divine

⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
746 views
19 days ago
*ஆஞ்சநேயர் வாலில் ஏன் மணி கட்டி இருக்கிறார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்* .... 👁️👁️👁️👁️👁️ அனுமன் என்றாலே நம் மனதில் தோன்றுவது பக்தி, வீரம், புத்தி கூர்மை, பேச்சில் வல்லமை, பணிவு, தன்னலமற்ற சேவை. ஸ்ரீராமர் மீது இவர் கொண்ட அளவிட முடியாத பக்தியால் இவரை, “ராம பக்த ஹனுமான்” என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். அனுமனை பற்றி பல கதைகள் புராணங்களில் சொல்லப்படுகிறது. இவற்றில் சில கதைகள் பலரும் அறியாத விஷயங்கள் ஆகும். அவற்றில் ஒன்று தான், அனுமன் தனது வாலில் ஒரு பெரிய மணியைத் தூக்கி நிற்கும் திருக்கோலம். இந்தத் திருக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு ஞானமும், வைராக்கியமும் கிடைக்கும் என்று ஸ்ரீராமர் அருளியதாக பக்தி மரபில் கூறப்படுகிறது. ஆஞ்சநேயர் வாலில் மணி வந்த கதை : புராண கதைகளின் படி, இலங்கையை நோக்கி புறப்பட்ட வானரப் படை , சீதாதேவியை ராவணனிடமிருந்து மீட்க, ஸ்ரீராமர், சுக்ரீவன் தலைமையில் இருந்த வானரப் படையை ஒன்றிணைத்தார். அந்தப் படையில், உயரமான வானரங்களும், வலிமைமிக்க வீரர்களும், வேகமாகச் செயல்படும் சிறிய வானரங்களும் இருந்தனர். அந்தப் படையில் “சிங்கலிகா” என்று அழைக்கப்பட்ட சிறிய உடல் அமைப்புடைய வானரக் குழுவும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரம் பேர். உடல் சிறியதாக இருந்தாலும், அவர்களின் தைரியம் அளவிட முடியாதது. எதிரிகளின் மீது பாய்ந்து, பற்களாலும் நகங்களாலும் போரிட்டு வெற்றி பெறும் வீரர்களாக அவர்கள் போற்றப்பட்டனர். ஸ்ரீராமன் வரவில்லையே: போருக்குப் புறப்படும் முன், அனைத்து வானர வீரர்களின் குடும்பத்தினரும், கண்களில் கண்ணீருடன், “பத்திரமாகத் திரும்பி வாருங்கள்” என்று வேண்டிக் கொண்டனர். அந்தக் காட்சியைப் பார்த்த ஸ்ரீராமர், அனைவரையும் நோக்கி கூறினார். “கவலைப்பட வேண்டாம். என்னுடன் வரும் ஒவ்வொரு வீரரையும் பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வருவது என் கடமை.” அந்த வார்த்தைகள், வீரர்களின் மனதில் அளவற்ற தைரியத்தை ஏற்படுத்தின. இலங்கைப் போரில், ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் போர்க்களத்திற்கு வந்தான். ஸ்ரீராமரின் அம்பால் கும்பகர்ணன் வீழ்ந்தான். கும்பகர்ணன் வீழ்ந்த போது, அவனது தேரில் இருந்த ஒரு பெரிய மணி உருண்டு வந்து, அந்த ஆயிரம் சிங்கலிகா வானரங்களை முழுவதுமாக மூடி விட்டது. அவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். நாட்கள் கடந்தன. யாரும் வரவில்லை. அப்போது, சில வானரங்கள் மனம் உடைந்து பேசத் தொடங்கின. “சுக்ரீவனும் வரவில்லை…” ,”அனுமனும் வரவில்லை…”, “நம்மைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன ராமரும் வரவில்லையே…” என்று வருந்தினர். அப்போது, அவர்களுள் வயதில் மூத்த ஒரு சிங்கலிகா எழுந்து கூறியது, “இப்படி பேசாதீர்கள். ஸ்ரீராமர் கொடுத்த வாக்கு ஒருபோதும் பொய்யாகாது. நிச்சயமாக அவர் நம்மைக் காப்பாற்ற வருவார். அதுவரை அனைவரும் கண்களை மூடி, ‘ஸ்ரீ ராம்… ஸ்ரீ ராம்…’ என்று ஜபிப்போம்.” என்றது. அனைவரும் அமைதியாக ராமநாமத்தை ஜபிக்கத் தொடங்கினர். ஸ்ரீராமரின் வாக்கு பொய்யாகவில்லை : போர் முடிந்தது. சீதாதேவியை மீட்டுக் கொண்டு, அனைவரும் திரும்பத் தயாரானார்கள். அப்போது ஸ்ரீராமர், சுக்ரீவனை நோக்கி, “எல்லா வானர வீரர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று மீண்டும் எண்ணிப்பார்.” என்று கூறினார். சுக்ரீவன் எண்ணிப் பார்த்த போது, ஆயிரம் சிங்கலிகாக்கள் காணவில்லை. மீண்டும் எண்ணினார். அதே எண்ணிக்கை குறைவாக இருந்தது. உடனே