அருள்மிகு மன்னார்குடி ராஜகோபால சுவாமி தரிசனம்...

திருநீற்றுச் சுவடு
7.4K views
2 months ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #ஆலய தரிசனம்🔔 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # மாவட்டம், சேலம் நகரில் மிக அருகாமையில் உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்* ..... ஒருமுறை அனைவரும் கண்டிப்பாக தரிசனம் செய்யுங்கள் உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒளி பிறக்கும்..... 😟😯😟😯😟 புராணச்சிறப்பும் பழமையும் நிறைந்த மகிமைவாய்ந்த கோயில்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அந்த வகையில் பழைமை வாய்ந்த சேலம் அருகே அமைந்திருக்கும் உத்தம சோழபுரம் கோயில் குறித்து அறிந்துகொள்வோம். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம். இந்த ஊரில்தான் கரபுரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. ராவணனின் சகோதரன் கரதூசனன், ஈச்னை நோக்கித் தவம் செய்தான். அவன் கடுமையான தவம் கண்டு பிரபஞ்சமே நடுங்கியது. ஆனாலும் ஈசனின் தரிசனம் மட்டும் கிடைக்கவில்லை. கரதூசனன் அக்னி வளர்த்துத் தன்னையே ஆகுதியாக இறைவனுக்குத் தரத் தீர்மானித்தான். அவன் அக்னிக்குள் பாயத் தயாரான தருணம் ஈசன் அசரீரியாக நில் என்று கூறியதோடு அடுத்த கணம் அவன் முன் தோன்றிக் காட்சி அருளினார். ஆனந்த தரிசனம் கண்ட கரதூசனன் ஈசனுக்கு பூஜை செய்து மகிழ்ந்தான். கரதூசனன் பூஜை செய்ததால், இந்த இறைவனுக்கு 'கரபுரநாதர்' என்ற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள். இங்கு சூரியன், சந்திரன், தேவர், முனிவர் ஆகியோர் நாளும் ஈசனை வணங்கி மகிழ்வர் என்று போற்றுகின்றன புராணங்கள். இங்கு ஈசன் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர், கரபுரநாதர். லிங்க வடிவில் உள்ள கரபுரநாதரின் தலை சற்று சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதற்குக் காரணமான திருக்கதை ஒன்று உண்டு. முன்னொரு காலத்தில் கரபுரநாதருக்கு அர்ச்சனை செய்துவந்த அர்ச்சகருக்கு ஒருநாள் அவர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் பூஜை செய்ய முடியாது என்ற நிலையில் தன் மகன் குணசீலன் என்ற சிறுவனை கோயிலுக்கு அனுப்பினார். குணசீலனும் கோயிலுக்கு வந்தான். ஈசனுக்குச் செய்யவேண்டிய கைங்கர்யங்கள் அனைத்தையும் செய்தான். அர்ச்சனையையும் செய்து முடித்தான். பிறகு, கரபுரநாதருக்கு மாலை அணிவிக்க முற்பட்டான். ஆனால், அவன் உயரம் போதாத காரணத்தால், லிங்கத்தின் தலை அவனுக்கு எட்டவில்லை. பதறிப்போனான். `இறைவா! என்னால் மாலை அணிவிக்கமுடியாமல் போய்விடுமோ... கருணை காட்ட மாட்டாயா?’ என மனமார கண்ணீர்மல்க இறைவனை வேண்டினான். அப்போது ஈசன் மனம் கனிந்து லேசாகத் தலையைச் சாய்த்தார். குணசீலன், ஈசனுக்கு மாலையை அணிவித்தான். இந்தக் காரணத்தால் ‘முடி சாய்ந்த மன்னர்’ என்ற திருநாமம் கரபுரநாதருக்கு உண்டானது. இந்தத் தலத்தின் பெருமைகளை உணர்ந்த அன்றைய சோழ மன்னர்கள், இங்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்; திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதனால் இறைவனாரை ‘சோழேஸ்வரர்’ என்றும் திருநாமம் சூட்டி அழைக்கின்றனர் பக்தர்கள். சோழர்கள் மட்டுமல்ல சேர