வேப்பந்தட்டை நியூஸ்

Makkal Mugam
723 காட்சிகள்
16 மணி நேரத்துக்கு முன்
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 -- ல் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM & VVPAT) சீல் இடப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு வசதியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் எல்.இ.டி.தொலைக்காட்சிகளில் கண்காணிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V. கிரண் ஸ்ருதி உள்ளார்.
Makkal Mugam
501 காட்சிகள்
17 மணி நேரத்துக்கு முன்
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 மே 4 ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி,ஏப்.29- தூத்துக்குடியில் வரும் மே 4 ல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் (2026) வாக்கு எண்ணிக்கை 04.05.26 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணிகளில் மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களின் பொறுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தலைமை வகித்தார். . நிகழ்வில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதன் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடவுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளபட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அலுவலர்களின் கடமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக் கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையில் எவ்வித தடங்களும் இன்றி நேர்மையான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.