ஜே ஜெயலலிதா எனும் நான் ஜே ஜெயலலிதா

꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
1.3K views
1 months ago
ஜெயலலிதா நடித்த முதல் படம் எந்த மொழியில் தெரியுமா....? #ஜெயலலிதா_பிறந்த தினம் இன்று ஜெயலலிதா 1948 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் தேதி ஜெயராம்- வேதவள்ளி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் ஜெயலலிதா ஜெயலலிதாவிற்கு 2 வயதாக இருக்கும் போது அவர் தந்தை இறந்து விட, அதற்குப் பின்னர் அவரின் அம்மா சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆங்கிலப்படம் எபிச்ட்லே என்ற ஆங்கிலப் படம் தான் ஜெயலலிதா நடிப்பில் வெளியான முதல் படம்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 140 க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். வெண்ணிற ஆடை 1965 ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடைதான் தமிழில் ஜெயலிதாவின் முதல் படம். தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஜெயலலிதாவை தமிழ்நாட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஆயிரத்தில் ஒருவன் தான் எம்.ஜி.ஆர்- ஜெயலிதா நடிப்பில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டங்களும், விருதுகளும் பாரதிதாசன் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்கள் ஜெயலிலதாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கின்றன.மேலும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதை 1977 ம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது. நீங்க நல்லா நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற படம் தான் ஜெயலிலதா நடிப்பில் வெளியான கடைசி படம். இப்படத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக சிறப்புத் தோற்றத்தில் ஜெயலிதா நடித்திருந்தார்.விசு இயக்கத்தில் நிழல்கள் ரவி, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீதிவ்யா, விசு, சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இப்படம் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. அ முதல் அஃகு வரை. #திரை_உலகில்_ #நடிகை_ஜெயலலிதா திரைப்பயணம் ஒரு பார்வை #முக்கியதமிழ்படங்கள் 1965 - வெண்ணிற ஆடை, ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய் 1966 - முகராசி, தனிப்பிறவி, சந்திரோதயம், கவுரி கல்யாணம், மேஜர் சந்ரகாந்த், மணி மகுடம், குமரி பெண், யார் நீ, நீ, மோட்டார் சுந்தரம் பிள்ளை 1967 - தாய்க்கு தலைமகன், அபூர்வ பிறவிகள், நான், மாடி வீட்டு மாப்பிள்ளை, அரச கட்டளை, காவல்காரன், கந்தன் கருணை, ராஜா வீட்டு பிள்ளை 1968 - பணக்கார பிள்ளை, எங்க ஊரு ராஜா, புதிய பூமி, தேர் திருவிழா, குடியிருந்த கோயில், மூன்று எழுத்து, முத்து சிப்பி, காதல் வாகனம், கணவன், கலட்டா கல்யாணம், பொம்மலாட்டம், கண்ணன் என் காதலன், ஒளி விளக்கு, ரகசிய போலீஸ் 115, அன்று கண்ட முகம் 1969 - நம்நாடு, தெய்வமகன், குருதட்சிணை, மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண் 1970 - அனாதை ஆனந்தன், தேடி வந்த மாப்பிள்ளை, எங்க மாமா, எங்கள் தங்கம், எங்கிருந்தோ வந்தாள், என் அண்ணன், பாதுகாப்பு 1971 - சுமதி என் சுந்தரி, ஆதி பராசக்தி, அன்னை வேளாங்கண்ணி, சவாலே சமாளி, தங்க கோபுரம், குமரி கோட்டம், ஒருதாய் மக்கள், நீரும் நெருப்பும் 1972 - அன்னமிட்ட கை, பட்டிக்காடா பட்டணமா, ராஜா, ராமன் தேடிய சீதை, நீதி, திக்கு தெரியாத காட்டில், சக்தி லீலை 1973 - பாக்தாத் பேரழகி, பட்டிக்காட்டு பொன்னையா, வந்தாளே மகராசி, கங்கா கவுரி, சூரிய காந்தி 1974 - அன்பை தேடி, அன்பு தங்கை, தாய், இரு தெய்வங்கள், வைரம், திருமாங்கல்யம் 1975 - அவளுக்கு ஆயிரம் கண்கள், யாருக்கும் வெட்கம் இல்லை, அவன்தான் மனிதன், பாட்டும் பாரதமும் 1976 - கணவன் மனைவி, சித்ரா பவுர்ணமி, 1977 - ஸ்ரீ கிருஷ்ண லீலை, உன்னை சுற்றும் உலகம் 1980 - மாற்றான் தோட்டத்து மல்லிகை, மணிப்பூர் மாமியார், நதியைத் தேடி வந்த கடல் 1992 - நீங்க நல்லா இருக்கணும் #சிறந்த5படங்கள் ஜெயலலிதா நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் சிறந்த ஐந்து படங்கள்; #வெண்ணிற_ஆடை: ஜெயலலிதா, முதல் தமிழ்ப் படத்திலேயே, அத்தனை நவரசங்களையும் கொட்டி நடித்து, இனிமையான பாடல்களுக்கு அற்புதமான நடன அசைவுகளை வழங்கி முதல் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தியிருந்தார். #அடிமைப்_பெண்: அதிகப் படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆருடன் 'அடிமைப் பெண்' இருவருக்கும் மறக்க முடியாத வெற்றிப் படம். இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஜெயலலிதா, ராணியாகக் காட்டிய வில்லித் தனமும், கண்களில் காட்டிய குரூரமும், உதட்டுச் சுழிப்பில் வெறுப்பைக் காட்டிய விதமும் ரசிகர்களுக்கு அவரது இன்னொரு பரிமாணத்தைக் காட்டின. 'ஏமாற்றாதே, ஏமாறாதே' பாடலில் ரோமானிய பாணி நடனமும், 'ஆயிரம் நிலவே' பாடலில் காட்டிய காதல் ரசமும், இன்றைக்கும் ரசிகர்கள் சிலாகித்துப் பேசும் அம்சங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, 'அம்மா என்றால் அன்பு' என தன் இனிய குரலால் வசீகரித்து, தனது பாட்டுப் பாடும் திறனையும் காட்டினார் ஜெயலலிதா. அவரது முதல் பாடலில் அவர் உச்சரித்த முதல் வார்த்தையே கால ஓட்டத்தில் அவரது மறுபெயராக உருவெடுத்தது. #வந்தாளே_மகராசி: கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சாதாரண கருப்பு வெள்ளைப் படம்தான். ஆனால் பயந்த சுபாவம் கொண்டவராகவும், துணிச்சலான பெண்ணாகவும் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கினார். ஜெய்சங்கர் கதாநாயகன் என்றாலும் படம் முழுக்க ஜெயலலிதாவின் இரட்டை வேட ஆக்கிரமிப்புதான். #எங்கிருந்தோ_வந்தாள்: இந்தித் திரைப்படத்தின் தழுவல் சிவாஜி கதாநாயகன் என்றாலும், பைத்தியக்கார சிவாஜியைக் கட்டம் கட்டமாகத் திருத்தி, ஒரு கட்டத்தில் தன்னையே தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் சிவாஜியையே மிஞ்சும் அளவுக்கு சில இடங்களில் ஜொலித்திருப்பார் ஜெயலலிதா. சாதாரண பின்புலத்தைக் கொண்ட வேலைக்காரி கதாபாத்திரத்தில் பைத்தியக்கார சிவாஜியை விட, ஜெயலலிதாதான் ரசிகர்களைக் கவர்ந்தார். இறுதியில், குணமாகி விட்ட சிவாஜி, 'இந்தப் பொண்ணு யாரு' எனக் கேட்கும் இடத்தில் கூனிக் குறுகி நிற்பதிலும், பின்னர் தன்னை