குருபெயர்ச்சி 2026 - ஓர் பார்வை/புரிதல்..
(பதிவை இறுதிவரை பொறுமையாக வாசிக்கவும்).
திருக்கணித பஞ்சாங்கப்படி குருபெயர்ச்சியானது வரும் 1/6/2026 வைகாசி 18 ம் தேதி திங்கள்கிழமை இரவு 1.50 மணிக்கு குருபகவான் மிதுன ராசியில் இருந்து காலபுருஷ 4 ம் ராசியும்,தன்னுடைய உச்ச ராசியுமான கடகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குருபகவான் சுமார் 153 நாட்கள் அதாவது 31/10/2026 ஐப்பசி மாதம் 14 ம் தேதி சனிக்கிழமை வரை கடக ராசியில் பயணித்துவிட்டு அதற்குப்பின் குருபகவான் அதிசாரப்பெயர்ச்சியாக தன்னுடைய நட்பு வீடான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் குருபகவான் சுமார் 85 நாட்கள் அதாவது 24/1/2027 தை மாதம் 10 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை குருபகவான் சிம்ம ராசியில் அதிசாரமாக பயணித்துவிட்டு அதற்குப்பின் வக்ரகதியில் கடக ராசிக்கு திரும்புகிறார்.கடக ராசிக்கு திரும்பிய குருபகவான் சுமார் 152 நாட்கள் அதாவது 26/6/2027 ஆனி மாதம் 10 ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 5.20 வரை கடக ராசியில் பயணிக்கப்போகிறார்.இதில் குருபகவான் அதிசாரப்பெயர்ச்சியாக சிம்ம ராசியில் 85 நாட்கள் பயணித்தது போக மீதம் 153+152 = 305 நாட்கள் கடக ராசியில் நேர்கதியிலும்,வக்ரகதியிலும் குருபகவான் பயணிக்கப் போகிறார்.குருபகவான் வக்ரகதியில் 13/12/2026 ஞாயிற்றுக்கிழமை முதல் 13/4/2027 செவ்வாய்கிழமை வரை சுமார் 122 நாட்கள் பயணிக்கப்போகிறார்.14/7/2026 முதல் 13/8/2026 வரை சுமார் 31 நாட்கள் குருபகவான் சூரியனுடன் 11 பாகைக்குள் பயணிப்பதால் அஸ்தமன நிலையில் இருப்பார்.அதற்குப்பின் குருவுக்கு அஸ்தமன தோஷம் கிடையாது நண்பர்களே...
இந்த குருபெயர்ச்சியில் 2 ம் இடத்தில் பயணிக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கும்,5 ம் இடத்தில் பயணிக்கும் மீன ராசிக்காரர்களுக்கும்,7 ம் இடத்தில் பயணிக்கும் மகர ராசிக்காரர்களுக்கும்,9 ம் இடத்தில் பயணிக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும்,11 ம் இடத்தில் பயணிக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கும் சாதகமான காலங்களாக அமையும் நண்பர்களே.கண்டகச்சனி நடப்பில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது கெடுபலன்களை குறைத்து ஆறுதலை கொடுக்கும்.குறிப்பாக உச்ச குருபகவானின் பார்வை படும் விருச்சகம்,மகரம்,மீனம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலங்களாக அமையும்.ஜென்மச்சனி நடப்பில் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு உச்ச குருவின் பார்வை படுவதால் ஜென்மச்சனியின் கெடுபலன்கள் குறையும்.குருபகவானின் பார்வைபடும் இந்த மூன்று ராசிகளில் ராசிக்கட்டம் மட்டுமில்லாமல் நவாம்சத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்து திசை,புத்தி நடப்பிலிருந்தாலோ,அல்லது நவாம்சத்தில் இந்த மூன்று ராசிகளில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால் அந்த கிரகத்தின் காரகரீதியாக நற்பலன்களும் உண்டாகும்.குருவிற்கு 2,5,7,9,11 ஆக வரும் மிதுனம்,மீனம்,மகரம்,விருச்சகம்,கன்னி ராசிக்காரர்களுக்கு லக்ன யோகாதிபதி திசையோ,புத்தியோ நடப்பில் இருந்தால் சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கலாம்.மாறாக லக்ன பாதகாதிபதி திசையோ,புத்தியோ நடப்பிலிருந்து கெடுபலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த குருபெயர்ச்சியால் கெடுபலன்கள் குறைந்து ஓரளவு நற்பலன்கள் உண்டாகும் நண்பர்களே.மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு திருமணத்தடை,புத்திர பாக்கியத்தடை,வீடு,மனை அமைவதில் தடை,காரியத்தடை,தொழில் மற்றும் வேலையில் பொருளாதாரத்தடைகள் நீங்கி குருபகவானால் சுபகாரியங்கள் உண்டாகும் நண்பர்களே.
