இடைவிடா சகாய மாதா

தமிழ்சீயான்43
1.1K views
23 days ago
🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺 *சதா சகாய மாதா நவநாள் ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை* 🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺 சதா சகாய மாதாவே, உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத்தண்டையிலிருக்கும் நீசப் பாவியான என்னை உற்று நோக்கியருளும். இரக்கத்தின் மாதாவே! என் பேரில் இரக்கமாயிரும். பாவிகளின் அடைக்கலமும் நம்பிக்கையுமென எல்லோராலும் அழைக் கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாயிரும். சேசுவின் நேசத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும். சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீசப் பாவியாகிய என்னிடம் உமது கரங் களை நீட்டியருளும். உம்மிலே நம்பிக்கை வைப் பதுதான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் எண்ணுகிறேன். நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத் தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த் தித் துதிக்கிறேன். உம்மிடம் என்னை கையளிக் காததால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை களில் நீசத்தனமாய்ப் பாவச் சோதனைகளில் விழுந்திருக்கிறேன். ஆனால் உமது உதவியால் நான் வெற்றியடைவேனென்று எனக்குத் தெரியும். என்னை உமக்கு நான் கையளித்தால், நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் பாவத்தில் விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன். ஆகையால் இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்குப் பெற்றுத்தரும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். பசாசு என்னுடன் போர் புரியும் போது நான் உம்மிடம் சரணடையவும், “ஓ மரியாயே, எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே, எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விடாதேயும்” என்று உம்மை நோக்கி வேண்டிக்கொள்ள கிருபை புரிந்தருளும். ஆமென். (அருள் நிறை மந்திரம் 9 முறை) பரிசுத்த மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும். மனத்திடம் இல்லாத வர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை மகிழச் செய்தருளும். மனுக்குலத்துக்காக மன்றாடி யருளும். குருக்கள், ஆயர்களுக்காகப் பரிந்து பேசி யருளும். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சந்நியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசியருளும். உமது சதா சகாயத்தை வேண்டு வோர் உமது உதவியை உணரச் செய்தருளும். ஓ மாதாவே! நீர் எங்களுக்கு அடைக்கல மாயிருக்கிறீர். குறைகளிலும், துன்பங்களிலும் உதவி யாகவும் இருக்கிறீர். *🌺பிரார்த்திக்கக்கடவோம்🌺* ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே! உமது மாதாவாகிய கன்னிமரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராயிருக்கும் தாயாக எங்க ளுக்குத் தந்தருளச் சித்தமானீரே. அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டிநிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனை சதாகாலமும் அனுபவிக்க தகுதியுள்ளவர்களா யிருக்கக் கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியரு மாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வேசுரா. 🙏🏻ஆமென்.🙏🏻 பரிசுத்த பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வோம். ஒரு பர. அருள். திரி. 🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻 *இடைவிடா சகாய அன்னையை நோக்கி மன்றாட்டு* 🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻 நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே, உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல், புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் , விரோதிகளின்பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும். மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! *- 🙏🏻ஆமென்.🙏🏻* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 *✝️சதா சகாயமாதா✝️* *🙏🏻பிரார்த்தனை🙏🏻* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 🌹சுவாமி கிருபையாயிரும் 🌹கிறீஸ்துவே கிருபையாயிரும் 🌹சுவாமி கிருபையாயிரும் 🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். 🌻கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும். 🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர் திருநாமம் உடைத்தான சதா சகாய மாதாவே... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் ஆபத்தான வேளையில் அதனை ஜெயங் கொள்ளும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக் கியத்துக்கு உள்ளாவேனாகில் அதிலிருந்து உடனே எழுந்திருக்கும்படி, 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான தகாத வளையில் நான் சிக்கிக் கொள்ளுவேனாகில் அத்தளையைத் தகர்த்தெறியும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் விரைவில் ஞான உஷ்ணம் கொள்ளும்படி.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங் களைப் பெறுவதிலும், கிறீஸ்தவ பக்திக்குரிய கடமைகளை பக்தியாய் செய்யும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என் சீவியத்தில் வரும் துன்ப சோதனை வேளைகளில்.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என்னுடைய சுபாவ துர்ச்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், புண்ணிய வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும் படி நான் செய்யும் முயற்சிகளிலும்.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய் கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என் பலம் குறைந்து போகும்போது.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என் மரண வேளையில் என் ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரிய போராடும்போது..... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ஓ! என் தேவ தாயாரே, என் கடைசிநாள் பரியந்தம், என் கடைசி மூச்சு பரியந்தம்... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே... 🌻 எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, 🌻எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, 🌻எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி. *🌻ஜெபிப்போமாக:🌻* 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 சர்வ வல்லவரும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்கு துணை புரிய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாயை உமது ஏக குமாரனுக்குத் தாயாராக்கத் திருவுளமானீரே! பரிசுத்த கன்னிமரியாயின் வேண்டுதலால் அடியோர்களின் பாவநோய் தீர்ந்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சிநேகித்து சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக எங்களுக்குக் கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். *🙏🏻ஆமென்.🙏🏻* *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #சகாய மாதா #🙏🏼 சகாய மாதா துணை 🙏🏼 #வேளாங்கண்ணி மாதா
தமிழ்சீயான்43
1.9K views