பாண்டியர்களும் இந்த ஈசனை வழிபட்டுள்ளனர். மேலும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரும் இங்கு வந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, இங்கு ராஜ கோபுரத்தை அடுத்துள்ள நுழைவாயிலின் மேற்புறத்தில் மூவேந்தர்களின் சிலைகளும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரது சிலைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும், முன் மண்டபத்தில் உள்ள கல்தூண் மற்றும் சுவர்களில் மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் பழைமையை இங்கு உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. ராஜகோபுரத்தின் முன்பாக நின்ற நிலையில் ஔவை பிராட்டியார் காட்சி தருகிறார். இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்கள் ஔவை பிராட்டியை மனம் உருகி வணங்கிச் செல்கின்றனர். பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை. தந்தை மற்றும் தாயை இழந்த இந்த இருவரையும் ஔவையார் இங்கு அழைத்து வந்து, மூவேந்தர் களின் முன்னிலையில் திருக்கோவிலூர் மன்னருக்குத் திருமணம் செய்துவைத்தாராம். இதன் பொருட்டு, மூவேந்தர்களும் பகை மறந்து ஒன்றுகூடிய தலம் இது எனவும் கூறப்படுகிறது. மூவேந்தர்களும் இங்கு வந்து இருந்தபோது சோழ மன்னர் உத்தமசோழபுரம் என்ற இடத்திலும், சேர மன்னர் சேலம் என்ற இடத்திலும், பாண்டிய மன்னர் வீரபாண்டி என்ற இடத்திலும் தங்கி இருந்ததாகக் கூறுகின்றனர் பக்தர்கள். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி கோயிலின் பின்புறத்தில், ஆறு சிரங்களையும் பன்னிரு கரங்களையும் கொண்டு மயில் வாகனத்தில் தேவியருடன் அருள்கிறார் முருகன். மேலும், இந்தக் கோயிலில் கால பைரவர் சந்நிதி, கரடி சித்தர் சந்நிதி, ஐயப்பன் சந்நிதி ஆகியவையும் உள்ளன. இந்தக் கோயில் அமைந்துள்ள ஊருக்கு `கைகொடுக்கும் ஊர்’, `பெரியூர்’, `உத்தமசோழபுரம்’ என மூன்று திருப்பெயர்கள் உள்ளன. திருமணத் தடையால் வருந்தும் ஆண்களும் பெண்களும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நெய் தீபமேற்றி திருமண வரம் வேண்டி வழிபட்டுச் சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களது நம்பிக்கை. வாழ்வில் ஒருமுறையேனும் கரபுரநாதரை வழிபட்டு வருவோம். சிறுவனுக்காக சிரம் சாய்த்த அந்த ஈசன், நமது பிரார்த்தனைகளுக்கும் செவி சாய்த்து அருள்பாலிப்பார்! நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 1 மணி வரை, மாலை 4 முதல் இரவு 7 மணி வரை. தெரிந்து கொள்வோம்..... 😟🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😟
திருநீற்றுச் சுவடு
1.2K views
2 months ago
🔱 திருக்குறுங்குடி கோயில் மர்மங்கள்! கண் சிமிட்டும் பெருமாளும்… மூச்சு விடும் காலபைரவரும்! வைணவத் தலங்களில் தனித்துவம் பெற்ற ஒரு அற்புதத் திருத்தலம் என்றால், அது திருக்குறுங்குடி நம்பி கோயில் தான். ஏனெனில்… 👉 வைணவக் கோயிலில் காலபைரவர்! 👉 பெருமாளின் விழியசைவு! 👉 பைரவரின் மூச்சுக் காற்றால் அசையும் விளக்கு! இவை அனைத்தும் ஒரே தலத்தில் நிகழ்வது — திருக்குறுங்குடியில் மட்டுமே. 