innraya tv nigalchi

saravanan
613 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY சிந்தனை".*.( 04.04.2026) .................................. *உடல்,மனம் மேம்படுத்த'..* ................................. ஆரோக்கியம்’ என்றால் என்ன? `உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது… உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்’என்கிறது. ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மன அளவில் மகிழ்ச்சி இல்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப் போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர். உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்; அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப்போகும். மனதில் தோன்றும் எண்ணங்கள் தான் உடலின் ஆரோக்கியத்திற்கு உந்து சக்தியாக அமையும். இதைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வது என்பது ஒரு அற்புதக் கலை. அதை அனுபவித்தவர்கள் பகிர்ந்த சாட்சிகள் பல இணையத்தில் உள்ளது. உடல் நோய் வாய்ப்படும் பொழுது மனதை திடமாக இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவை விட மனம் நொந்து இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவு என்பது அதிகம் ஆகிறது. எனவே தான் மருத்துவர்கள் தைரியமாக இருங்கள் என்று நோயாளிகளிடம் கூறுவதைக் கண்டு இருக்கிறோம். உடல் ஆரோக்கியம் என்கிறதை அடைவதற்கு முதலாவது மன ஆரோக்கியம் முக்கியமானதாக இருக்கிறது..!! நம்மில் பலருக்கு தினமும் மனதையும், உடலையும் மேம்படுத்த நேரம் இல்லை என்பார்கள்.. ஆனால் தினமும் உடற்பயிற்சிக்கும் மற்றும் மனப் பயிற்சிக்கும் என்று செலவு செய்பவர்கள் வாழ்க்கையை தினம் தினம் முழுமையான ஆரோக்கியத்துடன் முழமையான இனிமையுடன் அனுபவிக்கலாம். *ஆம்.,நண்பர்களே..,* ''நோயற்ற வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை". இனிமையான ஆரோக்கியமான வாழ்க்கை என்பது, உடல், மனம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்து, இயங்கி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்குக் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம். (ஆக்கம். உடுமலை. சு.தண்டபாணி)💐💐💐💐💐
saravanan
447 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY சிந்தனை. ''பாராட்டுங்கள்...!'' எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தன்மைப் பாராட்டுவது தான். ஆனால்!, அவர் உயிரோடு இருக்கும் பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள். அதனால் தான் உயிரோடு இருக்கும் பொழுது பலருடைய அருமை தெரியாமலேயே போய் விடுகிறது... *ஒருவருடைய உன்னதமான செயலை அவர் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்... நம் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது...! நாம் அனைவரும் பாராட்டிற்காக ஏங்குகிறோம். இதில் யாரும் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்து விடும் என்று நாம் தவறாக நம்புகிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்... சமுதாயத்திற்கு நற்செயலை செய்தவரை உடனே பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் பாராட்டி விட வேண்டும்... 😊😊😊
saravanan
531 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY சிந்தனை".*.( 03.04.2026) ............................................. *"எது புத்திசாலித்தனம்''...?* ....................................... ஒருவர் வியாபாரத்தில் புத்திசாலியாக இருப்பார். மற்றவர் கம்ப்யூட்டர் துறையில் புத்திசாலியாக இருப்பார். இன்னொருவர் செருப்பு தைப்பதில் அனுபவசாலியாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் கெட்டிக்காராக இருப்பார். ஒருவர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார். இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தம் உள்ளதாகி விடுமா..? இவர்களால் தத்தம் தொழில் தொடர்பற்ற மற்றவற்றில் நிலைகளில் வெற்றி அடைய முடியாமல் போகலாம். அப்போது இவர்களின் தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகி விடும். இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், வியாபாரத்திலும், அரசியலிலும் வெற்றி அடையலாம். இப்படி பிழைப்பையே வாழ்க்கையின் நோக்கமாக இருப்பவர்களை புத்திசாலிகள் என்று அழைக்க முடியாது. இவர்கள் தங்கள் வாழ்க்கையை நல்வழியில் ஈடுபடுத்தாமல், வசதிகளை மட்டும் அதிகப்படுத்திக் கொள்பவர்களின் அந்த மாதிரி புத்திசாலித்தனம் நமக்குத் தேவை இல்லை. நாம் எப்போதும் பிரச்னைகளால் அறிவு மந்தமாகி விட்டது என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள். எந்த சூழ்நிலையை நாம் எப்படி அணுகிறோம் என்பதில் தான் பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நாம் விரும்பவில்லை என்பதால், அந்தச் சூழ்நிலையைத் துரத்தி விட முடியாது. அப்போது நாம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, என்ன செய்தால் குறைவான பாதிப்பு இருக்கும் என்று செயல்பட வேண்டும். எனவே எந்த சூழ்நிலையையும் விருப்பு, வெறுப்பு இன்றி நோக்குங்கள். ஒவ்வொரு நிகழ்வையும் நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கொஞ்சம் நம் புத்திசாலித்தனத்தோடு திறந்த மனதோடு ஆராயுங்கள். பிரச்னையா?, இல்லையா? என்பது நிகழ்வில் இல்லை. அதை நாம் எப்படி புத்திசாலித்தனத்தோடு நாம் ஏற்கின்றோம் என்பதில் தான் இருக்கிறது. *ஆம் நண்பர்களே.,* கிடைத்ததை வைத்து வாழ்க்கையில் மேல் நோக்கி எப்படிப் போவது என்று பார்ப்பது தான் உண்மையான ''புத்திசாலித்தனம்..'' (ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி ........)💐💐🙏🏻❤❤
