Follow
Udhayanidhi Stalin
@udhaystalin
86
Posts
39,414
Followers
Udhayanidhi Stalin
14.6K views
5 years ago
‘வேளாண் மசோதா, எட்டு வழிச்சாலை, ஸ்டைர்லைட் துப்பாக்கி சூடு, நீட் விலக்கு நாடகம்... இப்படி இந்த ஆட்சியை தக்கவைக்க நான்தான் அதிகம் உழைக்கிறேன்’- இது ஒருவர். ‘குடியுரிமை திருத்தச்சட்டம், இந்தி திணிப்பு. இருந்தும் ஆட்சிக்காக அவரைவிட நானே சிறந்த அடிமையாக இருக்கேன்’- இது இன்னொருவர். அடிமைகள் தூது நடக்கிறது. ‘நீங்க அவர்னு இல்லை. நாம எல்லாருமே அடிமை என்பதால்தான் ஆட்சி ஓடிட்டு இருக்கு. சேகர் ரெட்டி, கன்டெயினர் லாரி, குட்கா டைரி, ஆர்.கே நகர் ரெய்டு, பொள்ளாச்சி கேஸ், கொடநாடு கொலை, பி.எம். கிசான் ஊழல்... பதிலுக்கு இப்படி அவர்களும் அன்பளிப்பு அளிக்கிறார்கள். ‘இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை. மிச்சமிருக்கும் மாதத்தையும் கமிஷன் கலெக்ஷனு ஓட்டிடுவோம்.’ இப்படியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தள்ளது. இதில் கொரோனாதான் பாவம். கடந்த சில நாட்களாக அது மக்களை தீண்டும் வேகம் அதிகரித்தாலும் அதை சீண்டத்தான் யாருமில்லை. #DMKYouthWing
Udhayanidhi Stalin
10.4K views
5 years ago
ஆன்மிகம் - வலதுசாரி சிந்தனையில் ஆழ்ந்த பற்றுக்கொண்டிருந்த இந்து முன்னணி நிறுவனர் பெரியவர் இராம.கோபாலனின் மறைவு வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட அவரது சகாக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். #dmkyouthwing
Udhayanidhi Stalin
8.4K views
5 years ago
பாபர் மசூதி இருந்தது- அவ்வழிபாட்டுத்தலம் நம் கண் முன்னே இடிக்கப்பட்டது - பாஜக அழைப்பில் அதிமுகவினர் உட்பட பலர் கரசேவைக்கு சென்றது - எல்லாம் நிஜம். இவ்வளவு சான்றுகள் இருந்தும் சிபிஐ அவற்றை நிரூபிக்காமால் விட்டது, பாஜகவின் அறிவிக்கப்படாத அணியாக அது செயல்படுகிறதோ என தோன்றுகிறது. இப்படி தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரத்தை நசுக்கி அவற்றை தனது துணை அமைப்புகளாக்கும் பாஜகவின் செயல் இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரானது. இந்திய ஒன்றியத்தை காக்க நடுநிலையாளர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமில்லாமல் உரக்க பேச வேண்டிய தருணம் இது. #dmkyouthwing
Udhayanidhi Stalin
7.3K views
5 years ago
அரியர் மாணவர்களை தேர்ச்சியென அறிவித்த அடிமை அரசின் ஆணை விதிகளுக்கு எதிரானது என AICTE நீதிமன்றத்தில் கூறியுள்ளது. எடுபுடிகளின் விளம்பர வெறியால் அடுத்து என்னவென்று தெரியாத குழப்ப நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 'நீட்'டில் கைவிட்டது போல் இல்லாமல் மாணவர்களை அரசு காக்க வேண்டும் #dmkyouthwing
Udhayanidhi Stalin
8.4K views
5 years ago
நீட் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் எலந்தங்குழி மாணவர் விக்னேஷின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சிறிய வீட்டில் நிறையக் கனவுகளோடு இருந்த மகனை இழந்த அந்த பெற்றோரைத் தேற்ற வார்த்தைகள் வரவில்லை. தலைவர் M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தேன். #dmkyouthwing
Udhayanidhi Stalin
7.3K views
5 years ago
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி தி.நகர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் ஜெ.கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் தென்மேற்கு போக் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள் 150 பேர் உள்பட 2000 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், தலா 500 நிதியுதவி வழங்கினோம். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், கோ.உதயசூரியன், இளைஞரணி பகுதி அமைப்பாளர் மு.ம.செந்தில்குமார், மாணவரணி பகுதி அமைப்பாளர் ஜி.பி.செந்தில்குமார், வட்டக்கழக நிர்வாகி லலிதாபுரம் என்.துரை உள்பட சென்னை மேற்கு மாவட்டக் கழகத்தினர் பலர் கலந்துகொண்டனர். #DMKYouthWing
Udhayanidhi Stalin
6.7K views
5 years ago
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்பு முறையை ஒழுங்குபடுத்தக் கோரியும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கழக இளைஞரணி-மாணவரணி இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம். நாளை காலை 10 மணிக்கு. அவரவர் இல்லம் முன் ஐவருக்கு மிகாமல் நின்று கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கமிடவும். #dmkyouthwing
Udhayanidhi Stalin
6K views
5 years ago
முத்தமிழறிஞர் கலைஞரை நினைவுகூர அவரின் பெயரில் ஒரு மாரத்தான். பங்கேற்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம். சேரும் நிதி கொரோனா நிவாரணத்துக்கு. இப்படி ஒரு பணியைப் பலருக்கும் பயனுள்ள வகையில் வடிவமைப்பதே சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் Ma Subramanian அவர்களின் சிறப்பு. வாழ்த்துகள் அண்ணா. தலைவர் M. K. Stalin அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட ‘கலைஞர் மாரத்தான்’ போட்டியில் 28 நாடுகளின் 8,541 பேர் ஓடியது 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனையானது. இதற்கு பெறப்பட்ட பதிவு கட்டணம் ரூ.23,41,726 இன்று தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது கொரோனா நிதியாக அரசிடம் வழங்கப்பட உள்ளது. #dmkyouthwing
Udhayanidhi Stalin
5.9K views
5 years ago
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு புலியூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மக்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு அரிசி, மளிகை பொருட்களையும், நிதியுதவியையும் வழங்கினேன். ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு, மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன் உள்படப் பலர் கலந்துகொண்டனர். #dmkyouthwing