அருள்மிகு மன்னார்குடி ராஜகோபால சுவாமி தரிசனம்...

ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.1K views
6 days ago
AI indicator
மண்டைக்காடு பகவதி அம்மன்* கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரைச்சாலையில் உள்ள கிராமம் மண்டைக்காடு. இங்கு அருட் பாலிக்கிறாள் பகவதி அம்மன். மண்டைக்காடு முன்பொரு காலத்தில் அடர்ந்த வனமாகவும், மணல் மேடாகவும் இருந்தது. இப்பகுதியைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள மக்கள், தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு ஓட்டி வருவார்கள். சிலர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு பசு மாடுகளை வளர்த்து வந்தனர். இந்த மாடுகளை பெரும்பாலும் வனத்திலே விட்டுத்தான் வளர்ப்பார்கள். அந்த மாடுகளை மலை மாடுகள் என்று கூட அழைப்பதுண்டு. இந்த மலை மாடுகள் இரவிலும் அங்கேயே பட்டியல் வைத்து அடைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மாடுகள் அடைக்கப்படும், அல்லது கூடும் இடத்தை மந்தை என்று அழைப்பார்கள். அந்த வகையில் இவ்விடம் மந்தைக்காடு என்று அழைக்கப்பட்டது. அது மருவி மண்டைக்காடு என்று அழைக்கப்படலாயிற்று. இந்த மண்டைக்காடு பகுதியில் முற்காலத்தில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்களால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகினர். இந்த நோயின் தாக்கத்தை மந்திரவாதிகள் பேய், பிசாசு, இறந்து போனவர்களின் ஆவி என்று பலவாறு கூறி மக்களிடம் பணம் பறித்து வந்தனர். குறிப்பாக மந்தைக்காடு பகுதியில் இருந்த சுணை அருகே கணவனால் கோபத்தில் தாக்கப்பட்ட பெண் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தாள். அந்த பெண்ணை அவ்விடத்தில் அடக்கம் செய்திருந்தனர். அந்த பெண்ணின் ஆவி தான் காரணம் என்று கூறி நோயின் தாக்கத்தில் இருந்தவர்களிடம் பேய் விரட்டினேன் என்று கூறி பணம் மற்றும் கோழி, ஆடு முதலான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்களை மந்திரவாதிகள் வசதியாக்கிக் கொண்டனர். இவைகளைப் பற்றி கேள்வியுற்ற அவ்வழியாக பயணம் செய்த ஒரு மடாதிபதியின் சீடர் ஒருவர் மந்தைக்காட்டிற்கு விஜயம் செய்தார். சுணை(நீர் ஊற்று, தற்போது கிணறாக உள்ளது) அருகே வந்தார். 63 கோணங்களுடன் ஒரு சக்கரம் வரைந்து, தினமும் பூஜை செய்தார். அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் கூடினர். தம் தவ வலிமையால் மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சுவாமிஜி, மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து காட்டினார். சாது ஸ்ரீசக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருமுறை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் அவ்விடத்தில் கூடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, அங்கு வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட்டது. உடனே புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன சிறுவர்கள், புற்றை உதைத்ததால் ஆட்டின் காலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ என்று நினைத்து, ஆட்டின் காலைப் பார்த்தபோது, காயம் எதுவும் இல்லை. புற்றிலிருந்துதான் ரத்தம் வருகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூறினார்கள். அவர்களும் புற்று இருந்த இடத்துக்கு வந்து, சிறுவர்கள் கூறியது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். மேலும், ஏதேனும் தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்று அச்சப்பட்டார்கள். பின்னர் இத்தகவல் திருவிதாங்கூர் மன்னருக்கு தெரிய வந்தது. பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். அன்றிரவு, மன்னரின் கனவில் வந்த பகவதி அம்மை, '' நான் இங்கே குடிகொண்டுள்ளேன். புற்றிலிருந்து வடியும் ரத்தம் நிற்கவேண்டுமானால், புற்றில் களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும்'' என்று கூறினாள். மறுநாள் மன்னர், அமைச்சர், காவலர்கள் மற்றும் அரண்மனை ஜோதிடர்களையும் அழைத்துக்கொண்டு மண்டைக்காடு வந்து, புற்றின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பின்னர், பகவதி அம்மை கனவில் கூறியதுபோல், புற்றில் சந்தனம் சாத்தி வழிபட்டார். மன்னர் களபம் சாத்தி வழிபட்டதும் புற்றில் ரத்தம் வடிவது நின்றது. பகவதி அம்மை தன் கனவில் தோன்றியதை மக்களுக்கு விளக்கிய மன்னர். இங்கு