#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
புதுக்கோட்டை ரத்னா ஏஜென்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டாட்டம்
ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி, மே 01 -
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் பிரபல ரத்னா ஏஜென்சி அலுவலகத்தில் மேதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் புதுக்கோட்டை, வாகைக்குளம், முடிவைத்தானேந்தல். செக்காரக்குடி உட்பட்ட பகுதிகளிலிருந்து 150 ஆட்டோ ஓட்டுனர்கள் மே தின விழாவில் பங்கேற்றனர். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரத்னா ஏஜென்சிஸ் உரிமையாளர் தர்மராஜ் நாடார் புதல்வன் விக்னேஷ் ஆட்டோ சீருடை வழங்கினார்.
புதுக்கோட்டை மரம்வரம் அறக்கட்டளை சார்பில் மறைந்த ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளின் நான்கு வருட கல்வி செலவை வரும் கல்வியாண்டில் ஏற்றுக் கொண்டதோடு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, சைக்கிள்,,பள்ளி சீருடை போன்றவற்றை ரத்னா ஏஜென்சி நிர்வாகத்தோடு இணைந்து மரம்வரம் ராமன் வழங்கினார். நிகழ்வில் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து சாலை விழிப்புணர்வு, ஆட்டோ ஓட்டுனர்களின் சமூக பங்களிப்பு, தொழிலாளர் நலவாரிய அவசியம் குறித்தும் காவல்துறை ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக உரையாற்றினார். ஆட்டோ ஓட்டுனர் சங்க பொருளாளர் சங்கரலிங்கம் தலைமையில் அனைத்து மூத்த ஆட்டோ ஓட்டுனர்கள் கெளரவிக்கப் பட்டனர்.
விழா ஏற்பாடுகளை மேலாளர் அசோக் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.