1 months ago
🌹*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 16.04.2026 *(வியாழன்)* *ஒளி நிறை மறையுண்மைகள்.* *1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், *"“மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?"* என திருத்தூதர்கள் கூறுவதை வாசிக்கின்றோம். வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் மனிதரைவிட கடவுளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,* யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய திருப்பலிக்கு முன் வாழ்த்தொலியில், *"தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.!* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். விசுவாசத்தில் நாம் என்றும் நிலைத்து நின்று பேறு பெற்றவர்களாக விளங்கிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், *"மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்."* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். நாம் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வை பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,* உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்ற, நம்பிக்கையை ஊட்ட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,* குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *ஆமென்.*🙏 #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #சகாய மாதா #வேளாங்கண்ணி மாதா #அன்னை மரியே வாழ்க💒💐
தமிழ்சீயான்43
14.4K views
1 months ago
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷 *🙏🏻திருக்குடும்பத்தை நோக்கிச் செபம் மற்றும் புகழ்மாலை🙏🏻* 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷 இயேசுவின் திரு இருதயமே ! அமலோற்பவ கன்னிமாதாவின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே! உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இறந்து மன்றாடிக் கேட்டஎவனும் அந்த மன்றாட்டுக்களை அடையாமற் போனதில்லையென்று நினைத்தருளுங்கள். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன். இரக்கமுள்ள இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னி மாதாவின் திரு இருதயமே!  ஓ! மகிமைப்பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே, அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள். *🙏🏻ஆமென்.🙏🏻* 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷 *திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலை* 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷 ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும்       கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய்க்  கேட்டருளும் விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறiவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. ஊலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. தூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மண்ணுலகில் அதி புனித திருத்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். பரம தேவ பிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அனைத்து அருளாலும் நிறைந்து அலங்கரிக்கப் பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான திருக்குடும்பமே, எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். விண்ணுலகிற்குத் தேர்ந்தெக்கப்பட்டவரின் ஞானக் கருவூலமாகிய திருக்குடும்பமே, விண்ணுலகின் பேரின்பமாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அனைத்து வானதூதர்களாலும் வணங்கப்பட்ட திருக்குடும்பமே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மனிதர்களால் நிந்திகரிக்கப்பட்டிருந்தாலும் தேவ சமூகத்தில் உன்னத மாட்சிமை பொருந்திய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். பெத்லகேம் ஊரார்களால் புரக்கணிக்கப்பட்டு ஒரு மாட்டுக் கொட்டிலில் ஒடுங்கிப்போக அவசரப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். திவ்விய இரடசகர் பிறந்த சமயத்தில் இடையர்களால் சந்திக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். பிறந்த திவ்விய குழுந்தைக்குத் தோத்திரமாக வானதூதர்கள் இசைத்த கீதங்களைக் கேட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மூன்று அறிஞர்களால் வணங்கிப் பாதகாணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆலயத்தில் திவ்விய பாலனை ஏந்தின சிமியோன் அவரைக் குறித்துச் சொல்லிய துதிகளையும் இறைவாக்குகளையும் கேட்டு மகிழ்ச்சியும் துயரமும் கொண்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எண்ணிறந்த ஆபத்துக்குள்ளே எகிப்து தேசத்துக்கு ஓடிப்போக கட்டளையிட்ட வானதூதரின் வாக்குக்கு தாமதமின்றி கீழ்ப்படிந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஏரோது அரசனின் கொடுமைக்குத் தப்பித்துக் கொள்ள அத்தேசத்துக்கு கட்டாயப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அந்நிய தேசத்தில் பரதேசியான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மண்ணுலகம் அறிந்து கொள்ளாமல் மறைந்த தன்மையாய் வாழ்ந்து வந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஏழ்மையும் உழைப்பும் தவமுமுள்ள சீவியமாய் சீவித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். நெற்றி வியர்வை நிலத்தில் விழ, அன்றாட உணவைத் தேடிகொண்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மண்ணுலக வறுமையும் விண்ணுலக நன்மையும் மிகுதியும் கொண்டிருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். பிறர்சிநேகத்துக்கும் சமாதான ஒற்றுமைக்கும் மாதிரிகையான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். நினைவிலும் மனப்பற்றுதலினாலும் முழுவதும் விண்ணுலகில் சஞ்சரித்திருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உமது ஆயுள் முழுமையும் இடைவிடாது செபமும் ஞானயோகமுமாயிருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலும் உம்மை மன்றாடுகிறவர்களின் நம்பிக்கையும் எல்லாக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்குச் சுகிர்த மாதிரிகையுமாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.   உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்; சுவாமி உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. முதல்:  இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். துணை: இயேசுவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும். *செபிப்போமாக* 🌸🍃🌸🍃🌸🍃🌸🍃 இறைவா, திருக்குடும்பத்தின் சிறப்புமிக்க முன்மாதிரியை எங்களுக்கு அளித்தீரே, எம்மீது இரங்கி, இல்லறத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் அக்குடும்பத்தை நாங்கள் பின்னற்றி, உமது முடிவற்ற சம்பாவனையைப் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். *🙏🏻ஆமென்🙏🏻* 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #பிரார்த்தனை #சகாய மாதா #வேளாங்கண்ணி மாதா           *👑வெளியீடு👑*       *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*