Follow
📷Geethajan Graphics📷
@vidhyarani875
10,393
Posts
72,334
Followers
📷Geethajan Graphics📷
525 views
9 hours ago
வெந்தய களி செய்வது எப்படி ..... வெந்தயகளி,இதனை காலை உணவாக பூப்பெய்தும் பெண்களுக்கு கொடுப்பார்கள்.வெயில் காலங்களில் உடம்பு குளிர்ச்சியடையவும் சாப்பிடுவார்கள். தே.பொருட்கள் வெந்தயம் -100 கிராம் புழுங்கலரிசி -400 கிராம் வெள்ளை முழு உளுந்து -2 டேபிள்ஸ்பூன் உப்பு-தேவைக்கு பனைவெல்லம் -200 கிராம் நல்லெண்ணெய் -100 மிலி ஏலக்காய்தூள் -1/2 டீஸ்பூன் சுக்குபொடி -1/4 டீஸ்பூன் செய்முறை *அரிசி+உளுந்து இவற்றை ஒன்றாகவும்,வெந்தயத்தை தனியாகவும் முதல் நாள் இரவே ஊறவைக்கவும். *மறுநாள் வெந்தயத்தை தனியாக வெண்ணெய் மாதிரியும்,அரிசி உளுந்தினை மைய அரைக்கவும். *பனைவெல்லதில் நீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.மீண்டும் கொதிக்க வைத்து ஏலக்காய்தூள்+சுக்குபொடி சேர்த்து இறக்கவும். *அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலக்கி பின் தேவையான நீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைக்கவும். *கைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்,ஒட்டும் போது நெல்லெண்ணெய் ஊற்றி மீண்டும் கலக்கவும். *இப்போழுது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதோ அல்லது ஈரக்கையால் தொட்டால் மாவு ஒட்டாமல் வந்தாலோ அடுப்பிலிருந்து இறக்கவும். *மாவு கையில் ஒட்டினால் மீண்டும் கிளறவும். *கிண்ணத்தில் களியை வைத்து அதன்மேல் பனைவெல்லத்தினை ஊற்றி பரிமாறவும். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
📷Geethajan Graphics📷
411 views
1 days ago
கரும்பு ஜூஸ் செய்வது எப்படி ..... தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு நிறைய கிடைக்கும் .கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும். அதில் சிறிதளவு எலுமிச்சையும்,இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும். தே.பொருட்கள் கரும்பு - 2 அங்குலத்துண்டு இஞ்சி -சிறிய துண்டு எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன் செய்முறை *கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். *அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும். *அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்கரும்பு ஜூஸ் செய்வது எப்படி ..... தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு நிறைய கிடைக்கும் .கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும். அதில் சிறிதளவு எலுமிச்சையும்,இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும். தே.பொருட்கள் கரும்பு - 2 அங்குலத்துண்டு இஞ்சி -சிறிய துண்டு எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன் செய்முறை *கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். *அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும். *அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
📷Geethajan Graphics📷
477 views
2 days ago
குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ இயற்கை வைத்திய முறை!!! மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம். மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம். அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு… இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும். இன்னொரு வைத்தியமும் இருக்கு! பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்… இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு. உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
📷Geethajan Graphics📷
704 views
2 days ago
காயகல்ப மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ..... வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, அத்தி, கரிசலாங்கண்ணி, கட்டுக்கொடி, பொடுதலை, முடக்கு அற்றான். இது போன்ற மூலிகைகளை முறையாக மருந்து செய்து உண்டால் இருதய இரத்த ஓட்டத்தைச் சீராக்கி உடல் உறுப்புகளை உறுதியாக்கி உடல் நோய்களைத் தவிர்க்கலாம். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌿ஆயுர்வேத பொருட்கள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
📷Geethajan Graphics📷
415 views
2 days ago
📱❌ செல்போனை விட்டு விலகி இருப்பதும் ஒரு மாபெரும் மருத்துவமா? ஆம்! ஒரு ரூபாய் கூட செலவில்லாத அந்த ரகசியம் இதோ... ✨🌿 📢 நாம் தேடும் நிம்மதி செல்போன்களில் இல்லை; நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம்தான் உள்ளது! ❤️ மன அழுத்தத்தைக் குறைத்து, மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும் "ஆரோக்கியம் என்றும் இலவசமே" தொடரின் 7-வது பகுதி இதோ. முழுப் பதிவைப் படித்து, உங்களுடைய கருத்தையும் பகிருங்கள்! 👇 --- 🌿 ஆரோக்கியம் என்றும் இலவசமே – பகுதி 7 இன்றைய உலகில், காலை கண் திறந்ததும் முதலில் பார்க்கும் பொருள் செல்போன். இரவு தூங்கச் செல்லும் முன் கடைசியாகப் பார்க்கும் பொருளும் அதுவே. இந்த தொடர்ச்சியான திரைப் பயன்பாட்டால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவே இன்று பலர் Digital Detox Retreats எனப்படும் முகாம்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கிறார்கள். ஆனால்... ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் தரும் இரண்டு எளிய வழிகள் நம்மிடமே இருக்கின்றன. 