Follow
sivasenthil
@sivasenthil3183
50,494
Posts
10,297
Followers
sivasenthil
531 views
17 days ago
*🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 அன்பான வார்த்தைகளையே உன் நா பேசட்டும்.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 "கல்லால மர நிழலில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அருள் பாலித்த நீலகண்டப் பெருமானே!" என்று எல்லா மொழியாலும் தேவர்கள் தொழுது நிற்க, யாவருக்கும் நன்மை அளிக்கும் நல்லம் எனும் நகரில் விளங்கும் முக்கண் மூர்த்தி அடியார்க்கு எளிதில் அருள் புரிபவர் ஆவார். மக்கள் யாவரும் இவரை வணங்கி நலம் பெறுவார்களாக.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 திருநள்ளத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் இறைவன் பூமிநாதர் அருளுடன் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் சிவ காலை வணக்கம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻* #🙏ஆன்மீகம்
sivasenthil
2.4K views
17 days ago
*🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸மயிலேறி விளையாடும் சுப்ரமண்யா!* *வடிவேலா உன்பாதம் நம்பினேனே.* *உயிரிழந்து அபகீர்த்தியாகும் வேளை,* *உன்செயலால் இதுசமயம் உயிரைக்காத்தாய்.* *தயவாக இனிமேலும் உயிரைக் காத்து* *சண்முகனே, அடியார்தம் துயரம் தீர்ப்பாய்.* *வயிபோக மானமலைப் பழநிவேலா,* *வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !* *🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 அருள்மிகு கார்த்திகேயனின் அருளுடன் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் சந்தோஷமான செவ்வாய்க்கிழமை காலை வாழ்த்துக்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க சந்தோஷமுடன்.🙌🏻🙌🏻🙌🏻* #🙏ஆன்மீகம்
sivasenthil
550 views
17 days ago
சிவ சிவ வணக்கம்! (எஞ்ஞானம் இல்லாதேன், கண்ணாடிபோல் கண்டதை காட்டுகின்றேனே) திருமந்திரம். பாடல் எண் ; 310. தோன்றிய எல்லாந் துடைப்பன் அவனன்றி ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. ----- திருமூலர். எக்காலத்தும் யாண்டும் எல்லாவற்றையும் ஒருங்கு படைப்பவன் சிவன். அம் முறையான் அவன் அந்தத்தைச் செய்கின்றவன் ஆவன். அதனால் அவனை மெய்கண்ட நூல் அந்தம் என ஓதிற்று. பேரொடுக்கத்தைச் செய்பவன் சிவனே. அவனையன்றி வேறு யாரும் இலர். அவனே ஆண்டான். அவன் திருவடியை ஏன்று நின்றார் நடுவு நின்றாராவர். அவன் திருப் பெயராகிய ‘சிவயநம' என்னும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தினைத் திருவருளால் இடையறாது முயன்று உளங்கனிந்து ஓதினவரும், அவ் வைந்தெழுத்தினையே அறிவுபற்றி நின்றவரும் நடுவு நின்றாராவர் என்கின்றார். இத் திருமறை நடுவு நின்றார் தன்மையினை நவிலுகின்றது. நான்று - பற்றி. திருச்சிற்றம்பலம்... #🙏ஆன்மீகம்
sivasenthil
998 views
17 days ago
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁நித்தம்மலர் தூவியடி நினைவார்தம் இடர்தீர்ப்பான்_ _🍁பத்துமுடி அரக்கனழப் பாதவிரல் ஊன்றியவன்_ _🍁மத்தம்மதி திகழ்முடிமேல் வாளரவும் வைத்துகந்த_ _🍁பித்தனெனும் பேருடையான் பேரூரெம் பெருமானே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_பேரூரில் உறைகின்ற எம் பெருமான் ஊமத்த மலரும் சந்திரனும் விளங்கும் தலையின்மேல் கொடிய பாம்பையும் தாங்கி மகிழ்பவன் !! பேரருளாளன் என்ற பெயரை உடையவன் !! பத்துத்தலை இராவணன் அழும்படி திருப்பாத‌ விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன் !! தினமும் பூக்களைத் தூவித் திருவடியை நினைந்து தொழும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம்
sivasenthil
614 views
17 days ago
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏பெரியபுராணம்🙏* *☀️திருமுறை1️⃣2️⃣☀️* *🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்* *🦚பாடல்:1445///4272🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை மடுத்தருளி நேரே முன்னாள் ஆண்டஅர செழுந்தருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளை யாருங் காண்தகைய பெருவிருப்புக் கைம்மிக்க திருவுள்ளக் கருத்தி னோடு மூண்டஅருள் மனத்தன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார். ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *நீண்ட மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் கொடிய சூலைநோயைத் தந்தருளி நேரே ஆண்டருளிய நாவுக்கரசர் வருகின்றார் என்ற செய்தியைக் கேட்டருளிய ஞானசம்பந்தரும், அவரைக் காண்டற்குப் பெருவிருப்பு மீதூர, அருள் கொண்ட மனமுடைய அடியார்கள் பலரும் சூழ்ந்து வர, எழுந்தருளி அவர் முன்னர் வந்தார்.* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸சேக்கிழார்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
sivasenthil
1.2K views
17 days ago
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருமந்திரம்🌹🙏* *☀️திருமுறை🔟☀️* *🦚பாடல்:2804///3000🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹உள்ளத்துள் ஓம்என ஈசன் ஒருவனை 🌹உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை 🌹உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை 🌹உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *மனமண்டலத்துள் ஓங்காரமாகி நிற்பவன் ஈசன். அவன் அக்கினியைப் போல ஒளிர்பவன். அவன் நீதி மயமானவன். அவனைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனமண்டலத்தைச் சூழ்ந்துள்ள உடம்பு வானம் ஆகும்.* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸திருமூலர்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
