சிவன் பக்தன் 🕉️🕉️ ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️,,,,. *! _(*/'/Arun */' ) */*/! */*)

ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.7K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
AI indicator
காலை சிவசிந்தனை ===================== எந்த பிறவி எடுத்தால் என்ன? சிவபக்தியே முக்கியம் ============================ ஆதிசங்கரர் சிவானந்த லஹரி பாடல்=10 நரத்வம்....... தேன வபுஷா || மனிதப்பிறவியோ,தேவப் பிறவியோ,அல்லதுமலைகளிலும்,காடுகளிலும்அலைந்துதிரியும்மிருகங்கள்,கொசு,பசு,புழு,பறவைபோன்றஎந்தப் பிறவியாயினும் ஏற்படட்டும்.பரமேஸ்வரா எப்பொழுதும் உன்னுடைய திருவடித்தாமரைகளை விட்டுநீங்காமல்இருந்து தியானம் செய்து அந்தபேரானந்த வெள்ளத்தில் விளைய மகிழும் உள்ளம் மட்டும்வாய்க்குமானால், எத்தகையஉடலைப் படைத்தால்தான் என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது? அப்பர் பெருமான்தேவாரம் =========================== பாடல் எண்: 8 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கியிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே- பொருள்; இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தா என்று அப்பர் பெருமான் இறைஞ்சுகிறார். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.3K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
AI indicator
காலை சிவசிந்தனை ==================== மஹாபாரதம் ஹ்ருதயகமல நிவாஸ சிவன் ============================ மஹரிஷி உபமன்யு கூறினார், 7.2.6.13-14.அவர் அம்பிகாபதியும்,பிநாகமெனும் வில்லை ஏந்தியவரும், வ்ருஷபத்தை வாஹனமாக உடையவரும் ஆவார். அந்த ஏக ருத்ரரே பரப்பரஹ்மம்,அவரே கருஞ்சிவப்பு நிறத்தில் திகழும் புருஷர் ஆவார். அவரை ஒரு முடியின் முனையை விட நுண்ணியராகவும்,பொன்னிற கேசத்தை உடையவராகவும்,தாமரை மலர் போன்ற கண்களை உடையவராகவும்,உதயகால சூரியனின் நிறத்திலும்,மாலை நேர சூரியனின் நிறத்திலும் திகழ்பவராகவும் ஹ்ருதயத்தின் மத்தியில் உள்ள குகையில் த்யானிக்கவேண்டும். "7.2.6.13.அம்பிகாபதிரீஶான: பிநாகீ வ்ருஷவாஹன:| ஏகோ ருத்ர: பரம் ப்ரஹ்ம புருஷ: க்ருஷ்ணபிங்கல:|| 7.2.6.14.பாலாக்ரமாத்ரோ ஹ்ருன்மத்யே விசிந்த்யோ தஹரான்தரே| ஹிரண்யகேஶ: பத்மாக்ஷோ ஹ்யருணஸ்தாம்ர ஏவ ச||" 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
AI indicator
காலை சிவசிந்தனை ==================== ஸ்ரீ பத்மமஹாபுராணம் கூறும் துரீயசிவம்: --------------------------------------------------------- பத்மமஹாபுராணத்தின்,பாதாளகாண்டத்தில் 108ஆம் அத்யாயத்தில் ஸ்ரீ ஶம்புவானவர் ஸ்ரீராமரிடம் பஸ்மம் தயாரிக்கும் முறை பற்றி விளக்குகிறார்.முதலில் துரீயமூர்த்தியான ஸதாசிவரிடமிருந்து மும்மூர்த்திகள் தோன்றியதை விளங்குகிறார். ஶம்பு கூறினார், ====÷========== 5.108.2-8.ஹே ராமா!நான் உனக்கு அனைத்து பாபங்களையும் அழிக்கவல்லதான பஸ்மம் எவ்வாறு தோன்றியது என்பதையும்,அதனை நினைத்தாலும்,அதைப்பற்றிக் கூறினாலும் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் கூறுகிறேன். ஹே நராதிபகவனமாகக் கேட்பாயாக.