🔱 வைணவத் தலத்தில் காலபைரவர் — ஏன்? பொதுவாக, சிவாலயங்களில் மட்டுமே காவல் தெய்வமாகக் காட்சி தருபவர் 👉 காலபைரவர். ஆனால், திருக்குறுங்குடி நம்பி கோயிலில் மட்டும் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது, பிரம்மாண்ட உருவத்தில் காலபைரவர் தரிசனம் தருகிறார். 🔔 இக்கோயிலில் ஒரு தனித்துவமான நடைமுறை உள்ளது: இரவில் கோயில் நடை சாத்திய பின் கோயிலின் சாவி காலபைரவரிடம் ஒப்படைக்கப்படுகிறது மறுநாள் காலை அவரிடமிருந்து சாவியைப் பெற்று கோயில் திறக்கப்படுகிறது 👉 அதாவது… இங்குள்ள பெருமாளுக்கு காவலாளி — காலபைரவர்! 🕉️ பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம், இந்தத் திருக்குறுங்குடி தலத்தில்தான் நீங்கியது என்பது தலபுராணம். அந்தப் புண்ணியத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக, சிவனின் அம்சமான காலபைரவர், இந்தத் தலத்தில் காவல் பொறுப்பை ஏற்றுள்ளார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 👁️ கண் சிமிட்டும் திருக்குறுங்குடி நம்பி! திருக்குறுங்குடி நம்பிகளை தரிசிப்பது ஒரு சாதாரண அர்ச்சாவதார தரிசனம் அல்ல. 👉 அது… உயிரோட்டமான, உணர்வுபூர்வமான தரிசனம். தீபாராதனை செய்யும் போது, தீபாராதனை தட்டு 🔸 கீழிருந்து மேலாக 🔸 மேலிருந்து கீழாக நகரும் தருணத்தில்… 👉 பெருமாளின் விழிகள் அந்தந்த திசை நோக்கி அசைவதைப் போல ஒரு உணர்வு தெளிவாகப் பெறப்படுகிறது. இது 🔸 ஒளியின் மாயமா? 🔸 சிற்பியின் கலைநயமா? 🔸 இல்லை… 🔸 பக்தியின் பரிபூரண வெளிப்பாடா? எதுவாக இருந்தாலும், அந்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கும்! 🕉️ ஒரே கோயிலில் விஷ்ணுவும் சிவனும்! இக்கோயிலின் இன்னொரு சிறப்பு — 👉 கோயிலின் உள்ளேயே சிவன் மற்றும் பைரவர் சன்னிதிகள் இருப்பது. மூலவர் நம்பிக்கு பூஜை நடைபெறும் போது, பட்டர், சுவாமியின் அருகில் நிற்கும் அன்பரிடம், 🗣️ “குறையேதும் உண்டா?” என்று கேட்பார். அதற்கு, 🗣️ “குறை ஒன்றும் இல்லை” என்று பதில் அளிக்கப்படும். 👉 இதன் பொருள்: சிவனுக்கும் பூஜை நிறைவேறியுள்ளது என்பதை உறுதி செய்வதே. இந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது. 🌬️ மூச்சு விடும் காலபைரவர் — அதிசய தரிசனம் இத்தலத்தின் மிகப் பெரிய மர்மம் — 👉 மூச்சு விடும் காலபைரவர்! பைரவர் சன்னிதியில், அவரது இடது பக்கத்தில் ஒரு தூண் உள்ளது. அந்த தூணில்: 🔥 மேல்பகுதியில் ஒரு விளக்கு 🔥 கீழ்பகுதியில் ஒரு விளக்கு 🔥 அருகில் இரண்டு சரவிளக்குகள் 👉 ஆனால் அதிசயம் என்னவென்றால்… மேலே உள்ள விளக்கின் ஜுவாலை மட்டும் 🌬️ அசையும் மற்ற மூன்று விளக்குகள் 🔥 அசையாமல் நிலைத்திருக்கும் 🔔 கவனமாகப் பார்த்தால்… பைரவர் மூச்சை இழுக்கும் போது → ஜுவாலை அவரை நோக்கி சாயும் மூச்சை விடும் போது → எதிர்திசையில் அசையும் 👉 இது பைரவரின் மூச்சுக் காற்றால் ஏற்படும் அசைவு என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 🔬 விஞ்ஞானபூர்வமாக இதற்கான காரணம் இன்றளவும் விளக்கப்படவில்லை. 🍘 வடைமாலை வழிபாடு & அருள் பலன் 🔸 இத்தல பைரவருக்கு 👉 வடைமாலை, பூச்சட்டை மாற்றுவது சிறப்பு வழிபாடு 🔸 ஒரே பெரிய வடைத் தட்டு 👉 நிவேதனமாக படைக்கப்படுகிறது 🔸 பைரவர் சிலை 👉 75% கல் + 25% சுதை கலவையில் உருவானது 🔸 திருமணத் தடை 🔸 குழந்தைப்பேறு 👉 இவ்விரண்டுக்கும் இந்த பைரவரின் அருள் பெற்றுப் பலன் அடைந்தவர்கள் ஏராளம். #ஆலய தரிசனம்🔔 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏
