sithar sivavaakkiyam.

saravanan
2.2K காட்சிகள்
22 நாட்களுக்கு முன்
சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 208...!* அஞ்செழுத்தும் மூன்றெழுத்து மென்றுரைக்கு மன்பர்கா ளஞ்செழுத்தும் மூன்றெழுத்து மல்லகாணு மப்பொருள் அஞ்செழுத்து நெஞ்செழுத்தி லவ்வெழுத் தறிந்தபின் அஞ்செழுத்தும் அவ்வின்வண்ண மானதே சிவாயமே. *பொருள் விளக்கம்:* அஞ்செழுத்து பஞ்சாக்கரமென்றும் மூன்றெழுத்து ஓங்காரம் என்றும் உரைத்து செபம் செய்யும் அன்பர்களே! ஈசன் அஞ்செழுத்தாகவோ, மூன்றெழுத்தாகவோ இருப்பதில்லை. “நமசிவய” நம் உடலே என்பதை உணர்ந்து, அதன் நெஞ்செழுத்து “சி“காரம் எனவும் அறிந்துகொள்ளுங்கள். அதுவே ஓரெழுத்து. அங்கிருந்துகொண்டு “சிவயநம” என்னும் பஞ்சாக்கரத்தை மனதில் செபிக்க வேண்டும். அப்பொழுது பிரமம் ஓரெழுத்தாகவும், அதுவே உயிராகவும் உள்ளதை உணர்வீர்கள். ஓரெழுத்திலே ஐந்தெழுத்தும் அடங்கி இருப்பதையும் அவ்வெழுத்தே பஞ்சாக்கரமாக ஐந்து வண்ணங்கள் ஆகி நிற்பதையும் அதிலேயே ஐந்து பூதங்களும் உள்ளதையும் அறிந்து உணர்ந்து ஞானவினை புரியுங்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟫🔶🟫🔶🟫🔶🟫🔶🟫🔶🟫🟫🔶🟫🔶🟫🔶🟫🔶🟫🔶🟫 #sithar sivavaakkiyam.