கதை சொள்ளரோம்

🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
648 views
25 days ago
சிந்தனை".*.( 24.03.2026).. ............................... *" வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்''* ............................. நமது வாழ்வில் தினமும் ஏதோ ஒரு வகையில் வாய்ப்புகள் நம்மைக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. அவற்றை இனம் கண்டு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு ஆகும். சில நேரங்களில் வாய்ப்புகள் ஒரு முறைக்கு மேல் கதவைத் தட்டுவது இல்லை. அப்படித் தட்டுகையில் பெரும்பாலோர் அந்த வாய்ப்புகளைத் தவற விட்டு புலம்பித் தீர்ப்பதை நாம் பார்க்கின்றோம். ஒரு சில வேளைகளில் காலம் நமக்கு இரண்டாம் வாய்ப்பைத் தருகிறது.... அப்போதாவது அவற்றை கெட்டியாகப் பற்றிக் கொண்டு வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறப் பார்க்க வேண்டும்.. ஒரு ஊரில் ஒரு தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்குத் தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரைப் பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளி வந்து விடுவார். ஒருமுறை, அவருடைய கை-கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்திய போது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளிவந்தார். இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்த போது, அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தார். அவர் எப்படி இதனை செய்கிறார், என்ன யுத்திகளை மேற்கொள்கிறார் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்கவே முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது. இதுவரையில் அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர் கூட தப்பித்தது இல்லை என்னும் சான்று பெற்றது அந்த சிறைச்சாலை. இதனைக் கேள்விப்பட்ட அந்த மாயாஜாலக் கலைஞர், தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும்படியும், ஒருமணி நேரத்தில் நான் வெளி வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு காட்டுகிறேன் என்றும், அறைக்கூவல் விடுத்தார். அதற்கு ஒப்புக் கொண்ட அந்நாட்டு அரசாங்கம் அவரை சிறைச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை சாத்தியது. உள்ளே சென்ற அவர் முதலில் செய்ததாவது, தான் அணிந்து இருந்த இடுப்புப் பட்டையில் ஒளித்து வைத்து இருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார். பின்னர் அந்தக் கம்பியை வைத்து கதவில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் பூட்டைத் திறக்க முற்பட்டார்.அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. இவ்வாறாகத் தொடர்ந்து மூன்று மணி நேரம் முயற்சி செய்தும், அவரால் பூட்டைத் திறக்க முடியவில்லை. மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது.இதில் வேடிக்கை என்னவெனில் ? கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது, பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மைப் பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவைக் கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டு இருந்தார். "நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில் வாய்ப்புகள் இல்லை என்று பூட்டுப் போட்டுக் கொண்டு உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். *ஆம். நண்பர்களே.* வாழ்க்கையில் நமக்கான வாய்ப்புகள் இங்கு ஏராளம். அந்த வாய்ப்புகளைத் தேடி நாம் சென்றோம் என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். (ஆக்கம்.உடுமலை.... சு.தண்டபாணி..)💐💐💐💐💐 #பொழுது போக்கு #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
689 views
1 months ago
#பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம் அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள். விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து , அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது.. ?, என ஆதங்கமாகக் கேட்டார். "எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது..", என அப்பா வருத்தமான குரலில் சொல்லவே, நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார். இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்... "உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்..?" "உண்மைதான்.. தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள். அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை. ஆகவே தவறி விழுந்து விட்டது. இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா..? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார். அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன். ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார். அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும். மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும். "உறவுகளை உடை படாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன.." அப்பாவின் முப்பது ஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது.. வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே..! இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள்.. உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது. காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல. விட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது. நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன..☺😊😊