ஃபாலோவ்
📷Geethajan Graphics📷
@vidhyarani875
10,314
போஸ்ட்
71,678
பின்தொடர்பவர்கள்
📷Geethajan Graphics📷
531 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
பெரும்பாலான மக்கள் முலாம்பழம் சாப்பிடும்போது அதன் விதைகளைத் தூக்கி எறிந்துவிடுகிறார்கள், ஆனால் இந்த விதைகள் உண்மையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவற்றில் நல்ல அளவு புரதம் உள்ளது, இது வலிமையை உருவாக்கவும் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், உடலின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் நல்ல மூலமாகவும் அவை உள்ளன. முலாம்பழ விதைகளில் நார்ச்சத்தும் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, குடலை ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. அதுமட்டுமின்றி, அவை சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை அளிப்பதோடு, உடலுக்கு இயற்கையான ஆற்றலை வழங்கவும் உதவுகின்றன. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
📷Geethajan Graphics📷
737 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
ஆச்சரியப்படவைக்கும் அன்னாசிப்பூவின் அதிசய சக்தி! மனிதனுக்கு தேவை இல்லாத ஒன்றை கட்டுப்படுத்தும். தேவையான ஒன்றை அதிகமாக கொடுக்கும்.* மனிதனுக்கு தேவைப்படாத ஒன்றா? அது என்ன? அது தேவைப்படாது என்று தெரிந்தாலும், அது நமக்கு அடிக்கடி வரும். மனிதனுக்கு தேவையான ஒன்று? அடிக்கடி தேவைப்பட்டாலும் அதுமட்டும் நம் கைக்கு வராது! விடுகதை போல உள்ளதா? அது என்ன? இந்த இரண்டு கேள்விக்கான பதில் உங்களில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மனிதனுக்கு தேவையில்லாத பிரச்சனையையும், ஆரோக்கிய குறைபாட்டையும் கொண்டுவருவது ‘கோபம்’. மனிதனுக்கு அவசியமான, அடிப்படையான தேவை ‘பணம்’. ஏனோ தெரியவில்லை! வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் கோபம் நம்மிடம் விருப்பப்பட்டு வந்துகொண்டே இருக்கிறது. வேண்டும் வேண்டும் என்று ஆசைப்படும் பணம் நம்மை விட்டு விலகிச் சென்றே இருக்கின்றது. என்ன செய்வது? தேவையில்லாமல் வரும் கோபத்தை கட்டுப்படுத்தவும், நமக்கு தேவையான பணத்தை தருவதற்கும் ஒரு பொருள் உள்ளது. அது தான் அன்னாச்சி பூ. இந்த அன்னாச்சி பூவை வைத்து என்ன செய்தால் கோபம், சண்டை சச்சரவுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்? என்ன செய்தால் பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே அந்த காலங்களில் எல்லாம் நம் முன்னோர்கள் அன்னாசிப் பூவினை, வீட்டு வாசலில் ஒரு கயிறு கட்டி தொங்க விட்டால், திருஷ்டி அண்டாது என்று சொல்லுவார்கள். அன்னாசிப் பூவின் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே சில வீடுகளில் சண்டை சச்சரவுக்கு குறைவே இருக்காது. அதுவும் குறிப்பிட்ட சில நபர் வீட்டுக்குள் நுழைந்தாலே, அவரால் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயம் நமக்கு இருக்கும். சில பேரது வீட்டில் எல்லாம் வேலையை முடித்துவிட்டு அப்பா வீட்டிற்கு வருகிறார் என்றாலே, நம்முடைய அம்மா பயந்து நடுங்குவாங்க!. ‘ஏனென்றால் அப்பாவிற்கு கோபம் அதிகமாக வரும் என்பதற்காகத் தான்’ இன்னைக்கு என்ன பிரச்சனையை உண்டுபண்ண போகிறார்களோ! என்று. இப்படிப்பட்டவர்கள் வீட்டில் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டியோ அல்லது கெட்ட சக்தியை எதிர்மறையாக இருப்பதால் கூட இப்படிப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அல்லது சில மனிதர்களுக்கு இயல்பாகவே கோப குணம் அதிகமாக இருக்கும். எது எப்படியாக இருந்தாலும், இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க பிரியாணிக்காக பயன்படுத்தப்படும் 4 அன்னாசிப் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்த வாசம் நல்ல நறுமணத்தோடு மேலோங்கும். அந்த நறுமணமானது வீடு முழுவதும் பரவும்படி செய்யவேண்டும். அந்த பாத்திரத்தை ஒவ்வொரு அறையிலும் ஐந்து நிமிடங்கள் வைத்தால் போதும். அந்த நறுமணம், நம் சுவாசத்தில் கலந்து நம் கோபத்தை கட்டுப்படுத்தும் என்பது உண்மையான ஒன்று. இதை பரிகாரம் என்று கூட சொல்லிவிட முடியாது. இது ஒருவிதமான பயிற்சி. வாரத்தில் இரண்டு முறை உங்கள் வீட்டிலும் இப்படி செய்து பாருங்கள். இயற்கையாகவே அன்னாச்சி பூவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. சண்டை வரும் வாய்ப்பு கண்டிப்பாக குறையக்கூடும். இதேபோல், இந்த அன்னாச்சி பூவை பண வரவிற்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு அன்னாசிப்பூ 1, 5 ஒரு ரூபாய் நாணயம், 3 ஏலக்காய், 2 பட்டை, இவைகளை ஒன்றாக போட்டு வையுங்கள். உங்கள் கைகளில் வரும் வருமானத்தில் சிறிதளவே அந்த டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள். அந்த டப்பாவை திறந்தபடி உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள் போதும். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
