மகாபெரியவா

ச.திருமலை
3.3K views
4 months ago
*" *வைஷ்ண வருக்கு அனுக்ரஹம் செய்த அம்பாள்* 👆🏻👇🏻 பெரியவா சிவாஸ்தானத் திலிருந்து கிளம்பி கர்னாடகா, மஹாராஷ்ரா , ஆந்திரா எல்லாம் பாதயாத்திரை பண்ணிவிட்டு, கர்னூலில் கிளம்பி காஞ்சிபுரம் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவம். அந்த கால கட்டத்தில், பெரியவா மறு படியும் காஞ்சிபுரம் திரும்புவாளா என்று பலருக்கு சந்தேகம் இருந்தது. தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் பெரியவாளுடய close friend பிள்ளையார் ஒருவர் இருந்தார். (இப்பவும் இருக்கிறார்). பெரியவா காஞ்சிபுரம் திரும்பி விட்டால் 2016 கொழுக்கட்டை பண்ணுகிறேன் என்று அவரிடம் ஒரு அம்மா (பொள்ளாச்சி ஜயம்) வேண்டிக் கொண்டாள். பெரியவா திரும்பி வந்தவுடன் சிவா ஸ்தானத்தில் ஒரு கொழுக்கட்டை factoryயே நடந்தது. காஞ்சிபுரத்தில் அந்த அம்மாவுக்கு பரிச்சயமான ஒரு ஶ்ரீவைஷ்ணவர். சில வைஷ்ணவர்கள் சிவன் அம்பாள் கோவில்களுக்கு செல்வதுண்டு. நம் வைஷ்ணவர் இந்த small groupஐ சேர்ந்தவர். ஒரு நாள் காமாக்‌ஷி யம்மன் கோவிலில் இவரை அம்மா சந்தித்தார். அம்மாவிடம் தன்னுடைய பெரிய குறை ஒன்றை சொல்லி வருத்தப் பட்டார். அவருடைய ஐந்து வயதுப் பெண் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. தவமிருந்து பிறந்த குழந்தை ஊமை யாகி விட்டதே. அம்மா அவரிடம் "பெரியவாளிடம் ஏன் சொல்லலை". " இதெல்லாம் பெரியவாளிடம் சொல்லலாமா மாமி" "ஸர்வேஸ்வரனிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்றது " வைஷ்ணவர் convince ஆகி விட்டார். மறு நாள் காலை மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு பெரிய வாளிடம் வந்தார். தரிசனத்திற்கு இவர் முறை வந்தவுடன், நமஸ்காரம் பண்ணிவிட்டு, தயங்கித் தயங்கி நின்றார். பெரியவா இவரைப் பார்த்து "என்ன விஷயம் " என்று கேட்டார். "என் பொண்ணுக்கு அஞ்சு வயஸாறது. வாய் பேசல. குழந்தை பேசிக் கேக்கணும்னு என் ஆம்படயா ரொம்ப ஆசைப் படறா". உடனே பெரியவா "ஏன் உனக்கு அந்த ஆசை இல்லயா" என்றதும், நம்ம வைஷ்ணவர் கொஞ்சம் அசடு வழிந்தார். சிறிது நேரம் நிசப்தம். கொஞ்ச நேர மௌனத்திற்குப் பின் பெரியவா "காமாக்‌ஷி பாத்துப்பா, போய்ட்டு வா " என்று அபய ஹஸ்தம் காட்டி அனுப்பி வைத்தார். குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றவர்கள், வீட்டிற்குள் நுழைந்தவுடன், அந்த பெண் குழந்தை " அம்மா பசிக்கிறது மம்மம் பொடறயா" என்று குரல் கொடுத்தது. வைஷ்ணவர் அலறி விட்டார். அவஸரம் அவஸரமாக குழந்தைக்கு நாலு வாய் சாதத்தை அடைத்துவிட்டு, குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டு இரண்டு பேரும் பெரிய வாளிடம் ஓடினார்கள். பெரியவாளைப் பார்த்ததும், விழுந்து நமஸ் கரித்து ஹோ என்று அழுதார். " பெரியவா அனுக்ரஹம் ! பெரியவா அனுக்ரஹம்! பெரியவா அனுக்ரஹம்! " வேரொன்றும் பேச வரவில்லை. இவரைப் பார்த்து பெரியவா "நான் ஒண்ணும் பண்ணல்ல. காமாக்‌ஷியின் அனுக்ரஹம்". ஶ்ரீ வைஷ்ணவர் உடனே "நான் ஏதாவது பண்ணணுமே. ! நான் ஏதாவது பண்ணணுமே" "ஒண்ணு பண்றயா ! அம்பாளுக்கு ஒரு.... சஹஸ்ர கலச அபிஷேகம் பண்ணி