மேலே குறிப்பிடாத மற்ற ராசிகாரர்களுக்கு சுய ஜாதகத்தில் நடப்பில் இருக்கும் திசை மற்றும் புத்திக்கேற்ப நன்மை,தீமைகளில் மத்திமமான பலன்கள் உண்டாகும் நண்பர்களே.குருவின் பார்வைபடும் ராசிகளான விருச்சகம்,மகரம்,மீனம் ராசிகளில் கிரகங்கள் இருந்து திசையோ புத்தியோ நடப்பில் இருந்தால் யோகாதிபதி கிரகங்களாக இருந்தால் நற்பலன்களை கூட்டிக் கொடுக்கும்.பாதகாதிபதி கிரகங்களாக இருந்தால் கெடுபலன்களை குறைத்துக் கொடுக்கும்.இந்த மூன்று ராசிகளை ராசிக்கட்டம் மட்டுமில்லாமல்,நவாம்ச கட்டத்திற்கும் எடுத்துக்கொள்ளலாம். மிதுனம்,மீனம்,மகரம்,விருச்சகம்,கன்னி இந்த ராசிக்காரர்களுக்கு வளர்பிறைச் சந்திரன் மற்றும் பௌர்ணமி சந்திரனாக இருந்து சந்திர திசை மற்றும் புத்தி நடப்பில் இருந்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும் நண்பர்களே.மனஉறுதி,மனவலிமை,புத்தியில் தெளிவை கொடுக்கும்.யோக திசை நடப்பில் இருந்தாலும் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம்.எந்த லக்னமாக இருந்தாலும் பெயர்ச்சியாகும் குருவின் பார்வை படும் ராசிகள் உங்கள் சுய ஜாதகத்தின் லக்னத்திற்கும்,ராசிக்கும் எந்தப் பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலன்களையும், அந்தப் பாவகங்களில் கிரகங்கள் நின்றால் அந்த கிரகத்தின் காரக பலன்களையும்,கிரகங்கள் நின்று தசையோ,புத்தியோ நடப்பில் இருந்தால் அந்த கிரகத்தின் ஆதிபத்திய பலன்களும் கோச்சார குரு கொடுப்பார் நண்பர்களே.
உதாரணத்திற்கு கடக ராசிக்கு தற்போது பெயர்ச்சியாகும் குருபகவான் கடக ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் வருகிறார்.குருவின் பார்வைபடும் விருச்சிக ராசி ராசிக்கு 5 ம் பாவகமாக வருவது கடக ராசிக்காரர்களுக்கு புத்திர பாக்கியத்தையும்,புத்திரர்கள் மூலம் ஆதாயமும்,மேன்மையும் உண்டாகும்.இதேபோல் லக்கினத்திற்கு எந்த பாவகமாக வருகிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.சிம்ம ராசிக்கு குருபகவான் விரயஸ்தானத்தில் வந்தாலும் குருவின் பார்வைபடும் விருச்சிக ராசி சிம்ம ராசிக்கு 4 ம் பாவகமாக வருவதால் லக்னரீதியாக யோக திசை நடப்பில் இருந்தால் வீடு வண்டி வாகன யோகம் நிச்சயம் அமையும்.அதாவது விரைய குருவை சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.இச்சமயத்தில் லக்ன ரீதியாக 4 ம் பாவக தொடர்புடைய கிரகங்களின் திசையோ,புத்தியோ நடப்பில் இருந்தால் வீடு,மனை,வாகனங்கள் வாங்கலாம்.2 மற்றும் 11 ம் பாவக தொடர்புடைய கிரகங்களின் திசை,புத்தி நடப்பிலிருந்தால் வங்கியில் கடன் பெற்று கூட மேற்சொன்ன காரியங்களை செய்யலாம்.இந்த ரீதியில் குருபெயர்ச்சி பலன்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே என்னுடைய அனுபவக் கருத்தாகும் நண்பர்களே.கும்ப ராசிக்கு கோச்சார குரு 6 ம் இடத்திற்கு வந்தாலும் குருவின் பார்வைபடும் விருச்சக ராசி கும்ப ராசிக்கு 10 ம் இடமாக வருவதால் விருச்சக ராசியில் கிரகங்கள் இருந்து திசை,புத்தி நடப்பிலிருந்தால் சொந்தத் தொழிலில் உயர்வை கொடுக்கும்.
