*💔அன்னை மரியாளின் ஏழு வியாகுலங்கள்*
🫐 *நான்காம் வியாகுலம்*
*_இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்._*
(லூக் 23:27)
இந்தக் கொடூரச் செயலைக் கண்ணுற்ற நம் தாய் எங்கோ, யாருக்கோ கிடைக்க வேண்டிய தண்டனை, இன்று தன் ஒரே மகனுக்கு குற்றமற்றவருக்குக் கிடைத்திருப்பதைக் கண்டு, வருத்தம் மேலிட வதங்கி நிற்கிறார். இது அன்னையின் மனதை உடைத்து நொறுக்குவது போன்ற வேதனையைத் தந்தது.
30 ஆண்டுகளாக கண்ணுக்குள் கண்ணாகப் பொத்திப் பொத்தி வளர்த்த மகன், இந்த மூன்று ஆண்டுப் பணி வாழ்வால், விரோதியாக, வேண்டாதவராக, எதிர்க்கப்பட வேண்டியவராக, ஒழித்துக் கட்டப்பட வேண்டியவராகப் பார்க்கப்படுவதைக் கண்டு, குமுறுகிறது அன்னையின் உள்ளம்.
"எப்போதும் மக்கள் கூட்டத்தோடு நடந்து, எல்லோரையும் ஏற்றுக் கொண்டு, எவரும் அன்னியரல்ல என்று போதித்து, எல்லோருக்கும் என் இதயத்தில் இடமுண்டு" என சொன்னவர் , இன்று நாதியற்று, நையப் புடைக்கப்பட்டு, உடல் முழுதும் காயங்களோடு தள்ளாடி தூக்க முடியாத பாரச்சிலுவையைத் தூக்கிச் செல்வதைக் கண்டு, அன்னை அனுபவித்த துயரைத் தியானித்துச் செபிப்போம்.
*செபம்*
வியாகுல அன்னையே, உம் திருமைந்தன்
பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு,
போகிறதைக்கண்டு
மிகுந்த துயருற்றீரே, அந்த துயரத்தைப் பார்த்து, பாவத்தினால் எனக்கு வருகிற துன்பங்களை, நான் இம்மையில்
பொறுமையோடு சகித்து, மறுமையில்
மகிமையைப் பெற்றுக்கொள்ள உம்மை
மன்றாடுகிறேன். ஆமென்.
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #சகாய மாதா #வில்லியனூர் மாதா #அன்னை மரியே வாழ்க💒💐