சந்தானக்குரவர்கள் நால்வர் வாழ்க்கை வரலாறு பகுதி -4-
உமாபதி சிவாச்சாரியார்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் வரலாறு பகுதி இன்றுடன் நிறைவு அடைந்தது இப்பகுதி ஆதரவு கொடுத்து அனைத்து அடியார்க்கு சிரமம் தாழ்த்தி வணங்குகிறேன்
அதனைத்தொடர்ந்து நாளை முதல் திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியங்கள் பகுதி
ஆரம்பம்
சிதம்பரேசா ! நடராஜா !!
சிவபெருமானுக்கு தொண்டு புரிந்த சந்தான குரவர்கள் வரலாறு
4. உமாபதி சிவாச்சாரியார் 🌹
சிவமயம்
பெயர்: உமாபதி சிவம்
குலம்: அந்தணர்
பூசை நாள்: சித்திரை ஹஸ்தம்
அவதாரத் தலம்: தில்லை
முக்தித் தலம்: தில்லை
🍃நற்றுணையாவது நமச்சிவாயவே
*பிறக்க வைப்பதும் அவனே சிறக்க வைப்பதும் அவனே துறக்க வைப்பதும் அவனே பிறப்பு அறுப்பதும் அவனே மறத்தல் ஆகாது மனமே மறையோனை நினை தினமே*
சிவ சிவ 🙏
திருச்சிற்றம்பலம்🙏
என்றும் சிவ பணியில்
சிவபக்தன் 🙏🏻
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
அறுபத்து மூன்று நாயன்மார்களில் வரலாறு பகுதி படம் பாடல் உதவி அனைத்து அடியார்க்கு நன்றி நன்றி அடியேன்
திருத் தொண்டின் நெறி வாழ்க!
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
வாழ்க்கை புராணம் 🌹
தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார், சைவ சித்தாந்த சந்தானக் குரவர்களுள் ஒருவர். தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். அவரின் அறிவுத் திறனை உணர்ந்த சோழ மன்னன் அவருக்கு முத்துப்பல்லக்கு, நாகரா போன்றவற்றை அளித்திருந்தான். ஒரு நாள் இவர் நடராஜரைத் தரிசித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது சைவ சித்தாந்த சந்தானக் குரவரான மறைஞானசம்பந்தர் அவர் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். உமாபதி சிவாசாரியார் தெருவைக் கடந்து செல்லுவதை மறைஞானசம்பந்தரின் சீடர்கள் கூறினர். உடனே மறைஞானசம்பந்தர், "பட்ட கட்டையில் பகற்குருடன் போகிறது!" என்றார். இதைக் கேட்ட உமாபதி சிவாசாரியாருக்கு அச்சொற்களின் ஆழ்ந்த கருத்து புலப்பட உடனே மறைஞானசம்பந்தரின் காலில் விழுந்து அவரைத் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். மறைஞானசம்பந்தரும் மிகுந்த கல்வியுடைய பக்குவமுடையவரான உமாபதி சிவத்தைத் தன் சீடராக ஏற்றார். ஒருநாள் தன் ஞானகுருவான மறைஞானசம்பந்தருடன் நெசவாளர் தெருவழியாக நடந்து செல்லுகையில் துணிக்குப் போடும் கஞ்சியை எடுத்துக் குடித்தார் மறைஞானசம்பந்தர். அந்தக் கஞ்சியானது அவரின் முழங்கை வழியே வழிந்தது. வழிந்த கஞ்சியை ஒரு பிரசாதமாய்க் கருதித் தானும் பருகினார் உமாபதி சிவாச்சாரியார். எச்சில் உண்டதால் ஆசாரத்திலிருந்து நீங்கியதாகத் தில்லை தீக்ஷிதர்கள் அவரைத் தங்கள் குழுவில் இருந்து விலக்கி வைத்தனர். அன்றிலிருந்து தில்லைக்கு வெளியே கொற்றவன் குடி என்னும் இடத்திலே தங்கி இருந்து வந்தார் உமாபதி சிவாசாரியார். இவர் தம் குரு மறைஞானசம்பந்தரிடம் சைவ சித்தாந்தம் பயின்றார்.
ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப் பட்டது, ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப் பட்டார். உமாபதி சிவாசாரியார் கொடிக்கவி என்னும் நூலை ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி, ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியது. தில்லை வாழந்தணரும் பிறரும் இவர்தம் பெருமை கண்டு வியந்தனர்.அக்காலத்தில், பெற்றான் சாம்பான் என்ற சிவனடியார் ஒருவர் இருந்தார். தில்லைத் திருக்கோயில் மடைப்பள்ளிக்கு, நாள்தோறும் விறகு கொடுக்கும் திருப்பணியை மேற்கொண்டிருந்தார். பற்றற்று, பலன் ஏதும் கருதாமல், சிவபரம்பொருளை சிந்தித்துப் பணிபுரிந்த அவர் தம் பக்குவ நிலையின் காரணமாக ஈசன் அவர் தம் கனவில் எழுந்தருளி, ""அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் குடியார்க்கெழுதிய கைச் சீட்டு - படியின் மிசைப் பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து முத்தி கொடுக்க முறை'' என்ற வெண்பாவைத் திருமுகமாகத் தந்து, உமாபதியாரிடம் கொடுக்கும் வண்ணம் பணித்தார். கனவில் கண்டபடி, திருமுக ஓலை பெற்றான் சாம்பானின் கையில் இருந்தது. உமாபதியாரின் திருமடத்திற்கும் பெற்றான் சாம்பான் விறகு உதவத் தொடங்கினார். ஒருநாள் உமாபதி சிவாச்சாரியரைக் கண்ட பெற்றான் சாம்பான், சிற்றம்பலவன் தந்தருளிய திருமுகத்தைப் பணிவுடன் தந்து வணங்கி நின்றார். தம் வழிபடு தெய்வமாகிய ஆடலரசன் அனுப்பிய திருமுகத்தைப் படித்த உமாபதியார், பெற்றான் சாம்பானுக்கு, "சத்தியோ நிர்வாண' தீட்சையை செய்து முத்தியளித்தார். பெற்றான் சாம்பான் உடலோடு முத்தி பெற்றார்.பெற்றான் சாம்பான் முத்தி பெற்றதை உணர முடியாத சாம்பானின் மனைவி, உமாபதியார், ஏதோ மந்திரத்தால், தம் கணவனை எரித்துவிட்டதாக மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் உமாபதியார் மடத்துக்கு வந்து விசாரித்தான். சிவபரம்பொருளின் அடியவரான உமாபதியாரும் உண்மையைக் கூறி விளக்கினார். வேந்தன் உணர்ந்தபோதும், பெற்றான் சாம்பான் மனைவியும் பிறரும் கண்டுணரும் வண்ணம் மற்றொரு முறை அவ்வற்புதத்தைச் செய்தருள வேண்டும் என்றான் மன்னன். அதற்கு உடன்பட்ட உமாபதி சிவாசாரியார், அப்போது, அவ்விடத்தில் முத்திப்பேறு அடையும் பக்குவமுடையவர் எவரும் இல்லாத காரணத்தால், தாம், நாள்தோறும் சிவனார்க்குப் பூசை செய்யும்போது விழும் திருமஞ்சன நீரால், புண்ணியம் மிக்கு வளர்ந்திருந்த முள்ளிச் செடியைக் காட்டி, அதற்கு முத்தியளிப்பதாகக் கூறி, அம் முள்ளிச் செடிக்கு தீட்சையளித்தார். முள்ளிச் செடியும் பேரொளியோடு முத்தி பெற்றது. அவ்வற்புதத்தை வேந்தனும் பிறரும் கண்டு வியந்தனர்.சைவ சித்தாந்த சந்தான நூல்களில் இவர் இயற்றிய நூல்கள் எட்டு ஆகும். அவை சித்தாந்த அட்டகம் எனப் போற்றப்படுபவை. கோயிற்புராணம் என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் சேக்கிழார் புராணம் என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர், பௌஷ்கர ஆகமம் என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் உமாபதி சிவாச்சாரியார். சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனோடு கலந்தவர்.
சித்தாந்த அட்டகம் 🌹
.சிவப்பிரகாசம்
.திருவருட்பயன்
.வினா வெண்பா
.போற்றி பற்றொடை
.கொடிக்கவி
.நெஞ்சு விடு தூது
.உண்மை நெறி விளக்கம்
.சங்கற்ப நிராகரணம்
இவை தவிர அவர் பல நூல்களும் எழுதியுள்ளார் (இவை உமாபதியார் திருமுறை மீது கொண்டிருந்த உயர்ந்த மரியாதையைக் காட்டுகின்றன)
.கோயிற் புராணம்
.திருமுறை கண்ட புராணம்
.திருத்தொண்டர் புராண வரலாறு / சேக்கிழார் புராணம்
.திருத்தொண்டர் புராண சாரம்
.திருப்பதிக் கோவை
.திருப்பதிகக் கோவை
தேவார அருள்முறைத் திரட்டு
.ஞானாச்சார்ய சாஸ்திர பஞ்சகம்
...
திருச்சிற்றம்பலம் 🌹
உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை
சித்திரை ஹஸ்தம்
~~~~~~~~~~~~~~~~
உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.
மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே. இவர் வடமொழியிலும் திறமை பெற்றிருந்ததால், அம் மொழியிலிருந்த பௌஷ்கராகமத்துக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்னும் பெயரில் தெளிவுரையும் எழுதியுள்ளார்.
சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.
13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர்.
