2016 சட்டமன்றத் தேர்தலில் மறைந்து போன மர்மம்!
காசு... பணம்... துட்டு... மணி... மணி!’ என, திரும்பிய பக்கம் எல்லாம் 2016 சட்டமன்றத் தேர்தலில் கோடிகள் கொட்டப்பட்டன. பணவேட்டையில், உச்சக்கட்டமாக 570 கோடி ரூபாய் பணத்துடன் 3 கன்டெய்னர்களை திருப்பூரில் பிடித்தது பறக்கும்படை. 570 கோடி ரூபாயும் அ.தி.மு.க-வுக்கு சொந்தமானது என செய்திகள் கசிந்தன.
'570 கோடி பணம் யாருக்குச் சொந்தமானது என்பதை விசாரிக்க வேண்டும்’ என சி.பி.ஐ-க்கு புகார் தட்டியது தி.மு.க. எந்த பயனும் இல்லாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. 'ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான பணம் இது’ என அறிக்கை வாசித்தது சி.பி.ஐ. 520 கோடி ரூபாய் விஷயத்தை அசால்டாக டீல் செய்தார்கள். அதிலிருந்த ஓட்டைகள் என்னென்ன?
* பணத்தைக் கொண்டு வந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை.
* கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் மாறியிருந்தன. ஒரு லாரியின் எண் இனோவா காருடையது. மற்ற லாரிகள் வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும் அவற்றின் ஆர்.சி.புத்தகம் ஒரே மாதிரியாக இருந்தது.
* 18 மணி நேரமாகப் பணத்தை யாரும் உரிமை கோரவில்லை.
* வங்கிகளுக்கு இடையே பணப்பரிமாற்ற விதிகள் மீறப்பட்டன.
* வாகனத்தில் வந்தார்களிடம் அடையாள அட்டை இல்லை.
* வங்கிக்குச் சொந்தமான பணம் என்றால், பறக்கும் படை தடுத்தபோது லாரிகளை ஏன் நிறுத்தவில்லை?
* பணத்துடன் வங்கி அதிகாரிகள் ஏன் வரவில்லை?
* ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உரிமைகோரும் பணப்பெட்டிகளில் ஆக்ஸிஸ் வங்கியின் சீல் எப்படி இருக்க முடியும்?
இப்படி எழுப்பப்பட்ட சந்தேகங்கள் ஒன்றுகூடக் களையப்படவில்லை.
விவகாரம் வெளியான பிறகுதான் வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள், கடிதங்கள் தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
மருத்துவம், திருமண செலவுக்காக சாமானிய மக்கள் எடுத்து செல்லும் பணத்தை வேட்டையாடும் பறக்கும் படையின் பணிகள், தேர்தல் ஆணையத்தின் நேர்மையை நடுநிலையை மெச்ச வைக்கிறது.
#அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️