#தற்போதைய செய்திகள்

Makkal Mugam
8.1K views
1 days ago
#செய்திகள் #தற்போது செய்தி ✍️🌹 மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பு ஈரோடு, ஏப்.14- ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு சட்ட மன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நேற்று முன் தினம் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கொல்லம் பாளையம் பகுதி வார்டு 56 - தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவரும் செய்த சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துரைத்தார். ஈரோடு மாவட்டத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்து நிறைவேற்றபட்டன. தாங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். நேற்று கிறிஸ்தவ நல அமைப்பு ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு சந்திப்பில் C.S.I பொதுசெயலாளர் வழக்கறிஞர் (தமிழக சிறுபான்மை மேம்பாட்டு கழகம்) பெர்ணான்ட்ஸ் ரத்தின ராஜா மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஈரோடு மேற்கு சட்டமன்ற வேட்பாளர் சு.முத்துசாமி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், பழனியப்பன், மொடக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் செந்தில்நாதன், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிறப்புறை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
497 views
1 days ago
#செய்திகள் #தற்போது செய்தி அருப்புக்கோட்டை தொகுதி வெற்றிவேட்பாளர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பந்தல்குடி ரோடு 33 வது வார்டில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கொழுத்தும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பு. உடன் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் சோலையப்பன். மறவர் தெரு S.பாலன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
559 views
11 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார் மதுரை மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளராக டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் . அவருடன் பாஜகவை சேர்ந்த மாரி சக்கரவர்த்தி, மூமூகவை சேர்ந்த பகவதி ,மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, பகுதி செயலாளர் செல்லூர் பாஸ்கரன் உடன் இருந்தனர் மாற்று வேட்பாளராக டாக்டர் சரவணன் மனைவி கனிமொழி தாக்கல் செய்தார். டாக்டர் சரவணன் கூறியதாவது மதுரை வடக்கு தொகுதி என்பது ஒரு புனிதமான தொகுதி இதே வடக்கு தொகுதி தான் அன்றைக்கு மேற்கு தொகுதியாக இருந்தது இந்த தொகுதியில் புரட்சித்தலைவர் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் .இதனை தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்றார் புரட்சித்தலைவரை கோட்டைக்கு அனுப்பிய தொகுதி இந்த வடக்கு தொகுதி தான் . அது மட்டுமல்லாது வடக்கு தொகுதியில் யார் சட்டமன்ற உறுப்பினர் வருகிறார்களோ அந்தக் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் அதுபோல இந்த வடக்கு தொகுதி நிச்சயம் இரட்டை இலை மலரும் எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் இந்த வடக்கு தொகுதியை நான் நிச்சயம் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் குறிப்பாக நகர்புறங்களில் சொந்த வீடு என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது சொந்த வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருவதை நன்கறிந்த எடப்பாடியார் தனது தேர்தல் அறிக்கையில் அம்மா இல்லம் திட்டம் என்று அறிவித்துள்ளார் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு வீட்டுமனையும், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் ,அதேபோல நகர் பகுதிகளில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு அம்மா இல்லம் திட்ட மூலம் அடுக்கு மாடி வீடுகள் விலையில்லாமல் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த திட்டத்தில் ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலில் இன மக்களின் மகள், மகன் திருமணமாகி தனி குடித்தனம் சொல்கிற போது அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார் நிச்சயம் இந்த வடக்கு தொகுதியில் அம்மா இல்ல திட்டத்தின் மூலம் அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படும் என்பதை நான் உறுதி அளிக்கிறேன் ஸ்டாலின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தியாயச பொருட்கள் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் ,குடிநீர் கட்டணம் போன்ற பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது‌ எனவே மக்களின் இந்த சுமையை குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவி தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடியார் அறிவித்துள்ளார் நிச்சயம் மே மாதம் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார் அந்த மாதமே உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிச்சயமாக வழங்கப்படும்.