நிரூபிக்க, வெகுண்டெழுந்து போராடும் விதத்திலும், இறுதிக் காட்சிகளில் படம் முழுக்க ஜெயலலிதா தான் ஆக்கிரமித்திருந்தார். #சவாலே_சமாளி: நாகரிக, பணக்காரப் பெண்ணாக முதலில் அறிமுகம். அதில் காட்டிய உற்சாகம், திமிர், அகங்காரம். பின்னர், தனக்குத் தெரியாமலேயே தான் ஒரு பந்தயப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு, தான் அவமதித்த ஏழை விவசாயியையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் நொறுங்கிப் போகும் அவரது தன்மானத்தைக் காட்டிய விதம். 'என்னைத் தொடாதீர்கள்' என ஆக்ரோஷமாகக் கணவனுக்குக் கட்டளையிட்டு விலகியிருப்பது - ஏழை வீட்டில் சின்னச் சின்ன காரியங்களைச் செய்யக் கஷ்டப்படுவது - தனது நிலை குறித்து பெற்றோரிடம் குமுறுவது - பின் கணவரின் நல்ல குணம் அறிந்து மனம் மாறுவது - காதல் பாடல்களே இல்லாத படத்தில் இறுதியில் வரும் ஒரே காட்சியில் கணவனுடன் முதன் முறையாக இணைந்து, தேக்கி வைத்த அத்தனை காதலையும் கொட்டித் தீர்த்த விதம் - இப்படிப் பல பரிமாணங்களில் ஜெயலலிதா நடிப்பு முத்திரை குத்திய படம், சவாலே சமாளி. #அம்மாஎன்றால்அன்பு நடிப்பில் மட்டுமல்லாமல் பாடுவதிலும் வல்லவராக இருந்தார். திரைப்படங்களில், 9 பாடல் களைப் பாடியுள்ளார். பாடல் - படம் 1) அம்மா என்றால் அன்பு... - அடிமைப் பெண் 2) ஓ மேரி தில்ரூபா... - சூரியகாந்தி 3) நான் என்றால் அது... - சூரியகாந்தி 4) கண்களில் ஆயிரம்... - வந்தாலே மகராசி 5) இரு மாங்கனி போல்... - வைரம் 6) சித்திர மண்டபத்தில்... - அன்பை தேடி 7) திருமாங்கல்யம் கொள்ளும் முறை... - திருமாங்கல்யம் 8) உலகம் ஒருநாள் பிறந்தது... - திருமாங்கல்யம் 9) மெட்ராஸ் மெயில்... - உன்னை சுற்றும் உலகம் #முன்னணி_நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், சரத்பாபு, சிவகுமார், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜெயலலிதா ஜோடியாக நடித்துள்ளார். #வெற்றி_ஜோடி ஆயிரத்தில் ஒருவன் தான், எம்.ஜி.ஆர்., - ஜெயலிதா நடிப்பில் வெளியான முதல் படம். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன், 28 படங்கள் நடித்தார். அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று புகழ்பெற்ற இந்த ஜோடி, ஆயிரத்தில் ஒருவன், தேர் திருவிழா, காவல்காரன், குடியிருந்த கோயில், நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, சந்திரோதயம்,, அடிமைப்பெண், ராமன் தேடிய சீதை, காதல் வாகனம், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், குமரி கோட்டம், கன்னி தாய், என் அண்ணன், எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், ஒளி விளக்கு, கணவன், நீரும் நெருப்பும், பட்டிக்காட்டு பொன்னையா, கண்ணன் என் காதலன், அன்னமிட்ட கை, புதிய பூமி, அரச கட்டளை உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். #100வது_படம் கடந்த, 1974ல் வெளியான திருமாங்கல்யம் இவரது, 100வது படமாக அமைந்தது. அ முதல் அஃகு வரை. #ஜே ஜெயலலிதா எனும் நான் ஜே ஜெயலலிதா #ஜெயலலிதா #🙏🇮🇳🕯️🌹 இந்தியாவின் முன்னாள் பிரதமர் இரும்பு பெண்மணி இந்திராகாந்தி அவர்களின் நினைவு நாள் 🌹🕯️🇮 #ஜெயலலிதா இரும்பு பெண்மணி #இரும்பு பெண்மணி அம்மா#