ஒருவரேயானவரும்,ஶாஶ்வதமானவரும்,ப்ரஹ்மாவால் வணங்கப்படுபவரும்,முக்கண்ணரும்,குணங்களுக்கு ஆதாரமும்,குணங்களுக்கு அப்பாற்பட்டவரும்,அக்ஷரமும்,அவ்யயருமான ஸதாஶிவரானவர்,ஒருமுறை தன்னுள் இருக்கும் மூன்று குணங்களையும் கண்டு,ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க விருப்பம் கொண்டார். அம்மூன்று குணங்களும் மூன்று வேதங்கள் என்று அறியவேண்டும்.தன்னை மூன்றாகப் பிரித்துக்கொண்டு,அந்த இடத்தையும் மூன்றாகப் பிரித்துத்,தனது வலதுபக்கத்தில் மகனான ப்ரஹ்மாவைப் படைத்தார்,இடதுபக்கத்தில் ஹரியைப் படைத்தார்.தனது முதுகுப்பக்கத்திலிருந்து மஹேஶானரைப் படைத்தார்,இவ்வாறு வலிமையானவரான அவர் மூன்று மகன்களைப் படைத்தார்.அம்மூவரும் பிறந்த உடனேயே ப்ரஹ்மா,விஷ்ணு,மஹேஶ்வரர் எனும் மூன்று தெய்வங்களாக ஆனார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு கூறினர்,"நீங்கள் யார்? நாம் யார்?"அம்மூன்று மகன்களிடமும் சிவபெருமான் கூறினார்,"நீங்கள் அனைவரும் எனது மகன்கள்,நான் உங்களின் தந்தை".ஹே புத்ரர்களே!அனைத்து செயல்களுக்கும் காரணமாக அமைந்த இம்மூன்று குணங்களையும் ஏற்பீர்களாக. " 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
955 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
AI indicator
காலை சிவசிந்தனை ===================== நித்யமான சிவம் ================ யதா³(அ)தமஸ்தான்ன தி³வா ந ராத்ரிர்ன ஸன்ன சாஸச்ஶிவ ஏவ கேவல꞉ | தத³க்ஷரம் தத்ஸவிதுர்வரேண்யம் ப்ரஜ்ஞா ச தஸ்மாத்ப்ரஸ்ருதா புராணீ || - ஶ்வேதாஶ்வதரோபநிஷத் "எப்போது இருள் உளதாய்ப் பகலுமின்றி இரவுமின்றிச் சத்துமின்றி அசத்துமின்றி இருந்ததோ, அப்போது சிவன் ஒருவரே இருந்தார்; அந்தச் (சிவ) சூரியனுடைய அந்த அழியாத முக்கியப்பொருளாகிய பிரஞ்ஞை எனப்படும் பராசத்தி உதித்தார்'' என்று சுவேதாசுவதரமும் கூறுமாற்றால், இருக்கு வேதத்திலே ஏகம் எனக் கூறப்பட்டது சிவபெருமான் என்றும், அவரினின்று பின்னர்த் தோன்றியவர் பராசத்தி என்றும் பெறப்படுகின்றது. (அஃதாவது சந்திர சூரியரொளியெல்லாம் ஒழித்து, பகலிது இரவிது எனப் பகுத்தலில்லாத சூனியமாய், நாமரூப விசேஷமின்றி, ஸ்தூல சூக்கும சேதநாசேதனமாகிய (சத்து) பசு, (அசத்தின்) பாசத்தின் வியக்திநிலையற்று, ஈதெல்லாம் இருண்மயமாயிருந்த அந்தக் காலத்திலே அந்தச் சிவபிரானார் அத்துவிதீயராய், கேவலராய், சிவப்பிரகாசராய்த் தம்மினின்று பகுக்கப்படாத வியல்படைந்த சேதனாசேதனச் சத்தியோடுளராயினர் என்பதாம்.) "இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர் மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே" திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருமறைக்காட்டு தேவாரம். "பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய் இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய் வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே." திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #சிவன் பக்தி #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
3.7K காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
AI indicator