தினமும் பூஜை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன் பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது. மக்களின் பிணி தீர்க்க வந்த கேரளத்து சாது, அம்மன் புற்றில் எழுந்தருளிய காட்சியைத் தரிசித்து உள்ளம் குளிர்ந்தார். தாம் வந்த வேலை முடிந்தது என்று நினைத்த சாது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே இடது புறத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினார். பின்னர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, ''நான் இந்தக் குழியில் தியானம் செய்யப்போகிறேன். நான் தியானத்தில் ஆழ்ந்ததும், இந்தக் குழியை மண்ணால் மூடிவிட்டு மறுநாள் காலையில் வந்து பாருங்கள்'' என்று கூறினார். சிறுவர்கள், சாது கூறியபடியே, அவர் தியானத்தில் ஆழ்ந்ததும் மண்ணைக் கொட்டி குழியை நிரப்பினர். சிறுவர்கள் நடந்ததை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மறுநாள் சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, குழிக்கு ள் சாது தியானத்தில் ஆழ்ந்ததுபோல் இருந்தார். அவரிடம் எந்த ஒரு சலனமும் இல்லை. அவர் சமாதி அடைந்துவிட்டார் என்பதை உணர்ந்த மக்கள், குழியின் மேல் பலகை வைத்து அதன் மேல் மண்ணைக் கொட்டி, குழியை மூடிவிட்டனர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரில் இப்போது அமைந்திருக்கும் பைரவர் சந்நதிதான், சாதுவின் சமாதி என்று கூறுகிறார்கள். மண்டைக்காடு பகவதிக்கும், பின்னர் சாதுவின் சமாதி பீடத்திலும் நைவேத்தியம் செய்கிறார்கள். ஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், வழியாக கேரள மாநிலம் கொல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருள்களை கோட்டாறு சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம். ஒருநாள் கொல்லத்தைச் சேர்ந்த வியாபாரி, தன் வியாபாரத்தை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் மண்டைக்காடு வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது இரவாகிவிட்டது களைப்படைந்த வியாபாரி, மண்டைக்காடு கோயில் அருகே ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவரிடம், ''பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தப் பகுதியில் ஊணு களிக்க கடை ஏதும் உண்டா?'' என்று கேட்டார். அந்த நபர், விளக்கொளியில் மிளிர்ந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலைச் சுட்டிக்காட்டி, அதோ வெளிச்சம் தெரிகிறதே அங்கு சென்றால் உணவு கிடைக்கும்'' என்று கேலியாகச் சொன்னார். அதனை நம்பிய வியாபாரி, கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு வியாபாரி எதிர்பார்த்தபடி கோயில் விடுதியாகக் காட்சியளித்தது. அங்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவரிடம்,அம்மச்சி சாப்பிட ஏதும் கிட்டுமா'' என்று கேட்கவும், இலையில் அறுசுவை உணவைப் படைத்து வழங்கினார் அந்த மூதாட்டி. அத்துடன் நிற்காத மூதாட்டி வண்டி மாடுகளுக்குத் தண்ணீரும் தீவனமும் தயாராக இருப்பதாகக் கூறினார். காளை மாடுகளுக்கு உணவு கொடுத்த வியாபாரி, நள்ளிரவு ஆகிவிட்டதால் அங்கேயே தங்கினார். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது, மூதாட்டி அங்கு இல்லை. இரவு வீடு இருந்த இடத்தில் கோயில் இருப்பதைக் கண்டார். இரவு தனக்கு உணவளித்தது பகவதி அம்மை தான் என்பதை உணர்ந்தார். நெஞ்சுருகி அம்மன் பாதத்தில் விழுந்து வணங்கினார். வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை துணியில் கட்டி கோயில் திருப்பணிக்கான காணிக்கையாக வைத்தார். கொல்லத்துக்குச் சென்று மண்டைக்காட்டில் நடந்த அதிசயத்தை மக்களிடம் சொன்னதுடன், அமுது படைத்த பகவதி அம்மனுக்கு பொங்கல் சமைத்து படையல் செய்வதற்காக, ஆண்டுதோறும் இருமுடி கட்டி மண்டைக்காட்டுக்கு வரத் தொடங்கினர். இருமுடியில் ஒருமுடியில் பொங்கலிடத் தேவையான பொருட்களும் மற்றொரு முடியில் பூஜைக்குத் தேவையான பொருட்களும் இருக்கும். ''அம்மே சரணம், தேவி சரணம், மண்டைக்காட்டம்மே சரணம், சரணம் தா தேவி, சரணம் தா தேவி பொன்னம்மே'' என்று சரண கோஷம் ஒலிக்க, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருமுடி சுமந்து பக்திப் பரவசத்துடன் மண்டைக்காட்டுக்கு ஆண்டுதோறும் வருகிறார்கள். இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால் 'பெண்களின் சபரிமலை' என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது பக்கத்துணை இருப்பாள் பகவதி அம்மை மண்டைக்காடு தேவி மேலே வன்மீகம் மத்யத்தில் வெள்ளிகவசம் கீழே உற்சவ விக்ரஹம் 🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views
