ஃபாலோவ்
Vennmathi - Webnews
@wwwvennmathinewscom
8,166
போஸ்ட்
4,763
பின்தொடர்பவர்கள்
Vennmathi - Webnews
531 காட்சிகள்
5 மணி நேரத்துக்கு முன்
#😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு 1. தவெக முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம், உழவர் சந்தையும் மிகவும் குறுகலான இடம். அதனால்தான், அண்மையில் அதிமுக கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்து அங்கு பரப்புரைக்கு அனுமதி பெற்றனர். 2. தவெகவின் பரப்புரையில் 500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தார். திருச்சி - 650, அரியலூர் - 287, பெரம்பலூர் - 480, நாகப்பட்டினம் - 410, திருவாரூர் - 413, நாமக்கல் - 279, கரூர் - 500 3. தவுட்டுபாளையம் முதல் கரூர் ரவுண்டானா 30 நிமிடத்தில் வர வேண்டிய தூரத்தை தவெக தலைவர் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டார். 4. பரப்புரையில் கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. 5. கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். 6. கூட்டம் கட்டுக்கடங்காமல் மாறும்போது முன்பாகவே வாகனத்தை நிறுத்தி பேசிவிடச் சொல்லி தவெகவினரிடம் டிஎஸ்பி கூறியும் மறுத்துவிட்டனர். 7. காலையில் இருந்தே சாப்பிடாமல் அதிகம் பேர் அங்கு காத்திருந்துள்ளனர். 8. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வசதி எதுவும் தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யவில்லை. 9. இதே இடத்தில் அதிமுக கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வந்தபோது 137 காவலவர்கள்தான் பாதுகாப்பு பணியிலிருந்தனர். ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டம், முறையான வழிநடத்துதல் போன்ற காரணங்களால் எல்லாம் அன்று சுமூகமாக நடந்தது. 10. நேற்று 500 காவலர்கள் பணியில் இருந்தும், களத்தில் தவெகவிடம் இருந்து ஒத்துழைப்பும் தேவை.‌ 11. பொய் மற்றும் கற்பனை செய்திகளை இந்த நேரத்தில் வதந்திகளாக பரப்பாதீர்கள். - தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, டேவிட்சன் தேவாசீர்வாதம் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி
Vennmathi - Webnews
488 காட்சிகள்
12 மணி நேரத்துக்கு முன்
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி கரூர் துயரம் - போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளவை ▪️ 12.45 மணிக்கு விஜய் கரூரில் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேர தாமதமாகத்தான் அங்கு வருகை தந்தார். ▪️ பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரை பார்க்க காத்திருந்தவர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர் ▪️ அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர் ▪️ கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை ▪️ காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர் ▪️ 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. #விஜய் #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴
Vennmathi - Webnews
3.4K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
ஒன்றிய அரசின் 'ஜிஎஸ்டி குறைப்பு நாடகம்' கடந்த 8 ஆண்டுகளில், மக்கள் மீது ரூபாய் 55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி சுமத்தப்பட்டது! அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், உடுத்தும் உடை, பாத்திரம், உணவு, விவசாயம், காப்பீடு – எதையும் விடவில்லை. இப்போது 8 ஆண்டுகள் கழித்து ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியைக் குறைத்ததாக பெருமை ஒன்றிய அரசு பேசுகின்றது. இதனால், 144 கோடி இந்தியர்களுக்கு கிடைப்பது – ஒருவருக்கு ரூபாய் 57 மட்டுமே! அதிலும் வியப்பு என்னவென்றால், இந்த ரூபாய் 2.5 லட்சம் கோடி சலுகையும் ஒன்றிய அரசு மக்களுக்கு கொடுப்பதல்ல. இது மாநிலங்களின் வரி பங்கு. அதை குறைத்துவிட்டு, பாராட்டை ஒன்றிய அரசு பெற்றுக்கொள்கிறது. 'மாநிலங்கள் வரி செலுத்துகிறது. ஒன்றிய அரசு புகழடைகிறது. மார்க்கெட்டிங் செய்வதில் ஒன்றிய அரசு வல்லவர்கள்! ஒன்றிய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு என்ற போலி நாடகத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். -தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #🔷ராகுல் காந்தி #தேசிய செய்திகள்
Vennmathi - Webnews
528 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
ஆழ்ந்த இரங்கல். ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்...! தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #தமிழ்நாடு #சென்னை #செய்தி #💚I Love தமிழ்நாடு #இரங்கல்
See other profiles for amazing content