இதே போல் 12 ராசிகளுக்கும் உங்கள் சுய ஜாதகத்தில் நடக்கும் திசை,புத்தி மற்றும் குருவின் பார்வைபடும் ராசிகளில் நிற்கும் கிரகங்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.இந்த ரீதியில்தான் குரு பெயர்ச்சி பலன்களை உங்கள் சுய ஜாதக தசா புத்திகளோடு ஒப்பிட்டு பலன்களை அறிந்து கொள்ள வேண்டும்.மேலே குறிப்பிட்டுள்ள 5 ராசிகளுக்கு மட்டும்தான் நன்மையான பலன்கள் உண்டாகும் என்றும்,மற்ற ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சியினால் நற்பலன்கள் இல்லை என்றும்,பொதுவான ராசி பலன்களை வைத்து தோராயமாக தெரிந்து கொள்ளாமல் உங்கள் சுய ஜாதகத்தையும்,மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தையும் ஆய்வு செய்து குரு பெயர்ச்சியினால் உண்டாகும் நன்மை,தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.ஏனென்றால் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் ராசி,லக்னங்கள் வேறு வேறாக இருக்கும்.ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் இருவரின் ராசிக்கு குரு பெயர்ச்சி சாதகமாகவும்,மற்ற இருவரின் ராசிக்கு பாதகமாகவும் இருக்கலாம்.அதனால் குடும்ப ஜாதகங்களை ஆய்வு செய்து நன்மை,தீமைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள்,இறைவழிபாடுகளை மேற்கொள்ளுங்கள் நண்பர்களே.மேலே குறிப்பிடாத மற்ற ராசிக்காரர்கள் பயம் கொள்ளத்தேவையில்லை.உங்கள் சுய ஜாதகத்தில் நடப்பில் இருக்கும் திசை மற்றும் புத்தியே நன்மை,தீமைகளை தெளிவாக தீர்மானிக்கும் நண்பர்களே.குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி வரும் நாட்களிலோ,வியாழக்கிழமைகளிலோ,அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளிலோ குருஸ்தலங்களான திருச்செந்தூர் முருகன்,ஆலங்குடி குருபகவான்,தென்குடித்திட்டை போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.சித்தர்கள்,ஜீவசமாதிகள், மகான்கள் வழிபாடுகளும் மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும் நண்பர்களே...
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
குறிப்பு:
அடியேனின் ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரைப்பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும் நண்பர்களே.
Facebook link:
https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share
#ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
Page link:
https://www.facebook.com/sriselvanayakiammanastro/
Instagram link:
https://instagram.com/astro_sri_selvanayagi_amman
Subscribe to youtube link:
https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw
உங்களின் தனிப்பட்ட சுயஜாதகத்தை கட்டண முறையில் ஆய்வு செய்ய விரும்பினால் 9842757275 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தயவுசெய்து கமெண்ட்டில் ஜாதகத்தை பதிவிட்டு பலன் கேட்காதீர்கள்.சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளவும் நண்பர்களே...
நன்றி