6 days ago
AI indicator
*அயோத்தியின் அழகு*! *கம்ப இராமாயணம்* அயோத்தி நகரம் அழகா இருக்கு அப்படின்னு சொல்லணும். அதை எப்படி அழகா சொல்லுவது. சிவனும், விஷ்ணுவும், பிரம்மனும் அயோத்தி போல் வேறொரு நகரம் இருக்கிறதா என்று தேடித் பார்த்தும் காண முடியவில்லையாம். அந்த நகரம் போல் அயோத்தி இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு நகரம் எங்கும் இல்லையாம். எங்கும் என்றால் இந்த பூமியில் மட்டும் இல்லை, வேறு எந்த உலகத்திலும் இல்லை. நல்லா தேடி பார்த்தியா என்றால், தேடினது சிவன், விஷ்ணு , பிரம்மன். அவர்களுக்கு தெரியாததா எது எங்க இருக்கும் என்று. அவர்களாலேயே கண்டு பிடிக்க முடியவில்லையாம். அப்படி என்றால் அயோத்தியை விட சிறந்த நகரம் இல்லை என்பது நம்மகுத் தெரிகிறது. அது மட்டும் அல்ல, இந்த சூரியனும், சந்திரனும், கண் இமைக்காமல் அப்படி ஒரு நகரம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே இருக்கிறார்களாம்.... கற்பனையின் உச்சமான அந்தப் பாடல்: உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல் கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான், அமைப்புஅருங் காதல் அதுபிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர் இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு இயம்பல்ஆம் ஏதுமற்றுயாதோ உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், = உமையாளுக்கு தன் ஒரு பாகத்தை கொடுத்தவனும் (சிவன் ) இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், = சீதேவையையும் , பூதேவியையும் மனந்தவனும் (விஷ்ணு) மலர்மேல் கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், = (தாமரை) மலர் மேல் அமைந்த கடவுளும் (பிரம்மன்) உவமை கண்டிலா நகர்அது = (இந்த அயோத்தி மாநகருக்கு ) உவமை காண முடியாத நகரம் அது காண்பான் = அப்படி ஒரு நகரத்தை காண வேண்டி அமைப்புஅருங் காதல் = அமைந்த அருமையான காதலால் அதுபிடித்து உந்த, = காதல் பிடித்து உந்த அந்தரம், = அந்தரத்தில் இருக்கும் சந்திராதித்தர் = சந்திர + ஆதித்தர் - சந்திரனும், சூரியனும் இமைப்பு இலர் திரிவர்; = கண் இம்மைக்காமல் திரிகின்றார்கள் இது அலால் = இதைத் தவிர அதனுக்கு இயம்பல் = அதைப் பற்றி சொல்ல ஆம் ஏதுமற்றுயாதோ = வேற என்ன இருக்கு ? 🚩🕉🪷🙏🏼 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏அயோத்யா ராமர் கோவில் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
874 views
8 days ago
AI indicator
*சங்கரன்கோவில்* *என்றால் தவசு* *மட்டுமில்லை* *சக்கரக்குழி வழிபாடும்* *அற்புதம்*! தமிழகத்தின் தென்பகுதியில் பக்தியின் அதிர்வை இன்னும் உயிரோடு தாங்கி நிற்கும் தலங்களில் ஒன்று சங்கரநாராயண சுவாமி திருக்கோயில். இந்தத் திருத்தலத்தின் பெயரை கேட்டவுடன் பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது “ஆடித்தவசு” திருவிழா தான். ஆனால், அந்தத் தவசு மகிமையை விடவும் பக்தர்களின் மனதை ஆழமாக கவரும் இன்னொரு அதிசயம் இந்த ஆலயத்தில் உள்ளது — அது தான் சக்தி நிறைந்த “ஸ்ரீ சக்கரக்குழி” வழிபாடு. ஆடித்தவசு திருவிழா தொடங்கியவுடன் சங்கரன்கோவில் முழுவதும் ஒரு வேறுவித ஆன்மிக அதிர்வால் நிரம்பிவிடும். கொடியேற்றம் நடந்த முதல் நாளிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் பிராகாரத்தை 108 முறை சுற்ற ஆரம்பித்து விடுவார்கள். இந்த 108 சுற்று சாதாரண நடை அல்ல… அது ஒரு வேண்டுதல்… ஒரு நம்பிக்கை… ஒரு வாழ்க்கை போராட்டத்தின் பிரார்த்தனை… சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் “அம்மா அருள் கிடைக்க வேண்டும்” என்ற ஏக்கத்துடன் அந்த சுற்றை முடிப்பார்கள். “108 சுற்று சுற்றினால் கவலைகள் விலகும்… தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும்… நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும்…” என்ற நம்பிக்கை தலைமுறைகளாக பக்தர்களிடையே வாழ்கிறது. இந்த ஆலயத்தின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், இங்கு அருள்பாலிக்கும் சங்கரநாராயணர் சன்னிதி. