ஃபாலோவ்
📷Geethajan Graphics📷
@vidhyarani875
10,281
போஸ்ட்
71,472
பின்தொடர்பவர்கள்
📷Geethajan Graphics📷
517 காட்சிகள்
📷Geethajan Graphics📷
1.5K காட்சிகள்
இந்த கஷாயம் தொடர்ந்து குடித்தால் செரிமானம் மேம்பட்டு, உடல் சோர்வு, வாயு, மூட்டு மற்றும் இடுப்பு வலி போன்ற பல பிரச்சனைகள் குறைய உதவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். செய்முறை: சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு தலா 1 ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
773 காட்சிகள்
தலைவலி போக்கும் சின்மய முத்திரை..... சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். 10 நிமிடங்கள் வரை செய்யலாம் பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.... #🏋️உடற்பயிற்சி #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
721 காட்சிகள்
நெல்லிக்காய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை ஆகியவை இணைந்து செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, சருமப் பொலிவு, முடி ஆரோக்கியம், மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு போன்ற பல நன்மைகளைத் தருகிறது. #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
1.2K காட்சிகள்
தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம். இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும். #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
571 காட்சிகள்
📷Geethajan Graphics📷
739 காட்சிகள்
அந்த 3 நாட்கள் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை! *மாதவிடாய் காலங்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்... *ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும்... *மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்... *சூடான நீரைக்கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைக்கும்... *அடிக்கடி நாப்கினை மாற்ற வேண்டும்... அதிகபட்சமாக 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் கட்டாயம் மாற்ற வேண்டும்... #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
599 காட்சிகள்
120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?........ பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!... கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 🍀கொழுப்புக்கள் கரையும்: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். 🍀இரத்த சோகை: இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். 🍀சர்க்கரை நோய் : சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். 🍀இதய நோய்: கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். 🍀செரிமானம் : நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். 🍀முடி வளர்ச்சி : கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள். 🍀சளித் தேக்கம்: சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும். 🍀கல்லீரல் பாதிப்பு: நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை. தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள். குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள். பகிர்வோம்... ★ இத்தகவல் பிடித்திருந்தால் குறைந்தது இரண்டு நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்..... #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
See other profiles for amazing content