saravanan
575 காட்சிகள்
7 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY சிந்தனை."*.( 02.04.2026) .............................. *''நிகழ்காலம் மட்டுமே...''* ................................ யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ, படித்தவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.. இச்சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள், வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்துக் களைப்பவர்கள் (ஆண், பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி,பசி, உறக்கம்,இழி சொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு. மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள். . உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள்.அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், ''உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. *ஆம்.,நண்பர்களே..,* மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர்,, ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம்..இனி ஒரு புதிய உலகம் அமைப்போம்.. சக மனிதர்களை மதிப்போம்.. மனிதனாக வாழ்வோம்.. ( ஆக்கம். உடுமலை சு. தண்டபாணி..)💐💐💐💐💐💐
saravanan
521 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY சிந்தனை".*.( 01.04.2026) ................................................. *"அமைதியைத் தேடி.."* ........................................ நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை. தொடர் நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஓய்வதில்லை. அந்த வேலைகளுக்கு இடையேயும், அமைதியான உறக்கம் போல, நம் உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது. அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும். அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களை விட, 'நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப் பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டு இருக்கிறார்களே…அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி... சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!! ஆம்.,நண்பர்களே. தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''. (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி )💐💐💐💐💐
saravanan
466 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY சிந்தனை".*.( 31.03.2026).. ...................................... *" பணம் தான் வாழ்க்கையா?’’..* ........................................ ‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லிக் கேட்டு இருப்போம். இது ஒரு விதத்தில் உண்மை தான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. பணம் வைத்து இருப்பது தவறு இல்லை. ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை வைத்து இருப்பது தான் தவறு.. பணத்துக்கு அதிக முக்கியம் கொடுக்கும் போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம். ஒரு வணிகப் பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்: “பணம் தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம். ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற நிலை வந்து விட்டால், எல்லாரும் குழம்பிப் போய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.” இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக் கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம், பசியை வாங்க முடியாது, மருந்தை வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம், தூக்கத்தை வாங்க முடியாது, புத்தகத்தை வாங்கலாம், புத்தியை வாங்க முடியாது, நகையை வாங்கலாம், அழகை வாங்க முடியாது, ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம், நண்பர்களை வாங்க முடியாது, வேலைக்காரர்களை வாங்கலாம், விசுவாசத்தை வாங்க முடியாது என்று நார்வே நாட்டு கவிஞர் அர்னா கர்பார்க் சொல்லி உள்ளார்.. வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார். பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்” *ஆம்.,நண்பர்களே..*, பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக எண்ணி, பணமே குறிக்கோள் என்று எண்ணி வாழ்பவர்களுடன் பழகாதீர்கள். பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிப்பவர்களோடு பழகுங்கள்... (ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐💐
saravanan