sadaiyandi
611 views
2 months ago
அருள்மிகு கபாலீசுவரர் கோபூஜை இன்று காலை 15/01/2026 #கோவில் தரிசனம்
திருநீற்றுச் சுவடு
728 views
2 months ago
#கோபுர தரிசனம் #🕉️ இன்றைய கோபுர தரிசனம் 😇 #ஆலய தரிசனம்🔔 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 தேவன்... தெய்வங்களுக்கெல்லாம் ராஜா! 👑 - திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் மகா சிறப்புகள்! 🔱✨ "ஆரூர் தியாகேசா" என்று அழைக்கும்போதே ஒரு தனி பரவசம் பிறக்கும். "தியாகராஜர்" என்ற பெயருக்கு "கடவுளுக்கெல்லாம் ராஜா" (King of all Gods) என்று பொருள். தேவர்களுக்கெல்லாம் தலைவனாக, சக்கரவர்த்தியாகத் திகழும் அந்தப் பெருமானின் ஆலயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள் இதோ: 💎 சிவபெருமான் இங்கே 'சோமாஸ்கந்த' மூர்த்தியாக (சிவன், உமை மற்றும் முருகப்பெருமான் இணைந்த வடிவம்) அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்ற திருநாமத்திற்கு ஏற்ப, அனைத்து தெய்வங்களுக்கும் மேலான ராஜாவாக இத்தலத்தில் அவர் வீற்றிருக்கிறார். 🎭 அஜபா நடனமும்.. திருமுக தரிசனமும்: தியாகராஜரின் முகம் மற்றும் கைகள் மட்டுமே நமக்குக் காட்சி தரும்; மற்ற உடல் பாகங்கள் கவசங்களால் மறைக்கப்பட்டிருக்கும். இது ஒரு மகா ரகசிய வழிபாடாகும். இந்தத் தியாகேசன் வீதி உலா வரும்போது ஆடும் "அஜபா நடனம்" உலகப் புகழ்பெற்றது. இது இறைவனின் மூச்சுக்காற்றினால் ஏற்படும் அசைவைக் குறிக்கும் தத்துவமாகும். 🏗️ எண்ணிக்கையில் அடங்கா பிரம்மாண்டம்: இந்த ஒரு கோயிலுக்குள் ஓர் ஊரே அடக்கம் என்பது போல இதன் அமைப்பு இருக்கும்: ✅ 9 ராஜகோபுரங்கள் & 80 விமானங்கள் - சிற்பக்கலையின் உச்சம். ✅ 12 பெரிய மதில்கள் & 13 மிகப்பெரிய மண்டபங்கள். ✅ 365 சிவலிங்கங்கள் - வருடத்தின் 365 நாட்களையும் குறிக்கும் அதிசயம். ✅ 15 தீர்த்தக்ணறுகள் & 3 பிரம்மாண்ட பிரகாரங்கள். 🧘 தவக்கோல அன்னை - கமலாம்பிகை: 51 சக்தி பீடங்களில் ஒன்றான இங்கு, அன்னை கமலாம்பிகை வலது காலை மடித்து வைத்து, இடது காலைத் தொங்கவிட்டு "யோக நிலையில்" அமர்ந்து அருள்பாலிப்பது மிக அரிதான கோலமாகும். 🌊 ஆழித்தேர் & கமலாலயம்: ஆழித்தேர்: ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான இது அசைந்து வரும் காட்சி "தேரழகு" எனப் போற்றப்படுகிறது. கமலாலயம்: கடலைப் போன்ற பரந்து விரிந்த புண்ணியத் தீர்த்தம். 🎶 இசையும் முக்தியும்: "திருவாரூரில் பிறந்தால் முக்தி" என்பது ஐதீகம். இசை மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் மூவரும் பிறந்த மண் இது. தேவார மூவர்களாலும் பாடப்பட்ட தலம். கடவுள்களுக்கெல்லாம் ராஜாவாகத் திகழும் தியாகேசனின் அருளைப் பெற, வாழ்நாளில் ஒருமுறையாவது திருவாரூர் மண்ணைத் தொழுது வணங்குவோம்! 🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
preyajanu
1K views
3 months ago
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 28, 2026 அன்று நடைபெற உள்ளது. Mannargudi Rajagopalaswamy Temple Kumbabishekam scheduled for January 28, 2026. #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் #அருள்மிகு மன்னார்குடி ராஜகோபால சுவாமி தரிசனம்...