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒரே திருமேனியில் இணைந்து நிற்கும் அபூர்வ திருக்கோலம் உலகிலேயே அரிது. சிவன் அபிஷேகப் பிரியர்… விஷ்ணு அலங்காரப் பிரியர்… இருவரும் ஒன்றாய் இருப்பதால் சங்கரநாராயணருக்கு நேரடியாக அபிஷேகம் செய்யப்படாது என்பது பழமையான மரபு. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ருங்கேரி மடம் சார்ந்த நரசிம்ம பாரதி சுவாமிகள் இந்த ஆலயத்திற்கு வந்தபோது, “சிவ வடிவம் இருக்கும் இடத்தில் அபிஷேகம் இல்லாமல் இருக்கக் கூடாது” என்று கூறி சந்திரமௌலீஸ்வரர் ஸ்படிக லிங்கத்தை அருளிச்செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தினமும் அந்த ஸ்படிக லிங்கத்திற்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. சந்திராஷ்டமம் போன்ற காலங்களில் நல்ல காரியங்களைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், இந்த சந்திரமௌலீஸ்வரரை தரிசித்தால் அந்தத் தடைகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயம் ஒரு கோயில் மட்டுமல்ல… அது ஓர் உயிரோடும் இருக்கும் ஓவிய அரங்கம். 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தத் திருக்கோயிலின் சுவர்களில் மூலிகை வண்ணங்களால் வரையப்பட்ட புராண ஓவியங்கள் இன்று வரை மங்காமல் காட்சியளிக்கின்றன. குறிப்பாக சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் ஓவியம் பக்தர்களை மெய்மறக்கச் செய்கிறது. கணபதியின் 32 வடிவங்களில் 11 வடிவங்கள் இக்கோயில் ஓவியங்களில் வரையப்பட்டிருப்பது இந்த ஆலயத்தின் தனித்துவமான கலைச் செல்வமாக கருதப்படுகிறது. கோயிலின் ஒவ்வொரு சுவரும் ஒரு புராணம் பேசுகிறது… ஒவ்வொரு ஓவியமும் ஒரு தத்துவம் சொல்லுகிறது… ஆனால், இத்தனை மகிமைகளையும் தாண்டி பக்தர்களின் இதயத்தை வெல்லும் இடம் ஒன்று உள்ளது… அது தான் கோமதி அம்பாள் சன்னிதி. அம்மனின் சன்னிதிக்குள் நுழையும் தருணத்தில் கூட பலரின் கண்களில் கண்ணீர் வழிகிறது. “வேண்டியது தரும் தாய்” என்ற நம்பிக்கையோடு மக்கள் இங்கு வருகின்றனர். அம்மனுக்கு நேரெதிரே அமைந்துள்ள அதிசயமான “ஸ்ரீ சக்கரக்குழி”யில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. திருவாவடுதுறை ஆதீனம் சார்ந்த வேலப்ப தேசிக சுவாமிகள் அருளிய சக்தி மிக்க ஸ்ரீசக்கரம் அந்தக் குழியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குழியில் அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்யும் பலர், “நாங்கள் நினைத்தது நடந்தது…” என்று கண்கலங்கிச் சொல்வார்கள். சிலர் திருமண தடை நீங்க வேண்டி வருகிறார்கள்… சிலர் குழந்தைப் பாக்கியம் வேண்டி வருகிறார்கள்… சிலர் தீராத நோயிலிருந்து விடுபட வேண்டி அமர்கிறார்கள்… அம்மன் அருள் கிடைத்த பிறகு மீண்டும் வந்து நன்றி கூறிச் செல்பவர்களும் ஏராளம். இந்த ஆலயத்தில் இன்னொரு ஆச்சரியமும் உள்ளது. கோமதி அம்பாள் சன்னிதியில் கிடைக்கும் “புற்றுமண்” மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. கை, கால் வலி, தலைவலி, உடல் கட்டி போன்ற பிரச்சினைகளுக்கு இந்த புற்றுமண்ணை பூசினால் நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அது வெறும் மண் அல்ல… அம்மன் அருளின் அடையாளம் என்று அவர்கள் கருதுகின்றனர். சங்கரன்கோவிலுக்கு சென்று வந்தவர்கள் பலரும் ஒரு விஷயத்தை ஒரே மாதிரி சொல்வார்கள்… “அங்கு போனால் மனசு லேசாகிடும்…” அதுதான் இந்தத் திருத்தலத்தின் உண்மையான அதிசயம். இன்று தொழில்நுட்ப உலகில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதன், மன அமைதிக்காக தேடி அலையும் காலத்தில்… சங்கரன்கோவில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையை தாங்கி நிற்கிறது. அம்மன் சன்னிதியில் உங்கள் பாதம் பட்டாலே கஷ்டங்கள் கரையும்… மனதில் வைத்த வேண்டுதல்கள் நிறைவேறும்… தள்ளிப்போன சுப நிகழ்வுகள் விரைவில் நடைபெறும்… என்பது இன்றும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவன் - பார்வதி #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
900 views
8 days ago
AI indicator