வைக்கறயா". "ஆஹா, பேஷா பண்ணிடறேன். "என்ன ப்ரமாதம். ஒரு கலசம் நூறு ரூபாய் என்றால் கூட (in 1980s) ஆயிரம் கலசம் ஒரு லக்‌ஷம் ஆகும். குழந்தைக்காக இது கூட முடியாதா ! என்று மனதில் எண்ண ஓட்டம். அவரைப்பார்த்து பெரியவா "அம்பாளுக்கு கலசம் சொப்பு பித்தள எல்லாம் பண்ணக்கூடாது. ஸ்வர்ண கலச அபிஷேகம்தான் பண்ணணும்". அம்மாடியோ !!! நம்ப மாமா மூஞ்சில ஈயாடல . ஒரே ஷாக். நடக்கற காரியமா என்ன. இது பெரிய வாளுக்குத் தெரியாதா என்ன !!! இதுவும் தெரியும். இதற்கு solution எங்கேயிருந்து வரும் என்றும் தெரியும்.!! அங்கே நின்று கொண்டிருந்த அம்மா, ஶ்ரீவைஷ்ணவரை ஜாடைகாட்டி அழைத்தாள். " நீங்கள் பெரியவாளிடம் கலசம் சின்னதாக காசிச் சொம்பு மாதிரி இருக்கலாமா என்று கேளுங்கோ". " அது கூட எப்படி மாமி ". "இதை முதல்ல கேளுங்கோ ". பெரியவாளிடம் கேட்டார். பெரியவா. "அப்படியே பண்ணு " என்றார். After this Amma took over. பெரியவா முன்னால போய் நின்றாள். என்ன என்று பெரியவா கை ஜாடையாகக் கேட்டார். ஸஹஸ்ர ஸ்வர்ண கலச அபிஷேகங் கறது ரொம்ப பெரிய புண்ய கார்யம். பலன் எல்லாருக்கும் கிடைக்கிறமாதிரி எல்லாருமா சேர்ந்து பண்ணலாமா" உடனே பெரியவா "எந்த புண்ய கார்யமும் எல்லாரும் கலந்து பண்றது ரொம்ப விசேஷம். அப்படியே பண்ணுங்கோ". அம்மா விடுவதாக இல்லை. "ஒரு 1/2 லிட்டர் ஜலம் பிடிக்கற மாதிரி சொப்பு சொம்பு பண்ணி, உள் பக்கம் , தங்க ரதத்தில பண்ற மாதிரி , தங்க ரேக்கு பதிச்சுகலசம் வைக்கலாமா". " பேஷா பண்ணலாம். தீர்த்தம் தங்கத்தில இருக்கிற மாதிரி பாத்துக்கோங்கோ ". அப்பாடா பொழச்சோம் . இல்லாட்டா 1008 கலசம் தங்கத்தில பண்றது நடக்கற காரியமா என்ன . உடனே திட்டம் தீட்டப்பட்டு , ஒரு குடும்பத்துக்கு. 100 ரூபாய் என்று வசூலிக்கப்பட்டு, தங்கக் கலசங்கள் ரெடி. பிறகென்ன, விஜயதசமிக்கு மறு நாள் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, த்வாதசியன்று காலை அம்பாளுக்கு ஜாம் ஜாம் என்று பெரியவா முன்னிலையில் அபிஷேகம் நடந்து முடிந்தது. ஒவ்வொரு வருஷமும் விஜயதசமிக்கு அடுத்த த்வாத சியன்று இந்த ஸஹஸ்ர கலச அபிஷேகம் இன்று வரை நடக்கிறது. வருங்காலத்திலும் நடக்கும். நாம் இவ்வளவு நேரமாக பார்த்துக் கொண்டிருந்த ஶ்ரீவைஷ்ணவர் வேறு யாரும் இல்லை. காஞ்சி ஶ்ரீமடத்தில், மாலை வேளைகளில் கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளின் போது , மைக்கை கையில் வைத்துக் கொண்டு, 'அன்னை காமாக்‌ஷியின் அருளால்' என்று கம்பீரமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த , ஸமீபத்தில் வைகுண்ட ப்ராப்தி அடைந்த நமது TV சாரியார் அவர்கள்தான். "ஸகலம் கிருஷ்ணார் ப்பணம்." ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! " *காமாஷி கடாட்ஷம்."* ஜகத்குரு சரணம். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #மகாபெரியவா #தமிழ் நாதம்
திருநீற்றுச் சுவடு
23.4K views
6 months ago