காலை சிவ சிந்தனை ================= சிவ பூஜை மான்மியம் : ================== விண்ணவர் , முநிவர் , எவ்வெத் தலங்களிற் சிவபெருமானை உமையுடன் வழிபட்டனர் , எங்களுக்கு உணர்த்தியருளுக என முநிவர்கள் கேட்கச் ஶூதமாமுனிவர் கூறுகின்றார் . திருமால் திருமால் : - காசியிற் சிவனைப் பூசித்துக் காத்தல் தொழிலும் , ஐந்தாயுதமும் , திருமகளும் , கருடவாகனமும் பின்னும் பல வரங்களும் அளிக்கப் பெற்றார் . சிவலோகத்தின் கீழே வைணவபதத்தில் இருக்கப் பெற்றார் . பிரமன் பிரமன் : - காஞ்சியிற் பிஞ்ஞகனை வழிபட்டுப் படைத்தல் தொழிலும் கலைமகளும் , அன்னவாகனம் முதலியவும் தரப்பெற்று வைணவபதத்தின் கீழ் இருக்கப் பெற்றான் . அந்த இடம் பிரமலோகம் எனப்படும் . இந்திரன் இந்திரன் : -ஸ்ரீ சைலத்தில் ஈசனை அருச்சித்து வானுலக ஆட்சியும் , புலோமிசை( இந்திராணி ) யும் , ஐராவதமும் , உச்சைச்சிரவமும் , குலிசப்படையும் , கற்பகத்தருவும் , காமதேனுவும் , சிந்தாமணியும் , கீழ்த்திசையரசும் கிடைக்கப் பெற்றான் . அக்கினி அக்கினி : - அண்ணாமலையில் அண்ணலைப் பூசித்து அக்கினிகளுக்கு அரசும் , சுவாஹா தேவியும் , ஆட்டுவாகனமும் , சத்திப்படையும் , தென்கீழ்த் திசை அரசும் பெற்றான் , இயமன் : - கேதாரத்தில் எம்பெருமானை வழிபட்டுத் தண்டமும் , எருமைக் கடா வாகனமும் , நடுவன் என்ற நிலையும் பெற்றுத் தென்றிசைக்குத் தலைவனானான் : மற்றும் சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் புகவேண்டிய உயிர்களின் புண்ணிய பாவம் அறிந்து கூறும் சபையினரையும் , கதிரவன் முதலான உயிர்கள் புரியும் கருமத்தை அறிந்துரைக்கப் பதினான்கு எழுத்தாளர்களுக்குத் தலைமை பூண்ட சித்திரகுத்தனையும் பெற்றான். நிருதி : - நிருதி கோகரணத்தில் நீலகண்டரைப் பூசித்து வாளும் , அரக்கர் சேனையும் பெற்றுத் தென்மேற்குத் திசைக்குத் தலைமை கொண்டான் . வருணன் வருணன் : - திருவானைக்காவில் வள்ளலை வழிபட்டு மகரமீன் வாகனமும் , பாசம் முதலிய படைகளும் , கடலரசும் மேற்றிசைத் தலைமையும் பெற்றான் . வாயு : வாயு காளத்தியில் மங்கைப்பாகனைப் பூசித்துக் காற்றின் தலைமையும் , பல படைகளும் , வடமேற்குத் திசை அரசும் பெற்றான் . குபேரன் : - குபேரன் சித்தேச்சுரத்திற் குன்ற வில்லியைப் பரவி வடதிசையரசும் நவநிதித் தலைமையும் , புட்பக விமானமும் , இயக்கர் முதன்மையும் , கதை முதலாம் படைகளும் , சிவபெருமானது தோழமையும் அருளப் பெற்றான் . ஈசானன் ஈசானன் : - திருவாரூரில் எந்தையைப் பூசித்துப் பெயருக்கு ஏற்ப சிவரூபமும் , படைகளும் , விடைவாகனமும் , பிற சிவசின்னங்களும் வடகீழ்த் திசையரசும் , அதிகாரம் முடிந்தவுடன் சிவனடி நிழல் வாழ்வும் வேண்டிப் பெற்றனன் . சூரியன் : - சூரியன் காஞ்சியிற் சூலபாணியைப் பூசித்து மறைமண்டலத்தில் தனி இருப்பும் , ஏழ்பரித்தேரும் , நவக்கிரகத் தலைமையும் பெற்றுப் பகுதி மண்டலத்திலே இருக்கப் பெற்றான் . சந்திரன் : - சந்திரன் கும்பகோணத்திற் சம்புவை ஆராதித்துப் பயிர்களுக்கு அரசும் , நக்ஷத்திரங்களுக்கு நாயகனாம் , பேறும் பெற்றுப் , பரமனுக்கு ஆபரணமுமாகிச் சூரியனுடன் மேருவை வலம்வரப் பெற்றான் . கிரகங்கள் இவ்வாறே செவ்வாய் ( அங்காரான் ) திருவிடைமருதூரிலும் , புதன் மதுரையிலும் , வியாழன் ( குரு பிரகஸ்பதி ) சேதுவிலும் , வெள்ளி ( சுக்கிரன் ) திருவாலங்காட்டிலும் , சனி வேதாரணியத்திலும் பரமனை வழிபட்டுச் சோம சூரிய மண்டலங்களின் மேற்கே அருகிலேயிருந்து உயிர்களின் வினைக்கீடாக அனுபவம் தரவும் , வியாழன் தேவர் குருவாகவும் , வெள்ளி