sivasenthil
541 views
17 days ago
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை4️⃣☀️* *🌹திருப்பூந்துருத்தி🌹* *🦚பாடல்:0848///1070🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹அருகடை மாலையுந் தானுடை யானழ காலமைந்த உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான் பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் திய்யுறையும் திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *அருகில் இடையிடையே பச்சிலைகளை வைத்துத் தொடுத்த மாலையை உடையவனாய், அழகார்ந்த நாயகியாம் பார்வதி ஒருபாகம் பொருந்தப் பெற்றவனாய், கலப்பினால் உலகெலாமாகி நிற்பவனாய், போரிடும் படைக்கலன்களாகிய வில்லினையும் வேலினையும் உடையவனாய், பூந்துருத்தியுள் உறையும் செல்வத்தை உடைய ஒளி வீசும் பிறைசூடியை அடியேன் அவனடிக்கண் பணிந்து வணங்குகிறேன்.* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருநாவுக்கரசர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
sivasenthil
2.4K views
17 days ago
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை3️⃣☀️* *🌹திருக்கோகரணம்🌹* *🦚பாடல்:0848///1358🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹முறைத்திறமு றப்பொருடெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய் மறைத்திற மறத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடம் துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக் குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு சாரன்மலி கோகரணமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் சிவ பெருமான் முறையோடு உபதேசித்தார். வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச் சமயங்களை வகுத்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு, மூங்கில்களைத் தள்ளி, மதகுகளைச் சிதைத்து, யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம் என்னும் தலமாகும்.* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருஞானசம்பந்தர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
sivasenthil
642 views
17 days ago
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருவருட்பா🌹🙏* *☀️திருமுறை2️⃣☀️* *🦚இரண்டாம் தொகுதி🦚* *🌹புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்🌹* *🌷திருவொற்றியூர்🌷* _🌻அஃதாவது புணர்ந்து இன்புறுத்துவார் போலப் பயின்று புணரா தொழுகும் சூழ்ச்சியை இறைவன் மேற்கொள்ளுதலால், பெருந்திணை நங்கை வேட்கை மீதூர்ந்து ஆற்றாமையால் தோழிக்குச் சொல்லி வருந்துவதாம். புணரா விரகு - புணரா தொழுகும் சூழ்ச்சி. பொருந்துறு வேட்கை, புணராமையால் உள்ளத்தில் தோன்றி மிகும் வேட்கை. வேட்கை மீதூர்தலால் “விண்ணினைக் குத்தி மெய்யிளைப்பவர் போல்” மெலிவுற் றுரைத்தல், வேட்கையின் இரங்கல் எனக் குறிக்கப்படுகிறது._ *🦚பாடல்:1628///5818🦚* ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ 🌹பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய் உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் உடையார் உற்றிலரே எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள் ஏறாமட்டும் ஏறுகின் றாள் செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *விளக்கம் :* *எருதேறும் பெருமானும், பிரமதேவனும் அறியமாட்டாத பேரொளிப் பொருளாகிய சிவபெருமானும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவனுமாகிய தியாகப் பெருமான் இன்னும் என்பால் வந்தாரில்லை; அதன் விளைவை என்னென்பேன்; என் செவிலித்தாய் தன் வாய் கொண்ட மட்டும் பேசி யேசுகிறாள்; சினம் சிறிதும் தணியாளாகின்றாள்; இதனால் செய்வதறியாது திகைக்கின்றேன்.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🦚🔥வள்ளலார்🔥🦚* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
sivasenthil
582 views
17 days ago
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣    *திருமுறை ஓதுவோம்*      *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠     *_🌷சிவ வணக்கம்🌷_* *🌷சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்  உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷        *🌷சிவன் துதி🌷* *🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_சமய குரவர்கள் துதி_* *🌷பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி !!* *🌷ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி !!* *🌷வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி !!* *🌷ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_திருஞானசம்பந்தர் சுவாமிகள்_* *🌷பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் குண்டரை வென்று முன் கூடல் வைகியே வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.* *_திருநாவுக்கரசு சுவாமிகள்_* *🌷பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.* *_சுந்தரமூர்த்தி சுவாமிகள்_* *🌷வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.* *_மாணிக்கவாசகர் சுவாமிகள்_* *🌷கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_* #🙏ஆன்மீகம்