ஸ்ரீராமர், அனுமனை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் சென்றார். எங்கு தேடியும், சிங்கலிகாக்கள் கிடைக்கவில்லை. அப்போது, அந்தப் பெரிய மணியைப் பார்த்த ஸ்ரீராமர், அனுமனை நோக்கி, “அந்த மணியை அகற்றி பார்.” என்று கூறினார். வாலால் மணியைத் தூக்கிய அனுமன் : அனுமன், தனது வலிமையான வாலைப் பயன்படுத்தி, அந்தப் பெரிய மணியை மெதுவாக உயர்த்தினார். மணியின் கீழிருந்து, அனைத்து சிங்கலிகா வானரங்களும் உயிருடன் வெளியே வந்தனர். அவர்கள், முதலில் ஸ்ரீராமரின் திருவடிகளில் விழுந்து, கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டனர். “சில நொடிகள் நாங்கள் உங்களைப் பற்றி தவறாக நினைத்து விட்டோம். எங்களை மன்னித்தருளுங்கள்.” என்று கதறினர். ராமபிரான் அருளிய வரம் : அவர்களின் மனநிலையைப் பார்த்த ஸ்ரீராமர், அன்புடன் புன்னகைத்து, அனுமனை நோக்கி, “இன்று நீ வாலில் மணியை ஏந்தி, என் பக்தர்களைக் காப்பாற்றினாய். இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு, ஞானமும், வைராக்கியமும், இறை நம்பிக்கையும் வளரட்டும்.” என்று அருளியதாக கூறப்படுகிறது. அதனால் சில ஆலயங்களில், வாலில் மணியை ஏந்திய அனுமன் திருக்கோலத்தை தரிசிக்க முடிகிறது. இந்தத் திருக்கோலம் சொல்லும் ஆன்மிகப் பாடம் : வாழ்க்கையில் சில நேரங்களில், “இறைவன் என்னைக் கைவிட்டுவிட்டாரோ?” என்று தோன்றலாம். ஆனால், அது உண்மையல்ல. நமக்குத் தெரியாமல், இறைவன் நம்மை காத்துக் கொண்டிருப்பார். சில நேரங்களில், நாம் காத்திருக்க வேண்டும். சில நேரங்களில், நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. அதுவே இந்தக் கதையின் மிகப் பெரிய செய்தி. தெரிந்து கொள்ளுங்கள்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #உண்மையை அறிவோம் #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
959 views
1 months ago
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌳ஸ்ரீ பூரி ஜெகன்நாதர் கோவிலில் குடிகொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் இந்த பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்துவுிடுவதாக ஒரு ஐதீகம் உண்டு. 🌹 அதனால் தினந்தோறும் இந்த கோவிலில் இறைவனுக்காக விருந்து மிகவும் தடபுடலாக செய்யப்படுகிறது. 🌹இந்த விருந்து சமைக்கும் முறையே சற்று வித்தியாசமானது. 🌹கோயிலின் சமையலறை உலகிலேயே மிகப் பெரியது. 🌹பாரம்பரியம் மிக்கது. 🌹56 வகையான சைவ உணவுகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. 🌹கங்கா மற்றும் யமுனை எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு தீர்த்தக் கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி மண் பானைகளில் மட்டுமே சமையல் செய்யப்படுகிறது 🌹இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது. 🌹தினந்தோறும் சமைத்த பின் மண்பானைகள் உடைத்துவிடுவார்கள். தினம் தினம் புதுபானை சமையலுக்கு பயன்படுத்தபடுகிறது. 🌹இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். 🌹ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் சாப்பிட கிடைக்கும். கோவில் சமையலறைகளில் அனைத்து மகாபிரசாத் சமையல்களும் பேரரசின் மகாராஷ்மி தேவியால் மேற்பார்வையிடப்படுகின்றன என்று பாரம்பரியம் கூறுகிறது 🌹ஸ்ரீமந்திர் தன்னை, மற்றும் தயாரிக்கப்பட்ட உணவில் ஏதேனும் தவறு இருந்தால், கோவில் சமையலறைக்கு அருகில் ஒரு நிழல் நாய் தோன்றுகிறது, 🔥இது அவளது அதிருப்தியின் அறிகுறியாகும். 🔥 நிழல் நாய் காணப்பட்டால், உணவு உடனடியாக புதைக்கப்பட்டு ஒரு புதிய தொகுதி சமைக்கப்படுகிறது. 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 #உண்மையை அறிவோம் #god
Ashokraj Subramani
2.5K views
1 months ago
https://sharechat.com/post/m9MAyZk?d=n&ui=X4VQrMJ&e1=c #god