நந்தினிக்கு நடந்தது என்ன :
இந்த கௌரி சீரியல் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து பெங்களூருவில் நடைபெற்றுவந்ததுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கும் முன்புதான் சென்னைக்கு இந்த சீரியல் ஷூட்டிங் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலிலிருந்தே பெங்களூருவில் தங்கி ஹூட்டிங்கில் கலந்துகொண்ட நந்தினி, மேலும் சென்னையில் நடைபெற்றுவந்த ஷூட்டிங்கிற்காக வந்து வந்து சென்றதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல் மேலும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டுள்ளார். அதை தொடர்ந்து பிரேக் எடுப்பதற்காக பெங்களூரு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று 2025 டிசம்பர் 28ம் தேதியில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை அவரின் சீரியல் தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.
நடிகை நந்தினியின் பூர்வீகம் :
நடிகை நந்தினி ஆந்திராவை சேர்ந்தவர். இவர் தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்திருந்த நிலையில், அதை தொடர்ந்த தமிழிலும் கௌரி என்ற சீரியலில் மையின் கதாபாத்திரமாக நடித்துவந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு பிரபலம் கிடைத்துவந்த நிலையில், தற்போது இவர் எடுத்த முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு சீரியல் குழு மற்றும் தொலைக்காட்சியும் பெரும் வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது. (தற்கொலை என்பது எந்தவொரு
#📰டிசம்பர்-29 முக்கிய செய்திகள்😇 #சீரியல் நடிகை தற்கொலை