*நந்தி காதில்* *வேண்டுதலை* *சொல்வது சரியா*? நந்தீஸ்வரர் காதுகளில் நாம் சொல்லலாமா ?அப்படி சொல்லுவது என்றால் என்ன சொல்ல வேண்டும்? நம் நாட்டில் சிலை வழிபாடு மிக மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதனை நாம் அறிவோம் . எந்தனையோ அற்புதங்களை கண்ட சித்தர்கள் எந்த வித குழப்பமும் இல்லாமல் நமது சிலை வழிபாட்டிற்குரிய கற்களை தேர்ந்து எடுத்து கொடுத்த காரணத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும் . சிலை வழிபாட்டிற்கு தேர்ந்தெடுத்தவற்றை கற்கள் ,பாறை என்று மட்டும் அவர்கள் நினைக்க வில்லை.அவைகள் ஒளியும் ஒலியும் சேர்ந்தது என்று அவர்கள் புரிந்து கொண்டனர். ஆம் சிலை வழிபாட்டிற்கு கற்களை தேர்வு செய்வதில் மிக மிக வல்லமை படைத்தவர் கருவுரார் சித்தர். போகர் இவரிடம் தாம் சிலைகளை செய்ய சொல்வார். ஒரு கல்லை (பாறை ) பார்த்து அதில் 32 லக்ஷணம் அமைந்து இருந்தால் அவை வழிபாட்டிற்கு உகந்தது என்று முடிவு செய்வார் கருவூர் சித்தர். பறையின் உள்ளே தேரை இருப்பதை அறிந்தால் அவைகள் ஒச்சம் என்று ஒதுக்கி விட்டுவிடுவார். சிற்ப சாஸ்திரம் முழுமையாக இவரின் ஆசிபடியே இருக்கும். இவரின் ஆலோசனை படியே சிற்பிகள் கற்களை தேர்ந்து எடுத்தனர். சித்தர்கள் மலைகளில் ,பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை சிற்பிகள் மூலம் லிங்கமாக,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் . அந்த காலத்தில் மன்னர்கள் ஒரு கோவிலை கட்டிய பின்பு அந்த கோவிலை பற்றியும் வழிபாட்டு முறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள சாதுக்களை, சித்த நெறியில் உள்ளவர்களை அழைத்து வந்து கோவிலை ஆராய்ந்து தவறுகள் இருந்தால் சொல்லும்படி கேட்பார்களாம். இப்படி ஒரு காஞ்சிபுர அரசன் சித்தர் நெறியில் உடையவரை அவன் கட்டிய கோவிலுக்கு அழைத்து வந்துள்ளான். 32 லட்சணமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு மந்திரம் சொல்லி உயிர் கொடுத்தால் உயிர் உண்டாகும் என்று அந்த சித்த நெறியில் இருந்தவர் அறிந்து இருந்தார் . அந்த மன்னன் கட்டிய கோவிலில் 32 லட்சணமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைய கண்ட அந்த சித்த நெறியில் இருந்தவர் கருவூர் சித்தரை நினைத்து அந்த நந்தி சிலையின் காதுகளில் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது , மன்னன் வியந்தான்,மக்கள் அதிசிய பட்டனர்.இதன் பிறகு உயிர் பெற்ற நந்தி கோவிலை விட்டு வெளியே சென்றது. வேடிக்கை பார்த்த மக்கள் பரவசம் அடைந்து உயிர் பெற்று எழுந்த நந்தியின் பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்தி வயலில் விளைந்திருந்தபயிர்களை உண்ண தொடங்கியது. அது வரை விபரீதத்தை உணராத மக்கள் பயம் அடைந்தனர் .நந்தி பிறகு தோப்புகளில் நுழைந்து விட்டது . நந்தியினால் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட மக்கள் அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்சனை உணர்த்த அரசன் சித்தரிடம் உயிர் பெற்று எழுந்த கல்நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்றார் . சித்தர் உயிர் பெற்ற கல்நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில்ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லட்சணத்தில் ஒன்றுகுறைந்த படியால் அந்த நந்தி நிரந்தரமாக கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று கூறி என்று உறுதி கொடுத்து பிறகு அந்த சித்தர் வனம் சென்றார் . அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் ,நாமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்து இன்றும் நந்தியின் காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் . ஆலயங்களில் அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது என்பது ஆகம விதியாகும். இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டுகோளைச் சொல்கிறேன் என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வது முற்றிலும் தவறான ஒன்றாகும். எந்த கோவிலிலும் இப்படி செய்ய கூடாது,இது தவறு என்று சொல்வது இல்லை . சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நாம் நிற்கக்கூடாது. நமது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம். நந்தியிடம் காதுகளை தொடாது நாம் சொல்ல வேண்டிய பிரார்த்தனை மந்திரம் கீழே! "நந்தீஸ்வர நமஸ்துப்யம் ஸாந்தா நந்த ப்ரதாயக மஹாதேவேச ஸேவார்த்தம் அநுக்ஞாம் தாது மர்ஹஸி வந்தே வ்ருஷப ஸ்வரூபிணே தீக்ஷ்ண ச்ருங்காய துங்காய வேத பாதாய நந்திநே நமஹ" மேற்கண்ட ஸ்லோகத்தைக் கூறி, ‘ஹர ஹர சிவ சிவ’ என்ற சிவ நாமத்தை உச்சரித்து, நந்தியின் கொம்புகளின் மத்தியில் இருந்து சிவ லிங்கத்தை தரிசித்தால் வேதம் படித்த பலன், சப்த கோடி மகா மந்திர ஜப பலன் கிடைக்குமென்றும், பாபங்கள் அனைத்திலிருந்தும் விடுபடும் பரிகாரமாகும் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன சிவாய நம ஓம்! சிவாய வசி ஓம்! சிவ சிவ சிவ ஓம் ! 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஓம் நமசிவாய #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.7K views