===========
எந்த சிவாலயங்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் தராது அப்பன் திருவிளையாடல் காட்டிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இவரின் கொடிக்கவியை பாடினால் இவ்வூழி முடியும், முடித்து கொடுக்கப்படும் என்பது அடியேனின் நம்பிக்கை.
"ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளடராது உயிர்க்குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துளதேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும்படிக் கொடிகட்டினனே
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவேது – அருளாளா
நீபுரவாவையமெலாம் நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.
வாக்காலு மிக்கமனத்தாலு மெக்காலும்
தாக்கா வுணர்வரிய தன்மையினை – நோக்கிப் பிரித்தறிவு தம்மிற் பிரியாமைதானே
குறிக்கு மருணல்கக் கொடி.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாநெழுத்து நாலெழுத்து
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்து – நெஞ்சழுத்தி
பேசுமெழுத்துடனே பேசாவெழுத்தினையுங்
கூசாமற் காட்ட கொடி."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உமாபதி சிவபெருந்தகையின் திருப்பாத கமலங்களுக்கும் என் அய்யன் தில்லை சபேசனின் திருப்பதங்களுக்கும் எம் வணக்கங்கள்
எல்லாம் எம் நடராஜபெருமான் க்ருபை
ஸ்ரீ நடராஜ மஹாராஜோ விஜயதே
ஸ்ரீ த்யாகராஜ மஹாராஜோ விஜயதே
முள்ளிச்செடிக்கும் முக்தி
பெத்தான் சாம்பான் என்பவன் சிறுவயதிலிருந்தே நடராஜர் மீது பக்தி கொண்டிருந்தான். கல்வியறிவு இல்லாத அவன், உமாபதி சிவாச்சாரியாரின் பக்தி பற்றி கேள்விப்பட்டான். அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் தொண்டு செய்ய விரும்பினான். உமாபதி சிவாச்சாரியாரின் மடத்திற்குச் சென்று அன்றாடம் தேவைப்படும் விறகுக்கட்டு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.
மழைக்காலம் ஆரம்பித்தது.பெத்தான் சாம்பவனால் காட்டிற்குச் சென்று விறகு வெட்ட முடியவில்லை. உமாபதி சிவாச்சாரியார் சேவை செய்ய முடியவில்லையே என வருந்தினான். 'அப்பனே !நடராஜா! அடியாருக்கு சேவை செய்யாத பாவியாகி விட்டேனே…' எனக் கதறினான். நடராஜப் பெருமானே நேரில் தோன்றி ஆறுதல் சொன்னதோடு, 'அடியாருக்கு எளியன்' எனத் தொடங்கும் பாடல் எழுதிய ஓலைச்சுவடியை கொடுத்தார்.
"இப்போதே இந்த ஓலைச் சுவடியை சிவாச்சாரியாரிடம் சேர்த்துவிடு" என்று சொல்லி மறைந்தார்.
அதன்படியே சிவாச்சாரியார் அவனுக்கு தீட்சையளித்து முக்தி அடையச் செய்தார்.
இதை அறிந்த ஊரார் சிவாச்சாரியார் மீது சந்தேகம் கொண்டனர்.
அவர்களின் கண்ணெதிரே மடத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த நீரில் முளைத்திருந்த முள்ளிச் செடிக்கு தீட்சை அளித்து முக்தி அடையச் செய்தார். இதை கண்ட அனைவரும் உமாபதி சிவாச்சாரியாரின் பக்தி கண்டு வியந்தனர்.
உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி🙏
சந்தனக்குரவர்கள்
அகச்சந்தான குரவர்கள்
1. திருநந்திதேவர் - thirunandhi dhEvar
2. சனற்குமாரர் - sanath kumArar
3. சத்தியஞான தரிசினிகள் -
sathya nyAna dharshinigaL
4. பரஞ்சோதியார் - paranychOdhi munivar
புறச்சந்தனக்குரவர்கள் நால்வர்
1. மெய்கண்டர் - meykaNDAr
2. அருள் நந்தி சிவாச்சாரியார் - aruNan^dhi shivam
3. மறைஞான சம்பந்தர் - maRainyAna chamban^dhar
4. உமாபதி சிவாச்சாரியார் - umApathi shivAchchAriyAr
இவர்களில் உமாபதி சிவம் என்ற சந்தனக்குரவரின் குருபூசை நாள் 25/4/2021 இன்றைய நாளில் அவர்தம் சிறப்பினை நினைவு கொள்வோம்.
உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.
இளமைக் காலம்
13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர்.
நூல்கள்
மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே.
என்றும் சிவ பணியில்
சிவபக்தன் 🙏🏻
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
அறுபத்து மூன்று நாயன்மார்களில் வரலாறு பகுதி படம் பாடல் உதவி அனைத்து அடியார்க்கு நன்றி நன்றி அடியேன்
திருத் தொண்டின் நெறி வாழ்க!
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
கொடிக்கவி பாடிய வரலாறு
சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.
#🙏ஆன்மீகம்