tamil new year

Savittri Raju
1.5K காட்சிகள்
19 மணி நேரத்துக்கு முன்
சித்திரை புத்தாண்டு இதுதமிழர்களின் மிக முக்கிய பாரம்பரிய பண்டிகையாகும். வசந்த காலத்தின் தொடக்கத்தையும், சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதையும் குறிக்கிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி தீபமேற்ற வேண்டும். சித்திரை மாதம் செவ்வாய் கிழமையாகும். இது வெறும் கால மாற்றம் மட்டுமல்ல, இயற்கையோடு இணைந்த, புதிய நம்பிக்கைகளையும், மகிழ்ச்சியையும் விதைக்கும் ஒரு பண்பாட்டு நிகழ்வாகும். வரலாற்று மற்றும் வானியல் சிறப்பு சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளே சித்திரை 1-ஆம் நாளாக கணக்கிடப்படுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கமாக (இளவேனில் பருவம்) கருதப்படுகிறது, மா, பலா, வாழைகாய்த்து குலுங்கும் அப்போதுதான் செடி, கொடிகள் துளிர்த்து பூத்துக் குலுங்கும். இதுவே தமிழ் ஆண்டு பிறப்பு என்பது வழக்கில் உள்ளது. கனி காணல்: புத்தாண்டு முன்தினம் இரவு கோலம் போட்டு கனிகள், பூக்கள், நகைகள், பணம், கண்ணாடி, மற்றும் அரிசி வெற்றிலைஆகியவற்றை ஸ்வாமி முன்பு ஒரு தட்டில் வைத்து, புத்தாண்டு அதிகாலையில் எழுந்து அதாவது காலை 4.30 to 6 மணிக்குள் பார்ப்பது, ஆண்டின் சுபிட்சத்திற்கு காரணமாக நம்பப்படுகிறது. சுமங்கலி பெண்கள் தலை நிறைய பூ வைத்து பொட்டோடும் கைவளை கல கல என வலம் வர மஹாலக்ஷ்மியின் ஆசி கிட்டும். கன்னி பெண்கள் புத்தாடை அணிந்து தாய் தந்தை சகோதர சகோதரிகளின் ஆசி பெற வேண்டும். அதிகாலையில் அனைவரும் கோயில்களுக்குச் சென்று இறைவனை குடும்பத்துடன் வழிபட வேண்டும். பாயசம் , வடை , வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி தயிர் பச்சடி போன்ற இனிப்பு, கசப்பு, புளிப்பு கலந்த உணவுகள் சமைக்கப்படும், இது வாழ்க்கையின் அனைத்து சுவைகளையும் சமமாக ஏற்க வேண்டும் என்ற தத்துவத்தைக் உணர்த்துகிறது. உறவினர் சந்திப்பு: வீடுகளில் பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வர். சமூக முக்கியத்துவம் சித்திரைப் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கத்தைக் குறிக்கிறது. இது உழவர்களுக்கான நாளாகவும், புதிய விவசாயப் பணிகளைத் தொடங்கும் நாளாகவும் குறிப்பாக கேரளாவில் விஷு மிகவும சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பூக்களால் கோலமிட்டு வழிபடுவர். இது பழைய கசப்புகளை மறந்து, புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க உதவும் ஒரு நன்னாளாகும். தமிழர்களின் கலாச்சார அடையாளமான சித்திரைப் புத்தாண்டு, ஒற்றுமை, அன்பு மற்றும் நம்பிக்கையை வலியுறுத்துகிறது. இந்த இனிய நாளில் புதிய இலக்குகளை நிர்ணயித்து, மகிழ்ச்சியுடனும், சுபிட்சத்துடனும் வாழ உறுதி ஏற்போம். சித்திரை மகளை சந்தோஷமாய் வரவேர்ப்போம். அந்த மாதம் முழுவதும் சிறந்த மாதமாக விளங்கும் ஐய்யமில்லை . Savittri Raju #தமிழ் புத்தாண்டு