8 days ago
AI indicator
*அபூர்வமான 'சர்ப்ப* *நடராஜர் தரிசனம்* *கிடைக்க செல்ல* *வேண்டிய* *மாற்றுரைவரதீஸ்வரர்* *கோவில்* *திருப்பாச்சிலாச்சிராமம்* (தற்போது திருவாசி என்று வழங்கப்படுகிறது) இறைவன் பெயர் மாற்றுரைவரதீஸ்வரர். கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இறைவி பெயர் பாலாம்பிகை, பாலசுந்தரி. தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர். ஆலய முகவரி அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி வழி பிச்சாண்டார் கோவில் திருச்சி மாவட்டம் PIN - 621216 ஆலய தொடர்புக்கு: மோகன் குருக்கள், தொலைபேசி: 0431-2908109, 98656 64870 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தலபெருமை: சர்ப்ப நடராஜர்: முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்பகுதியை கொல்லிமழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, அவளை இக்கோயிலில் கிடத்திவிட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான். அச்சமயத்தில் திருத்தலயாத்திரையாக திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தார். அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார். அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோயிலுக்கு வந்தான். திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான். மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து "துணிவளர் திங்கள் துலங்கி விளங்க" எனும் பதிகம் பாடினார். அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார். மன்னன் மகளை பிடித்திருந்த நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமைஅறியத்தக்கது. மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார். இவரை "சர்ப்ப நடராஜர்' என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், "சிவன் இருக்கிறாரா, இல்லையா" என்ற அர்த்தத்தில் இகழ்ந்து "வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்" என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகத்தின் கடைசி பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார். சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் விளங்குகிறது. இத்தலத்தில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளன. திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். இவள் இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவளுக்கே முதல் பூஜை நடக்கும். அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப்பட்ட இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே சுவாமிக்கு தினசரி நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள நடராசருக்கு அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள், வயிற்று வலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம். பொருளாதார நிலை உயர: இக்கோயிலில் உள்ள மாற்றுரைவரதேஸ்வரரை திங்கள் கிழமைகளில் இலுப்பை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை உயரும் . இக்கோயிலில் கல்லில் தூண் செய்து,அதன் நடுவே ஒரு உருளை ஏற்படுத்தி அந்த உருளை சுழல ,மூன்று பக்கமும் இடைவெளி விட்டு அதனை சுழலும் விதமாக செய்திருப்பது மிகவும் அதிசயம். எப்படிப் போவது திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மி. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மி. செல்ல இந்த சிவஸ்தலம் ஆலயத்தை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவாசி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. சர்ப்ப நடராஐர்,திருவாசி படம் கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
684 views
12 days ago
AI indicator