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #மகாபெரியவா #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் புரட்டாசி மாதம் – 24ஆம் நாள்* வாழ்க்கையில் எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, அது நமக்கு ஒரு நினைவூட்டல் — “நான் அல்ல, அவர் தான் நடத்துகிறார்” என்ற உண்மையை உணர்த்தும் நேரம் அது. 🙏 அன்பு, நம்பிக்கை, சமாதானம் — இவை அனைத்தும் நாராயணனை நினைக்கும் மனத்திலே பிறக்கும். 🌿 *ஓம் நமோ நாராயணாய ✨*
திருநீற்றுச் சுவடு
3.8K views
6 months ago
மனுஷாளவிட ஒனக்கு உப்பு, புளி, மொளகா... மளிகைதான் பெருஸா போய்டுத்தா? தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் வீட்டுக்குள் திடீரென்று பெரியவா நுழைந்தார். வரவேற்க எந்த ஏற்பாடும் இல்லை. பெரியவா அந்த வீட்டு மனிதர்களைக் கூட எதிர்பார்க்காமல், தானே..... முற்றம், தாழ்வாரம், கூடம் என்று எல்லா இடங்களுக்கும் ரொம்ப ஸ்வாதீனமாக போனார். வீட்டு பெரியவர் பரபரப்புடன் ஓடி வந்தார். "பெரியவா எங்காத்துல பாதம் பதிச்சது பரம பாக்யம்...." பெரியவா அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவேயில்லை. பின் தாழ்வாரத்தில் ஒரே ஒரு அறை மட்டும் வெளியே பூட்டப்பட்டிருந்தது. பெரியவா அதன் முன் போய் நின்றார். ஜாடையில் அதை திறக்கச் சொன்னார் பெரியவா. வீட்டுக்காரரோ தயங்கினார். "அதுல வெறும் ஸாமான் போட்டிருக்கு பெரியவா...." பெரியவா ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த இடத்தை விட்டு நகரவுமில்லை. அழிச்சாட்டியமாய் அங்கேயே உட்கார்ந்து விட்டார். வீட்டுக்காரர் வேறு வழியின்றி கதவை திறந்தார். கதவை திறந்ததும், யாரோ ஒருத்தர் உள்ளேயிருந்து ஓடி வந்து பெரியவா ஶரணத்தில் விழுந்து கதற ஆரம்பித்தார் . "தெய்வமே! பெரியவா, என்னைக் காப்பாத்த நீங்களே வந்துட்டேளா! நான் எந்த தப்பும் பண்ணலை. இவா என்னை ரொம்ப ஹிம்ஸை பண்றா" என்று அழுதார். பெரியவா அவரை கருணை பொங்கப் பார்த்தார். அதே க்ஷணத்தில் தன்னுடைய ருத்ரமுகத்தையும் அந்த வீட்டுக்காரருக்கு காட்டினார். "என்னது இது? ஸாமான் வெச்சிருக்கற ரூமா?..." "இல்ல....பெரியவா இவன் எங்காத்ல ஸமையல் பண்றான். ஒரே திருட்டுபுத்தி! மளிகை ஸாமானெல்லாம் ஒண்ணொண்ணா அபேஸ் பண்றான். ஒத்துக்க மாட்டேங்கறான்" "நான் எந்த ஸாமானையும் திருடவேயில்லை பெரியவா....அந்யாயமா எம்மேல பழி போட்டு, தண்ணி கூட குடுக்காம ஹிம்ஸை பண்றா....காப்பாத்துங்கோ! பெரியவா" பாவம், அழுதார். "மனுஷாளவிட ஒனக்கு உப்பு, புளி, மொளகா... மளிகைதான் பெருஸா போய்டுத்தா? மடத்துலேர்ந்து, இவன் திருடினதா சொல்ற மளிகை ஸாமான் எல்லாத்தையும் தரச் சொல்றேன். இனிமே இப்டி கொடூரமா நடந்துக்காதே! வேலை செய்யறவாளும் மனுஷாதான்! அவாட்ட ப்ரியமா நடந்துக்கோ!" அடுத்த க்ஷணம் விறுவிறுவென்று வெளியே போய்விட்டார். அறைக்குள் அடைத்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #மகாபெரியவா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் வைக்கப்பட்ட ஜீவனின் ஓலம் அந்தராத்மாவுக்கு தெரியாதா என்ன? பெரிவா கருணையே கருணை 🙏🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
ச.திருமலை
48.8K views
6 months ago
நம்பிக்கை தரும் ஆன்மீக சிந்தனைகள் அறிவோம் ஜகத்குரு சரணம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #தமிழ் நாதம் #மகாபெரியவா