627 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY சிந்தனை.*.( 29.03.2026). .................................. *" குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்''* .................................. குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியில், ஆரோக்கியம் விளையாட்டுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதை பெற்றோர் உணர்வதே இல்லை இன்றைக்கு எத்தனை பெற்றோர் தங்களின் குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள்? . இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்வி என்பது பிள்ளைகளின் வாழ்க்கையில் மிக முக்கியம் ஆனது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதே சமயம் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பதும் முக்கியமானது என்பதை பல பெற்றோர் மறந்து விடுகின்றனர். படிப்பில் தங்களின் பிள்ளை முதல் ஆளாக வர வேண்டும் என ஏதேதோ செய்து மெனக்கெடும் பல பெற்றோர்கள், அதே போல ஆரோக்கியமாக தன் பிள்ளை இருக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. இப்போது பல பள்ளிகளில் விளையாட்டு எனபது பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது. மேலும் பல குழந்தைகளுக்கு விளையாட்டுக்களின் பெயர் கூடத் தெரிவதில்லை... இன்றைய சூழலில் மாணவர்களைப் படித்து அதிக மார்க் வாங்கும் இயந்திரங்களாக உருவாக்குவதில் பள்ளிகளுக்கு இடையே பெரும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் விளையாட்டு உட்பட வேறு தனித்திறமைகளை குழந்தைகளிடம் கண்டறிந்து அவற்றை வளர்க்க உதவும் பள்ளிகளும், ஆசிரியர்களும் மிகக் குறைவு. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு. விடுமுறை நாட்களிலும் வீட்டுப்பாடம்,ட்யூசன் போன்றவைகள் குழந்தைகளின் நேரத்தை தீர்த்து விடுகிறது. விளையாட்டு என்பது உடலுக்கு மட்டும் பலம் சேர்ப்பது அல்ல. விளையாட்டு என்பது குழந்தைகள் சகமனிதர்களுடன் தயக்கமில்லாமல் பழகவும், வெற்றி தோல்விகளை எளிதாக எடுத்துக் கொள்ளவும், விட்டுக் கொடுக்கும் உதவும் ஒரு வழி. தாங்கள் விளையாடாமல் டி.வி.யில் மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை மட்டும் பார்க்கும் குழந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருப்பார்கள்? தினமும் அதிகாலையில் இருந்து இரவு உறங்கும் வரை படிப்பும், எழுத்தும் என்று இருக்கும் குழந்தைகளுக்கு, உடல் நலம் இன்மையும் மனஉளைச்சலும் ஏற்படுவது இயல்பு. குழந்தைகளுக்குக் கல்வியைப் போலவே உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்படி செய்வதே பெற்றோரின் கடமை. *ஆம்.,நண்பர்களே..,* தினமும் மாலை நேரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். அது அவர்களின் மன,உடல் நலத்திற்கு நன்மையைத் தரும் என்பதை உணர வேண்டும் குழந்தைகள் குழந்தைகளாக இருந்து குழந்தைப் பருவத்திற்கே உண்டான மகிழ்ச்சியை முழுமையாக அவர்கள் அனுபவிக்கட்டும். அதற்கு பெற்றோர் தடையாக இல்லாமல் உறுதுணையாக இருப்பது அவசியம். (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி....)💐💐💐💐💐 -
saravanan
560 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை.*.( 28.03.2026).. .................................. *"தலைக்குனிவு''..* ............................. போராடத் துணிந்தவர்களுக்குத் தான் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, 'நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற அந்த வெறி மனதில் இருக்க வேண்டும்.. அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? தலைக்குனிவும், அவமானமும் ஏற்படுகிற போது தான். அதனால் அவமானத்தைச் சேமித்து வைக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கான உந்து சக்தி. அவமானத்தைப் போற்ற வேண்டும். அதுதான் உங்கள் லட்சியக் கனவுகளைத் திறக்கும் சாவி. அவமானம் ஒரு தீ.அதை அணைய விடக் கூடாது. ஒவ்வொரு அவமானமும் ஒரு போதிமரம். அதுதான் வெற்றி என்ற கனியைத் தரும். ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு அரசு அதிகாரி ஒருவர், சில அதிகாரிகள் முன்னிலையில் அவரை குரங்கு மூஞ்சி என்று திட்டி விட்டார். ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியான பிறகு தன்னைத் திட்டியவரைக் கடுமையாகத் தண்டிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவருக்கு பல நல்ல பொறுப்புகளைக் கொடுத்தார் லிங்கன். இதற்கு என்ன காரணம் என்று கேட்க, அவர் என்னை அவமானப்படுத்தியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. எனினும் அது என்னுள் காயத்தை ஏற்படுத்தியது. காயத்தை ஆற்ற என்னை மேலும் தகுதியுள்ளவனாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான முயற்சியைத் தொடங்கினேன். உழைத்தேன். அந்த முயற்சியாலும், உழைப்பாலும் இந்தப் பதவியை இப்போது அடைந்து உள்ளேன். இந்தப் பதவியை அடைய அவரும் ஒரு காரணம். என் நன்றிக் கடனை அவருக்குச் செலுத்த ஆசைப்பட்டு இந்தக் கூடுதல் பதவிகளை வழங்கினேன் என்றார். *ஆம்.,நண்பர்களே..,* எவ்வளவு பெரிய கரிய இருட்டையும் ஒரு சின்ன விளக்கின் வெளிச்சம் நீக்கி விடும். அந்த விளக்கின் வீரியத்தை நாம் கொள்ள வேண்டும். இனியும் அவமானத்தைக் கண்டு ஏன் சோர்ந்து போக வேண்டும்? சாதனைகளுக்கு எண்ணங்கள் தான் எரிபொருள். அவமானங்களை சேமியுங்கள். அதுவும் வெற்றிக்கான மூலதனம் தான்.. (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐💐💐💐
saravanan.