சென்னையில் பஞ்சபூத ஸ்தலங்கள் -1 மண் சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். NO:315, தங்கச்சாலை தெரு,பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. இங்கே ஏகாம்பரேசுவரர் காமாட்சி அம்மன் அருள் புரிந்து வருகின்றனர் சென்னையில்,வன்னி மரத்தடியிலும், அரச மரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே. அம்பாளுக்கு எதிராக சனீஸ்வரர் வீற்றிருப்பதால், இத்தல அம்மனை வழிபட்டால் சனியின் கெடு பார்வையில் இருந்து நிவாரணம் பெறலாம். இக்கோவிலில் உள்ள சப்த நாகத்தின் முன்புறம் விநாயகரும், பின்புறம் முருகனும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். ஏகாம்பரேஸ்வரர் கோவில் 1680 களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அலங்காரநாத பிள்ளை என்பவரால் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தரான அலங்காரநாத பிள்ளை பிரதோஷம் தோறும் தவறாமல் காஞ்சிபுரம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் தாமதமாக கோவிலுக்கு புறப்பட்ட அவர், வழியிலேயே களைப்படைந்து இந்து இடத்தில் ஓய்வெடுத்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்து அவருக்கு அம்பாளுடன் காட்சி தந்த சிவ பெருமான், இனி தன்னை காண சிரமப்பட்டு காஞ்சிக்கு வர வேண்டாம். தான் சுயம்புவாக இங்கு தோன்றி காட்சி தருவதாக கூறியதாகவும், அந்த இடத்தில் சிவ பெருமானின் ஆணையின் பேரில் அலங்காரநாதர் கோவில் எழுப்பியதாகவும் தல புராணம் சொல்கிறது. காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதர் கோயிலில் மூலவர் லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த தலம் நவகிரக பரிகார தலமாகவும், சொந்த வீடு வாங்க விரும்புவோரின் கனவை நிறைவேற்றும் தலமாகவும் விளங்குகிறது. திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும் இந்த தலம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சமாக மாமரம் உள்ளது. அம்பாள் ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாளின் பாதத்திற்கு முன் ஸ்ரீசக்கரம் உள்ளது. சிவனில் சக்தி அடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளதால் இங்கு அம்மனே பிரதானமாகவும் கருதப்படுகிறார். தீய கனவு தொல்லையில் இருந்து விடுபடவும், நல்ல கனவுகள் பலிக்கவும் கருவறைக்கு முன்புள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூர அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். காலை 6 முதல் 12 வரையிலும்,மாலை 4 முதல் 9 வரையிலும் திருக்கோவில் திறந்திருக்கும். 1, 21, 51, 57, 18A என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து கந்தசாமி கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ராசப்பதெரு வழியே தங்கச்சாலை தெரு திரும்பி சிறிது தொலைவில் அமைந்திருக்கிறது. மண் ராசிகளான ரிஷபம், கன்னி, மகர, இராசிகள் மற்றும் ரிஷப இலக்னம், கன்னி இலக்னம், மகர இலக்னத்தில், பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட, அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும். திருமண வரம், வீடு வாங்கும் யோகம் ஆகியவற்றை தருவதால் இக்கோவில் மிகவும் பிரபலம். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #தெரிந்து கொள்வோம்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
725 views
12 days ago
AI indicator
*கரூர் மாவட்டம் ஐயர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயில்: குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வணங்கலாம்* ...... தங்கள் குல தெய்வம் எது என்று தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரரைத் தம் குலதெய்வமாக வழிபடலாம் என்பது ஐதிகம். ரத்தினகிரீஸ்வரரை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் ஆகியவை கிட்டும் என்பது நம்பிக்கை. இங்கு கிரிவலமும் விசேஷம். ஈசனே மலையாக அருளும் தலம் என்பதால் இங்கு பௌர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டு ஐயர் மலையை வலம் வருகிறார்கள். சித்திரைத் திருவிழா இங்கே 15 நாள் உற்சவமாகக் கோலாகலமாக நடைபெறும். கார்த்திகை சோமவாரம், தைப்பூசம் போன்ற உற்சவங்களும் களைகட்டும். தேரோட்டம் அன்று பக்தர்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த தானியங்களை மலை படிகளிலும், வீதிகளிலும் தூவிச் செல்வர். இதனால் வரும் ஆண்டுகளில் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவு நடைபெறும் ‘குதிரை தேர்’ இந்தப் பகுதியில் புகழ்பெற்றது. கார்த்திகை மாதம் முதல் நாள் ரத்தினகிரீசுவரருக்கு ரத்தின கிரீடம் சாத்தப்படுவது சிறப்பாகும். ஆடி 3-வது வெள்ளிக்கிழமையன்று அம்பாளுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். மகா சிவராத்திரியும் விசேஷமாகக் கொண்டாடப்படும். இப்படிப் புராணச் சிறப்புகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட இந்தத் தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். ஆரோக்கியத்தோடு ஆனந்த வாழ்வையும் அருள்வார் ரத்தினகிரீஸ்வரர். 