📵 1. திரைகளிலிருந்து சிறிது நேரம் விலகி இருங்கள் ஒரு நாளில் சில மணி நேரங்களாவது செல்போன், லேப்டாப், டிவி போன்ற திரைகளை விட்டு விலகி இருங்கள். அது உங்கள் கண்களுக்கு மட்டுமல்ல, உங்கள் மூளைக்கும் மிகப் பெரிய ஓய்வை வழங்கும். தொடர்ந்து தகவல்களைச் சுமக்கும் மனம் சற்றே அமைதியாகும். இதனால்... ✅ மன அழுத்தம் குறையும் ✅ தலைவலி குறையலாம் ✅ தூக்கத்தின் தரம் மேம்படும் ✅ மனம் புத்துணர்ச்சி பெறும் --- ❤️ 2. அன்பானவர்களுடன் நேரம் செலவிடுங்கள் விலையுயர்ந்த OTT சந்தாக்களில் மணிநேரங்கள் செலவிடுவதற்குப் பதிலாக... குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மனம் திறந்து பேசுங்கள். சேர்ந்து சிரியுங்கள். உங்கள் மனதைப் புரிந்துகொள்ளும் ஒருவருடன் சில நிமிடங்கள் செலவிடுவது கூட மனதின் பாரத்தை குறைத்து அளவற்ற மகிழ்ச்சியைத் தரும். உண்மையான நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பணம் கொடுத்து வாங்க முடியாது. செல்போனை சற்று ஓரமாக வைத்துவிட்டு... 🌿 நிஜ உலகை ரசிப்போம். ❤️ உறவுகளை மதிப்போம். 💪 பணமில்லாமல் ஆரோக்கியத்தைப் பெறுவோம். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌿ஆயுர்வேத பொருட்கள் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
📷Geethajan Graphics📷
1.6K views
3 days ago
*தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள். உங்களுக்காக பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கி யுள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள் இப்படி இதனை தினமும் சாப்பிட்டு வந்ததாலோ என்னவோ, நோய்கள் அவர்களை அண்டவே இல்லை எனலாம். அந்த அளவில் வெந்தயம் உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி வந்தது. அதிலும் தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருப் பதால், இதனை கோடையில் தினமும் சாப்பிட்டால் இன்னும் நல்லது. #சர்க்கரைநோய்* :- சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும் #மாரடைப்பு* :- வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். #புற்றுநோய்* :- வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் . எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். #மாதவிடாய்பிடிப்புகள் :- வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும். #உடல்சூடு* :- கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும். #தாய்ப்பால்உற்பத்தி* :- பிரசவித்த பெண்கள் வெந்தயத்தை தினமும் உட்கொள்வ தனால், தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்கும். இதற்கு வெந்தயத்தில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் தான் முக்கிய காரணம். #கொலஸ்ட்ரால்குறையும்*:- வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும் . இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளே வோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். #ஆர்த்ரிடிஸ்* :- இன்றைய காலத்தில் பெரும் பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்பு மூட்டு வலி. இது கடுமையான வலியுடன், வீக்கத்துடனும் காணப்படும். ஆனால் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவதுடன் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் வலியைக் குறைக்கும். #செரிமானம்* :- செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவை களும் தடுக்கப்படும். #எடைகுறையும் :- உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும். #சிறுநீரகச்செயல்பாடுகள் :- வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள். #கல்லீரல்* :- கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌿ஆயுர்வேத பொருட்கள் #ஆரோகிய குறிப்புகள்🚹
📷Geethajan Graphics📷
541 views
4 days ago
நகங்களை பராமரியுங்கள்..!... அழகிய மற்றும் ஆரோக்கியமான நகங்கள், விரல்களுக்கு கிரீடங்களாக விளங்குகின்றன. நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்கு பிடிக்கும். அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம். * நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடங்கள் வையுங்கள். பின்பு, brush வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும். * அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும். *ஒலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும். * நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் 'நகச்சுற்று' போன்ற பிரச்சனைகளையும் இது குணப்படுத்தும். எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌿ஆயுர்வேத பொருட்கள்
📷Geethajan Graphics📷
611 views
5 days ago
🧆இரும்பு சத்து கால்சியம் மெக்னீசியம் நிறைந்த கருப்பு எள்ளு உருண்டை என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும் 🧆ஒரு கப் கருப்பு எள்ளு கால் கப் பொட்டுக்கடலை முக்கால் கப் வெல்லம் இல்லையென்றால் கருப்பட்டி கால் கப் வேர்க்கடலை சிறிதளவு உப்பு சுக்கு அல்லது ஏலக்காய் கால் கால் ஸ்பூன் எடுத்துக்கோங்க 🧆கடாயில் எள்ளு மட்டும் சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும் 🧆பொட்டுக்கடலையை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் 🧆வேர்கடலையை தனியாக வறுத்து எடுத்துக் எள்ளு வேர்க்கடலை அவை இரண்டும் ஆரியபிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸ் ஆக அரைத்து எடுத்துக்கொள்ளும் 🧆 நீங்கள் வெள்ளம் அல்லது கருப்பட்டி எது எடுத்திருந்தாலும் சரி அது சிறிது பொடி செய்து இல்லை என்றால் மிக்ஸி ஜாரில் சேர்த்து வெள்ளத்தையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் 🧆அது கெட்டியாக ஒரு பேஸ்ட் ஆக வரும் அதில் வறுத்த வேர்க்கடலை சுக்கு பொடி சேர்த்து உருண்டை பிடித்து எடுத்துக் கொள்ளவும் இரும்பு சத்து நிறைந்த கருப்பு எள்ளு உருண்டை தயார் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌿ஆயுர்வேத பொருட்கள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்