கொண்டிருந்த (வதிந்து கொண்டிருந்த = வசித்துக் கொண்டு இருந்த) பெண்ணான பார்வதியை (பார் + வதி = இவ்வுலகத்தைச் சேர்ந்த பெண்) மணந்து கொண்டது தை மாதத்தில்தான் (தைப்பூச நாளில்). அதுவும் தைப்பூச நாளன்று.
(3) ஆதிசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த முருகன் தை மாதத்தில்தான்; தைப்பூச மீனில்தான், தைப்பூச யோகத்தில்தான் பிறந்தான்.
(4) தைமாதத்தில்தான் திருப்பாற்கடல் கடையப்பட்டு இலக்குமியும், அமுதும், ஆலகால நஞ்சும் வெளிப்பட்டனர்.
(5) தேவாசுரப் போர் தைமாதத்தில்தான் துவங்கியது. தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் மீண்டும் மீண்டும் இடைவெளி விட்டு தைமாதத்திலேயே நிகழ்ந்தது தேவாசுரப்போர்.இந்தப் போர் முடிவுக்கு வந்ததும் தைமாதத்தில்தான்.
(6) முருகன் தேவாசுரப் போரை நிகழ்த்திட அருட்படை (தேவர்களுடைய படை) சேனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றதும் தை மாதத்தில்தான்.
(7) முருகன் தெய்வானையை மணந்ததும், வள்ளியை மணந்ததும் தை மாதத்தில், தைப்பூசத்தில்தான்.
(8) ஆதிசிவனார், இளமுறியாக் கண்டம் எனும் குமரிக் கண்டத்தில் திருவிடம் என்ற தீவை தேர்ந்தெடுத்து இந்து வேதத்திற்காகவும், இந்து மதத்திற்காகவும், தமிழ்மொழிக்காகவும் செயல்படத் துவங்கியது தை மாதத்தில்தான்.....
....... ......
....... .......
இந்தியாவிற்கு அன்னியமான ஆங்கிலேயர்களுடைய ஆண்டுக் கணக்கினைப் பின்பற்றி ஆண்டுப்பிறப்பை கொண்டாடுவது போல், தமிழர்களின் மெய்யான இந்துமத ஆண்டுக் கணக்கை மட்டுமே உலகம் முழுதும் பின்பற்றும் நிலையைக் கொண்டு வருவோம் என்று உறுதி கொள்வோமாக!
தமிழர்க்கு மதம் உண்டு அதுவே பதினெண் சித்தர்கள் அருளிய ‘சித்தர் நெறி’ எனும் ‘சீவநெறியான’‘சைவ நெறி’ எனும் ‘மெய்யான இந்து மதம்’. சமசுகிருத சனதான வருணாசிரமம் எனும் சாதி பேதங்களைக் கூறும் ஹிந்து மதம் என்ற பெயரில் வாழ்வது பிறாமணர்களுடைய மதமே!
-அருளியவர் இந்துமதத்தந்தை 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்.
நன்றி: குருதேவர் சித்தர் அரசயோகிக் கருவூறார் தத்துவத் தொகுப்பு தலமையகம், சென்னை.