அரசர் குருவாகவும் இருக்கப் பெற்றனர் . ஏழு முநிவர் : வசிட்டர் முதலான ஏழுமுநிவரும் ( தில்லைச் ) சிற்றம்பலத்திலே சிவனை வழிபட்டுப் பல நூல் உணர்வும் , நவ கோள்களின் மேல் நிலையிலே வாழும் பேறும் , இறுதியிற் பேரின்ப வீட்டை அடையும் வாழ்வையும் பெற்றனர். ஸ்ரீ ஶூதமாமுனிவர் மேலுஞ் சொல்கிறார் : உத்தான பாதன் மைந்தன் துருவன் காசியில் விஸ்வேச்சுரனை வழிபாடு செய்து அளவற்ற வரங்களையும் எழுமுநிவர் நிலைக்கு மேலான நிலையும் , எழுமுநிவரும் தன்னைச்சுற்றி வரும் பேற்றையும் பெற்று உயர் பதத்தில் திகழ்கின்றான் . ஆதிசேடன் கும்பகோணத்திற் பரமனை அருச்சித்துக் கடல் புவியனைத்தும் முடித்தலையிற் சுமக்கும் பேறு பெற்றான் . இப்படியே எண்ணற்ற தலங்களினும் மலைமுடியினும் கடல் கரைகளிலும் இமையவரும் , முநிவரும் , சித்தரும் , காருடரும் , கந்தருவரும் , வித்தியாதரரும் , இயக்கரும் , சாகரும் மற்றும் பலரும் இறைவனைப் பூசித்துத் தத்தம் பதவியையும் வரங்களையும் பெற்றனர் . ஆகையால் அறத்தை விரும்பும் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வகைப் பொருளையும் பல்கும் சிவபூஜை செய்யவேண்டும் . இறை வழிபாட்டாற் சித்தராயினர் சிலர்.இங்கனம் வழிபட்டுப்புகழ் பெற்றவர் சனகாதசித்தர் கபிலராதியோர் நித்தராயினர் . சிலர் சாலோகத்தையும் , சிலர் சாமீபத்தையும் ,சிலர் சாரூபத்தையும் , சிலர் சாயுச்சியம் எனும் இறைவன் திருவடி நிழலையும் பெற்றனர் . சில மானிடர் சிவவழிபாட்டால் அளவற்ற செல்வத்தை இம்மையிலே பெற்றும் செல்வச்செருக்கால் மாயையில் மீளவும் மூழ்கி மறுபடியும் வழிபட்டார் . மற்றும் வெற்றி வேண்டினவர் வெற்றியையும் , மனைவி மக்களை வேண்டினவர் மனைவி மக்களையும் , பசு , வாகனம் , செல்வம் , அழகு , வடிவு , வண்மை , சத்தியம் . பராக்கிரமம் முதலிய வேண்டினவர் தாம் வேண்டினவற்றையும் சிவபூஜை வழிபட்டாற் பெற்றனர். திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம் என்னும் நூலில் இருந்து. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #சிவன் பக்தி #ஓம் நமசிவாய
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.1K காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
AI indicator
காலை சிவசிந்தனை ==================== சிவ நாம மஹிமை =================== பஞ்சாக்ஷர மந்த்ரம் எப்போதும் ஹ்ருதயத்திலிருக்க தீர்த்தமோ தவமோ யாகமோ எதற்கு? (பஞ்சாக்ஷரம் ஒன்றே போதும்) (கிம்தஸ்ய பஹுபிர்மந்த்ரை: கிம் தீர்த்தை:கிம் தபோத்வரை: யஸ்யோ நம:சிவாயேதி மந்த்ரோ ஹ்ருதயகோசர:) சிவபூஜை மகிமை =1 ===================== பூஜை:சம்போ - ஸ்ரீபதேசக்விரதானிச' என்பது வாக்கு. பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று. மஹாபாரதம்-துரோணபர்வம் =========================÷÷÷=÷÷ "துர்லபம் ப்ராப்ய மானுஷ்யம் யேஅர்ச்சயந்தி சதாசிவம் தேஷாங்கி ஜன்மசாபல்யம் க்ருத்தார்ஸ்தே நரோத்தமம் அன்யஞ்ச ஸிவபூஜாரஹிதோ மனுஷ்யோ நிஷ்ப்ரயோஜனம்" பொருள் ,======== அடையமுடியாத மனிதப்பிறவியை அடைந்து எவர்கள் சதாசிவனை பூஜிக்கின்றாரோ அவர்கள் ஜன்மம் பயனுடையது. அவர்கள் செய்யவேண்டியதை செய்பவர்கள்.சிவபூஜை செய்யாதவர்கள் பிறவி வீண்ஆனது. சிவ சிவ சிவ சிவ சிவ 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #சிவன் பக்தி #ஓம் நமசிவாய