கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்

k. mohan
907 காட்சிகள்
15 நாட்களுக்கு முன்
இன்று ஆக்டர் புனித் ராஜ்குமார் பிறந்தநாள் #புனித் ராஜ்குமார்
-
1K காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
புனித் ராஜ்குமார்.... #நடிகர் புனித் ராஜ்குமார் (17 Mar 1975 - 29 Oct 2021) தனது *46*'வது வயதில் மறைந்த கன்னடா நடிகர் புனித் ராஜ்குமார் இவரைப்பற்றிய சிறு குறிப்புகள்.! *கன்னட திரை உலகில்* பிரபலமான நடிகர் *ராஜ்குமாரு*'க்கு *ஐந்தாவது* மற்றும் கடைசி மகனாக பிறந்தவர் இவர் *சென்னையில் பிறந்தவர்* அந்நாட்களில் கன்னட படங்களும் சென்னையிலேயே தயாராகி வந்ததால் திரைப் படங்களில் நடிப்பதற்காக, சென்னையில் வசித்து வந்த இவரது குடும்பம் இவரது *ஆறாவது வயதில் மைசூருக்கு புலம் பெயர்ந்தது.!* இவர் *6 மாத குழந்தையாக* தமிழ்நாட்டில் இருக்கும் போதே படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்.! அப்படி நடித்து முதலில் நடித்து வெளிவந்த படம் *பிரேமதா கனிகே* 1976 (Premada Kanike) இதன் பிறகு *நான்கு, ஐந்து* படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் *1981*'ல் தனது *ஆறாவது*' வயதில் *ரோகித்* என்ற பெயரில் *பாக்கிய வந்தா* (Bhagyavantha) என்ற *கன்னட* படத்தில் முக்கிய வேடம் ஏற்று *பான தாரியலி* (Banna Daariyalli) என தொடங்கும் பாடலை பாடி நடித்திருந்தார்.! அதன் பிறகு *2002* வரை குழந்தை நட்சத்திரமாகவும் இளைஞராகவும் சில படங்களில் நடித்து வந்த இவர் முதன்முதலில் *அப்பு* 2002 என்ற படத்தில் *கதாநாயகனாக தோன்றினார்.!* தனது *தந்தை ராஜ்குமாரை போலவே நடிப்பதுடன் பாடவும் திறமை பெற்றிருந்த* இவர் தனது படங்களில் முக்கியமான பல பாடல்களை பாடியுள்ளார்.! முதலில் கதாநாயகனாக நடித்த படத்திலும் *தாலிபான் அல்லா அல்லா* என்ற பாடலை பாடி நடித்திருந்தார்.! இந்தப்படம் பின்னர் *சிம்பு* நடிப்பில் *தம்* 2003 என்ற பெயரில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.! *2012*'ல் கன்னடத்தில் ஒளிபரப்பான *கன்னட கோடியாதிபதி* (Kannada version of *Who Wants to Be a Millionaire*) நிகழ்ச்சியை நடத்துபவராக திறம்பட நடத்தி மிகப் பிரபலமானார்.! உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்ட இவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி எடுத்து வந்தவர்.! * உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால்* தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு *சிகிச்சை பலனின்றி இறந்தார் இவரது *ஆன்மா ஆண்டவனின் அருட் பாதங்களில் அமைதி அடைய* அனைவரும் பிரார்த்திப்போம்