😟😯😟😯😟 கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் அமைந்திருக்கிறது ஐயர்மலை. இங்குதான் ஈசன் ரத்தினகிரீஸ்வரராக சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அம்மனுக்கு சுரும்பார்குழலி என்பது திருநாமம். தேவாரப் பாடல்பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 128வது தலமாகத் திகழ்கிறது. இத்தலத்துக்கு வந்த அப்பர் சுவாமிகள், “கால பாசம் பிடித்துஎழு தூதுவர்’ என்று தொடங்கி 11 பாடல்கள் கொண்ட பதிகம் ஒன்றைப் பாடி இத்தல இறைவனைப் போற்றியுள்ளார். தரை மட்டத்திலிருந்து 1,178 அடி உயரத்தில் ஈசனின் சந்நிதி அமைந்திருக்கிறது. சிவாயமலை, ரத்தினகிரி, திருவாட்போக்கி மலை, பஞ்சாட்சர மலை, ஐவர் மலை, ஐயர்மலை, மணகிரி, மாணிக்க மலை, தென் கயிலாயம், காகம் பறவா மலை என்று இந்த மலை பல்வேறு பெயர்களால் சுட்டப்படுகிறது. ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு என்கிறார்கள். இந்த மலைக்கோயிலுக்குச் செல்ல 1017 படிகள் உள்ளன. இந்தப் படிகளும் மலைக்கோயிலின் பிராகாரங்களும் காண்பதற்கு ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவிலேயே அமைந்திருக்கிறது என்கிறார்கள். இங்கே சுயம்புவாக அருளும் ஈசனுக்கு வாட்போக்கிநாதர், ராஜலிங்கமூர்த்தி, மத்தியானச் சொக்கர். ரத்தினகிரீஸ்வரர் என்று பல்வேறு திருநாமங்கள் உண்டு. மலைமேல் இருந்தாலும் இந்த ஈசனுக்குத் தீர்த்தம் காவிரியே. தினமும் அபிஷேகத் தீர்த்தம் 8 கி.மீ தொலைவில் உள்ள காவிரியில் இருந்து கொண்டுவரப்பட்டு காலை சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை ஆகிய மூன்று காலங்களிலும் சுவாமிக்கு அபிஷேகிக்கப்படுகிறது. கருவறையில் மூலவர் ரத்தினகிரீஸ்வரர் பெருமான் லிங்க ரூபனாக கம்பீரமாகக் காட்சிகொடுக்கிறார். இவரை வணங்கி கருவறையை வலம் வந்தால் விநாயகர், சுப்பிரமணியர், வைரப்பெருமாள், அதிகார நந்தி, நடராஜர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விஸ்வநாதர் விசாலாட்சி, ஆரிய ராஜா, சண்டிகேஸ்வரர், துர்கை அம்மன், பைரவர், சூரியர், சந்திரர், நவகிரங்கள், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சந்நிதிகளை தரிசனம் செய்யலாம். இங்கு மலையேறுவது பிரத்தியேகமான அனுபவமாகத் திகழ்கிறது. காரணம் இந்த மலையைச் சுற்றி ஏராளமான மூலிகைச் செடிகளும் மரங்களும் உள்ளன. வீசும் காற்றில் அவற்றின் மருத்துவங குணங்கள் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதை சுவாசிப்பதால் உடலின் நோய்கள் தீரும் என்றும் புத்துணர்ச்சி அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள ஈசனின் திருமேனிக்குச் செய்யும் அபிஷேகப் பால் உறை ஊற்றாமலேயே இரண்டு மணி நேரத்தில் தயிராக மாறிவிடும் அற்புதம் நிகழ்கிறது. சித்திரை மாதத்தில் சூரிய பகவான் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள நவ துவாரங்கள் வழியாகத் தன் கிரணங்களை நீட்டி சிவலிங்கத்தை ஸ்பரிசிக்கிறார். சுந்தரர் இந்தத் தலத்திற்கு வந்தபோது, மலையேற வழி இல்லாமல் இருந்தது. அதனால் அடிவாரத்தில் இருந்தபடியே சுவாமியை நினைத்துப் பதிகம் பாடினார் சுந்தரர். அப்போது சுவாமி ஒரு பெரிய பொன்முடிப்பை பூதகணம் ஒன்றிடம் கொடுத்தனுப்பினார். பூதகணம் அந்தப் பொன்முடிப்பை சுந்தரருக்கு வழங்கிய இடம்தான், ‘பொன்னிடும் பாறை’ என்று அழைக்கப்படுகிறது. உடனே சுந்தரர், ‘இவ்வளவு பொன்னையும், பொருளையும் கொடுத்தீர்களே! உங்களுடைய திருமேனி தரிசனம் அருள வேண்டாமா’ எனப் பாடுகிறார். அப்போது ஈசன், அந்த மலையே ரத்தினமாக ஜொலிக்கச் செய்து, ‘நான் இப்படித்தான் இருக்கிறேன்’ என்று மலையாகக் காட்சிகொடுத்தார். ஈசன் ரத்தினமாக மலையாகக் காட்சிகொடுத்ததால் இதற்கு ‘ரத்தினகிரி’ என்றும் ஈஸ்வரனுக்கு ரத்தினகிரீஸ்வரர்’ என்றும் திருநாமம் உண்டானது. பொன்னிடும் பாறைக்கு முன்பு உள்ள கற்கம்பத்தில் நூல் கட்டிப் பிரார்த்தனை செய்கின்றனர். இதனால் தீவினைகள் நீங்கி காரிய ஸித்தி ஏற்படும் என்பது நம்பிக்கை. அசுரனை வதம் செய்த துர்கை தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம் இது. இங்கே துர்கைக்கும் சப்த கன்னியருக்கும் சந்நிதி அமைந்துள்ளது. தெரிந்து கொள்வோம்... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🕉️ இன்றைய கோபுர தரிசனம் 😇