|| ஸூலினீ பாஸ்கரம் ||
|| SOOLINI BHASKARAM ||
ஸ்ரீ ஸூலினீ துர்கையின் ஆயிரம் திருநாமங்களையும், அவற்றின் மகிமையையும், வழிபாட்டு முறைகளையும் விளக்கும் அரிய ஆன்மிக க்ரந்தம்.
முதன் முறையாக பூர்வ பாகம் கொடுக்கப் பட்டுள்ளது
ஸூலினீ துர்கா ஸஹஸ்ரநாமம் என்பது ஆயிரம் திருநாமங்களின் தொகுப்பு மட்டுமல்ல…
துர்கையின் அனந்த கல்யாண குணங்களையும், தெய்வீக ஸ்வரூபங்களையும், சக்தி தத்துவங்களையும் நாமரூபமாகப் போற்றும் புனித ஸ்தோத்ரம்.
ஒவ்வொரு திருநாமத்திற்குள்ளும் அன்னையின் அருள் சக்தியும், உபாஸனையின் ஆழ்ந்த தத்துவமும் பொதிந்திருக்கிறது.
“வஜ்ர பஞ்ஜரம்” எனும் சிறப்புப் பெயரால் போற்றப்படும் இத்துர்கா ஸ்தோத்ரம், சாதகனுக்கு கவசமாகவும், பயத்தை நீக்கும் அருள் சாதனமாகவும் விளங்குவதாக அன்னை துர்கையே அருளிச் செய்கிறாள்.
ஆயிரம் திருநாமங்களின் பின்னால் பொதிந்திருக்கும் அந்த ரஹஸ்யம் என்ன?
துர்கா ஸஹஸ்ரநாம பாராயணத்தின் முக்கியத்துவம் என்ன?
அன்னையின் உபாஸனையில் கடைப்பிடிக்க வேண்டிய விசேஷ முறைகள் யாவை?
இந்த நூலில் —
துர்கா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் ஸ்லோகங்களும், அவற்றின் பொருள் மற்றும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
அன்னையின் அருள்வாக்குகளும், குமரரின் உபதேசங்களும் நேரடி உரையாடல் வடிவில் இடம்பெற்று, நமது கேள்வி பதில்களை தீர்க்கிறது.
துர்க்கையின் மந்திரங்கள் , துர்கையின் பல பல வடிவங்கள், துர்கையின் பூஜா கிரமங்கள் என
துர்கையை எப்போது, எவ்வாறு உபாஸிக்க வேண்டும் என்பதையும், நவராத்திரி, அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் செவ்வாய்க்கிழமை போன்ற விசேஷ காலங்களின் வழிபாட்டு சிறப்புகளையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
மேலும், வஜ்ர பஞ்ஜர ஸ்தோத்ரத்தின் மாஹாத்மியத்தில் துன்பங்கள், பயம், பல்வேறு உபாதைகள் மற்றும் உடல் நலம் தொடர்பான வலி, ஜ்வரம் முதலியவற்றிலிருந்து நிவர்த்தி கொடுப்பவள் துர்க்கை என்று அழுத்தமாக இப் புத்தகத்தில் இடம்பெறுகிறது.
ஜலத்தை அபிமந்த்ரணம் செய்து பயன்படுத்துதல், வயிறு சம்பந்தமான உபாதைகள், கர்ப பீடை, முழங்கால் வலி முதலியவற்றிற்காகக் கூறப்படும் அபிமந்த்ரண முறைகள் குறித்த ரகசிய முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மாற்றங்கள், பயம் , தயக்கங்கள் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு கவசமாக இருக்கும் துர்க்கையின் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ ஸ்காந்த புராணத்தின் க்ஷேத்ர வைபவ காண்டத்தில் 96-ஆம் அத்யாயமாக விளங்கும் துர்கா ஸஹஸ்ரநாமம் எனும் வஜ்ர பஞ்ஜர ஸ்தோத்ரத்தின் மாஹாத்மியத்தை அறிமுகப்படுத்தும் அரிய புத்தகம்
|| ஸூலினீ பாஸ்கரம் ||
Book details:
Name : ஸூலினீ பாஸ்கரம்
Size : 5.5X8.5
Page: 283
Paper: 65 GSM Holman
Language: DEVANAKARI & TAMIL
Rate: 300/-
Publication : மணித்வீப பீடம்.
Author: மணித்வீபம் ஸ்ரீ
க்ருபானந்தநாதன்.
Highlights: “எங்கெல்லாம் இந்த ஸ்தோத்ரம் பாராயணம் செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் எனது பூர்ண சாந்நித்யம் ஏற்படும்.”
— ஸ்ரீ துர்கையின் அருள்வாக்கு
#durka devi #durka #🌕ஆடி பௌர்ணமி🌟 #🛕ஆடி மாத வழிபாடு🔔 #🪔ஆடி நான்காம் வெள்ளி🕉️