📷Geethajan Graphics📷
634 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்திலிருந்து (Heatwave) நம் உடலைப் பாதுகாத்துக் கொள்ள சில முக்கியமான வழிமுறைகளை இங்கே காணலாம்: ​1. நீர்ச்சத்து மிக அவசியம் (Hydration) ​தண்ணீர்: தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். ​இயற்கை பானங்கள்: இளநீர், நன்னாரி சர்பத், மோர், மற்றும் பழச்சாறுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். ​தவிர்க்க வேண்டியவை: காபி, டீ மற்றும் அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இவை உடலில் நீர்ச்சத்தை குறைக்கும். ​2. உணவு முறை ​நீர்க்காய்கள்: வெள்ளரிக்காய், தர்பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சேர்க்கவும். ​எளிமையான உணவு: காரமான மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்து, எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ணுங்கள். ​3. உடை மற்றும் வெளிச்செல்லும் போது ​ஆடை: மெல்லிய பருத்தி ஆடைகளை (Cotton clothes) அணியுங்கள். இவை வியர்வையை உறிஞ்சி உடலைக் குளிர்ச்சியாக வைக்கும். ​பாதுகாப்பு: வெளியே செல்லும்போது குடை, தொப்பி அல்லது சன்கிளாஸ் பயன்படுத்துங்கள். முடிந்தவரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடி வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். ​4. உடல் குளிர்ச்சி ​குளியல்: தினமும் இரண்டு முறை குளிப்பது உடல் சூட்டைத் தணிக்கும். ​வீட்டு பராமரிப்பு: ஜன்னல் திரைகளைப் பயன்படுத்தி வீட்டுக்குள் வெயில் வராமல் தடுக்கலாம். போதிய காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ​5. முதலுதவி மற்றும் எச்சரிக்கை ​அறிகுறிகள்: அதிகப்படியான தலைவலி, மயக்கம், வாந்தி அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிழலான இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். ​குறிப்பு: சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வெயிலின் தாக்கத்திற்கு எளிதில் ஆளாக நேரிடும் என்பதால், அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌴 Summer முடி பராமரிப்பு 💇‍♀️ #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
📷Geethajan Graphics📷
2.8K காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
#🌴 Summer முடி பராமரிப்பு 💇‍♀️ #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😎Summer ஹெல்த் டிப்ஸ் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம், வியர்வை மற்றும் தூசியால் முடி வறண்டு, சேதமடையும். இதைத் தடுக்க லேசான ஷாம்பூ மூலம் அடிக்கடி தலைமுடியை அலசுதல், கண்டிஷனர் பயன்படுத்துதல், சூரிய ஒளியிலிருந்து காக்க தொப்பி அணிதல், மற்றும் தேங்காய் எண்ணெய்/கற்றாழை கொண்டு வாரமிருமுறை மசாஜ் செய்வது அவசியம். ஆரோக்கியமான உணவும், அதிக தண்ணீர் அருந்துவதும் முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
📷Geethajan Graphics📷
546 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
சாதாரண நீருக்கு மாற்றாக உடலை சுத்தமாகவும் லேசாகவும் வைத்திருக்கும் ஒமம் தண்ணீர் 🌿💧 Benefits (நன்மைகள்): • ஜீரணத்தை மேம்படுத்தும் • வயிற்றுப்பெருக்கு, வாயு பிரச்சனை குறைக்கும் • உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும் • சளி, குளிர் குறைக்க உதவும் • உடலை டிடாக்ஸ் செய்யும் Seimurai (செய்முறை): 1 டம்ளர் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஒமம் சேர்க்கவும் நன்றாக கொதிக்க விடவும் (5–10 நிமிடம்) வடிகட்டி சூடாக அல்லது இளஞ்சூடாக குடிக்கலாம் காலையிலே வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😎Summer ஹெல்த் டிப்ஸ்
📷Geethajan Graphics📷
613 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
📷Geethajan Graphics📷
791 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
செம்பருத்தியின் மகத்தான மருத்துவம் செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிட ரத்தம் சுத்தி அடையும். இதயம் வலிமை பெறும். செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேய்த்தால் சிரசு குளிர்ச்சியடையும். தலைமயிர் கருகருவென வளரும். பூவையும் இலையையும் சேர்த்து அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிக மிகச் சிறந்தது. #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🌴 Summer முடி பராமரிப்பு 💇‍♀️ #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்