bairavar

MUTHUPANDIAN RAMKUMAR
708 views
14 days ago
#🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #பைரவர் 21.07.26.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது. ☘️ உதாரணமாக பைரவர் வழிபாட்டினை எடுத்துக் கொள்வோம். பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை. அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே உண்டு. ☘️ முதலில் தேய்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தீர்க்க வேண்டிய துன்பங்களை தீர்க்குமாறு வேண்ட வேண்டும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமது துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து அழிந்து போகும். எக்காரணம் கொண்டும் நம்முடைய தேவைகளை வேண்டுதல் கூடாது. ☘️ *இப்போது வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் vபோது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்ட வேண்டும். வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.* ☘️ நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும். தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் sதொடங்கும். பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம். தவறில்லை. ☘️ "விரிந்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச் சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே." - (#திருநாவுக்கரசர்) ☘️ இந்த பாடலில் கால பைரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது. ☘️ பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பைரவ மூர்த்தியாக கோலம் mகொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்; யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டததையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள். ☘️ தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.
MUTHUPANDIAN RAMKUMAR
1.5K views
23 days ago
#🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #பைரவர் வாரத்தின் எந்த நாளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்* .... 👁️👁️👁️👁️👁️ அஷ்டமி திதியில் பைரவர் வழிபாட்டின் மகிமை : வார நாட்களை விடவும், அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக ஆகமங்களில் குறிப்பிடப்படுகிறது. * தேய்பிறை அஷ்டமி – இந்த நாளில் பைரவரை வழிபட்டால், கடன் தொல்லைகள் குறைய இறையருள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் போன்ற சிக்கல்களில் மன உறுதி கிடைக்கும். எதிரி பயம் நீங்கும். வாழ்க்கை தடைகள் விலகும் என்று நம்பப்படுகிறது. * வளர்பிறை அஷ்டமி – இந்த நாளில் வழிபட்டால், செல்வ வளம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெற இறையருள் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பைரவர் வழிபாட்டில் நினைவில் கொள்ள வேண்டியவை : – வழிபாட்டில் பக்தியும் மனசுத்தியும் மிக முக்கியம். முடிந்தால் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவு அளிப்பதும் பல பக்தர்கள் கடைப்பிடிக்கும் ஒரு தர்மமாகும். வழிபாட்டுடன் நல்லொழுக்கமும், உண்மையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருந்தால் தான் இறையருள் முழுமையாகக் கிடைக்கும். 😯😟😯😟😯 பைரவர், சிவபெருமானின் உக்கிரமான, அதே சமயம் பக்தர்களைக் காக்கும் கருணைமிகு வடிவங்களில் ஒன்றாகும். அதனால் தான் பெரும்பாலான சிவாலயங்களில், சிவபெருமானுக்குத் தனியாக இருப்பது போலவே, பைரவருக்கும் தனிச் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். காலத்தின் அதிபதியாகவும், திசைகளின் காவலராகவும், பக்தர்களின் துன்பங்களை நீக்குபவராகவும், தீய சக்திகளை அழிப்பவராகவும், எதிரிகளை அடக்குபவராகவும், கடன் தொல்லைகளைப் போக்குபவராகவும், பயத்தை அகற்றுபவராகவும் பைரவர் போற்றப்படுகிறார். பைரவரை எந்த நாளில் எப்படி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என ஆகம மரபுகளில் சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். *பைரவரை எந்த நாளில், எப்படி வழிபட்டால், என்ன பலன்* ....? ஞாயிற்றுக்கிழமை : ஞாயிற்றுக்கிழமையில் ராகு கால நேரத்தில் பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், ருத்ராபிஷேகம் செய்யலாம். வடை மாலை சாத்தலாம். முந்திரி மாலை சமர்ப்பிக்கலாம். புணுகு சாத்தி வழிபடலாம். இவ்வாறு பக்தியுடன் வழிபட்டால், பணத்தட்டுப்பாடு குறையும் என்று நம்பப்படுகிறது. கடன் சுமை படிப்படியாக விலகும். திருமணத் தடைகள் நீங்க இறையருள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் பெருகும். *திங்கட்கிழமை* : திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள் என்பதால், பைரவரை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் சங்கடஹர சதுர்த்தி நாளில், பைரவருக்கு பன்னீர் அபிஷேகம், புணுகு சாத்துதல், சந்தனக் காப்பு செய்து வழிபட்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்டநாள் நோய்கள் குறைந்து ஆரோக்கியம் கிடைக்கும். மனஅமைதி அதிகரிக்கும். சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. *செவ்வாய்க்கிழமை* : செவ்வாய்க்கிழமை பைரவரை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில், மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது. இதனால், கடன் பிரச்சினைகள் குறையும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். இழந்த பொருட்கள் அல்லது செல்வம் மீண்டும் கிடைக்க இறையருள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தைரியமும் மனவலிமையும் அதிகரிக்கும். *புதன்கிழமை* : புதன்கிழமையில் நெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபட வேண்டும். இதன் மூலம் வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். சொத்து சேரும் யோகம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். பொருளாதார நிலை உறுதியாகும். *வியாழக்கிழமை* : வியாழக்கிழமையிலும் நெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபடுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாறு வழிபடுவதால் வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகும். கண் திருஷ்டி நீங்கும் என்று நம்பப்படுகிறது. பொறாமை கொண்டவர்களின் தீய எண்ணங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். மன அமைதி மற்றும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். *வெள்ளிக்கிழமை* : வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்குரிய நாள் என்பதால், பைரவருக்கு வில்வ அர்ச்சனை செய்யலாம். வில்வ மாலை சாத்தி வழிபடலாம். இதனால், லட்சுமி கடாட்சம் பெருகும். குடும்பத்தில் வளமும் செழிப்பும் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப நலன் மேம்படும். *சனிக்கிழமை* : சனிக்கிழமை பைரவரை வழிபடுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சமய மரபுகளில் சனீஸ்வர பகவானின் குருவாக பைரவர் போற்றப்படுகிறார். இந்த நாளில் பைரவருக்கு சிறப்பு பூஜை செய்தால், ஏழரை சனி பாதிப்பு குறைய இறையருள் கிடைக்கும். அஷ்டம சனி தொடர்பான மனஅழுத்தங்கள் விலகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். சனி தொடர்பான வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள மனவலிமை கிடைக்கும். தடைகள் அகன்று முன்னேற்றம் ஏற்படும். தெரிந்து கொள்ளுங்கள்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