1.3K காட்சிகள்
27 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY *🌺🌺"இன்றைய* *சிந்தனை (13.03.2026..)* ................................ *"முன்னேற முயற்சி செய்யுங்கள்.."* ................................ ... உங்கள் சொந்த தொழிலிலோ,அல்லது நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தையோ முன்னேற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அப்போது தான் சொந்தத் தொழிலையும், நிறுவனத்தையும் முன்னேற்றம் அடைய வைக்க முடியும்.. எதையும் ஏனோதானோ என்று செய்ய வேண்டாம்.. உங்கள் தொழிலும்,நீங்கள் பணி புரிகின்ற நிறுவனம் முன்னேறினால் தான் உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்... *ஆம்.,நண்பர்களே* அலைகள் ஓய்ந்த பின்னர் கடலுக்குள் இறங்குகிறேன் என்பதும், வாய்ப்புகள் வரும் வரை காத்து இருப்பேன் என்பதும் ஒன்று தான். அலைகள் ஒருபோதும் ஓயப்போவதில்லை வாய்ப்புகள் ஒருபோதும் தானாக வருவதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாய்ப்புகளை நாமே உருவாக்கி கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது தான் புத்திசாலித்தனம்... முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி....................)💐💐💐💐💐💐💐..
saravanan.
558 காட்சிகள்
29 நாட்களுக்கு முன்
#innraya SINTHANAY சிந்தனை".* (11.03.2026) --------------------------- *"விமர்சனம்...* --------------------------- பெரும்பாலும் மற்றவர்களுடன் உறவை பாதிக்கக் கூடிய முக்கியமான செயலாக சில நேரங்களில் அமைந்து விடுவது என்னவென்றால் மற்றவர்களை மனம் நோகும்படி விமர்சனம் செய்வதால். ஒவ்வொரு மனிதருக்கும் சுய கெளரவம் இருக்கின்றது.. உங்களின் விமர்சனம் அவர்களின் சுயகெளரவத்தை எள்ளளவும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. கூடுமானவரை அவரின் சுய கெளவரத்தை உயர்த்தும் வகையிலும், நமது சொற்களும், விமர்சனமும் இருக்க வேண்டும்.. ஒருவேளை அவர் தவறு செய்து இருந்தால் மற்றவர்கள் முன்னிலையில் விமர்சனம் செய்வதைக் கூடுமானவரை தவிர்த்து விடுங்கள்.விமர்சனம் செய்வதை தனியாகவும், இரகசியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.. விமர்சனம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்ப்பட்டால் அவர் செய்த தவறை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்..அவரின் மற்ற குணங்களை விமர்சனம் செய்யாதீர்கள். விமர்சனம் செய்வது அவரின் நன்மைக்கே என்று அவர் உணரும் வகையில் மென்மையாகவும், அன்பாகவும், பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள்.. *ஆம்..நண்பர்களே.* .ஒரு செயலைக் குறித்து பலமுறை விமர்சனம் செய்யாதீர்கள்.. ஏனெனில், மீண்டும், மீண்டும் ஒருவரின் தவறை சுட்டிக் கொண்டே இருந்தால் யாரும் விரும்ப மாட்டார்கள்.. மற்றும் அவர் உங்களை அவர் தவிர்க்க இது வாய்ப்பாக அமையலாம். (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி.....................)💐💐💐💐💐💐💐